Monday 5 November 2018

அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசாமி திருக்கோயில், திருமழபாடி !!

Image result for திருமழபாடி வைத்தியநாதர் திருக்கோயில்

மூலவர் : வைத்தியநாதசுவாமி வஜ்ரஸ்தம்பநாதர், வயிரத்தூண் நாதர், வச்சிரதம்பேஸ்வரர்

அம்மன்/தாயார் : சுந்தராம்பிகை(அழகம்மை), பாலாம்பிகை

தல விருட்சம் : பனை மரம்

தீர்த்தம் : கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காமிய ஆகமம் (நான்கு கால பூஜை)

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : மழுவாடி, திருமழபாடி

பாடியவர்கள்: திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர்

🅱 தேவாரப்பதிகம்:🅱

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. -சுந்தரர்

🌼 தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 54வது தலம்.

🅱 திருவிழாக்கள்:🅱

🍁 பங்குனி மாதம் புணர்பூச நாளில் நந்தி திருமணம் பெரும் விழாவாக நடைபெறும். விழாவில் இருபத்து ஏழாவது நாளில் திருவையாற்றில் நிகழும் சப்த ஸ்தான விழாவிற்கு நந்தி எழுந்தருள்வார்.

🍁 மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை.



🅱 தல சிறப்பு:🅱

🎭 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🎭 நந்திதேவருக்கு சுயஸாம்பிகையை திருமணம் செய்விக்கப் பெற்றத் தலம்.

🎭 திருமால், இந்திரன் ஆகியோர் வழிபட்ட தலமிது.

🎭 சுந்தரர் கனவில் இறைவன், மழபாடி வர மறந்தனையோ என்று உணர்த்திட, உடனே அவர் மழபாடி சென்று வழிபட்டத் தலம்.

🎭 சந்திரனுக்கு ஏற்பட்டிருந்த களங்கத்தை ஈசன் போக்கியருளியதால் இறைவனை, வைத்தியநாதர் என்றும் பெயர் பெற்றார்.

🎭 இத்தலத்தில் பாய்வது கொள்ளிட நதியாகும். இந்நதி உத்தரவாகினியாக-- வடக்கு நோக்கிப் பாய்ந்தோடுகிறது. இது மிக அரிதான சிறப்பு.

🎭 இங்கிருக்கும் சோமாஸ்கந்தர் ஒரே கல்லினால் ஆனவர். இவரை தரிசிப்பது மிகவும் சிறப்புக்குரியது.

🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 54 வது தேவாரத்தலம் ஆகும்.

🅱 திறக்கும் நேரம்:🅱

🗝 காலை 6:30 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.🗝

🅱 பொது தகவல்:🅱

🌺 இத்தலத்திற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு.

🌺 இந்த ஊருக்கு பெயர் மழபாடி என்று வந்ததற்கு காரணம், சோழர் காலத்தில் அவர்களுக்கு உதவியாக சேரர் பிரிவான மழவர் படை பாசறை இங்கு அமைத்திருந்ததால் வந்ததென்றும், மேலும் மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவபெருமான் மழு ஏந்தி நடனம் ஆடியதால் மழுவாடி என்று பெயர் பெற்று பின்னர் மழபாடி என்று பெயர் திரிந்ததாகவும் கூறுகின்றனர்.

🌺 இத்தல விநாயகர் சுந்தர விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

🌺 வைத்தியநாத சுவாமி சந்நிதி இராஜேந்திரன் காலத்தாளானவை.

🌺 பாலாம்பிகை கோவில் இராசராசன் காலத்தாளானவை.

🌺 நூற்றுக்கால் மண்டபம், சோமாஸ்கந்த மண்டபம் ஆகியவை பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.

🌺 கோயிலுக்கு வெளியில், எதிர்புறத்தில் உள்ள மண்டபத்தை, கோனேரிராயன் மண்டபம் என்றழைக்கப்படுகிறது.

🅱 பிரார்த்தனை:🅱

🍁 கடுமையான சரும நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்

🍁 நந்தி திருமணத்தை சென்று தரிசிக்கும் திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

☀ கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள ஜுரஹரருக்கு புழுங்கல் அரிசியில் ரசம் சாதம் படைக்கின்றனர்.

Related image

🅱 தலபெருமை:🅱

🌸 இங்கு பாலாம்பிகை, சுந்தராம்பிகை சன்னதிகள் உள்ளன. பங்குனி புனர்பூச நட்சத்திரத்தன்று நந்தி திருமணம் நடக்கிறது. "நந்தி திருமணம் பார்த்தால், முந்தி திருமணம் நடக்கும்' என்ற பழமொழியின் அடிப்படையில் ஏராளமான கன்னியர், இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.

🌸 ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர் தனி சன்னதியில் அருளுகிறார்.

🌸 இங்குள்ள பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ளன.

🌸 சிவன் பிரகாரத்தில் இரண்டு தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். காத்தியாயினி அம்மன் சன்னதியும் இருக்கிறது. அப்பர்,

🌸 பக்தர்கள் சிவனுக்கும் நந்திக்கும் நடுவில் இருக்கும் மூன்று குழிகளை நவக்கிரகங்களாக கருதி, அவற்றில் தீபமேற்றி வணங்குகின்றனர்.

🌸 மார்க்கண்டேய முனிவர், வைகாசி விசாகத்தில் மழுவேந்திய கோலத்தில் காட்சி தருகிறார். இதனால் இத்தலத்திற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு.

🌸 நடராஜர் சன்னிதிக்கு அருகே நடராஜர் மண்டபமும், வெளிப்பிரகாரத்தில் நூற்றுக்கால் மண்டபமும் உள்ளது. இந்த மண்டபத்தில் இருந்து தான் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

Ⓜ வைத்தியநாதன்:Ⓜ

🔥 தக்கன் தனது 27 பெண்களையும், சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். ஆனால் சந்திரன் ரோகிணியிடம் மட்டும் அன்பு கொண்டிருந்தான். இதனால் மற்ற மனைவியர், தனது தந்தை தக்கனிடம் முறையிட்டனர். இதையடுத்து ‘எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தவில்லை எனில் எனது சாபத்திற்கு ஆளாவாய்’ என சந்திரனை தக்கன் எச்சரித்தான்.

🔥 ஆனாலும் சந்திரன் முன்பு போலவே ரோகிணியிடம் மட்டுமே அன்போடு பழகி வந்தான். இதனால் சந்திரன் தேய்ந்து போகும்படி தக்கன் சாபமிட்டான். அந்த சாபம் நீங்குவதற்காக இத்தலம் வந்து இறைவனை நினைத்து தவம் இருந்தான் சந்திரன்.

🔥 இறைவன் சந்திரனின் முன்பாகத் தோன்றி, முற்றிலும் அழிந்துவிடாத வகையில் ‘தேய்வதும், வளர்வதுமான நிலையிலிருப்பாய்’ என்று சந்திரனுக்கு அருள்பாலித்தார். சந்திரனின் நோய் போக்கியதால், இத்தல இறைவன் வைத்தியநாதன் என்று பெயர் பெற்றார்.

