Sunday 28 January 2018

பிறந்த நட்சத்திர அதிர்ஷ்ட நாட்கள்

வாழ்க்கையில் ஒருவர் தேடி செல்லும் விடயங்கள் நல்ல முறையில் கைகூட எந்நாளில் தொடங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை அவர்களின் பிறந்த நட்சத்திரத்தை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்.
அஸ்வினி
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்களில் தொடங்கும் காரியங்கள் வெற்றி அடையும்.
பரணி
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கிருத்திகை, மிருகசீரிசம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திர நாட்களில் நல்ல காரியங்கள் செய்யலாம்.
கிருத்திகை
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்தரட்டாதி, அஸ்வினி ஆகிய நட்சத்திர நாட்கள் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
ரோகிணி
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், அவிட்டம், கேட்டை, பூரட்டாதி, ரேவதி, பரணி ஆகிய நட்சத்திர நாட்களில் நல்ல காரியங்களை தொடங்கலாம்.
மிருகசீரிஷம்
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை, பூசம், அஸ்வினி, கிருத்திகை ஆகிய நட்சத்திர நாட்கள் நல்ல காரியம் செய்வதற்கு உகந்தது.
திருவாதிரை
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி ஆகிய நட்சத்திர நாட்கள் அதிர்ஷ்டமாகும்.
புனர்பூசம்
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் நல்ல விடயங்களை செய்யலாம்.
பூசம்
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயில்யம், பூரம் அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை ஆகிய நட்சத்திர நாட்கள் சிறந்தவை.
ஆயில்யம்
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகம், உத்திரம், சித்தரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம் ஆகிய நட்சத்திர நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றியைக் கொடுக்கும்.
மகம்
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரம், அஸ்தம், ஸ்வாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி ரோகிணி, திருவாதிரை, பூசம் ஆகிய நட்சத்திர நாட்களில் தொடரும் செயல்பாடுகள் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
பூரம்
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திர நாட்கள் அற்புதமானவை.
உத்திரம்
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம் திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம் ஆகிய நட்சத்திர நாட்களில் நல்ல காரியங்களை செய்யலாம்.
அஸ்தம்
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம் ஆகிய நட்சத்திர நாட்கள் சிறப்பானவை.
சித்திரை
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம் ஆகிய நட்சத்திர நாட்களில் நல்ல காரியங்களை தொடங்கலாம்.
சுவாதி
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம் அஸ்தம் ஆகிய நட்சத்திர நாட்கள் ஏற்றது.
விசாகம்
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம் மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை பூசம் மகம், உத்திரம், சித்திரை ஆகிய நட்சத்திர நாட்கள் வெற்றியைக் கொடுக்கும்.
அனுஷம்
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி ஆகிய நட்சத்திர நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
கேட்டை
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம் ஆகிய நட்சத்திர நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
மூலம்
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
பூராடம்
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை ஆகிய நட்சத்திர நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
உத்திராடம்
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம் ஆகிய நட்சத்திர நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றியை கொடுக்கும்.
திருவோணம்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
அவிட்டம்
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
சதயம்
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம் ஆகிய நட்சத்திர நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
பூரட்டாதி
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருக சீரிஷம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
உத்திரட்டாதி
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம் ஆகிய நட்சத்திர நாட்கள் அதிர்ஷ்டமாகும்.
ரேவதி
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்கள் நல்ல பலனைக் கொடுக்கும்.

அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், திருமறைக்காடு - நாகப்பட்டினம்

தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான சிவஸ்தலம் ; சப்தவிடங்கத் ஸ்தலம் ; திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடியருளிய ஸ்தலம் ; நான்கு வேதங்களும்  ஈசுவரனை பூஜித்த பெருமை கொண்ட சிவஷேத்திரம்..

🌱🏵🌱🏵 BRS🌱🏵🌱🏵🌱


மூலவர்: திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்)

அம்மன்/தாயார் : வேதநாயகி

தல விருட்சம் : வன்னிமரம், புன்னைமரம்

தீர்த்தம்: வேத தீர்த்தம், கடல்துறை, மணிகர்ணிகை, தேவபூஷணம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருமறைக்காடு

ஊர் : வேதாரண்யம்

பாடியவர்கள்: சுந்தரர், அப்பர், ஞானசம்பந்தர்

 
🅱 தேவாரப்பதிகம்:🅱

யாழைப்பழித் தன்னமொழி மங்கைஒரு பாகன் பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தான் இடம்பேணில் தாழைப்பொழில் ஊடேசென்று பூழைதலை நுழைந்த வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே. - சுந்தரர்

🅱 தேவாரப் பாடல்கள் : 🅱

Ⓜ சம்பந்தர் :Ⓜ

🎗1. சிலைதனை நடுவிடை,

🎗2. சதுரம் மறைதான்,

🎗3. பொங்கு வெண்மணற்,

🎗4. கற்பொலிசு ரத்தினெரி,

🎗5. விடைத்தவர் புரங்கள்.

Ⓜ அப்பர் :Ⓜ

🎗1. இந்திரனோடு தேவர் இருடிகள்,

🎗2. தேரையு மேல்கடாவி,

🎗3. ஓதமால் கடல் பாவி,

🎗4. பண்ணின் நேர்மொழி,

🎗5. தூண்டு சுடரனைய சோதி.

🌀 தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 125வது தலம்.

🅱 வழிபட்டோர் :🅱

🔥 வேதங்கள், இராமர், அகத்தியர், முசுகுந்த சக்கரவர்த்தி, கௌதமர், விசுவாமித்ரர், வசிஷ்டர், நாரதர், பிரமன், கங்கை, காவிரி.

🅱 திருவிழாக்கள்:🅱
 
🍁 மாசி மகம் - பிரம்மோற்சவம் 29 நாட்கள் திருவிழா - அடைக்கப்பட்டிருந்த கதவு திறந்ததை கொண்டாடும் வகையில் திருவிழா நடக்கும். இதில் மக தீர்த்தம் அன்று சுவாமி கடலுக்கு போய் தீர்த்தமாடி வருவது சிறப்பு - 73 சுவாமி புறப்பாடும் கைலாச வாகனம் புறப்பாடும் நடக்கும்.

🍁 ஆடிப்பூரம் - 10 நாட்கள் - இது அம்மனுக்கு நடக்கும் பெரிய அளவிலான திருவிழா ஆகும்.

🍁 விநாயகர் சதுர்த்தி, கந்தர் சஷ்டி ஆகியன இத்தலத்தின் முக்கிய விழா நாட்கள் ஆகும்..

🍁 மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும்.

🍁 வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
 
🅱 தல சிறப்பு:🅱
 
🎭 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .

🎭 தியாகேசர் சன்னதியில் உள்ள மரகத லிங்கத்திற்கு காலை மாலை இருவேளையும் பூஜை உண்டு.

🎭 இந்திரன் அளித்து முசுகுந்தன் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.

🎭 வன்னிமரத்தில் ஒருபுறம் காய்கள் நீளமாகவும் முட்கள் உடையதாகவும் இன்னொரு பக்கம் உருண்டையாகவும் முட்கள் இல்லாமலும் இருக்கின்றன என்பது சிறப்பம்சம்.

🎭 நவகிரகங்கள் ஒரே முகத்தோடு தனிதனி விக்ரகமாக சுவாமி - அம்பாள் திருமணக்கோலத்தை காண ஒரே திசையில் உள்ளது.

🎭 அகத்தியருக்குத் திருமணக் காட்சி நல்கிய திருத்தலம்.

🎭 வேதங்களால் அடைக்கப்பட்டத் திருக்கதவினை, அப்பரடிகள் திறப்பிக்கவும், ஞானசம்பந்தர் திருக்காப்பிடவும் பாடியப் பெருமைப் பெற்றத் தலம்.

🎭 இராமர், இராவணனை கொன்ற பழி நீங்கப் பூஜித்த தலமாதலால், இஃது கோடிக்கரை என்றும் வழங்கப்படுகிறது.

🎭 இக்கோவிலில் எரியும் விளக்கில் இருந்த நெய்யை உண்ணுவதற்கு வந்த எலி, அணையும் நிலையில் இருந்த திரியைத் தூண்டி, மறு பிறப்பில் மாவலிச் சக்கிரவர்த்தியாகப் பிறந்தது. இச்செய்தியை, அப்பரடிகள் திருக்குறுக்கைத் தல தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

🎭 முசுகுந்தச் சக்கரவர்த்தி தியாகேசப் பெருமானை எழுந்தருளுவித்த ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று (தியாகர் - புவனவிடங்கர்; நடனம் - ஹம்ச நடனம்; மேனி - மரகத் திருமேனி; ஆசனம் - இரத்தின சிம்மாசனம்).

🎭 திருவிளையாடற் புராணம் அருளிய பரஞ்சோதி முனிவர் அவதாரத் ஸ்தலம்.

🎭 இத்தலத்தில் பிரம்மா பூஜை செய்து தனது சிருஷ்டித் தொழிலை செய்யலானார்.

🎭 விசுவாமித்திர முனிவர் பிரம்மரிஷி ஆகவேண்டும் என்ற தனது ஆவலை சிவபெருமானை இத்தலத்தில் பூஜித்து நிறைவேற்றிக் கொண்டார்.

🎭 அகத்தியர், விசுவாமித்திரர் தவிர, கௌதமர், வசிஷ்டர் ஆகிய முனிவர்களும் இத்தலத்து மறைக்காட்டுநாதரை வழிபட்டுள்ளனர்.

🎭 பரஞ்சோதி முனிவரே இக்கோவில் தலபுராணத்தை அருளிச் செய்துள்ளார்.

🎭 சோழர், விஜயநகர அரசர் கால, கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன.

🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 189 வது தேவாரத்தலம் ஆகும்.
 
🅱 நடை திறப்பு:🅱
 
🔑 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.🔑

🅱 பொது தகவல்:🅱

🌻 இத்தலத்தில் மேற்குக் கோபுர வாயிலில் உள்ள விநாயகர், இராமர் இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை விநாயகர் விரட்டி அடித்ததால் இத்தலத்திலுள்ள விநாயகர் வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

🌻 இந்த வீரஹத்தி விநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி தருகிறார்.

🌻 இத்தலத்தில் பிரம்மா பூஜை செய்து தனது சிருஷ்டித் தொழிலை செய்யலானார்.

