Wednesday 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 39

கேட்டை. நட்சத்திரம். 
இந்த நட்சத்திரத்துக்கு உரிய விருட்சம் அமைந்த தலம்-  திருப்பராய்த்துறை...
வருக்கும் தீங்கு விளைவிக்க நினைக்காதவர்கள், உண்மையையே விரும்புபவர்கள், தான- தர்மம் செய்வதில் விருப்பம் கொண்டவர்கள், கேட்டை நட்சத்திரக்காரர்கள்.
எப்போதும் நண்பர்கள் புடைசூழ வாழ்பவர்கள்; பிறரைச் சுடுசொல்லால் காயப்படுத்தினாலும், மறுகணமே மன்னிப்பு கேட்டுவிடும் குணம் கொண்டவர்கள் இவர்கள்.
செவ்வாய்க்கிழமைகளிலும் அக்டோபர் 22 முதல் நவம்பர் 20-ஆம் தேதி வரையிலும் பிறந்தவர்கள், கேட்டை நட்சத்திர ஆளுகைக்கு உட்பட்டவர்கள். அடிவயிற்றில் புண், யானைக்கால் நோய், சைனஸ், சளித்தொல்லை, நோய்த் தொற்று ஆகியவை கெட்ட கதிர்வீச்சுகளால் இவர்களுக்கு வரும் பாதிப்புகள். இந்த நட்சத்திரத்துக்கு உகந்த விருட்சமான பராய் மரத்தடியில் சிறிது நேரம் அமர்ந்தால், பிணிகளும் நட்சத்திர தோஷமும் நீங்கும்; தேக வலிமை கூடும் என்கிறது வானவியல் சாஸ்திரம்.
திருப்பராய்த்துறை கோயிலின் ஸ்தல விருட்சம்- பராய் மரம். திருச்சி- கரூர் சாலையில், திருச்சியில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர். இங்கே ஸ்ரீபசும்பொன் மயிலாம்பிகை (ஸ்ரீஹேம வர்ணாம்பிகை) சமேத பராய்த்துறைநாதர் (ஸ்ரீதாருகா வனேஸ்வரர்) அருள்கின்றனர். பராய் மரக்காடு என்பது, தாருகாவனம் எனப்படுகிறது. கோயிலுக்குக் கிழக்கில், சுவாமி சித்பவானந்தர் அமைத்த ராமகிருஷ்ண தபோவனம் உள்ளது.
தாருகாவன முனிவர், தாம் செய்யும் தருமமானது வீடு பேறு வழங்கவல்லது எனும் கர்வத்துடன் சிவனாரை மதிக்காமல் வாழ்ந்தார். இதையறிந்த சிவபெருமான், திருமாலிடம் சொல்ல... அவர் மோகினிப் பெண்ணுருவில் வந்து, முனிவரையும் அவருடைய சீடர்களையும் மயக்கினார். இதனால் அவர்களின் ஹோமங்கள் தடைப்பட்டன. அப்போது, பிட்சாடனராக வந்த ஈசன், முனி பத்தினியரிடம் பிட்சை கேட்டார். அந்தப் பெண்கள் ஈசனின் அழகில் மயங்கினர். இதில் கோபமுற்ற முனிவர், சிவபெருமான் மீது புலியை ஏவினார். அந்தப் புலியைக் கொன்ற ஈசன், அதன் தோலை உரித்து ஆடை யாக்கிக் கொண்டார். அடுத்து, முனிவர் ஏவிய திரிசூலத்தை படை யாக ஏந்தினார். மான் குட்டியை இடக்கரத்தில் தாங்கினார். பாம்புகளை ஆபரணங்களாக அணிந்துகொண்டார். பூத கணங் களைச் சேனையாக்கி, உடுக்கையை கரத்தில் ஏந்தி, முயலகனைத் தன்னு டைய திருவடிகளின் கீழ் கிடத்தி, அவனுடைய முதுகின் மீது ஏறி நின்றார். வந்திருப்பது சிவம் என்பதை அறிந்து சிலிர்த்த முனிவர் பெருமக்கள், அவரிடம் மன்னிப்புக் கேட்க, அவர்களை மன்னித்தருளினார். பிறகு, சிவப்பரம்பொருளை வழிபடத் துவங்கினர். அவர்கள் வழிபட்ட இடம், தாருகாவனம் என்ற திருப்பராய்த்துறை திருத்தலம்!
ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் பராமரிப்பில் உள்ளது இந்தக் கோயிலின் விருட்சம் பராய் மரம். இதன் இலை துவர்ப்பாகவும், பால் இனிப்பாகவும் இருக்கும். இந்த இலையானது, சீதபேதி மற்றும் ரத்த பேதியை குணமாக்கும். பராய் மரத்துப் பால், கால் வெடிப்புகளைச் சரியாக்கும்.
வடமாநிலங்கள் மற்றும் பர்மாவில், தேயிலைக்கு மாற்றாக பராய் இலையைப் பயன்படுத்துகின்றனர். அந்தத் தேயிலை, ஆண்மையை அதிகரிக்கும் என்கிறது ஆயுர்வேதம். பராய் வேரைப் பாம்புக்கடி முறிவு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
பராய் மரத்துப் பாலைப் பூசுவதால் தலைவலி நீங்குகிறது. இதன் பழங்களை இடித்து, கண் நோய் நீங்கப் பயன்படுத்து கிறார்கள். விதைகளை அரைத்துக் களிம்பாக்கி, வெண்குஷ்டம் அகலப் பூசுவார்கள். மூக்கிலிருந்து ரத்தம் வடிதல், மூலம், பேதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இந்த விதைகள் மருந்தாகின்றன.
பராய்த்துறைக்கு வந்தால் பாவங்கள் நீங்கும்!
''திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், பட்டினத்தார் ஆகியோர் பாடிப் போற்றிய திருத்தலம் இது. வைகாசி மாதம், பத்து நாள் பிரமோத்ஸவம் இங்கே சிறப்புற நடைபெறும். ஐப்பசியின் முதல் நாள் திருப்பராய்த்துறையிலும், கடைசி நாள் மயிலாடுதுறையில் காவிரி துலா ஸ்நானம் விசேஷமாக நடைபெறும். பராய்த்துறைக்கு வந்து தரிசித்தால் பாவங்கள் நீங்கப் பெறும் என்பது ஐதீகம். அந்த நாளில், ஸ்வாமியும் அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருள்வார்கள். அப்போது காவிரியில் எண்ணற்ற பக்தர்கள் வந்து தரிசனம் செய்து, பாவங்கள் நீங்கப் பெறுவார்கள்''.
- விருட்சம் வளரும்...

No comments:

Post a Comment