🔥 இதே போல், முனிவர் ஒருவரது சாபத்தால் திருமகளான லட்சுமிதேவிக்கு வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. இதையடுத்து லட்சுமி தேவி இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றாள். சுந்தராம்பிகை அம்மன் சன்னிதிக்கு எதிரே, லட்சுமி தேவி நீராடிய குளம், ‘லட்சுமி தீர்த்தம்’ என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. இந்த நீரை உடலில் தெளித்துக் கொண்டால் சரும நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

🔥 இந்த கோவிலின் நடராஜர் மண்டபம் அருகில் நந்திகேசுவரர், தனது மனைவி சுயசாம்பிகையுடன் காட்சி தருகிறார். ஆண்டுதோறும் புனர்பூச நட்சத்திரத்தில் நந்தியம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் வைத்தியநாதசாமி முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும்.

Ⓜ நந்தி கல்யாணம்:Ⓜ

🌱 இறைவனிடம் சகல வரங்களையும் பெற்ற தனது மகன் செப்பேசர் என்கிற திருநந்திதேவருக்கு திருமணம் செய்ய சிலாத முனிவர் முடிவு செய்தார்.

🌱 சிலாத முனிவர், தம் மகனுக்கு திருமழப்பாடி தலத்தில் ஆசிரமம் அமைத்து, தவமும், அறமும் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகையை பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் செய்து வைத்தார்.

🌱 இதற்காக திருவையாற்றில் இருந்து நந்திகேஸ்வரர் குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார். தனது பக்தனுக்கு தானே முன்னின்று திருமணம் செய்து வைப்பதற்காக ஐயாறப்பர்- அறம் வளர்த்தநாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்குச் சென்றனர்.

🌱 திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை சமேத வைத்தியநாத பெருமான் கொள்ளிடம் சென்று மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயாறப்பர், அறம் வளர்த்தநாயகி, நந்தி்யம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள திருமண மேடைக்கு அழைத்து வந்தார். இருவருக்கும் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.

🌱 இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக இன்றும் நந்தியம்பெருமான்- சுயசாம்பிகை திருமணம் திருமழப்பாடியில் நடைபெறுகிறது. இதில் ஐயாறப்பரும், அறம்வளர்த்தநாயகி அன்னையும் கலந்து கொள்கிறார்கள்..



Ⓜ நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம்:Ⓜ

🔥 பங்குனி மாதம் புனர்பூசத்திற்கு முதல் நாள் அந்தணர்புரத்தில் நந்திதேவர் வயலில் கிடைக்கும் காட்சி நிகழ்த்திக் காட்டப்படும். அன்று மாலை ஐயாறப்பன் திருக்கோயிலில் அவருடைய பட்டாபிஷேக கோலாகலத்தை தரிசித்து மகிழலாம்.

🔥 புனர்பூசம் நட்சத்திர நாளில் காலை 4 மணி அளவில் நந்திதேவர் வெள்ளித் தலைப்பாகை, பட்டு வேட்டி&துண்டு, வெள்ளிச் செங்கோலுடன் மாப்பிள்ளைக் கோலத்தில் குதிரை வாகனத்தில் புறப்படுவார். கூடவே வளர்ப்புப் பெற்றோர் ஐயாறப்பனும் அறம்வளர்த்த நாயகியும் வெட்டிவேர் பல்லக்கில் தொடர்ந்து, திருநெய்த்தானம், கடுவெளி, வைத்தியநாதம்பேட்டை வந்து கொள்ளிடம் நதிக்கரைக்கு வருவர்.

🔥 மாப்பிள்ளை மற்றும் சம்பந்தியை எதிர்கொண்டு அழைக்க, கொள்ளிடப் பந்தலில் சுயம்பிரகாசாம்பிகையின் வளர்ப்புப் பெற்றோரான வைத்தயநாதரும் சுந்தராம்பிகையும் அழகிய கண்ணாடிப் பல்லக்கில் வந்து காத்திருப்பார்கள்.

🔥 மாப்பிள்ளையை வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். மாலை 7 மணிக்கு ஒரு பெரிய பந்தலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெறும். இவ்வாறு கல்யாணம் முடிந்ததும் தம்பதிகள் ஒரு பல்லக்கிலும் சம்பந்திகள் தத்தமது பல்லக்கிலுமாகப் புறப்பட்டு, ஊர்வலமாகச் சென்று கொள்ளிடம் மணற்பரப்பில் ஓய்வெடுப்பர்.

🔥 அப்போது அரசு சார்பில் கலைப் பண்பாட்டுத் துறை வழங்கும் கலை நிகழ்ச்சி, வாணவேடிக்கை போன்றவை விமரிசையாக நடக்கும். பிறகு, சம்பந்திகள், மணமக்கள் விடைபெறும் நிகழ்ச்சி; திருமழபாடி இறைவன் தன் திருக்கோயில் திரும்புதல்; மணமக்களும், பெற்றோரும், புனல்வாயில், பெரும்புலியூர், திருநெய்த்தானம் வழியாகச் சென்று ஐயாறு சேர்தல் என்று அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.

🔥 வழிநெடுக பந்தல், நீர் மோர், பானகம், அன்னதானம் என்று யாரையும் பசித்திருக்காமல் சில தர்ம அமைப்புகள் பார்த்துக் கொள்கின்றன. திருமணத்திற்குக் காத்திருக்கும் பிள்ளைகளும், பெண்களும், இந்த  சிறப்பு மிக்க தெய்வத் திருமணத்தை தரிசித்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். இதனை, ‘‘நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம்’’ என்ற வழக்கு மொழி உறுதி செய்கிறது.

🔥 “நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம்” என்பது சான்றோர் வாக்கு. நந்தி கல்யாணம் பார்த்தோருக்கு முந்தித் திருமணம் ஆகும் என்பது இதன் பொருள். அதன்படி நந்தி கல்யாணத்தை பார்ப்பவர்களுக்கு அடுத்தவருடம் நந்தி கல்யாணம் நடைபெறுவதற்குள் திருமணம் நடைபெற்று விடும் என்கின்றனர். இதனால் ஆண்டு தோறும் திருமழப்பாடியில் நடைபெறும் இந்த தெய்வீக திருமணத்தை பல்லாயிரக்கணக்கானோர் திரளாக கூடிச் சென்று தரிசிக்கின்றனர்.



Ⓜ வைரத்தூண் நாதர்:Ⓜ

🍄 பிரம்மனின் சத்தியலோகத்திலிருந்து புருஷா மிருகம் லிங்கத்தை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டது. இதை அறிந்த பிரம்மன் லிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்றான். பிரம்மன் அந்த லிங்கத்தை எடுக்க முயல, அது அவனின் கைக்கு வர மறுத்து அது முடியாது போகவே இது, வைரத்தூணோ என்று கூறினான். பிரம்மன், வைரத்தூணானவனோ எனக் கூறியதால், இவ்விறைவனை வைரத்தூண் நாதர் என்றும், வச்சிரதம்பேஸ்வரர் என்றும் ஈசனுக்கு பெயர்கள் ஏற்பட்டது.