🌻 விசுவாமித்திர முனிவர் பிரம்மரிஷி ஆகவேண்டும் என்ற தனது ஆவலை சிவபெருமானை இத்தலத்தில் பூஜித்து நிறைவேற்றிக் கொண்டார்.

🌻 இக்கோவிலில் இரண்டு பிரகாரங்களும், இரண்டு ஸ்தல விருக்ஷங்களும் உள்ளன.

🌻 முதல் பிரகாரத்தில் மணிகர்ணிகை தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம், விக்கினேசுவர தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் ஆகியவை உள்ளன. மேலும் திருக்கோடி தீர்த்தமும் உள்ளது. இதிலிருந்து தான் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நீர் எடுத்து உபயோகிக்கப்படுகிறது.

🌻 கோவிலின் ராஜ கோபுரம் 5 நிலைகளை உடையது.

🌻 இறைவன், இறைவி ஆகிய இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன.

🌻 இங்கு சுவாமி அம்பாள் விநாயகர் மூவருக்கும் தனித்தனி கொடிமரம் உண்டு.

🌻 இராமர் இவ்விடத்தில் சமுத்திர ஸ்னானம் செய்து இராவணனைக் கொன்ற பாவம் நீங்கப் பெற்றார் என்று தலப்புராணம் கூறுகிறது.

🌻 இராமர் பூஜித்த இராமநாதர் சந்நிதியும் இவ்வாலயத்திலுள்ளது.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌱  இத்தலத்தில் வழிபடுவோர்க்கு பாவங்கள் விலகும். நாக தோசம் நீங்கும்.

🌱 இக்கோயிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம்.

🌱 இதில் நீராடி தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதாக ஐதீகம். பிரம்மகத்தி போன்ற பாவங்களும் நீங்கும்.பல ஆண்டுகள் யோகம் , தானம், தவம் செய்த பலன்களை அடையலாம்.

🌱 இத்தலத்திற்கு தெற்கே நேர் எதிரே கிழக்கே உள்ள கடல் ஆதி சேது என்னும் கடல் தீர்த்தம். இதில் ஒருமுறை நீராடுவது சேதுவில் நூறு தடவை நீராடுவதற்கு சமம்.

🌱 இத்தீர்த்தங்களில் ஒவ்வோராண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை மாசி மாதத்தில் மகாளய அமாவாசை முதலிய நாட்களில் கோடியக்கரை ஆதிசேதுவிலும், வேதாரண்ய சன்னதிக் கடலிலும் அதன்பின்னர் மணிகர்ணிகையிலும் நீராடி மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் திருமணவரம், குழந்தைபாக்கியம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம், செல்வ செழிப்பு, பிணியற்ற வாழ்வு ஆகியன கிடைக்கும்.

🌱 இத்தலத்து திருமறைக்காடரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

🅱 நேர்த்திக்கடன்:🅱
 
☀ குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டுகிறார்கள்.

☀ திருமண வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாத்தி வழிபடுகின்றனர்.

☀ மிகப்புகழ்பெற்ற பரிகார தோச நிவர்த்தி தலம் என்பதால் பல்வேறு தோசங்களுக்கும் நிவர்த்தி பரிகாரங்கள் செய்து வழிபடுகிறார்கள்.

☀ அம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.

☀ சுவாமிக்கு மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி , பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.

☀ மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.

☀ தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
 
🅱 தலபெருமை:🅱

Ⓜ மூடியிருந்த திருக்கோயில் கதவு திறந்த கதை:Ⓜ

🌸  சைவ சமயத்தின் முக்கிய நாயன்மார்களில் இருவரான அப்பரும் ஞானசம்பந்தரும் சிவதலம் தோறும் சென்று எம்பெருமானை போற்றி பதிகம் பாடி வருகையில் இந்த திருமறைக்காட்டிற்கும் வந்தனர்.

🌸 அப்போது வேதங்களே வழிபட்ட இத்தலத்து மறைக்காட்டீசுவரரை வழிபட எண்ணி கோயிலுக்கு செல்கையில் கோயிலின் பிரதான வாயிற் கதவு மூடப்பட்டிருந்தது. இறைவனை எல்லோரும் பக்கத்து வாயில் வழியாகவே சென்று வழிபட்டவண்ணம் இருந்தனர்.

🌸 இதைப்பார்த்த அப்பரும் சம்பந்தரும் இறைவனை வணங்க இப்படியொரு சிக்கல் இருப்பது ஏன் என்று வினவினர். வேதங்கள் பூஜித்து வந்து வரம்பெற்றுப் பின்னர் திருக்கதவைத் தாழிட்டுவிட்டுச் சென்ற விபரம் அறிந்தனர்.

🌸  உடனே ஞானசம்பந்தர் அப்பரிடம் மிக்க பழமை மிக்க வேதங்களே வழிபட்ட இத்திருக்கோயில் கதவை திறந்து இறைவனை நேராக தரிசிக்க திருப்பதிகம் பாடியருளுமாறு வேண்டிக் கொண்டார்.

🌸 அதைக் கேட்ட அப்பர் மிகுந்த ஆராமையோடும் பண்ணினேர் மொழியென்று மொத்தம் 10 திருப்பாசுரம் பாடியவுடன் கதவு திறந்து கொண்டது.

🌸 உள்ளே சென்று ஆனந்தப்பரவசத்துடன் மறைக்காட்டீசரை வணங்கிவிட்டு வெளியே வந்தபோது அப்பர்., சம்பந்தரே இந்த கதவு எப்போதும் மூடவும் திறக்கவும் பதிகம் பாடும் என்று கேட்டுக்கொள்ள ஞானசம்பந்தர் சதுரம் மறை என்று ஒரே ஒரு திருப்பதிகம் பாடியவுடன் கதவு மூடிக்  கொண்டது.

🌸 இறைவனின் இந்த கருணையை எண்ணி இருவரும் பரவசம் எய்தினர். இத்தகைய  சிறப்பு வாய்ந்த கதை நிகழ்ந்த கோயில் இது.

🅱 வேதநாயகி :🅱

🔥 இத்தலத்து அம்பாளின் பெயர் வேதநாயகி எனவும் தமிழில் யாழைப் பழித்த மொழியாள் என்றும் வடமொழியில்  வீணாவாத விதூஷணி எனவும் வழங்கப்படுகிறது.

🔥 அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணை நாதத்தை விட இனிமையாக இருந்ததால் அம்பிகைக்கு இங்கே இப்பெயர். இதன் நினைவாக சரஸ்வதி இத்தலத்தில் வீணையில்லாமல் தவக்கோலத்தில் சுவடியைக் கைக் கொண்டு இருப்பதைக் காணலாம்.

Ⓜ துர்க்கை :Ⓜ

🍁 இத்தலத்தின் பரிவார தேவதையான துர்க்கை தென்திசை நோக்கியுள்ளாள். திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் முறுவல் காட்டி எழுந்தருளி உள்ள இக்காவல் தெய்வம் இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வம்.

🅱 தியாகராசர் : 🅱

🔥 இத்தலம் சப்தவிடத்தலங்களில் ஒன்று.

🔥 முசுகுந்த சக்கரவர்த்திக்கு இந்திரன் அளித்த தியாகமூர்த்தங்களுள் ஒன்று.

🔥 இவர் செய்யும் நடனம் அம்சநடனம் எனப்படும்.
 
🔥 திருமறைக்காடு என்று தமிழிலும், வேத ஆரண்யம் என்று வடமொழியிலும் வழங்கப்பெறும் மிகப்பழமை வாய்ந்த சிவதலம்.

🔥 சப்தவிடத் தலங்களுள் இது இரண்டாவது தலம்.

🔥 சக்தி பீடங்களில் மிக்க விசேசம் வாய்ந்த சுந்தரி பீடத்தைப் பெற்று விளங்கும் கோயில்.

🔥 மூலவருக்கு மறைக்காட்டுறையும் மணாளர் என்று சிறப்பு பெயரும் உண்டு.

🔥 வீணை இல்லாத சரஸ்வதி இருக்கும் சிவதலம் இது.

🔥  63 நாயன்மார்களோடு சேர்ந்து தொகையறாக்கள் 10 பேர்., ஆக மொத்தம் 73 பேருக்கும் இங்கு சிலைகள் உள்ளன.

🔥 ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்கள் இறைவனை வழிபட்ட தலம்.

🔥 அகத்தியருக்கு திருமணக் கோலத்தில் இறைவன் காட்சி தந்த தலம்.

🔥 மனு, மாந்தாதா, தசரதன், ராமன், பஞ்சபாண்டவர், மகாபலி முதலியோர் வழிபட்ட பேறு பெற்ற தலம்.

🔥 பதினாறு சபைகளில் 12 வது தேவ பக்த சபை என்ற திருநாமம் உடைய தலம்.

🔥 புகழ்பெற்ற கோளறு பதிகத்தை ஞானசம்பந்தர் இங்கேதான் பாடியருளினார்.

🔥 தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் இது.

🔥 இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் மேலக்குமரர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றவர்.

🔥 இக்கோயில் வளாகத்திற்கு வெளியில் உள்ள அத்தனை இடங்களிலும் உப்பு கரிக்கும் தண்ணீரே இருக்கும். இத்தலத்தில் மட்டுமே நல்லதண்ணீர் உள்ளது. இவ்வூருக்கு குடிதண்ணீர் இந்த கோயில் வளாகத்துக்குள் இருந்து எடுத்து தான் பயன்படுத்தப்படுகிறது.

Ⓜ கோவில் அமைப்பு :Ⓜ

💡இராசகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியது.

💡முன் மண்டபத்தின் பக்கத்தில் தலமரம் வன்னி உள்ளது - அடியில் எண்ணற்ற நாகப்பிரதிஷ்டைகள் எதிரில் தீர்த்தமுள்ளது.

💡உள்சுற்றில் அறுபத்துமூவர், இராமநாதலிங்கம் உள்ளன.

💡வெளிப் பிராகாரத்தில் இராமரை தொடர்ந்து வந்த வீரஹத்தி பாவத்தைப் போக்கிய வீரஹத்தி விநாயகர் - பக்கத்தில் குமரன் சந்நிதி.

💡சேர சோழ பாண்டிய லிங்கங்கள் தனித்தனியே மூன்று சந்நிதிகளாக உள்ளன.

