Monday 30 October 2017

ஐப்பசி அன்னாபிஷேகம் திருமந்திரம் சொல்லும் தத்துவம்!

ன்னம் - வேதங்களாலும் உபநிடதங்களாலும் புகழப் படுவது.  பட்டினத்தாா் ‘அன்ன விசாரம் அதுவே விசாரம்’ எனப் பாடுகிறாா். 


அன்னத்தைப் பற்றிச் சொல்லாத நூல்களே இல்லை எனும் அளவுக்குப் பெருமை மிகுந்தது அன்னம்.

வேதத்தின் வழியில்...

‘ச்சே! என்ன இது சாப்பாடு... மனுஷன் சாப்பிடுவானா’ என்றெல்லாம் எந்த உணவையும் நிந்திக்கக் கூடாது. அதேபோல் அன்னத்தை வீணாக்குவதும் கூடாது என்கிறது வேதம்.
சில தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப் படங்களில் உணவுள்ள தட்டில் அப்படியே கைகழுவுவது போன்ற காட்சிகளையும் சாப்பாட்டுத் தட்டைக் கோபத் தில் விசிறியடிப்பது போன்ற காட்சிகளையும் பார்த் திருப்போம். நிஜத்தில் இப்படி யெல்லாம் செய்யவே கூடாது.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அம்பர பம்பரமாக ஓடி உழைப்ப தெல்லாம் வயிற்றுக்கான உணவுக்காகவே.

ஆகவே, நாம் அன்னத்தை - உணவை வீணாக்காமல், நிந்தனை செய்யாமல் இருப்ப துடன் இந்த நல்ல வழக்கத்தை நம்முடைய குழந்தைகளுக்கும் கற்றுத் தர வேண்டும்.

வேதத்தின் இந்தக் கட்டளை களை நாம் கடைப்பிடிக்கும் போது, ஈஸ்வரனின் மூச்சுக் காற்றான வேதம் நம்மைக் காப்பாற்றும். உண்ணும் உணவில் சகல ஜீவராசிகளுக் கும் பங்கு உண்டு.அன்னம் என்ற சொல்லுக்கு - உட்கொள் ளப்படுவது; உட்கொள்வது என்பது பொருள். அந்த உணவு அனைவருக்கும் உரியது. தனக்கென்று மட்டுமே சமைப்பவனைவிட்டு அன்ன லட்சுமி மெள்ள மெள்ள விலகிவிடுவாள் என்கின்றன ஞான நூல்கள்.
அதேபோல், பித்ருக்களின் ஆசியைப் பெறுவதற்கான சிராத்தத்தின்போதும், ‘அன்ன சூக்தம்' சொல்லும்படி பணிக் கப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே அன்னத்தின் மகிமையை நாம் அறிந்துகொள்ளலாம்.

வள்ளுவரின் வழியில்...

அன்னத்தை வீணாக்கக் கூடாது என்பதற்கு திருவள்ளு வரை விடவா வேறு சிறந்த உதாரணம் வேண்டும்?!

திருவள்ளுவா் தினந் தோறும் தான் உணவு உண்ணும்போது, ஓா் ஊசியும் சிறு கிண்ணத்தில் நீரும் வைத்துக்கொண்டு உட்காருவாா்.
உணவு பாிமாறப்படும் போது, ஒரு பருக்கைக் கீழே சிந்தினாலும், உடனே அதை ஊசியால் குத்தி எடுத்து,  கிண்ணத்திலுள்ள நீாில் கழுவி மறுபடியும் உணவில் சோ்த்துக் கொள்வதற்காக இந்த ஏற்பாடு.

ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லாதபடி, தான் வாழும் நாள் வரையில் ஒரு பருக்கை கூட கீழே சிந்தாமல், பொறுப் போடு பாிமாறுவாராம் அவரின் மனைவி வாசுகி.

சோற்றால் அடிச்ச சுவர்!