🍄 அப்பர் பெருமான் தம் பதிகத்தில், மழபாடி வைரத்தூணே என்று பதிகத்தைப் பாடிப் பரவியிருக்கின்றார். சுந்தரர் சோழ நாட்டு சிவஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டபோது ஒரு நதியைக் கடந்து செல்லும்படி நேர்ந்தது.

🍄 அப்போது "சுந்தரா, என்னை மறந்தாயோ" என்ற குரல் கேட்டு திடுக்கிட்ட சுந்தரர் அக்குரல் தன்னை ஆட்கொண்ட சிவபெருமானின் குரல் என்பதை உணர்ந்தார். அருகில் எங்கேயாவது சிவன் கோவில் இருக்கிறதா என்று தன்னுடன் வந்த சீடர்களைக் கேட்டார். அவர்களும் அருகில் உள்ள மழபாடியில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது என்பதைக் கூறினார்கள்.

🍄 திருமழப்பாடி ஆலயத்திற்கு வந்த சுந்தரர் "தங்களை மறந்து விட்டு வேறு யாரை நினைப்பேன்" என்னும் கருத்து அமைத்து வஜ்ரஸ்தம்பநாதர் மேல் பதிகம் பாடியருளினார்.

Ⓜ தேவர்கள் கொண்டாடும் பிரதோஷம்:Ⓜ

🌱 பிரதோஷ விரதத்தை கடைப்பிடிப்பதால் வாழ்க்கையில் சகலவித சவுபாக்கியங்களும் கிட்டுகின்றன. பிரதோஷத்தன்று நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடையில் சிவபெருமான் நடனமாடுகிறார். அப்போது சரஸ்வதிதேவி வீணை வாசிக்கிறார். தேவேந்திரன் புல்லாங்குழல் ஊத, பிரம்ம தேவர் மேளம் அடிக்க, மகாலட்சுமி பாட்டுப்பாட, மகாவிஷ்ணு மிகச்சிறந்த மிருதங்கத்தை எடுத்து கொட்டுகிறார். சிவபெருமானை எல்லா தேவர்களும் சூழ்ந்து நின்று கொண்டு பக்தி சிரத்தையுடன் வழிபடுகின்றனர்.

🌱 பிரதோஷ காலத்தில் மகாவிஷ்ணு கயிலாயத்திற்கு சென்று விடுவதாக ஐதீகம். இதையொட்டியே பிரதோஷ காலத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் திரையிடப்படுகிறது. நந்தீஸ்வரர் அவதரித்த தலம் என்பதால் இங்குள்ள ஐயாறப்பர் கோவிலில் சிவபெருமான் நந்திக்கு நந்தீஸ்வரர் பட்டத்தை வழங்கியதால் இத்திருத்தலத்தில் பிரதோஷ வழிபாடு செய்வது உகந்ததாக கருதப்படுகிறது.

Ⓜ கோவில் அமைப்பு:Ⓜ

🌼 கிழக்கு நோக்கிய இவ்வாலயம் 7 நிலைகளையுடைய இராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது. உள் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன.

🌼 2-வது கோபுரத்தைக் கடந்ததும் மிகப்பெரிய அலங்கார மண்டபம் உள்ளது. இங்கு இரு நந்தி சந்நிதிகள் உள்ளன.

🌼 பிராகாரத்தில் அகோரவீரபத்திரர், விநாயகர், முருகர் ஆகியோர் காட்சி தருகின்றனர். மூன்றாவது வாயிலைக் கடந்தால் மகா மண்டபத்தை அடையலாம். கருவறையும் சோமாஸ்கந்தர் கோயிலும் இணைந்து பெரிய கோயிலாகக் காட்சியளிக்கின்றன.

🌼 மூலவர் வயிரத்தூண் நாதர் சிவலிங்கத் திருமேனி புருஷாமிருகத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப் பட்டதாகும். இந்திரன், திருமால் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது இத்தலம்.

🌼 இரு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. பாலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. கருவறை மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகர் காட்சி தருகிறார்.

🌼 இந்த கோவிலின் தல விருட்சம் பனை மரம், மேலும் இங்கு உள்ள குளத்திற்கு மருத்துவ குணம் இருப்பதால் இதில் நீராடுவோர்க்கு தோல் சம்பந்தமான நோய்கள் குணமாவதாக நம்பிக்கை இருக்கிறது. இது மட்டுமல்லாமல் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வைதீஸ்வரன் தலத்திற்கு எவரேனும் நேர்த்தி கடன் இருந்தால் அதை இந்த கோவிலிலே நிறைவேற்றலாம் என்பதும் இத்தல சிறப்பாகும்.

🅱 தல வரலாறு:🅱

🔥 பிரதோஷ நாயகரான நந்தியம்பெருமான் அவதாரம் தெய்வீகத்தன்மை வாய்ந்தது. சிலாத முனிவர் என்பவருக்கு வீதாஹல்யர் என்ற பெயரும் உண்டு. அவர் மனைவி பெயர் சித்ரவதி. இவர்களுக்கு நெடுநாளாகியும் புத்திரபேறு இல்லை. அதனால் அவர் சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு தரிசனம் கொடுத்தார்.

🔥 முனிவரே, நீங்கள் எப்போதாவது யாகம் செய்வதற்காக நிலத்தை உழும் போது, என்னைப் போன்று வடிவுடன் அழகான ஒரு புதல்வரை பெறுவீர்கள் எனக்கூறி மறைந்தார்.

🔥 சிலகாலம் கழித்து சிலாத முனிவர் யாகம் செய்ய எண்ணி நிலத்தை உழுதபோது, ஏர்க்காலில் தட்டுப்பட்ட ஒரு செப்பு பெட்டகத்தை மண்ணிற்குள் இருந்து எடுத்தார். அதில் ஒரு அழகான ஆண் குழந்தை இருந்தது. அதற்கு 4 கால்கள் இருந்தன. மேலும் சிவனைப்போல் ஜடா முடியுடனும் காணப்பட்டது.

🔥 சிவ வாக்கினை நினைவு கூர்ந்த முனிவர் அக்குழந்தைக்கு செப்பேசன் என்று பெயர் சூட்டினார். 14 ஆண்டு காலம் சகல கலைகளிலும், வேத ஆகம புராண சாத்திரங்களிலும் வல்லவரானார் செப்பேசன்.

🔥 ஒரு முறை அவர் ஆழ்ந்த சிவ சிந்தனையில் இருந்தார். அப்போது அவர் சிவனுடைய அந்தரங்க காவலராக இருந்ததும், அப்போது ஆடி என்ற அசுரனை சிவபெருமான் உத்தரவு இல்லாமல் அனுப்பியதால் சிவபெருமானால் சபிக்கப்பட்டு இப்பூமியில் பிறந்தது நினைவுக்கு வந்தது.

🔥 பிறகு சிவனை நோக்கி ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் புரிந்தார். அவரது தவத்தைக் கண்டு மன மகிழ்ந்த பரமேசுவரன் அவர் முன் தோன்றி, செப்பேசருக்கு சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கங்கை நீர், இறைவியின் கொங்கை நீர், இடப வாய்நுரை நீர் ஆகிய ஐந்து வகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்து தங்கப்பட்டம் அணிவித்து நந்தீஸ்வரர் என பெயர் சூட்டினார்.