💡புன்னைமரத்தடியில் நசிகேது, சுவேத கேது ஆகியோரின் மூலத்திருமேனிகளைக் காணலாம்.

💡சுவாமிக்குப் பக்கத்தில் அம்பாள் சந்நிதி (கிழக்கு நோக்கி) உள்ளது - தனிக்கோயில்.

💡உள்வலமாக வரலாம். முன் மண்டபத்தின் மேற்புறம் வண்ண ஒவியங்கள் உள்ளன.

💡தலவிநாயகர், காட்சி கொடுத்த நாயனார், ஆறுமுகர், ஜ்வரதேவர், சனிபகவான், வீணையில்லாத சரஸ்வதி, அன்னபூரணி, துர்க்கை, சோழீஸ்வரலிங்கம் முதுலிய சந்நிதிகள் உள்ளன.

💡இங்குள்ள நடராஜசபை - தேவசபை எனப்படும்.

💡நவக்கிரகங்கள் - இத்தலம் கோளிலித் தலங்களுள் ஒன்றாதலின் வரிசையாகவுள்ளன.

💡பள்ளியைறையை அடுத்துப் பைரவர், சூரிய - சந்திரர்கள் சந்நிதிகள்.

💡உள்வலமுடித்துப் படிகளேறி முன்மண்டபத்தை யடைந்தால் தியாகராஜ சபை. விடங்கர், பெட்டிக்குள் பாதுகாப்பாக வுள்ளார்.

💡உள் வாயிலைக் கடந்தால் இருபுறமும் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

💡சுதையாலான துவாரபாலகர்களைத் தொழுது உட்சென்றால் மூலவர் தரிசனம்.

💡மூலவர் - வேதாரண்யேசுவரர் - சிவலிங்கத்திருமேனி, சுவாமிக்குப் பின்னால் 'மறைக்காட்டுறையும் மணாளர்' திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார்.

💡இம்மணாளருக்கு ஆண்டுக்கொருமுறை தான் திருமஞ்சனம்.

💡திருமஞ்சனம் முடிந்ததும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அஃதுஅடுத்த திருமஞ்சனத்தின் போது தான் களையப்படும். ஆகவே மணாளர், சந்தனக் காப்பு மணத்தில் ஆண்டு தோறும் காட்சியளிக்கிறார் என்பது விசேஷமான செய்தியாகும்.

💡மரகதத் விடங்கருக்கு நாடொறும் திருமஞ்சனமுண்டு.

💡வீதியுலாவில், தியாகேசர் புறப்படாத நாள்களில் சந்திரசேகரரே எழுந்தருளுகிறார்.

💡தியாகேசருக்குப் பதிலாக இவருக்குப் பட்டம் கட்டும் நாளை "சந்திரசேகரப் பட்டம்" என்பர்.

💡 "பட்டம் கட்டிய சென்னிப் பரமர்" என்பது தேவாரம்.

💡இக்கோயிலில் 92 கல்வெட்டுக்கள் சோழர் காலத்தியவை  கண்டெடுக்கப்பட்டுள்ளன.

💡இறைவனை 'வேதவன முடையார்' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.

💡யாழ்ப்பாணத்து 'சின்த்தம்பி நாவலர்' என்பவர் இத்தலத்துப் பெருமான் மீது "மறைசை அந்தாதி" பாடியுள்ளார்.

🅱 தல வரலாறு:🅱

💧ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் ஆகிய நான்கு வேதங்களும் இத்தலத்திலுள்ள ஈசுவரனை பூஜித்த பெருமையை திருமறைக்காடு பெற்றுள்ளது.

💧 நான்கு வேதங்களும் மனித உருவில் அருகிலுள்ள நாலுவேதபதி என்ற இடத்தில் இருந்து கோண்டு இத்தலத்து இறைவனை முறைப்படி வழிபட்டு வந்தன.

💧 கலியுகம் ஆரம்பிப்பதற்கு முன்பு இனிமேல் பூமியில் இருப்பது கடினம் என்றுணர்ந்த வேதங்கள் கோவிலின் முன்கதவுகளை நிரந்தரமாகப் பூட்டிவிட்டு சென்றன.

💧 அதுமுதல் பல ஆண்டுகளாக ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறிய திட்டிவாசல் வழியாகவே கோவிலினுள்ளே சென்று வந்தனர்.

💧 ஒருமுறை திருநாவுக்கரசரும்,  திருஞானசம்பந்தரும் திருமறைக்காட்டிற்கு வருகை புரிந்தனர். ஊர் மக்கள் யாவரும் சிறிய திட்டிவாசல் வழியாக கோவிலின் உள்ளே செல்வதையும், கோவிலின் முன்கதவுகள் மூடி இருப்பதையும் பார்த்து விபரம் கேட்டனர்.

💧 வேதங்கள் பூஜித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளை பதிகம் பாடி திருநாவுக்கரசர் திறக்கவும், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி திறந்த கதவை மூடவும் செய்த அற்புதம் நிகழ்ந்த தலம் திருமறைக்காடு.

💧 அப்பரும் சம்பந்தரும் பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சி இத்தலத்தில் பிரம்மோத்சவ விழாவாக மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

💧 இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.

🔥 பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசி பாண்டிய நாடு வரவேண்டும் என்று சம்பந்தருக்கு அழைப்பு விட்டார். மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசரிடம் கூறிவிட்டுப் போக வந்தார்.

🔥 மதுரையில் உள்ள சமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்களென்றும் தற்போது நாளும் கோளும் நன்றாக இல்லையென்று சொல்லி சம்பந்தர் மதுரை செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினார். அதற்கு சம்பந்தர் சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும் இடர் செய்யாது என்று கூறி

🙏🏽 1. வேய் உறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே ஆக அறும் நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

🙏🏽 2. என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க எருது ஏறி ஏழை உடனே பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து என் உளமே புகுந்த அதனால் ஒன்பதொடு ஒன்றொடடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்கள் அவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

🙏🏽 3. உரு வளர் பவளமேனி ஒளி நீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன் முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி திசை தெய்வம் ஆன பலவும் அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.

🙏🏽 4. மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் கொதிஉறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடுநோய்கள் ஆன பலவும் அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.

🙏🏽 5. நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன் துஞ்சு இருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும் மிகையான பூதம் அவையும் அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.

🙏🏽 6. வாள்வரி அதன் ஆடை வரி கோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய் நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்து என் உளமே புகுந்த அதனால் கோற் அரி உழுவையோடு கொலை யானை கேழல் கொடு நாகமோடு கரடி ஆள் அரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.

🙏🏽 7. செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடையேறு செல்வன் அடைவு ஆர் ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும் வாதம் மிகை ஆன பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.

🙏🏽 8. வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்த மடவாள் தனோடும் உடனாய் வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.

🙏🏽 9. பலபல வேடமாகும் பரன் நாரிபாகன் பசு ஏறும் எங்கள் பரமன் சலமகளோடு எருக்கும் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வருவகாலமான பலவும் அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.

🙏🏽 10. கொத்து அவர் குழலியோடு விசயற்கு நல்கு குணம் ஆய வேட விகிர்தன் மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் புத்தரொடு அமணை வாதில்ல் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.

🙏🏽 11. தேனமர் பொழில் கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞானமுனிவன் தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆன சொல்மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.

என்ற கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.

🅱 சிறப்பம்சம்:🅱
 
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ இத்தல மூலவர் மறைக்காடுநாதர் சுயம்பு லிங்கமாக அருள் புரிந்து வருகிறார்.

♻ "வேதாரண்யம் விளக்கு அழகு" என்பது பழமொழி.

♻ அப்பர் சுவாமிகள் தூண்டு சுடரனைய சோதி கண்டாய்' என்று பாடுகிறார். இன்றும் கோயிலில் விளக்குகளின் பேரொளியைக் காணலாம்.

♻ பரஞ்சோதி முனிவர், தாயுமானவர் ஆதீன முதற்குரவர் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகளுக்கு இத்தலத்தில் தான் அருளுபதேசம் செய்தார் என்பது வரலாறு.

♻ அகத்தியான் பள்ளியில் அக்த்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய இறைவன் திருமறைக்காடு தலத்திலும் காட்டியருளி உள்ளார்.

♻ அகத்தியான் பள்ளியைப் போன்றே திருமறைக்காட்டிலும் கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் பார்வதி கல்யாண கோலம் அமைந்திருக்கிறது.

🅱 இருப்பிடம்:🅱

✈  நாகபட்டினத்தில் இருந்தும், தஞ்சாவூரில் இருந்தும் வேதாரண்யத்துக்கு பேருந்து வசதி உள்ளது.

✈ திருத்துறைபூண்டில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.

Ⓜ முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :Ⓜ

🚀நாகபட்டினம் - 45 கி.மீ.

🚀திருத்துறைபூண்டி - 35 கி.மீ.

🚀திருவாரூர் - 63 கி.மீ.

🚀கோடியக்கரை - 12 கி.மீ.

🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀

🍄 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🍄

Saturday 27 January 2018

அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீவாஞ்சியம் – திருவாரூர்

சிவபெருமானே பார்வதி தேவியிடம் தமக்கு மிகவும் பிடித்தமான இடம் என்று கூறிய ஸ்தலம் ; எமவாதனையில்லா சிவ ஷேத்திரம் ; ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்த பக்தர்கள் மட்டுமே வர எமதர்மராஜா அனுமதியளிக்கும் சிவஸ்தலம் ..

🍁🌸🍁🌸 BRS🍁🌸🍁🌸🍁


தொலைபேசி எண் :  +91-4366 291 305, 94424 03926, 93606 02973.

🌀🌱🌀🌱 BRS🌀🌱🌀🌱🌀

மூலவர் : வாஞ்சிநாதேஸ்வரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

அம்மன்/தாயார் : மங்களநாயகி, வாழவந்தநாயகி

தல விருட்சம் : சந்தன மரம்.