நம் உடம்புக்கே ‘சோற்றால் அடிச்ச சுவா்’ என்றொரு பெயர் உண்டு. யாராவது கொஞ்சம் இளைத்திருந்தால்கூட,

‘என்னப்பா டயட்டா? பார்த்து... சுவரை வெச்சுதான் சித்திரம் வரைய முடியும்’ என்பார்கள் பெரியோர்கள். அந்த அளவுக்கு முக்கியமானது அன்னம்.

காப்பியங்களிலும் அன்னத் தின் மகிமைகள் சொல்லப் பட்டுள்ளன. ஐம்பெருங் காப்பியங்களில் இரண்டா வதும் மதுரை கூலவாணிகன் சாத்தனாா் என்பவரால் எழுதப்பட்டது மான அற்புத நூல் மணிமேகலை. அதில், தெய்வத்தால் அருளப்பட்ட  அமுதசுரபியைக் கொண்டு அனைவருக்கும் அன்னமளித்து ‘உண்டி கொடுத்தோா் உயிா் கொடுத்தோரே’ என்பதை விளக்கும் முகமாகத் திகழ்ந்த மணிமேகலையின் வரலாறு மிக அற்புதமாக விவரிக்கப் பட்டிருக்கும்.
ஆக, அன்னம் எனும் மகத்து வத்தை மகேஸ்வர வடிவமாகவே போற்ற வேண்டும்.

மும்மூர்த்தியரின் அம்சம்
அன்னத்தை மும்மூா்த்தி களின் ஸ்வரூபமாகச் சொல்வாா்கள்.

பிரம்மதேவன், மகா விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்தி களுக்கும் அன்னத்துக்கும் அப்படியென்ன தொடர்பு?

பிரம்மா - படைக்கும் கடவுள். அன்னமும் படைக்கும் கடவுள் தான். அன்னத்தின் மூலமாகத் தந்தையிடம் குடிகொண்ட நாம், தாயிடம் பாிமாறப்பட்டுப் பத்து மாதங்களில் குழந்தையாக வெளிப்படுகிறோம்.

விஷ்ணு - காக்கும் கடவுள். அன்னமும் காக்கும் கடவுள் தான். நம்மைக் கட்டிக்காப்பது அன்னம்தானே?

ருத்திரன் - சங்காரமூா்த்தி. அன்னமும் சங்காரமூா்த்தி தான். இறைவனிடம் வரம் பெற்றவா்கள் அதை முறை தவறி உபயோகப்படுத்தும்போது, அவா்கள் பெற்ற வரமே அவா்களை அழித்துவிடும். அன்னமும் இதேபோல்தான்.

‘கிடைக்கிறதே என்று அள்ளிக்கொட்டி வயிற்றில் அடைக்கக் கூடாது’ என்கிறாா் திருவள்ளுவா்.
‘அற்றால் அளவறிந்து 
          உண்க அஃதுடம்பு 
பெற்றான் நெடிதுய்க்குமாறு’ 


என்று குறள் காட்டும் வழியில் உண்ண வேண்டும்.

முன்பு உண்ட உணவு ஜீரணமாகிவிட்டால், பின்பு உண்பவை சொிமானம் ஆகும் நிலையறிந்து உண்ண வேண்டும். நோயின்றி நீ்ண்ட காலம் வாழ இதுவே வழி என்பதே இதுவே இந்தக் குறளின் கருத்து.

அளவுக்கு மிஞ்சினால் அமிா்தமும் விஷம் என்பது போல், அளவுக்கு மீறிய உணவு உடம்பை அழிக்கும். இந்த முறைப்படிப் பாா்த்தால், அன்னம் - ருத்திரன் என்பது புலனாகும். இவ்வாறு எல்லா விதங்களிலும் உயிா்நாடியாக விளங்கும் அன்னத்தைச் சிவன் கோயில்களில் ‘அன்னா பிஷேக'மாகச் செய்கிறோம்.

அது ஏன்?