🔥 அத்துடன் சிவன், தமக்கு சமமான அதிகாரத்தையும், சிவ கணங்களுக்கு தலைமை தாங்கும் பதவியினையும், முதல் குருநாதன் என்ற தகுதியினையும் நந்தீஸ்வரருக்கு அளித்தார். பின்னர் பட்டு சாத்தி, முடி அணிவித்து வீதி உலாவாக நந்தி தேவரை எடுத்து செல்கின்றனர். அன்று முதல் சிவனை விட்டு எங்குமே நீங்காமல், அவர் வாகனமாகவும் ஆனார். அதனால் அவர் நந்தி தேவர் என்று அழைக்கப்பட்டார்.

🅱 சிறப்பம்சம்:🅱
 
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻ சுந்தரரை குரல் கொடுத்து அழைத்துத் தன் மேல் பாடல் பாட வைத்த சிவபெருமான் வீற்றிருக்கும் சிவஸ்தலம் மழபாடி.

♻ திருநந்தியெம் பெருமான், திருக்கல்யாண விழா, ஆண்டுதோறும், பங்குனி புனர்பூச நாளன்று மிகச் சிறப்பாய் நடைபெறுகிறது.

♻ கொள்ளிட நதி, இத்தலத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தரவாகினியாகச் செல்கிறது.

♻ இங்குள்ள சிற்பங்கள் (ஒரே கல்லாலான சோமஸ்கந்தர், ரிஷப வாகனத்தில் குரு தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், கஜசம்காரமூர்த்தி, புருஷாமிருக ரிஷி வழிபடும் காட்சி முதலியன) மிகச் சிறப்பு.

♻ திருவையாற்றைச் சுற்றியுள்ள சப்த ஸ்தானங்களுடன் தொடர்புடையது.

♻ திருஞானசம்பந்தர் 2-ல் ஒரு பதிகமும், 3-ல் இரண்டு பதிகங்களும், அப்பர் 6-ல் இரண்டு பதிகங்களும், சுந்தரர் 7-ல் ஒரு பதிகமும், ஆக மொத்தம் ஆறு பதிகங்கள் பாடப்பெற்றத் தலமாகும்.

♻ இக்கோவிலில், சோழர், பாண்டியர், ஹொய்சாளர் ஆகியோரது 30 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.



🅱 இருப்பிடம்:🅱

🚙  திருமழப்பாடி வைத்தியநாதசாமி கோவிலானது, புள்ளம்பாடிக்கு தென்கிழக்கில் 20 கிலோ மீட்டர் தூரத்திலும், திருவையாறுக்கு வடமேற்கில் 15 கிலோமீட்டர் தூரத்திலும், அரியலூருக்கு தெற்கில் 28 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.

🚙 இந்த ஊருக்கு திருச்சி, லால்குடி, அரியலூர், திருமானூர் மற்றும் தஞ்சையிலிருந்து பஸ் வசதி உள்ளது. திருச்சி- விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் அரியலூர், புள்ளம்பாடி ரெயில் நிலையங்களில் இருந்தும் இங்கு வரும் வகையில் போக்குவரத்து வசதி உள்ளது.