தீர்த்தம்: குப்த கங்கை (முனி தீர்த்தம்), எமதீர்த்தம் உட்பட 23 தீர்த்தங்கள்

ஆகமம்/பூஜை : காமீகம் ஆகமம்

பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்: திருவாஞ்சியம்

ஊர்: ஸ்ரீவாஞ்சியம்

பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர், சுந்தரர்

🅱 தேவாரப்பதிகம்:🅱

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் பொன்னி யன்றசடையிற் பொலிவித்த புராணனார் தென்ன வென்றுவரி வண்டிசை செய்திருவாஞ்சியம் என்னை யாளுடை யானிட மாகவுகந்ததே. - திருஞானசம்பந்தர்

🌀 தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 70வது சிவஸ்தலம்.

🅱 திருவிழாக்கள் :🅱

🔥 ஆடிப்பூரம் 10 நாள் திருவிழா.

🔥 கார்த்திகை ஞாயிறு நாட்கள் ( அதிகாலை வேளையில் தீர்த்தவாரி நடைபெறும்.)

🔥 மாசிமகப்பெருவிழா (பிரம்மோற்சவம்)

🔥 ஞாயிறு அன்று சிறப்பு அபிஷேக ஆராதனை உண்டு.

🅱 தல சிறப்பு:🅱

⚜ இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .

⚜ பூமியில் தோன்றிய சுயம்பலிங்கங்கள் 64ல் மிகவும் முக்கியமானது  திருவாஞ்சியத்தில் இருக்கும் லிங்கம்.

⚜ இந்த லிங்கம் தான் உலகிற்கு முன்னதாக தோன்றியதாகவும் இந்த லிங்கத்துள் சதாசிவம் இருப்பதால் உலகெங்கும் உள்ள லிங்கங்கள் அனைத்தம் திருவாஞ்சிய லிங்கத்தை வழிபட்டு வணங்கி வருகின்றன.

⚜ இந்த சுயம்லிங்கத்தை எவர் ஒருவர் பக்தியுடன் தரிசிக்கிறாரோ அவர் கைலாய நாதரை நேரில் தரிசித்து சிறப்பு பெறுவார்.

⚜ காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு காவிரித் தலங்களுள் இது ஒன்றாகும்.

⚜ திருவாஞ்சியம் காசியை விட 1/16 பங்கு மேலானதாக கருதப்படுகிறது.

⚜ "காசியைவிட வீசம் அதிகம்" என்று காசியைக் காட்டிலும் சிறப்பான சிவத்தலமாக புகழ்ந்து கூறப்படும் திருத்தலம்.

⚜ வாங்சியப்பதி, சந்தனவனம், ஜாந்தாரண்யம், பூகைலாசம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.

⚜ இத்தல நந்தி தேவர் கருவறுத்த தேவர் என்றழைக்கப்படுகிறார்.

⚜ பிரம்மன், இந்திரன், பராசரர், அத்ரி முதலியோர் வழிபட்ட தலம்.

⚜ இங்குள்ள குப்தகங்கைத் தீர்த்தம் மிகவும் புனிதமானது.

⚜ கார்த்திகை ஞாயிறு நீராடல் இங்குச் சிறப்பாகும். பின்வரும் தலபுராணப் பாடல் இக்கருத்தையுணர்த்தும் -

"மெய்தரு கயநோய் குட்டம் விளைத்தமுற் கொடிய சாபம்

பெய்துறல் செய்யும் வன்கண் பிரமராக்கதம் வேதாளம்

எய்திடின் அன்னதீர்த்தம் இழிந்ததில் படியத்தீரும்

செய்திரும்கடத்தின் ஏற்றுத் தெளிக்கினும் தீருமன்றே".

⚜ இங்குள்ள துர்க்கை சந்நிதி விசேஷமானது.

⚜ மஹாலக்ஷ்மி மற்றும் மகிஷாசுரமர்தினியின் சந்நிதிகளும் இங்குள்ளன. சிம்ம வாகனத்துடன் நின்ற நிலையில் எட்டு கைகளுடன் காட்சி தரும் மகிஷாசுரமர்தினியை இராகு காலத்தில் 108 தாமரை மலர்களால் அர்ச்சிப்பது மிகவும் நன்மை தரும் என்று கூறப்படுகிறது.

⚜ நடராசசபையிலுள்ள நடராஜ மூர்த்தம் மிகச்சிறப்பாக, உரிய லட்சணங்களுடன் அமைந்துள்ளன தரிசிக்கத்தக்கது.

⚜ 110 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரத்தை கி.பி.850ல் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளான்.

⚜ கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.

⚜ மகுடவர்த்தனன் , மாதணுவு , சாருமதி வழிபட்ட தலம்.

⚜ பிரளய காலத்தில் அழியாமல் நிலைத்து நின்ற தலம்.

⚜ திருட்டுப்பாவம் போக்கும் தலம்.

⚜ பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலம்.

⚜ உயிர் தொடர்புடைய சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தலம்.

⚜ அவசியம் ஒருமுறை அனைவரும் தரிசிக்க வேண்டிய தலம்.

⚜ இந்த தலத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர முடியும். இத்தலத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறுபிறப்பு இல்லை.

⚜ அமைதியான இறுதிக்காலத்தை தரும் தலம்.

⚜ இத்தலத்தில் எம வாகனத்தில் சிவபெருமான் மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் ஊர்வலம் செல்கிறார்.

⚜ எமனே இத்தலத்தின் க்ஷேத்திர பாலகனாக விளங்குகிறார் . இத்தலத்திற்கு வருபவர்கள் எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே சிவனாரைத் தரிசிக்க வேண்டும். அதன்படி, இங்கு எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு நடக்கிறது.

⚜ சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 133 வது தேவாரத்தலம் ஆகும்.

🅱 நடைதிறப்பு :🅱

🔑 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 🔑

🅱 பூசைக்காலம் : 🅱

🍁  காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

🅱 பொது தகவல்:🅱

Ⓜ இத்தல தீர்த்தப் பெருமை: Ⓜ

🌸 கிருதயுகத்தில் மிக தூய புஷ்கரணி என்ற நாமத்துடனும், திரேதாயுகத்தில் அத்திரி தீர்த்தம் என்று விளங்கியும், துவாபரயுகத்தில் பராசர தீர்த்தம் என்ற பெயருடனும், கலியுகத்தில் முனிதீர்த்தம் என்றும், போற்றப்பட்டு வருகிறது இத்தலத்தில் அமைந்துள்ள குப்தகங்கை என்னும் திருக்குளம்.

Ⓜ திருவாஞ்சியத்தில் உள்ள தீர்த்தங்கள்: Ⓜ

1. பிரம்ம தீர்த்தம் : கிழக்கு திசையில்
2. நாரத தீர்த்தம் : அக்னி மூலையில்
3. விஸ்வாமித்ர தீர்த்தம் : தென் திசை
4. ஸர்வ தீர்த்தம்
5. பரத்வாஜ தீர்த்தம் : நிருதி திசையில்
6. சேஷ தீர்த்தம் : மேற்கு திசையில்
7. நாராயண தீர்த்தம் : திருக்கோயிலில் இருந்து சற்று தள்ளி
8. ராம தீர்த்தம் : வாயு திசையில்
9. இந்திர தீர்த்தம் : ஈசான்ய மூலையில்
10. ஆனந்த கிணறு : திருக்கோயிலின் உள்ளே

🌸 இத்தலத்திலுள்ள லக்ஷ்மி தீர்த்தம், நாக தீர்த்தம் மற்றும் சக்கர தீர்த்தம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றன. இவை மூன்றும் முறையே லக்ஷ்மி, ஆதிசேஷன் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

🌸 லக்ஷ்மி தீர்த்தத்தில் ஆவணி மாதத்தில் வெள்ளிக்கிழமை நீராடுவதால் ஒருவன் தான் பிரிந்து வந்த குடும்பத்துடன் மீண்டும் சேருவான் என்றும், நாக தீர்த்தத்தில் வைகாசி மாதம் திருவோணம் நடசத்திர நாளன்று நீராடுதல் நாக தோஷத்தைப் போக்கும் என்றும், ஆவணி மாதம் ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசியில் சக்கர தீர்த்தத்தில் நீராடுதல் பிரம்மஹத்தி தோஷத்தை போக்குமென்றும் தலபுராணம் கூறுகின்றது.

🅱 பிரார்த்தனை:🅱  

🌻 மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர், மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம்.

🌻 இங்குள்ள சுற்று பிரகாரத்தில் உள்ள பிள்ளையாருக்கு வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்கிறார்கள். ( அனுமனுக்கே உரித்தான இவ்வழிபாட்டை பிள்ளையாருக்குச் செய்வது இக்கோயிலின் சிறப்பம்சம்.) பிள்ளையாரை வெண்ணெய் சாத்தி வழிபட தீராத வயிற்று வலி உடனே தீரும்.

🌻 திருவாஞ்சியம் வந்து வழிபட பில்லி சூனியம் அதாவது செய்வினை என்று கூறப்படும் எதிர்வினைகள் அறவே அகன்று தூய்மை பெற முடியம். கொலை, தற்கொலை போன்ற துர்மரணங்கள் ஏற்பட்ட வீடுகளில் வரும் தொல்லை வர்ணிக்க முடியாது இருப்பினும் துர்மரணம் கொண்ட வீட்டில் வசிப்பவர்கள் ஸ்ரீவாஞ்சியம் வந்து பஞ்சதானம் கொடுத்து வழிபட்டால் துர்மரணம் பெற்றவர்களின் ஆத்மாசாந்தி அடைந்து கர்மா விலகி நற்பயன் பெறவர்.

🌻 கணவன்-மனைவி இடைவே ஊடல் எற்பட்டு பிரிந்தவர்கள் இங்கு வந்து மங்களாம்பிகையை வழிபட்டால் இருவருக்கமிடையே பாச உணர்ச்சிகளைத் தோற்றுவித்து இருஉள்ளங்களையம் இணைப்பதில் சிறப்பு பெற்றவராகத் திகழ்கிறார். இன்றம் விவாகரத்து பெற்ற தம்பதிகள் கூட இங்கு வந்து வழிபட்டதன் மூலம் இணைகின்றனர்.

🌻 இத்தலத்தில் ஆனந்தமாக யோகபைரவராக அமர்ந்திருக்கம் பைரவரை வழிபட நரம்பு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கி நலன் பெறலாம். தீர்க்க முடியாத வழக்களில் சிறைபட்பவர்கள் இங்குள்ள பைரவரை வழிபட்டால் நீண்டகால வழக்குகள் உடைந்து நல்ல பலன் கிடைக்கம்.