 சந்திரன் அருள்பெற்ற திருக்கதை...

சிவாலயங்களில் ஐப்பசி பௌா்ணமியன்று அன்னா பிஷேகம் நடைபெறும்.
தட்ச சாபத்தின் மூலம் தினம் ஒரு கலையாகத் தேய்ந்து வந்த சந்திரன், சிவபெருமானை நோக்கித் தவமிருந்து, சிவன ருளால் தனது முழு ஆற்றலையும் முழுமையாகப் பெற்ற திருநாள் - ஐப்பசி பௌா்ணமி.

நாமும் சந்திரனின் முழு ஆற்றலையும் அடையும் நோக்குடன் ஐப்பசி பௌா்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபடுகிறோம்.

சந்திரன் மனோகாரகன். சிவனருளால் சந்திர பலம் கைகூடும்போது, மனமது செம்மையாகும். மனம் செம்மை பெற்றால், அதன் கட்டளையின் கீழ் நடக்கும் செயல்கள் அனைத்தும் சிறக்கும்தானே?

இதையே விஞ்ஞான ரீதியாகவும் பாா்க்கலாம்.
நிலவு பூமிக்கு மிக அருகில் வந்து தன்முழு ஔியையும் பூமியில் வீசும் திருநாள் - ஐப்பசி பௌா்ணமி. அன்று அந்த ஔியாற்றலை நாம் பரிபூரணமாகப்  பெறுவதற்கா கவே, அன்னாபிஷேகம் நடை பெறுகிறது.

சந்திரன் சிவனை வழிபட்டுத் சாபம் தீா்ந்த நாள் என்பதோடு, மற்றொரு காரணமும் உண்டு. திருமூலாிடம் போனால் இதற்குத் தெளிவு கிடைக்கும். வாருங்கள் போகலாம்.

திருமந்திரம் சொல்லும் விளக்கம்

ஆகாயமே சிவலிங்கம்; பூமியே சக்தி - ஆவுடையாா்.

அந்த ஆகாயலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வதற்காகக் கடல்நீரை மோந்து சென்று மழையாக அபிஷேகிக்கின்றன மேகங்கள். இவ்வாறு அபிஷேகம் ஆன சிவலிங்கத்துக்கு, நட்சத் திரங்கள் மலா் மாலைகளாக இருக்கின்றன. திசைகளே அந்தச் சிவலிங்கத்துக்கு ஆடையாக இருக்கின்றன.
இதுவே சிவலிங்கத்தின் உண்மையான விளக்கம். இதைச் சொல்லும் திருமூலாின் திருமந்திரப் பாடல்:
தரையுற்ற சக்தி தனி லிங்கம் 
              விண்ணாம்
திரை பொரு நீரது மஞ்சன சாலை
வரை தவழ் மஞ்சு வான் உடு மாலை
கரை அற்ற நந்திக்குக் கலை 
                     திக்குமாமே
இப்போது புாிகிறதல்லவா ?

மனிதா்களான நாம் உட்பட மற்ற ஜீவராசிகள் அனைத்தும் ஆகாசலிங்கம் எனும் அந்த ஒற்றைக் கூரையின் கீழ்தான் இருக்கிறோம். அனைவருக்கும் உணவு தேவை. அனைத்து ஜீவராசிகளும் அதைப் பெற வேண்டும் என்ற நோக்கிலேயே, ஆகாசலிங்கமாகத் திகழ்ந்து நம்மை அரவணைக்கும் சிவ லிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்கிறோம்.
கோடி லிங்கங்களைத் தரிசித்த புண்ணியம்!

மற்றொரு விசேஷமும் உண்டு. ஒற்றைச் சாதத்தை எடுத்துப் பாா்த்தால் தொியும். சிவலிங்கத்தைப் போலவே அதுவும் ஆதி அந்தம் இல்லாத தாகவே இருக்கும். எங்கு தொடக்கம் எங்கு முடிவு என்பது தொியாது. ஆகவே, அன்னாபிஷேகத்தன்று அன்னாபிஷேகத் திருக்கோலத் தில் அருளும் சிவனாரைத் தரிசித்தால், கோடிக்கணக்கான சிவலிங்கங்களைத் தாிசித்த பெரும் புண்ணியம் கிடைக்கும்.