🌀🌱🌀🌱 BRS🌀🌱🌀🌱🌀

முதல் வணக்கம் முதல்வனுக்கே! - 17


ஸ்ரீராம பட்டாபிஷேகம் இனிதே நடந்து முடிந்தது. சுக்ரீவன், விபீஷணன் முதலானோர், ஸ்ரீராமனிடம் விடைபெற்றுக் கொண்டனர். ராவணனை அழிக்க உதவிய அந்த அரசர்களுக்கு நன்றி பாராட்டி, நவரத்தின ஆபரணங்கள், பட்டுப் பீதாம்பரங்கள் முதலான பரிசுகளை வழங்கினார் ஸ்ரீராமன்.
சரணாகதிக்குச் சிறந்த உதாரணமாக விளங்கிய விபீஷணருக்கு உயர்ந்த பரிசு அளிக்க நினைத்தார் ஸ்ரீராமன். அதன்படி, இஷ்வாகு வம்ச குலதனமான... குல தேவதையாக வழிவழியாக திருவாராதனம் செய்து வந்த திருமால் விக்கிரகத்தை, பிரணவ வடிவமான விமானத்துடன் விபீஷணருக்கு அளித்தார் ஸ்ரீராமன்.
விபீஷணருக்கு அளவற்ற மகிழ்ச்சி. ஸ்ரீராமனின் முன்னோர் காலத்திலிருந்து ஆராதிக்கப்பட்டு வந்த திருமால் விக்கிரகத்தை, இலங்கையில் பிரதிஷ்டை செய்யப் போகும் பேரானந்தத்துடன் புறப்பட்டார். முன்னதாக, 'இந்தத் திருவாராதன விக்கிரகத்தை பூமியில் எங்கேயும் வைக்கக் கூடாது; அப்படிக் கீழே வைத்தால், அங்கேயே நிரந்தரமாக பிரதிஷ்டை ஆகிவிடும். அதனால், இலங்கைக்குச் சென்ற பிறகே, கீழே வைக்க வேண்டும்’ என விபீஷணரை எச்சரித்திருந்தார் ஸ்ரீராமன்.
அயோத்தியிலிருந்து வெகு தூரம் பயணித்து, தென் திசை அடைந்த விபீஷணர், காவிரியைக் கண்டார். அதன் பிரவாகத்தைக் கண்டு, அந்த நதியில் நீராட எண்ணினார். அந்த எண்ணத்தை ஏற்படுத்தியவர், விநாயகர்தான். ஏனெனில், இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படும் திருமால் விக்கிரகத்தை இங்கேயே, இருபுறமும் நீர் சூழ்ந்து செல்ல, தீவு போன்று அமைந்திருக்கும் ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை செய்யவேண்டும் எனத் திருவுளம் கொண்டார் விநாயகர். ஆகவே, தனது அருளாடலை ஆரம்பித்தார்.
ஒரு பாலகனாய் உருவம் கொண்டு காவிரிக் கரைக்கு வந்தார். அவரைக் கண்டதும், ''குழந்தாய்! நான் காவிரியில் நீராடிவிட்டு வரும் வரை, இந்த விக்கிரகத்தை நீ கையில் வைத்திருப்பாயா?'' என்று கேட்டார் விபீஷணர். பாலகனும் சம்மதித்தான். ஆனால், ''விக்கிரகத்தைக் கையில் வைத்துக் கொள்கிறேன். ஆனால், பாரம் தாங்கமுடியாமல் போனால் என்ன செய்வது? அப்போது, உங்களை மூன்று முறை அழைப்பேன். நீங்கள் வரவில்லை என்றால், தரையில் வைத்துவிடுவேன்!'' என்று நிபந்தனை விதித்தான். விபீஷணரும் ஒப்புக்கொண்டார். காவிரியில் இறங்கியவர், சூழலை மறந்து, மிக ஆனந்தமாக நீராடினார். சிறுவன், விபீஷணரை மூன்று முறை அழைத்தான். ஆனால், விபீஷணர் வரவில்லை. எனவே, விக்கிரகத்தை அங்கேயே தரையில் வைத்துவிட்டான் பாலகன். திருவிக்கிரகமும் அங்கேயே நிரந்தரமாக பிரதிஷ்டையாகிவிட்டது.
இந்த நிலையில் விபீஷணருக்கு சிறுவன் ஞாபகம் வர, அவசர அவசரமாக கரைக்கு வந்தார். அங்கே, விக்கிரகம் தரையில் வைக்கப் பட்டிருந்தது. சிறுவனும் அருகில் இல்லை. விபீஷணர் எவ்வளவு முயன்றும், விக்கிரகத்தை அசைக்கக்கூட முடியவில்லை. அந்தச் சிறுவனின் மீது கடும் கோபம் வந்தது அவருக்கு.
தூரத்தில் சிறுவன் நிற்பது தெரிந்தது. அவனைப் பிடிக்க ஓடினார். அவன், இவர் கையில் அகப்பட்டால்தானே! ஓடிப்போய் மலைக் கோட்டையின் உச்சிக்கே சென்று விட்டான். விபீஷணரும் மலையுச்சியை அடைந்து, அந்தச் சிறுவனைப் பற்றி இழுத்து, அவன் தலையில் ஒரு குட்டுக் குட்டி, தனது கோபத்தை வெளிப்படுத்தினார். மறுகணம், சிறுவன் தனது சுய ரூபத்தைக் காட்டினான். ஆமாம்... தும்பிக்கை யுடன் காட்சி தந்தார் கணபதி. அவ்வளவுதான்... விபீஷணரின் கோபம், ஏமாற்றம், வருத்தம் எல்லாம் மறைந்தது. விநாயகரிடம் மன்னிப்பு வேண்டினார் அவர்.
''விபீஷணரே! திருமாலின் விக்கிரகத்தை இலங்கைக்கு எடுத்துச் செல்லவிடாமல் தடுத்த தாக எண்ணாதே! திருமால், இங்கிருந்தபடியே இலங்கையைப் பார்த்து அனுக்கிரகம் செய்யும் வகையில், அவரின் விக்கிரகத்தைத் தெற்கு நோக்கியே வைத்திருக்கிறேன். திருவரங்கத்தில் பள்ளிகொண்ட இந்தப் பெருமாள், இனி அரங்கராஜன் எனப் போற்றப்படுவார்'' என்று அருள்புரிந்தார் விநாயகர்.
இப்படி, விபீஷணருடன் திருவிளையாடல் செய்து அருள்புரிந்தவர், திருச்சியில் மலைக்கு மேல் உள்ள உச்சிப்பிள்ளையார். இங்குள்ள ஸ்ரீதாயுமான ஸ்வாமி கோயிலின் 16 கால் மண்டபத்தில், திருமால் விக்கிரகத்தை விபீஷணர் எடுத்து வந்ததைக் காட்டும் தூண் சிற்பம் உள்ளது. ஸ்ரீதாயுமான ஸ்வாமி, தாயாகவே வந்து ரத்னாவதி எனும் வணிக குலப் பெண்ணுக்கு மகப்பேறு நோவு தீர்த்து அருள்புரிந்தவர். 'சென்றடையாத திருவுடையானை சிராப்பள்ளி குன்றுடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே’ என்பது திருஞானசம்பந்தர் வாக்கு. இந்தக் கோயிலுக்கு மேற்புறம் ஸ்ரீஉச்சிப்பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 273 அடி உயரத்தில், இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு 417 படிகள் ஏறிச் செல்லவேண்டும். உச்சிப்பிள்ளையார் கோயில் பிராகார மண்டபத்தில் இருந்து திருச்சி, ஸ்ரீரங்கம், திருவானைக்கா, காவிரி கொள்ளிடம் ஆகிய இடங்களைக் கண்டு ரசிக்கலாம்.
ஒருமுறை, உச்சிப்பிள்ளையாரை வழிபட்டு வாருங்கள். வாழ்வில், உங்களை உச்சத்துக்குக் கொண்டு செல்வார், அந்த கணபதி!
- பிள்ளையார் வருவார்...

திருப்பட்டூர் அற்புதங்கள்! - 17

மிழகத்தில், முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கும் திருத்தலங்கள் பலவற்றில், சூரனை சம்ஹரித்த நிகழ்ச்சி, வெகு விமரிசையாக சமீபத்தில் கொண்டாடப்பட்டது. கந்த சஷ்டி விரதமும், விழாவும் நம்மில் பலரோடு இரண்டறக் கலந்தவை. இந்த நாட்களில், கந்தக் கடவுளையும் சூரசம்ஹார நிகழ்ச்சியையும் தரிசிப்பது சிறப்பு என்கின்றன புராணங்கள் !

சூரபதுமனை அழிக்க முருகக்கடவுள் படை திரட்டினார். படை வீரர்களுடன் அவர், தலங்கள் பலவற்றிலும் தங்கிச் சென்றார். அப்படி வருகிற வழியில், சிவபூஜை செய்வதற்காக முருகக் கடவுள் தங்கிய திருவிடம், திருப்படையூர் என அழைக்கப்பட்டது. அதுவே பின்னாளில் திருப்படவூர், திருப்பிடவூர் என்றெல்லாம் மருவி, தற்போது திருப்பட்டூர் எனப்படுகிறது. குருவின் கடாட்சம் பூரணமாக நிறைந்திருக்கிற அற்புதத் திருவிடம் திருப்பட்டூர் என்பதைப் பார்த்தோம், அல்லவா ? இத்தகைய பெருமை யும் சாந்நித்தியமும் குடிகொண்டிருக்கிற திருத்தலத்தில்தான், ஸ்ரீமுருகப் பெருமானும் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார்.

அதென்ன... சிவாலயங்களில் முருகக்கடவுளுக்கு சந்நிதி இருக்கத்தானே செய்யும், அதில் என்ன அதிசயம் இருக்கிறது என நினைக்கலாம். ஆனால், குரு பிரம்மா தனிச் சந்நிதியில் கோயில் கொண்டிருக்கிற திருத்தலம் அல்லவா இது! குரு பிரம்மாவும், குரு விஷ்ணுவும், குரு பரமேஸ்வரனும் தரிசனம் தந்து அருளாட்சி செய்கிற இந்தத் திருப்பட்டூரில்... அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா எனப் பெயர் பெற்ற, பிரணவ மந்திரத்தை எடுத்துரைத்த, ஞானகுரு என்று அனைவராலும் போற்றப்பட்ட கந்தப் பெருமானும் தனிச்சந்நிதியில் அருள்பாலிப்பதால், குருமார்கள் அனை வரின் அருட்கடாட்சமும் ததும்பி நிற்கிற திருவிடமாக மகிமை பெற்றிருக் கிறது திருப்பட்டூர். இங்கே, அழகன் முருகன் காட்சி தருகிற விதத்தில் ஒரு சிறப்பு உண்டு.