🌻 ஸ்ரீ வாஞ்சியத்தில் மட்டுமே ராகவும் கேதுவும் ஒன்றாக ஓரே சிலையில் பாம்பு உடலாகவும் மனித முகமாகவும் ஓரே நிலையில் சஞ்சர்க்கின்றனர். ஓரே மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ராகு-கேதுவை வழிபட்டால் நாகதோஷம் காலசர்ப்பதோஷம் நீங்கி நலம் பெறலாம்.

🌻 கிரகங்களில் வலிமை மிக்க சனிபகவானை கிரகமாக இரு என ஆக்ஞை பிறப்பித்த தலம் ஸ்ரீ வாஞ்சியம். சுனிபகவான் அதிதேவதையான எமதர்ம ராஜா தனி சன்னதியில் எழுந்தருளியிருப்பதால் சனி சம்பந்தப்பட்;ட தொல்லைகள்  உபாதைகள் நீங்கப் பெறுவர்.

🌻 சனி உபாதையிலிருந்து ஒருவன் விடுபடுவான் என்று விதி   இருக்குமேயானால் தன்னுடைய தெய்வ பலத்தினாலேயோ மூதாதையோர் தவ வலிமையினாலேயோ தன்னை அறியாமல் ஏதாவது ஒரு காரணத்ததைச் சொல்லி இங்கு வந்து என்னை வழிபட்டு உன்னை வழிபடுவான் என்பது ஸ்ரீ வாஞ்சிநாதரின் பிரதான வாக்காகும்.

🌻 ஓவ்வொரு அமாவாசையும் பிதிர் கர்மங்கள் செய்யாதவர்கள் இங்கு வந்து கொடுப்பின் நன்னை உண்டாகும்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

🔵 சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

🅱 தலபெருமை:🅱

🍄 பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடித் தென் திசைக்கு வந்தனர்.

🍄 அப்போதுதான் காவிரிக் கரையில் திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில் மயங்கி லிங்கவடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டுவிட்டனர்.

🍄 இந்த தலத்தை தான் மிகவும் நேசிப்பதாக சிவன் பார்வதியிடம் கூறியதாக புராணங்கள் சொல்கின்றன.

🅱 இரண்டாம் நாளே தீர்த்தவாரி : 🅱

🌀 எல்லாக் கோயில்களிலும் பிரம்மோற்ஸவம் முடிந்த பிறகே தீர்த்தவாரி நடத்தப்படும். அன்று சுவாமியை கோயில் சார்ந்த தீர்த்தத்தில் நீராட்டுவர். இத்தலத்தில், தீர்த்தத்துக்கு மிகவும் மகிமை வாய்ந்தது என்பதால், மாசிமகம் பிரம்மோற்ஸவத்தின் இரண்டாம் நாளே தீர்த்தவாரியை நடத்தி விடுவர். இரண்டாம் நாளே இங்கு தீர்த்தவாரி. அன்றைய தினம் வாஞ்சிநாதர் எமன் வாகனத்தில் உலாவருவார். கடைசி நாள் முருகனுக்கு உற்சவம் நடைபெறும்.

🅱 குப்த கங்கை : 🅱

🌱 ஒருமுறை கங்காதேவி சிவனிடம், "மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான் வழி கூறவேண்டும்,'' என வேண்டினாள். அதற்கு சிவன், "உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும்,'' என்றார்.

🌱அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த கங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. தற்போது முனி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மாசிமகத்தன்று இந்த தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

🅱 கார்த்திகை ஞாயிறு: 🅱

🌹 தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவன், தன்னை அவமதித்து நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்களை தண்டிக்க தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார்.

🌹 வீரபத்திரனால் தண்டிக்கப்பட்டவர்களில் சூரியனும் ஒருவர். இதனால் சூரியன் தன் ஒளி குறைந்து வருந்தி, ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், சூரியனுக்கு இழந்த ஒளியை மீண்டும் தந்தார். ஸ்ரீயை வாஞ்சித்து(ஸ்ரீ என்ற மகாலட்சுமியை அடைய விரும்பி) திருமால் தவம் இருந்ததால் இத்தலம்  "ஸ்ரீவாஞ்சியம்' ஆனது.

🌹 இங்கு சிவனே அனைத்துமாக அருள்பாலிப்பதால், நவக்கிரகங்களுக்கு சன்னதி இல்லை.

🌹 கோயிலின் அக்னி மூலையில் தெற்கு நோக்கி  எமனும், சித்ரகுப்தனும் ஒரே சன்னதியில் அருளுகின்றனர். எமனுக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர். எமதர்மனை சாந்திசெய்யும் விதத்தில், இங்கு ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்து நீண்ட ஆயுள் பெறலாம்.

🌹 இங்கு வீற்றிருக்கும் அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினி மிகவும் சக்தி வாய்ந்தவள்.துர்க்கைக்கு தனி சன்னதி இல்லை, பிரம்மாண்ட நாயகியாக காட்சி தரும் மகிஷாசுரமர்த்தினியே துர்க்கையின் சொரூபமாக இருக்கிறாள்.

🌹 ராகுவும் கேதுவும் ஒரே வடிவில் இருப்பதை இக்கோயிலில் மட்டுமே காண முடியும் என்று கூறப்படுகிறது.

🌹 யோக நிலையில் யமன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும்.

🌹 காசியில் மரித்தால், எம பயமில்லா விட்டாலும் ஒரு நாழிகையாவது பைரவ தண்டனை உண்டு. ஆனால் வாஞ்சியத்தில் மரித்தவருக்கு யம பயம், பைரவ தண்டனை என்ற இரண்டுமே கிடையாது. இங்கு பைரவரும் யோக நிலையில், தமது தண்டங்களையெல்லாம் கீழே வைத்துவிட்டு, ஈசனையே துதித்த வண்ணமிருக்கிறார்.

🌹 யமன், பைரவர் இருவருக்குமே அதிகாரமில்லாத இத்தலம், காசியைக் காட்டிலும் நூறு மடங்கு உயர்ந்தது என முனிவர்கள் கூறுகின்றனர். பிரமாண்ட புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

🅱 கல்வெட்டு / செப்பேடு : 🅱

🎭 இக்கோயிலில் இருபத்தேழு கல்வெட்டுக்கள் படி எடுக்கப் பட்டிருக்கின்றன. அவைகளில் ஏழு பிற்காலச் சோழர்களது. ஏழு பாண்டியர்களுடையனவும், ஒன்று நாயக்கர் காலத்தவையாகும்.

🎭 பிற்காலச் சோழர்கள், பாண்டியர் காலத்தைச் சேர்ந்த இத்தலக்கல்வெட்டில் இவ்வூர் "குலோத்துங்க சோழவள நாட்டுப் பனையூர் நாட்டுத் திருவாஞ்சியம்" என்று குறிக்கப்படகிறது. இவ்வூருக்கு 'ராஜகம்பீர சதுர்வேதி மங்கலம்' என்ற பெயர் உண்டு என்பதும், கல்வெட்டகள் மூலம் நிலதானம், வரிவிலக்கு முதலிய செய்திகளும் தெரியவருகின்றன.

🅱 சிற்பங்கள்: 🅱

♻ கருவறையில் இலிங்க வடிவில் வாஞ்சிநாதர் காணப்படுகிறார்.

♻ கருவறை விமானக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.

♻ கொடுங்கையில் பூதகணங்களின் சிற்பங்கள் வரிசையாக உள்ளன.

♻ விமானத்தின் தளங்களில் சுதையாலான அர்த்த நாரீசுவரர், ஆலமர் செல்வன், வீணாதரர், கஜசம்மாரர், கண்ணப்பர், சட்டைநாதர், பிட்சாடனர், ஊர்த்துவதாண்டவர், அட்ட சம்மார மூர்த்திகள் போன்ற திருவுருவங்கள் காட்சியளிக்கின்றன.

🅱 கோயில்அமைப்பு: 🅱

🌞 ராஜகோபுரத்தை அடுத்து கோயிலுக்குள் செல்லும்போது வலது புறத்தில் எமதர்மராஜா சன்னதி உள்ளது. சன்னதியின் முன்பாக பலி பீடமும், நந்தியும் உள்ளன. அடுத்துள்ள வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலது புறம் அபயங்கர விநாயகரும், இடது புறம் பாலமுருகனும் உள்ளனர். இடது புறத்தில் அம்மன் சன்னதி உள்ளது.

🌞 கொடி பலி பீடம், நந்தியை கடந்து உள்ளே செல்லும்போது அடுத்த வாயிலின் வலது புறம் விநாயகரும் ( "நட்டுவன் பிள்ளையார் சந்நிதி' தலப்பதிகம் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது. ), இடது புறம் சுப்பிரமணியரும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு முன்பாக அதிகார நந்தியும், பலிபீடமும் உள்ளன. அந்த மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது மூலவரின் கருவறைக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். இடது புறம் நடராஜர் சன்னதி உள்ளது.

🌞 திருச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றின் பின்புறம் சந்திரமௌலீஸ்வரர், கன்னி விநாயகர், சட்ட நாதர், மீனாட்சி, சுந்தரேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

🌞 அதே வரிசையில் தேயலிங்கம், ஆகாய லிங்கம், திருவெண்காடு லிங்கம், திருவிடைமருதூர் லிங்கம், மயிலாடுதுறை லிங்கம், சாயாவனம் லிங்கம், ஷேத்ரலிங்கம் ஆகியவை உள்ளன. கருவறையின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.திருச்சுற்றில் குளம் உள்ளது.

🌞 தெற்கு நோக்கிய சன்னதியில் யமன் நான்கு திருக்கரங்களுடன் பாசம், கதை, சூலம் ஏந்தி இடக் காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில், காட்சி தருகிறார். அவர் அருகில் முனிவர் போல், ஒருவரது சிலா வடிவம் உள்ளது.

🅱 தல வரலாறு: 🅱

🎭  "எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும் போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார்' என எமதர்மராஜா மிகவும் வருந்தினார்.  திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரி கூறியது.