அதுமட்டுமா?

‘சோறு’ என்ற சொல்லுக்கு ‘முக்தி’ என்பது பொருள். ‘சாதம்’ என்ற சொல்லுக்குப் ‘பிறப்பு’ என்பது பொருள். எனவே, ஐப்பசி அன்னாபிஷேகத் திருநாளன்று அன்னாபிஷேக சிவபெருமானைத் தரிசனம் செய்தால், உணவுப் பஞ்சம் இருக்காது என்பதுடன், முக்தி யும் கிடைக்கும்.
இதையே ‘சோறு கண்ட இடம் சொா்க்கம்’ என்று சூட்சுமமாகச் சொல்லிவைத்தார்கள் நம் முன்னோர்கள்.

திருக்கோயில்களில் அன்னா பிஷேகம் ஆன பிறகு அந்த அன்னத்தை அனைவருக்கும் வழங்குவாா்கள். அதில் கொஞ் சம் எடுத்து, நீா்நிலைகளில் இருக்கும் ஜீவராசிகளும் உணவுப் பஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, நீா்நிலைகளில் கரைக்கவும் செய்வார்கள். 
நாமும் அன்னாபிஷேக நாயகனைத் தரிசித்து வணங்கி ஆனந்த வாழ்வைப் பெறுவோம்.

எப்படி நடைபெறும் அன்னாபிஷேகம்?
-----------------------
பூசை. ச.அருணவசந்தன்

பிஷேகம் என்ற சொல், நடைமுறையில் இறைவனைத் திருமுழுக்காட்டுவதைக் (நீராட்டுவது) குறிக்கிறது. அந்தச் சொல்லுக்கு உரிமைப்படுத்து தல்' என்றும் பொருள் கூறுவர்.

`அன்னாபிஷேகம்' என்பது இறைவனுக்கு வயலில் விளைந்த அரிசியைக் கொண்டு அமுதாக்கிக் காய்கறிகளைக் கொண்டு பதார்த்தங்கள் செய்து படைப்பதேயாகும்.
காலப்போக்கில் அது அபிஷேகம் என்ற சொல்லைக் கொண்டு இறைவன் திருமேனி யில் அதைச் சாற்றும் வழக்கம் வந்ததென்பர்.

அன்னாபிஷேக புண்ணிய தினத்தன்று, உச்சிக் காலத்தில் அக்னி திரட்டி (அக்னியை வளர்த்து) அடுப்பிலிட்டு அதை மூட்டுவர். உலை வைத்து தேவையான அளவு அரிசியை வடித்து அமுதாக்குவர்.

அதற்கேற்ப காய்கறிகளால் கூட்டு, துவையல், பொரியல், அவியல் முதலியவற்றை செய்வர். முறுக்கு, அதிரசம், தேன்குழல், சுகியன் முதலியவற் றைச் செய்துகொள்வர்.

மாலையில் இறைவனை அபிஷேகித்து ஒற்றாடை சார்த்தியபின் (நன்கு துடைத் தல்), அமுதை (அரிசிச்சோறு) இறைவன் திருமேனியை மூடும்படி சார்த்துவார்கள்.
அதன்மேல் அலங்காரமாக வடை, முறுக்கு, அதிரசம், அப்பம் ஆகியவற்றை அணிவிப்பார்கள்.

மேலும்  பாகற்காயை அப்படியே வேகவைத்து, புளி, காரமிட்டு கோத்து உருத்திராட்ச மாலை போல் அணிவிப்பர். நீண்ட புடலங்காயை அப்படியே அவித்து, பாம்பு போல் அணிவிப்பார்கள்.சுவாமிக்கு முன்புறம் வாழை இலைகளைப் பரப்பி பல வகையான அன்னங்கள், பணியாரங்கள், காய்கறிகள், கூட்டுகள், பழங்கள், பானங்கள், பாயசங்களை இட்டு நிவேதனம் செய்வர்.