பொதுவாக, முருகக்கடவுளின் வலது திருக்கரத்தின் கீழே மயிலின் திருமுகம் அமைந்திருப்பது போலத்தான், விக்கிரகத் திருமேனி வடிக்கப்பட்டிருக்கும். இந்த மயிலை, தேவ மயில் என்பார்கள். இந்தத் திருப்பட்டூர் தலத்தில், அழகன் முருகனின் இடது கரத்தின் கீழே, மயிலின் திருமுகம் இருப்பது போல், விக்கிரகத்திருமேனி வடிக்கப்பட்டிருக்கிறது. காண்பதற்கு அரிதான திருக்கோலம் இது என்கின்றன ஞானநூல்கள்.


அதேபோல், இடது கரத்துக்குக் கீழே முகம் காட்டுகிற மயிலை, அசுர மயில் என்று சொல்வார்களாம். சூரபதுமனை அழிப்பதற்காகப் படை திரட்டி, தங்கிச் சென்ற திருப்படையூர் என்கிற திருப்பட்டூர் திருத்தலத்தில், அசுர மயிலாக இடம் மாறிக் காட்சி தருகிற அற்புதக் கோலத்துடன் முருகப்பெருமானைத் தரிசிப்பது சிறப்பு எனப் போற்றுகின்றனர் அன்பர்கள்.
கந்தக் கடவுள், ஞானகுரு; பூமிகாரகன்; செவ்வாய்க்கு அதிதேவதையும் இவரே! எனவே, இந்தத் திருவிடத்துக்கு வந்து, ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமியை தரிசித்து, மனதாரப் பிரார்த்தனை செய்தால், வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதீகம் !
அதுமட்டுமா ?

தேவர்களையும் முனிவர்களையும் உலக மக்களையும் கொடுமைப்படுத்திய சூரபதுமனை அழித்து, அந்த அசுரனை மயிலாக்கி அமர்ந்திருக்கிற முருகப்பெருமானைப் பணிந்து தொழுதால், எப்பேர்ப்பட்ட எதிரிகளாயினும் நம்மை விட்டு பலகாத தூரம் தெறித்து ஓடிவிடுவார்கள்; அவர்களின் அத்தனை சூழ்ச்சிகளும் தவிடுபொடியாகிவிடும்.

செவ்வாய்க்கிழமைகளில் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீசுப்ரமணியரை தரிசியுங்கள். மாதந்தோறும் சஷ்டி அல்லது கிருத்திகை ஆகிய நாட்களில், இங்கு வந்து கந்தக் கடவுளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சார்த்தி, வழிபடுங்கள். செவ்வாய் தோஷம் முதலான சகல தோஷங் களும் விலகிவிடும்; சந்தோஷங்களுக்குக் குறைவிருக்காது என்பது நம்பிக்கை !

ஒருகாலத்தில், கந்த சஷ்டி வைபவம் இங்கு அமர்க்களப் படுமாம். ஆட்டுக்கிடா வாகனத்தில், அழகும் ஆவேசமும் ஒருசேர, நான்கு வீதிகளிலும் திருவீதியுலா வந்து, சூரபதுமனை அழிக்கிற வைபவம் நடந்தேறுகிற காட்சி, காண்போரைச் சிலிர்க்க வைக்குமாம்! இதைச் சொல்லிச் சொல்லிப் பூரிக்கின்றனர் திருப்பட்டூர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள்.

படைவீரர்களுடன் இங்கு தங்கி, முருகப்பெருமான் சிவ பூஜையில் ஈடுபட்டார் அல்லவா ? அப்போது அவருக்குத் திருக்காட்சி தந்து, 'வெற்றி உனக்கே !’ என அருளினார் சிவபெருமான். இங்கே, ஸ்ரீவள்ளி- ஸ்ரீதெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியரின் சந்நிதிக்கு அருகில், ஸ்ரீகந்தபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராகக் காட்சி தருகிறார்.

புதிதாகத் தொழில் தொடங்கு வோர், வியாபாரத்தில் நஷ்டம் எனக் கலங்குவோர், இங்கு வந்து ஸ்ரீசுப்ர மணியருக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தித்தால், வியாபாரத் தில் வெற்றி உறுதி. தொழிலில் மேலோங்கிச் செல்வார்கள் என்பது நிச்சயம் !

இன்னொரு சிறப்பும் உண்டு, இங்கேயுள்ள ஸ்ரீசுப்ரமணியருக்கு.
உலகில், தூக்கத்தில் கனவு காணாதவர்களும் இல்லை; விழித்துக் கொண்டிருக்கும்போது, 'வீடு வாங்குவதே என் கனவு’ என்று புலம்பாதவர்களும் இருக்க முடியாது. உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் என்கிற மனித வாழ்க்கையின் இந்த அத்தியாவசியத் தேவைகளில் முக்கியமானதான கனவு இல்லத்தை அருள்கிறார் இந்தத் தலத்தில் உள்ள முருகப்பெருமான்.

சஷ்டி, கிருத்திகை நாட்களில் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் (உங்களின் நட்சத்திர நாளில் வந்து தரிசிப்பதும் சிறப்பு), இங்கே சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீவள்ளி- ஸ்ரீதெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியருக்கு அபிஷேகம் செய்யுங்கள். முடிந்தால், ஸ்ரீவள்ளி- ஸ்ரீதெய்வானைக்குப் புடவையும், ஸ்ரீசுப்ரமணியருக்கு வேஷ்டியும் சார்த்தி, வெண் பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் வாங்கியிருக்கிற மனை தொடர்பாக சிக்கல் ஏதேனும் இருந்தால், அவை விலகிவிடும். நிலம் தொடர்பான வழக்கு இருப்பின், விரைவில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.

'இடமும் இல்லை; மனையும் வாங்கலை’ என்று புலம்புவராக இருந்தால்கூட, அடுத்தடுத்த காலகட்டத்தில், வீடு வாங்கும் யோகம் சட்டென்று தேடி வரும். சுபிட்சமும் அங்கே குடிகொள்ளும்!
உலகாயத வாழ்வில் வீடு யோகம் தருகிற முருகக் கடவுள், ஆன்மிகத்தின் நிறை நிலையான, 'வீடு பேறு’ எனும் அற்புதமான மோட்ச வரத்தையும் தந்தருளக்கூடியவர். தலையெழுத்தையே மாற்றி அருளும் திருத்தலமாம் திருப்பட்டூரில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீசுப்ரமணியரை வணங்கினால், மோட்சகதி நிச்சயம்.

வெற்றிவேல் முருகன் துணையிருக்க, இனி எல்லாமே ஜெயம்தான் !

சிவன் வடிவமைத்த காசி - 11

Image result for allahabad aholbi matha temple

ஞானவாவி:

 பத்தடி விட்டமுள்ள கிணறுதான் ஞான வாவி ஆகும். இதைச் சுற்றி தூண்கள் அடர்ந்த மண்டபத்தை 1828-ல் கட்டினார்கள். இந்த வாவி உள்ள மண்டபம்தான் முக்தி மண்டபம் என்று அழைக்கப்படுகி றது.

பிரும்ம சூத்திரத்துக்கு விரிவுரையை ஆதிசங்கரர் காசியில்தான் எழுதினார். அதற்கு வியாசர் ஆமோதிப்பு அளித்தார். அந்த நிகழ்ச்சி நடந்த இடம் மணிகர்ணிகா கட்டத்தினருகில் முக்தி மண்டபம் என்றிருந்தது. அதன் நினைவாக ஞானவாவியிலும் முக்தி மண்டபம் கட்டினர்.