🎭 அதன்படி எமன் இத்தலம் வந்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசிமாதம் பரணி நட்சத்திரத்தில் காட்சி தந்து, "வேண்டும் வரம் கேள்,'' என்றார். அதற்கு எமனும், "இறைவா ! அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவி எனக்கு தந்துள்ளதால், எல்லாரும் என்னை கண்டு பயப்படுகின்றனர். திட்டித் தீர்க்கின்றனர். பல கொலைகளால் தீராத பிரம்மஹத்தி தோஷம் பிடித்து என்னை வாட்டுகிறது. பாவம் தொடர்கிறது. மன நிம்மதியே இல்லை,'' என்றார்.

🎭 எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன், "எமதர்மனே ! இனிமேல் எமன் உயிரை பறித்து விட்டான் என கூறமாட்டார்கள். நோய் வந்ததாலும், வயதாகி விட்டதாலும், விபத்து ஏற்பட்டும் இறந்தான் என கூறுவார்கள். இதனால் பழியும், பாவமும் இனி உனக்கு கிடையாது. மேலும், நீ தவம் செய்த இந்த தலத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும். இத்தலத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும். மேலும் நீ இத்தலத்தின் க்ஷேத்திர பாலகனாக விளங்குவாய். இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பே என்னைத் தரிசிப்பார்கள்,'' என அருளினார். அதன்படி, இங்கு எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு நடக்கிறது.

🅱 சிறப்பம்சம்:🅱

Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻ ஞானசம்பந்தரும் அப்பரும் திருவீழிமிழலையிலிருந்து புறப்பட்டு இத்தலத்திற்கு வந்து பெருமானை வணங்கினர்.

♻ சுந்தரர், நன்னலித்துப் பெருங்கோயிலைப் பணிந்து, திருவீழிமிழலை வணங்கி இத்தலத்திற்கு வந்து தொழுதார்.

♻ திருவாசகத்திலும் அருணகிரிநாதர் வாக்கிலும் இத்தலம் இடம் பெறுகின்றது.

♻ காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு காவிரித் தலங்களுள் இது ஒன்றாகும். மற்றவை :  1. திருவையாறு , 2. வேதாரண்யம், 3. மயிலாடுதுறை, 4. திருவிடைமருதூர், 5. திருவெண்காடு.

♻ இத்தலத்தில் எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோவில் மூடப்படுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள க்ஷேத்திரங்களில் திருக்கடவூருக்கு அடுத்தப்படி நிகரற்ற தலம் திருவாஞ்சியம் ஆகும்.

♻ இத்தலத்தில் எவன் ஒரு நிமிடமாவது அமர்கிறானோ அல்லது ஸ்ரீவாஞ்சியம் செல்ல வேண்டும் என மனதார நினைத்தால் கூட பொதும் அவன் ஊழிவினை நீங்க நற்கதி பெறுவான் என்பது முனிவர்களின் வாக்கு.

♻ ஏவன் ஒருவன் காலை எழுந்தவடன் மனம் உருகி திருவாஞ்சியம் என்று மூன்று முறை சொல்கிறானோ அவனுக்கு பாவம் தீர்ந்து தோஷம் போய் முக்தி கிடைப்பது நிச்சியம்.

🅱 இருப்பிடம்: 🅱

✈ கும்பகோணத்திலிருந்து (35 கி.மீ.) நாச்சியார் கோவில் வழியாக நன்னிலம் செல்லும் பேருந்தில் அச்சுதமங்கலம் நிறுத்ததில் இறங்கி, அங்கிருந்து ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.

🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀

🍄 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🍄
🎠 இ றை ய ன் பி ல் 🎠

🌤 சீதா பாரதிராஜா/8447534825 ; 7011992634 ; 9971278934🌤

🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀

Sunday 21 January 2018

கிரீன் டீ ஆரோக்கியத்துக்கான “கிரீன்” சிக்னல்!


ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது
கிரீன் டீ-யில் உள்ள பாலிபீனால் நம் உடலில் உள்ள திசுக்களில் நடக்கும் ரசாயன மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கிறது. இதன் மூலம், வயதாகும் செயல்பாட்டைத் தாமதப்படுத்தி, வாழ்க்கையை நீட்டிக்கிறது.
புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும்
வைட்டமின் சி-யைக் காட்டிலும், இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் 100 மடங்கு புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடக்கூடியது. இதன் மூலம் புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது.
 உடல் எடை குறையும்
உடலில் உள்ள கொழுப்பு செல்களை எரித்து, உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளை இயற்கையான முறையில் விரைவுபடுத்துகிறது. தோராயமாக நாள் ஒன்றுக்கு 70 கலோரி வரை இதன் மூலம் எரிக்கலாம்.
உயர் ரத்த அழுத்தம் குறையும்
கிரீன் டீ-யில் உள்ள ரசாயனங்கள் உயர் ரத்த அழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தையும், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
இதயநோய் வரும் வாய்ப்பு குறையும்
கிரீன் டீ குடிப்பவர்களுக்கு, உடலில் கொழுப்புக் குறைந்து, இதய நோய்க்கான வாய்ப்பு 31 சதவிகிதமாகக் குறைகிறது. மாரடைப்புக்குப் பிறகு செல்கள் இறப்பதைத் தவிர்த்து, இதய செல்கள் வளர்ச்சியை விரைவுபடுத்துகிறது. ரத்தம் உறைவதைத் தடுக்கிறது.

உணவு நஞ்சாவதைத் தடுக்கும்
பாக்டீரியா கிருமிக்கு எதிராகச் செயல்படும். பாக்டீரியா கிருமியால், உணவு நஞ்சாவது (ஃபுட் பாய்சனிங்) தடுக்கப்படுகிறது. வயிற்றில் கெடுதலை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுத்து, நன்மை செய்யும் பாக்டீரியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதேபோல், வைரஸ் கிருமித் தொற்றையும் தடுக்கிறது.
எலும்புகளுக்கு வலு சேர்க்கும்
கிரீன் டீ-யில் அதிக அளவு ஃப்ளோரைட் உள்ளதால், எலும்புகள் உறுதிப்படும். தினமும் கிரீன் டீ பருகுவதன் மூலம், எலும்பின் அடர்த்தி பாதுகாப்பாக இருக்கிறது.
 
மன அழுத்தம் நீங்கும்
எல்-தினைன் (L-theanine) என்ற அமினோ அமிலம் இதில் உள்ளது. மன அழுத்தம், பதற்றத்தைப் போக்க இது உதவுகிறது. மேலும், டோபோமைன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதில் காபியைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவே காஃபைன் உள்ளதால், உடனடி புத்துணர்வைத் தந்து, மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்
கிரீன் டீ-யில் உள்ள பாலிபீனால் மற்றும் ஃபிளவனாய்ட் என்ற ரசாயனங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, நோய்க் கிருமித் தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
கிரீன் டீ ரெடி:
கிரீன் டீ தூளாகவும், ஒரு கப் தேநீர் தயாரிக்கும் வகையில் பாக்கெட் வடிவிலும் கிடைக்கும். அருந்தும்போது சாதாரண தேநீர் போலச் சுவையாக இல்லாவிட்டாலும், மிகவும் ஆரோக்கியமானது என்பதால் இதைத் தினமும் பருகுவது நல்லது.
கிரீன் டீ தயாரிக்க 80 முதல் 85 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை போதுமானது. நீரை நன்றாகச் சுடவைக்கவும். அதில் ஒரு டீஸ்பூன் கிரீன் டீ சேர்த்து, நன்றாக கொதிநிலைக்குக் கொண்டுசெல்லவும். ஆனால் கொதிக்கவிடக் கூடாது. தேயிலையின் சாறு நீரில் இறங்க ஒரு சில நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். பிறகு, வடிகட்டி அப்படியே அருந்தலாம்.
பால் சேர்க்கவே கூடாது. சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது. சர்க்கரைக்குப் பதில் சிறிது தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆரோக்கியத்தின் காவலன் ஆன்டி ஆக்சிடன்ட்!


ம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடல் உறுப்புக்கள் நல்ல முறையில் செயல்படவும் வைட்டமின்கள், தாது உப்புக்கள் தேவை. அதேபோல், உடல் செயல்பாட்டின்போது, சுரக்கும் சில ரசாயனங்களால், செல்கள், டி.என்.ஏ. மூலக்கூறுகள் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பைக் குறைக்க ஆன்டிஆக்சிடன்ட்கள் தேவை.
'நாம் சாப்பிடும் உணவிலேயே ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. எந்தெந்த உணவுப் பொருட்களில் இவை நிறைவாக உள்ளது என்பதை தெரிந்து, அவற்றைச் சாப்பிடும்போது, பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்''  ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த உணவுகள்.
மாதுளம் பழம்:
பாலிபீனால் ஆன்டிஆக்சிடன்ட் இதில் அதிகம் உள்ளது. இதனால் மாதுளையை ஆன்டிஆக்சிடன்ட் 'பவர் ஹவுஸ்’ என்போம். இந்த ஆன்டிஆக்சிடன்ட், சூரியக் கதிர் வீச்சால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், திசுக்களில் வீக்கத்தைத் தவிர்த்து முதுமையைத் தாமதப்படுத்துகிறது. மாதுளம் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதய நோய்க்கான வாய்ப்பும், ப்ராஸ்டேட் புற்றுநோய்க்கான வாய்ப்பும் குறைகிறது. ரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைரஸ் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
இந்தப் பழத்தில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாது உப்புக்களும், வைட்டமின்களும் அடங்கியுள்ளன. பழத்தின் தோல் மற்றும் பட்டையில் அல்கலாய்டு, டேனின் உள்ளதால் இதனையும் பயன்படுத்தலாம்.
பப்பாளிப் பழம்:
மற்ற எல்லாப் பழங்களுடன் ஒப்பிடுகையில் பப்பாளியில்தான் அதிக அளவிலான சத்துக்கள் நிறைந்துள்ளன. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம். இதில் வைட்டமின் ஏ, சி, தாது உப்புக்களில் இரும்பு, ஃபோலிக் அமிலம், பொட்டாஷியம், தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்துக்களும், மிகக் குறைந்த கலோரியும் உள்ளன. இயற்கையாகவே விஷக் கிருமிகளை அழிக்கும் சக்தி பப்பாளிப் பழத்தில் உள்ளது. உடலின் மெட்டபாலிசத்தை இயற்கையான முறையில் ஊக்குவிக்கும். கொலஸ்டராலைக் குறைக்க உதவுகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்தப் பழத்தை சாப்பிடலாம். நல்ல செரிமானத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இந்தப் பழத்தைத் தொடர்ந்து உட்கொள்வது நல்லது.
எலுமிச்சம்பழம்:
இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் நம் உடலில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தப் பழத்தில் அதிக அளவு 'பெக்டின் ஃபைபர்’ இருப்பதால், பசியைப் போக்கும். இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். கலோரிகளை எரித்து உடல் எடையைக் குறைக்க உதவிடும். புண்களைக் குணப்படுத்தவும், இணைப்புத் தசைகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவும். மன வலிமையை ஊக்கப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் எலுமிச்சைக்கு உண்டு. விஷத்தை முறிக்கும் ஆற்றல்கொண்ட இது கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு நோய் வராமல் தடுக்கும்.
ஸ்ட்ராபெர்ரி:
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள ஃபிளவனாய்டு என்ற வேதிப்பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது.  மேலும் ஃபிளவனாய்டு, நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் ஏ, பி, சி, கே, ஃபோலிக் அமிலம் மற்றும் தாமிரம், மாங்கனீசு, அயோடின், பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தாது உப்புகளும் நிறைவாக உள்ளன.