பிறகு தீபாராதனை செய்யப் படும். அதன் பிறகு மிளகு நீர், தண்ணீர் ஆகியவை நிவேதித்துத் திரையிடப்படும். பின்னர் முகவாசம் எனப்படும் தாம்பூலம் நிவேதிப்பர். மீண்டும் தீபாராதனை செய்து அன்பர்களுக்குப் பிரசாதம் வழங்குகின்றனர்.

பிறகு, அந்த அலங்காரத்தைக் களைந்து, சிறிதளவு அன்னத்தை (சோற்றை) எடுத்து லிங்கம்போல் செய்து பூசிப்பார்கள். பின்னர், அதை தட்டில் வைத்துப் பரிசாரகன் தலையில் ஏந்தி வர, குடை, மேளதாளம் தீவட்டியுடன் சென்று ஊரின் குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் ஊரில் விளைச்சல் செழிக்கும் என்பது நம்பிக்கை.
அன்னாபிஷேக ஆலயங்கள்!

ர்வ சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் இது சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆலயங்களில் எம்பெருமானின் லிங்கத் திருமேனி பெயருக்கேற்றாற் போல பெரியதாகையால், காலையிலேயே அன்னா பிஷேகம் தொடங்குகிறது.

சுமார் 100 மூட்டை அரிசி அபிஷேகத்துக்குத் தேவைப்படுமாம்.  பக்தர்கள் மூலம் காணிக்கையாகவும் அரிசி மூட்டைகள் கோயிலுக் குச் சமர்ப்பிக்கப்படுவதுண்டு.

அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதன்மூலம் சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக வந்துகொண்டிருக்கும்.

எம்பெருமானின் திருமேனி மீது சிறிது சிறிதாக அன்னம்

சாற்றப்படுகிறது. எம்பெருமா னின் திருமேனி முழுவதும் அன்னாபிஷேகம் ஆக, மாலை நேரம் ஆகும்.

பின்னர் பூஜைகள் முடிந்து அர்த்தசாமத்துக்குப் பின் அன்னம் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சிதம்பரத்தில் உள்ள ஸ்படிக லிங்கத்துக்கு தினமும் அன்னா பிஷேகம் செய்யப்படுகிறது. இதில் காய்கறிகள், குழம்புகள் படைப்பதில்லை. அன்னத்தைச் சாற்றி வில்வம் அணிவித்து தீபாராதனை செய்கின்றனர்.
இந்தத் தலத்தை அப்பர் பெருமான்,  ‘அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்’ என்று சிறப்பித்துப் பாடினார்.

திருஆப்பனூர் என்ற திருத் தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு அன்னவிநோதர் என்ற பெயர் வழங்குகிறது. இங்கு  பெருமான் அன்பருக்காக மணலைச் சோறாக்கி அருள் புரிந்தாராம்.

யிர்கள் மகிழ்ச்சியுடன் வாழ அன்னம் வழியாக இருப்பதால், அதை அளிக்கும் பெருமானைச் சோற்றுத்துறையார் என்றும் அழைக்கின்றனர். 

திருவையாற்றுக்கு அருகில் திருச்சோற்றுத்துறை என்ற தலம் உள்ளது. இங்குள்ள இறைவர் தொலையாச்செல்வர்; அம்பிகை அன்னபூரணி.  இங்கு அருளாளன் என்பவனுக்குப் பெருமான் அட்சய பாத்திரம் தந்ததாகத் தலவரலாறு கூறுகிறது.

சுந்தரர் சிவனாரைப்  ‘பாடுவார் பசி தீர்ப்பார் பரவு வார் இடர் களைவார்’ என்று போற்றுகின்றார். கருகாவூர் பெருமானுக்குப் `பசி தீர்த்த நாயனார்' என்றே பெயர்.