இந்த வாவிக்கு இரண்டு பக்கத்திலும் கணநாதராகிய விநாயகரும் வியாசரும் இருக்கிறார்கள்.

Related image

வாவியின் நுழைவாயிலில் 50 அடி தொலைவில் நந்தி சிலை இருக்கிறது.

இத்தீர்த்தத்தில் ஆடினால் மனத்தில் லிங்கபாவனை வரும் என்றும், ஞானம் வந்து மோட்சத்துக்கு வழியாகுமென்றும் கூறுவர். காசுகளை இதில் பக்தர்கள் இறைக்கிறார்கள். அதற்காக ஒரு துணியையும் கட்டி உள்ளனர். காணிக்கைக் காசுகள் துணியில் தேங்கிவிடும். இதனால் தண்ணீரை நேரடியாகப் பார்க்க முடிவதில்லை.

ஆழமான இந்த வாவி சிவபெருமானால் தோண்டப் பெற்றது என்பர். காசிக்கு கங்கை வருவதற்கு முன்பிருந்தே இங்கே இந்த வாவி இருப்பதாக ஐதீகம்.

விஸ்வநாதர் கோயில் !!

விஸ்வநாதர் கோயிலின் வாயிற்கதவுகள் வெள்ளித் தகடு பொருத்தப்பட்டது.

 கோயிலின் நடுவே நீள்சதுரமான கருவறையும் அதில் காவல் தெய்வங்களும் உள்ளன.

விஸ்வநாதர் உள்ள மூலஸ்தானத்தின் மேலே தேர்க் கூரையைப் போல், நான்கு பட்டைகள் கொண்ட விமானம் உள்ளது. விமானம் தங்கத் தகடு வேயப்பட்டு தகத் தகாயமாக ஜொலிக்கிறது. கோயிலில் இறைவனை வழிபட்டுத் திரும்புவோர் கதவின் இரும்புச் சங்கிலியைத் தம் உடம்பில் தேய்த்துவிட்டுச் செல்கின் றனர். எமபயம் நீங்கும் என்பதே இதன் காரணமாகும்.

Related image

வாயில் கதவை ஒட்டிய சிறிய திண்ணை களில் சற்று அமர்ந்த பிறகே வீடு திரும்பு கிறார்கள். இறைவனை வணங்கிவிட்டு அவசரமாகத் திரும்பக் கூடாது என்ற உணர்வே காரணம்.

நீள் சதுர மண்டபத்தில் விஸ்வநாதர் கிழக்கே இருக்கிறார். மேற்கே தண்ட பாணீச்சுரரும் நிகும்ப மகாதேவியரும் உள்ளனர்.

தண்டபாணி என்போர் சிவபெருமானுக்கு உகந்த யட்சர்கள் என்றும், காசியில் அவர்களின் துணை கொண்டே விஸ்வநாதர் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. தண்டு வைத்திருப்பதால் தண்டபாணியாவார். இவர் உத்தரவு இல்லாமல் காசியில் யாரும் நுழைந்துவிட முடியாதாம். நம் முருகனாகிய தண்டபாணி இந்தக் காசி தண்டபா ணியிடம் உத்தரவு பெறாமையால் காசிக்கு வரமுடியாமல் போனதாகவும் ஒரு கதை உண்டு.

இந்த தண்டபாணி லிங்க வடிவில் உள் ளார். பகைவர் வெட்டிய வடு மறையாமல் உள்ளது.

Related image

இந்த மைய மண்டபத்தில் தண்டபாணி சந்நிதி மேற்கும் விஸ்வநாதர் சந்நிதி கிழக்கும் அமைய, உதயவூர் மகாராணா ஜவான்சிங் அமைத்த வைகுந்த மகாதே வர் நடுவே நந்தியுடன் உள்ளார். மேவார் மன்னன் கொடுத்த பெரிய மணி ஒன்றும் இங்கே இருக்கிறது.

விஸ்வநாதர் பத்து அடிக்குப் பத்து அடி யாக ஒரு சிறிய சலவைக்கல் கருவறையினுள்தான் இருக்கிறார்.

சலவைக்கல் சுவரில் ஆதிசங்கரர் தனது சீடர்களுடன் உள்ள காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

Related image

 இந்தச் சிறிய கருவறைக்குள்ளும் விஸ்வநாதர் நடுவில் இல்லை. வடகிழக்கின் ஓரமாகத் தள்ளி இருக்கிறார். நீள் சதுரமான ஒரு வெள்ளித் தொட்டியில் கீழே உள்ளார்.

இவர் தலைக்கு மேல் ஒரு பெரிய பாத்திரத்தில் கங்கை நீர் உள்ளது. அந்த நீர் ஒவ்வொரு சொட்டாக சிவலிங்கம் மீது விழுந்துக் கொண்டே இருக்கிறது.

தரையில் கைக்கெட்டும் தூரத்தில் விஸ்வநாதர் இருப்பதால் யாரும் தொடலாம், நீராட்டலாம், பூச் சாத்தலாம், ஆடை அணிகள் செய்யலாம். தொட்டு வணங்கலாம். தூய்மை கருதி கருவறைக்கு வெளியிலேயே இருந்து சிவலிங்கத்தை வணங்கிப் பழகியோருக்கு, இப்படி கருவறையில் அவரைத் தொட்டு வணங்கும்போது உண்மையில் மனத்தில் ஒரு உருக்கமும், உறவும், உரிமையும் மிகுவதையே காண்கிறோம். என்றும் திருநாள் கூட்டம்தான்.

திருப்பள்ளி எழுச்சிக்குப் பிறகு காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வழிபாடு தொடர்ந்து நடைபெறுகிறது.

அர்த்த ஜாம பூஜையை நம்மூர் நாட்டுக் கோட்டை நகரத்தாரே காசியில் நடத்துகின்றனர். அதற்கு முன் சப்தரிஷி பூஜை என்பது விஸ்வநாதருக்கு நடைபெறும். ஏழு பண் டாக்கள் (அர்ச்சகர்கள்) சுற்றிலும் அமர்ந்து விஸ்வநாதருக்கு விசிறி விட்டு, வேத மந் திரங்கள் ஓதி, மரபு தவறாமல் இந்த பூஜையைச் செய்கின்றனர்.

Image result for allahabad aholbi matha temple

இந்த இரண்டு பூஜைகளோடு திருப்பள்ளி எழுச்சி பூஜையும் தவறாமல் காண வேண்டிய பூஜைகளாகும்.


கோயிலில் பேதங்களோ, வணிக முறைக் கட்டுப்பாடுகளோ கிடையாது. சிபாரிசுகள் எதுவும் தேவையில்லை. படைத்தவனுக்கும் படைக்கப்பட்டவனுக்கும் இடையில் யாதொன்றும் தடையில்லை. படைத்தவன் படைக்கப்பட்டவன் இருவரும் நேரடியாக ஐக்கியமாகும் தலம் இது.