நலமான வாழ்வுக்கு நான்கு வகை இலை!


ம் வீட்டுக் கொல்லையிலும் சுற்றுப்புறத்திலும் கிடைக்கும், எளிய இலைகளை வைத்தே பல நோய்களைக் குணமாக்கும் முறைகளை நம் முன்னோர்கள் தெரிந்துவைத்திருந்தனர். அப்படி நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய சில மூலிகை இலைகள், அதன் மருத்துவக் குணங்கள், பயன்கள் பற்றி சென்னை சித்த மருத்துவர் செல்வசண்முகம் விளக்கமாகக் கூறினார். மா, வேப்பிலை, வெற்றிலை, துளசி ஆகியவற்றின் பலன்களைச் சொன்ன டாக்டர், 'இவற்றை ஆரோக்கியமானவர்கள் தினமும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நோய்வாய்ப்பட்டவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துகொள்வதே நல்லது' என்று ஆலோசனையும் வழங்கினார்.

  மாவிலை
வீட்டில் மாவிலைத் தோரணம் கட்டுவதற்குக் காரணமே இதில் உள்ள மருத்துவக் குணங்கள்தான். இதில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளன.
 இலைகளில் நீர் விட்டுக் காய்ச்சி, வடிகட்டி தேன் கலந்து, சிறிது சிறிதாகக் கொடுத்தால் வாந்தி வருவது குறையும்.
 கொழுந்து இலைகளை சிறு துண்டுகளாக வெட்டி, தேன் சேர்த்து மென்று சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, குரல் கம்மல் நீங்கிவிடும்.
 இலைகளை எரித்து, அதன் சாம்பலுடன் பசு வெண்ணெய் சேர்த்துத் தீப்புண் மீது தடவினால், வலி உடனடியாகக் குறையும்.
 இலைக்காம்பை ஒடித்தால் வரும் பாலை பித்த வெடிப்பின் மீது தடவினால் சரியாகும்.
 மாவிலைச் சாறுடன் பொன்னாங்கண்ணிச் சாறு, தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்குத் தேய்த்து வந்தால், இளநரை, முடி கொட்டுதல் பிரச்னைகள் தீரும்.
 பழுப்பு நிறமுள்ள கொழுந்துகளை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி, ஒவ்வொரு வேளையும் சாப்பாட்டுக்கு முன் அரை தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும்.  

 வேப்பிலை
பல்வேறு வைரஸ், பாக்டீரியா கிருமிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சள் காமாலை நோய்க்கும் அருமருந்து. வெளிப்பூச்சாகப் பயன்படுத்தும்போது, நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும். இயற்கைக்குப் பாதுகாப்பாக இருப்பதுடன், பூச்சிக்கொல்லி மருந்தாகவும் பயன்படுகிறது.
 வேப்பந்துளிருடன் ஓமம், சிறிது உப்பு சேர்த்துக் கொடுத்தால் காமாலை நோய் மற்றும் மாலைக்கண் நோய் தீரும்.
 வேப்பிலையுடன் மஞ்சள் கலந்து, நீர் விட்டு அரைத்து உடம்பின் மேல் தேய்த்தால் அம்மை, வியர்க்குரு, கரப்பான், சொரி, சிரங்கு மற்றும் முகப்பருக்கள் போன்ற சருமப் பிரச்னைகளில் இருந்து மீளலாம்.
 வேப்பிலைச் சாறு, எலுமிச்சைச் சாறு, தேன் மூன்றையும் கலந்து இரவில் குடித்து வந்தால் நிம்மதியான தூக்கம் வரும். * வேப்பிலை, மிளகு இரண்டையும் 8:1 என்ற விகிதத்தில் கலந்து அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு பெரியவர்களுக்கும், சுண்டைக்காய் அளவு சிறியவர்களுக்கும் கொடுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கிவிடும்.
 வேப்பங்கொழுந்து, மஞ்சள், தாளகம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) இந்த மூன்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை, பெண்களுக்கு தேவையற்ற இடத்தில் வளரும் முடியின் மீது பற்றுப்போடலாம். மூன்று மணி நேரம் கழித்து கழுவ, முடிகள் அகன்றுவிடும்.

  வெற்றிலை
விழாக்களிலும், தமிழர் விருந்துகளிலும் தவறாது இடம்பெறும் இலை. இதில் இரும்புச் சத்து, தாது உப்புகள் அதிகம்.
 வெற்றிலை, இஞ்சி, தேன் மூன்றையும் வெறும் வாயில் மென்று சாப்பிட்டால், அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப் பிரச்னைகள் சரியாகும்.
 இலையை மிதமாக சூடு செய்து சாறு எடுத்து, இந்தச் சாறை மூக்கில் சில சொட்டுக்கள் விட்டால், தலைவலி, தலைபாரம், தும்மல் சரியாகும்.
 வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து, பூச்சி, தேள் கொட்டிய இடத்தின் மேல் தடவினால், வலி உடனடியாக நீங்கும்.
 வெற்றிலை, அருகம்புல், மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்தால், விஷக்கடிகள், ஃபுட் பாய்சன் போன்றவை சரியாகும்.
 வெற்றிலை, ஜாதிக்காய், கிராம்பு மூன்றையும் மென்று சாப்பிட்டால், இல்லற இன்பம் கூடும்.
 இலையை எரித்துச் சாம்பலுடன் பசுவெண்ணெய் கலந்து நாவில் தடவினால், உச்சரிப்புக் கோளாறுகள் நீங்கி, பேச்சு தெளிவாகும்.
 காலை வேளையில், வெற்றிலையுடன் பாக்கை அதிகமாகவும், மதியம் சுண்ணாம்பு அதிகமாகவும், மாலையில் வெற்றிலை அதிகமாகவும் சேர்த்துவந்தால், உடல் இயக்கம் சீராக இருக்கும்.
 துளசி:
எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெய் சத்து மிக்க ஒர் இலை. பாக்டீரியா மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு பெரிதும் உதவும். காசநோய்க்கு எதிராகச் செயல்பட்டு நுரையீரல் மற்றும் மூச்சுக்குழலையும் பாதுகாக்கும். அதே நேரத்தில் மனரீதியான நோய்க்கும் பயன்படக்கூடியது.
 துளசியை இளஞ்சூட்டில் அல்லது நீராவியில் காட்டினாலே சாறு கிடைக்கும். இந்தச் சாறில் 10 துளி எடுத்து, ஒரு அரிசி அளவு மிளகு சேர்த்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட சளி விரைவில் குணமாகும்.
 துளசி, மிளகு, வேப்பிலை கஷாயமாக்கிக் கொடுத்தால், சளி, உடல் வலி விரைவில் குணமாகும்.
 200 மில்லி பசும் பாலில், 10 துளசி இலைகளைப் போட்டு வடிகட்டி எடுத்தால், பாலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கி தூய்மையான பால் கிடைக்கும்.
 வெந்நீரில் இலைகளைப் போட்டு ஆவி பிடித்தால், சளி, தலைவலி சரியாகும்.
 துளசி இலை சாப்பிட்டால் ஆண்களுக்கு விந்தணுக்களின் வீரியம் குறையாமல், உற்பத்தி மட்டும் தற்காலிகமாகத் தடைபடும். அந்த காலத்தில் ஆண்கள் பயன்படுத்தி வந்த இயற்கைக் கருத்தடை முறையாகவும் இது இருந்தது.
 பெண்களுக்கு பிரசவ காலத்தில் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை 30 மில்லி துளசி சாறைக் கொடுத்தால், வலி குறைந்து கருப்பையின் இயக்கம் அதிகமாகும்.
 துளசியுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்துத் தடவும்போது, தோல் புண், பூச்சிக்கடிக் காயங்கள் சரியாகும்.

மசாலா பொருட்களைப் பயன்படுத்துவது எப்படி?

ளதள தக்காளி குருமா, கமகமக்கும் கறிக்குழம்பு, பெப்பர் பீஸ் மசாலா... நினைக்கும்போதே, நாக்கில் எச்சில் ஊறும்தானே! வாய்க்கு ருசியையும் சுண்டி இழுக்கும் மணத்தையும் ஒருசேர அளிப்பவை மசாலாப் பொருட்கள். ஆனால், இவை எந்த அளவுக்கு உடலுக்கு நல்லவை?

''பொதுவாக மசாலா சேர்த்த உணவு வகைகளைக் பகல் பொழுதில் சாப்பிடுவதுதான் நல்லது. அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். இதில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களில் உள்ள நார்ச்சத்து உடலில் கொழுப்பைச் சேரவிடாமல் வெளியே தள்ளிவிடும். அதே சமயம், மசாலாப் பொருட்களை அதிக அளவில் சாப்பிடுவது உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும். உமிழ்நீர் சுரப்பை அதிகப்படுத்தி உணவு ஜீரணத்துக்கு மசாலா சங்கதிகள் உதவுகின்றன. வயிற்றுப் புண், வாயுத் தொல்லை, நெஞ்சு எரிச்சல், எதுக்களித்தல், ஏப்பம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் மசாலாப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.'' என்று அட்வைஸ் தருகிறார் உணவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தி.
மசாலாப் பொருட்களில் இருக்கும் சத்துக்கள் குறித்து அவர் தரும் பட்டியல் இங்கே...