ர்நாடக மாநிலத்தில், மைசூருக்கு அருகிலுள்ள திருத் தலம் நஞ்சன்கூடு. இந்தத் தலத்தில் அருளும் ஸ்வாமிக்கு அனுதினமும் அன்னாபி ஷேகம் நடைபெறுவது சிறப்பாகும்.

விருந்திட்ட ஈஸ்வரன்!

சென்னை - செங்கல்பட்டு மார்க்கத்தில் மறைமலை நகர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் இரண்டரை  கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கச்சூர்.

இங்கே ஊருக்கு நடுவில் விருந்திட்டநாதரும், அருகி லுள்ள மலைக்குமேல் மருந்தீஸ்வரரும் திருக்கோயில் கொண்டிருக்கிறார்கள். 

இங்கே, தம்மைத் தரிசிக்க வந்த சுந்தரமூர்த்தி நாயனாரின் பசியைத் தீர்க்கும் வகையில், இல்லம்தோறும் சென்று இரந்து விருந்து படைத்தவர் என்பதால் ஸ்வாமிக்கு விருந்திட்டநாதர் என்று திருநாமம். இந்த ஈஸ்வரனைப் பாடிய சுந்தரர், மலைக்குமேல் இருக்கும் மருந்தீஸ்வரரையும் ‘மாலை மதியே மலைமேல் மருந்தே’ எனப் பாடிப் பரவியுள்ளார்.
இந்தத் திருத்தலத்தில் மாசி மகத்துக்கு முன்பு வரும் ஞாயிற்றுக் கிழமையன்று, சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இறைவன் விருந்திட்ட ஐதீக விழா நடைபெறுகிறது.

ஐப்பசி பரணி அன்னப்படையல்! 


பெருங்காவல் தெய்வமாக விளங்கும் பைரவருக்குப் பெரும்படையல் எனப்படும் அன்னபாவாடம் இடுவது சிறப்பு வழிபாடாகும்.

சித்திரை பரணியிலும், ஐப்பசி பரணியிலுமாக இரண்டு முறை பைரவருக்குப் படையலிட்டு வழிபடுகின்றனர்.

பைரவர் அநேக தருணங் களில் வெளிப்பட்டு அன்பர் களிடம் சென்று படையல் ஏற்கின்றார்.

எனினும், சிறுத் தொண்ட நாயனாரிடம் அவர் சென்று ஏற்ற படையலே புராணங்களில் தனிச் சிறப்புடன் போற்றப் படுகிறது.  அப்படி அவர் சென்ற நாள் சித்திரை பரணியாகும். அதையொட்டியும், போர் நட்சத்திரமான பரணியில் உக்கிர தெய்வங்களுக்கு பெரும் படையலிட்டு வழிபடும் வழக்கம் நெடுங்காலமாக இருப்பதாலும், பரணி நட்சத்திரம் பைரவர் வழிபாட்டுக்கு உரியதானது.

அன்னம் அருளும் திருப்பதிகம்!

அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம்பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே


தில்லையம்பலமாம் சிதம்பரம் இறைவனைச் சிறப் பித்து வேண்டி, திருநாவுக் கரசர் அருளிய அற்புத பதிகம் இது.

ஐந்தாம் திருமுறையில் முதலாவதான இந்தப் பதிகத் தைப் பாடி சிவனாரை அனுதினமும் பிரார்த்தித்து வழிபடுவதால் வீட்டில் பசிப் பிணியே இருக்காது. அது மட்டுமா? இந்தப் பதிகத்தைப் பாடுவதால் உண்ண உணவு மட்டுமின்றி பொன்னும் பொரு ளும் வாய்க்கும், இன்பங்கள் பெருகி வாழ்க்கைச் சிறக்கும் என்பது பெரியோர் வாக்கு.

No comments:

Post a Comment