காசி கேதார்நாத் கோயில்:

 தசாசுவமேதத் துறைக்குத் தெற்கில் உள்ள பெரிய துறையின் உச்சியில் உள்ளதே கேதார்நாத் கோயில். அழகிய படிக்கட்டுகள் கொண்டது. கிழக்கு பார்த்த கோயில் பக்தர்கள் குளித்த உடையோடு ஈரம் உலராமலே கோயிலுக்குள் செல்வர்.

பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாக இமயத்தின் மீது உள்ள கேதார்நாத்துடன் தொடர்புடைய கோயில்.

நமது தென்னகக் கோயில் முறை அமைப்பைக் கொண்டது. இக்கோயில் திருப்பனந்தாள் மடத்துப் பராமரிப்பில் உள்ளதால் தென்னக முறை வழிபாடு உண்டு. அர்ச்சகர் பூஜை வேளையில் மட்டுமே வருவார். மற்ற நேரங்களில் காசிநகர் பண்டாவே வழிபாடுகளைச் செய்கிறார்.

பண்டா இருக்கும் வேளையில் மட்டும் வடநாட்டு முறையில் இறைவனைத் தொட்டு வணங்கலாம். அபிஷேகம் முதலிய சடங்குகளைச் செய்யலாம்.

விஸ்வநாதரை விட இந்தக் கேதாரநாதரை எளிதில் சென்று நாம் விரும்பியவாறு வழிபடலாம். அமைதியான சந்நிதியும்கூட.

குமரகுருபரர்:

 குமரகுருபரர் சைவ சித்தாந்தத்தையும் தமிழையும் பரப்புவதற்கே வடக்கே சென்றார். காசியில் பல ஆண்டுகாலம் வாழ்ந் தார். அப்போது அவர் பாடியதே காசிக் கலம்பகமாகும்.

விஸ்வநாதர் குமரகுருபரரின் கனவில் ஒருநாள் தோன்றி, புதர்களால் மறைக்கப்பட்டு பாழடைந்த நிலையில் இருக்கும் கேதார் கோயிலை மீண்டும் எழுப்புக என்று கோரினார். அப்போது காசியை ஒரு முஸ்லிம் மன்னன் ஆண்டு வந்தான்.

குமரகுருபரர் அந்த மன்னனிடமே சென்று, காசியில் கோயில் கட்டவும் கங்கையில் படித்துறை அமைக்கவும் உதவி கேட்கப் போனார்.

 Image result for குமரகுருபரர்

'சகலகலா வல்லி மாலை' என்ற நூலை சரஸ்வதி மேல்பாடி அருள்பெற்ற குமரகுருபரர், இந்துஸ்தானி மொழியையும் கற்றுக்கொண்டு, முகமதிய அரசரைக் காணச் சென்றார்.

 குமரகுருபரரை யாரோ ஒரு சந்நியாசி ' என்று ஏளனமாக நினைத்த மன்னன் அவரது கோரிக்கைக்குச் செவிசாய்க்கவில்லை. மறுநாள், மன்னனே கண்டு அஞ்சும் ஒரு சிங்கத்தைக் கண்டு, அதைத் தனது யோக வலிமையால் அடக்கி, அந்தச் சிங்கத்தின் மீது ஏறி அரண்மனைக்கு வந்தார். அக்காட்சியைக் கண்டோர் திகைத்தனர். அனைவரும் அஞ்சினர்.

மன்னன் அவரது தவவலிமையைப் பாராட்டி அவரது விருப்பம் இன்னதென்று கேட்காமலே, அவர் கேட்பதையெல் லாம் கொடுக்கும்படி உத்தரவு இட்டான். அவனது பொருளுதவியைக் கொண்டு அவர் கட்டியதே கேதார்நாதர் கோயிலும் காசி மடமும்.

அவர் இயற்றிய சகலகலாவல்லி மாலை' நூலைப் படிப்போர்க்கு சரஸ்வதி அருள் கிட்டும். கல்வியில் தேர்ச்சி உண்டாகும். குமரகுருபரர் சிங்கத்தில் ஏறிவருகிற மாதி ரியான காட்சி நம் மடாலயங்களில் படமாக இருக்கக் காணலாம்.

காசியில் உள்ள திருப்பனந்தாள் மடத்தில் இப்படி ஒரு விக்கிரகமே உள்ளது. காசியில் மடம் நிறுவிய காரணத்தால் திருப்பனந்தாள் மடாதிபதிகளை 'காசி வாசி' என்றும் காசி மடத்தினர் என்றும் கூறுதல் வழக்கமாயிற்று.

குமரகுருபரர் காசியில் நாள்தோறும் பக் திச் சொற்பொழிவுகளைச் செய்து வந்தார். துளசிதாசர் அதை நாள்தோறும் கேட்டுப் பரவசமுற்றார். கம்பராமாயணத்தின் சிறப்புகளைக் குமரகுருபரர் எடுத்துச் சொல்ல, துளசிதாசர் தனது ராமாயணத்திலும் அவற்றைப் புகுத்தினார்.

தமிழர்கள் காசிக்குச் சென்றால் தங்குவதற்கு இந்த திருப்பனந்தாள் மடமே மிகவும் ஏதுவாக இருக்கிறது. தூய்மையான அறைகளைக் கட்டி வாடகைக்கு விடுகிறார்கள். தமிழ்நாட்டி லிருந்து செல்வோர்க்கு பல வகையிலும் துணை புரிகிறார்கள். வருவோர்க்கு புரோகிதம் செய்யத் தமிழறிந்த பண்டாக்களையும் ஏற்பாடு செய்கிறார்கள்.

குமரகுருபரரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பல இந்த மடாலயத்தில் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. சகலகலாவல்லி மாலைப் பாக்கள் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.

குமரகுருபரர் வாழ்ந்த இடம் புனிதமாகப் போற்றப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

Image result for குமரகுருபரர்

கங்கையின் அழகும், படித்துறைகளில் மக்கள் கூட்டமும், நகரின் காட்சிகளும் இந்த மடாலயத்தின்மேல் மாடியிலிருந்து பார்க்க மிகவும் ரம்மியமாக உள்ளது.

இம்மடத்தில் குமரகுருபரர் வழிபட்ட லிங்கத்துக்கு இன்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.

 திருப்பனந்தாள் மடத்து இருபதாவது மகா சந்நிதானம் அருள் நந்தியடிகளார் இம்மடத்தின் மாடியில்தான் தங்கியிருந்தார். அவருடைய கைத்தடி, திருப்பாதுகை முதலியவை நினைவுப் பொருட்களாக வைக்கப்பட்டுள்ளன.

சிருங்கேரி மடத்தின் கிளையொன்று கேதார்கட்டில் உள்ளது. சிருங்கேரி மடத்துடன் தொடர்புடைய அன்பர்கள் தென்னகத்திலிருந்து இங்கு வந்தால் தங்குவதற்கு ஏற்ற மாடியறைகள் இங்கு உள்ளன.

நம்மூர் சேதுபதி மன்னரால் நிறுவப்பட்ட சேதுமடம், கேதார் கட்டில் திருப்பனந் தாள் மடத்துக்கு அருகில் உள்ளது