ஏலக்காய்
வாய்த் துர்நாற்றத்தைப் போக்கும். ஹார்மோன்களைத் தூண்டும். வளர்சிதை மாற்றத்தை உண்டுபண்ணும். கோலின், மெக்னீஷியம், மாங்கனீஸ், நீரில் கரையாத நார்ச் சத்து (Insoluble Fibre)ஆகியவை மிக அதிகம். கலோரி, புரதம், மாவுச் சத்து மற்றும் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான தைமின், ரிபோஃப்ளோவின் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. கால்சியம் மிகக் குறைந்த அளவே இருக்கிறது. நாள் ஒன்றுக்கு ஐந்து கிராமுக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது. நெஞ்சு எரிச்சல், வயிற்றுப் புண், எதுக்களித்தல் பிரச்னை இருப்பவர்கள் கட்டாயம் சாப்பிடக் கூடாது.

சீரகம்
பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். தினமும் சாதாரணத் தண்ணீரைக் குடிப்பதைவிட, சீரகத்தைப் போட்டுக் கொதிக்கவைத்த தண்ணீரைக் குடிப்பது மிகவும் நல்லது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, கோலின், மெக்னீஷியம், சோடியம் பொட்டாசியம், தாமிரம் மற்றும் நீரில் கரையாத நார்ச் சத்து (Insoluble Fibre) ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றன. புரதம், பீட்டா கரோட்டின், தைமின், ரிபோஃப்ளோவின் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. தினமும் ஐந்து முதல் 10 கிராம் வரை பயன்படுத்தலாம். வயிற்றுப் புண், அசிடிட்டி, வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்னைகள் இருப்பவர்கள் தவிர்த்துவிட வேண்டும்.

பூண்டு
'ஒரு பல் பூண்டைச் சாப்பிட்டால் ஓராயிரம் வியாதிகள் ஓடும்’ என்பார்கள். வயோதிகர்களுக்கு வரும் மறதி நோயைக் குறைக்கும். நரம்பில் இருக்கும் நியூரான் செல்களைப் பாதுகாத்து, இறந்த செல்களைப் புதுப்பிக்கும். பக்கவாதத்தையும் குறைக்கும். கொழுப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். வாயுத் தொல்லை பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். சமைக்காமல் சாப்பிட்டால், எதுக்களித்தல், வயிறு எரிச்சல் போன்றவை ஏற்படும். மாவுச் சத்து, பாஸ்பரஸ், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. கலோரி ஓரளவு இருக்கிறது. புரதம், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஃபோலிக் ஆசிட், நார்ச் சத்து ஆகியவை குறைந்த அளவு இருக்கின்றன. உடலுக்கு நல்ல எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.

கிராம்பு
சொத்தைப் பல்லில் இருக்கும் கிருமிகளைக் கொல்லும். பல் வலியைப் போக்கும். உடலுக்கு நல்ல எதிர்ப்பு சக்தியைத் தரும். ரத்தம் உறையாமல் தடுக்கும். மலச்சிக்கலைப் போக்கும். கால்சியம், இரும்புச் சத்து, நீரில் கரையாத நார்ச் சத்து  (Insoluble Fibre) ஆகியவை அதிகமாக இருக்கின்றன. மெக்னீஷியம், மாங்கனீஸ், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. புரதம், எண்ணெய், பாஸ்பரஸ், பீட்டா கரோட்டின், தாமிரம், நீரில் கரையும் நார்ச் சத்து (Soluble Fibre) ஆகியவை குறைந்த அளவு இருக்கின்றன. அதிகம் சாப்பிட்டால் எதுக்களித்தல் வரும் என்பதால், குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

வெந்தயம்
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால் ரத்தம் உறையும் தன்மையைக் கட்டுப்படுத்தும். 100 கிராம் வெந்தயத்தில் 48 கிராம் நார்ச் சத்து இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை வெகுவாகக் குறைக்கும். இதனால் உடல் எடை குறையும். உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். மலச்சிக்கலைப் போக்கும். புரதம், கலோரி, ஃபோலிக் ஆசிட், கோலின், மெக்னீஷியம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. பாஸ்பரஸ், தைமின், ரிபோஃப்ளோவின், மாங்கனீஸ் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. கால்சியம், இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின் ஆகியவை மிகக் குறைந்த அளவே இருக்கின்றன. கர்ப்பத்தின்போது சர்க்கரை நோய் இருப்பவர்கள் மட்டும் சாப்பிடக் கூடாது. அதிகம் சாப்பிட்டால் செக்ஸ் ஹார்மோன்களின் செயல்பாடு பாதிக்கப்படும் என்பதால் நாள் ஒன்றுக்கு ஐந்து கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

பெருங்காயம்
ஜீரண சக்தியை அதிகரிக்கும். மலச்சிக்கலைப் போக்கும். வாயுத் தொல்லைக்கு நல்ல தீர்வு. கால்சியம், மாவுச் சத்து, இரும்புச் சத்து ஆகியவை அதிகமாக இருக்கின்றன. ஓரளவு கலோரியும் உண்டு. தாது உப்புக்களான மெக்னீஷியம், தாமிரம், மாங்கனீஸ், துத்தநாகம், புரதம் ஆகியவை மிகவும் குறைவு. வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல் இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது. மற்றபடி அனைவரும் சாப்பிடலாம்.  
இஞ்சி
உமிழ்நீரைச் சுரக்கவைக்கும். பசியைத் தூண்டுவதில் இஞ்சிக்கு இணை இல்லை. இஞ்சியில் மெக்னீஷியம், மாங்கனீஸ் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. துத்தநாகம் ஓரளவு இருக்கிறது. குறைந்த அளவு நார்ச் சத்து இருக்கிறது. இதைத் தேனில் ஊறவைத்தும், ரசமாகச் செய்தும் சாப்பிடலாம். இஞ்சிச் சாறு குடிப்பதன் மூலம் வாயுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். இஞ்சிச் சாறை உடனே சாப்பிட்டுவிட வேண்டும்; இல்லையெனில், வயிற்றில் புண் ஏற்பட்டுவிடும். வயிற்றுப் பகுதியில் புண் ஏற்பட்டு அதீத ரணம் இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.

கசகசா
ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கும். மலச்சிக்கலைக் குணமாக்கும். சருமத்தை மெருகேற்றும் என்பதால் அழகுப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. கலோரி, புரதம், எண்ணெய், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மெக்னீஷியம், மாங்கனீஸ், துத்தநாகம், நீரில் கரையும் நார்ச் சத்து  (Soluble Fibre)ஆகியவை அதிகமாக இருக்கின்றன. தாமிரம் ஓரளவு இருக்கிறது. அசைவ உணவில் இருக்கும் எண்ணெய்த் தன்மையைக் குறைக்கும் என்பதால், அசைவ உணவில் அதிகம் இடம்பெறுகிறது.
மிளகு
வெள்ளை மிளகு, கறுப்பு மிளகு, வால் மிளகு என்று மிளகில் பல வகைகள் உண்டு. வால் மிளகும் கறுப்பு மிளகும் மிகவும் காரமாக இருக்கும். உணவில் அதிகம் பயன்படுத்தப்படுவது கறுப்பு மிளகுதான். வெள்ளை மிளகு அதிகக் காரம் இல்லாதது. இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், மாங்கனீஸ் மற்றும் நீரில் கரையாத நார்ச் சத்து (Insoluble Fibre) ஆகியவை அதிகமாக இருக்கின்றன.  கால்சியம், மெக்னீஷியம், புரதம், துத்தநாகம், தாமிரம், பாஸ்பரஸ், எண்ணெய், நியாசின், நீரில் கரையும் நார்ச் சத்து (Soluble Fibre) ஆகியவையும் ஓரளவு இருக்கின்றன. சளி, இருமல், தொண்டை கரகரப்புப் பிரச்னைகளைச் சரிசெய்யவும் காய்ச்சலைக் குணப்படுத்தவும் மிளகு ரசம் சாப்பிடலாம். பொடித்த மிளகு மற்றும் மஞ்சள் தூளைப் பாலில் கலந்து குடித்தால், தொண்டைக்கு இதமாக இருக்கும். வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல், வாயுப் பிரச்னை இருப்பவர்கள் மிகக் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும். தினமும் ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் அளவில் மிளகு சேர்த்துக்கொள்ளலாம்.
ஓமம்
வயிறு உப்புசத்தால் அவதிப்படுபவர்களுக்கு ஓமம் கலந்த தண்ணீரைக் கொடுக்கலாம். மலச்சிக்கல் பிரச்னையே இருக்காது. சளி, இருமலைத் தடுப்பதோடு புற்றுநோயையும் வரவிடாமல் தடுக்கும் ஆற்றலைக்கொண்டது ஓமம். கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், மாங்கனீஸ், துத்தநாகம், நீரில் கரையாத நார்ச் சத்து (Insolible Fibre)ஆகியவை அதிகமாக இருக்கின்றன. புரதம், எண்ணெய், தைமின், ரிபோஃப்ளோவின் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. பீட்டா கரோட்டின் மிகக் குறைந்த அளவே இருக்கிறது. இறைச்சி, பரோட்டா போன்ற உணவு வகைகளைச் சாப்பிடும்போது, கடைசியில் சிறிது ஓமத்தை மெல்வது நல்லது.
மஞ்சள்
நோய்த் தொற்று வருவதைத் தடுத்து, உடலுக்கு எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். தேவைக்கும் அதிகமான சத்துக்கள் சேரும்போது அதைக் கிரகிக்கவிடாமல் தடுத்து, உடலுக்குக் கெடுதல் ஏற்படுத்தக் கூடியவற்றைத் தகர்த்துவிடும். மாவுச் சத்து, இரும்புச் சத்து, மெக்னீஷியம், மாங்கனீஸ், துத்தநாகம், நீரில் கரையாத நார்ச் சத்து (Insolible Fibre)ஆகியவை அதிகமாக இருக்கின்றன. கொழுப்பு, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், காப்பர் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. புரதம் கால்சியம், பீட்டா கரோட்டின், நீரில் கரையும் நார்ச் சத்து (Soluble Fibre) ஆகியவை குறைவாக இருக்கின்றன. வயிறு எரிச்சல், வயிற்றுப் புண் உள்ளவர்கள் மிகவும் குறைந்த அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மல்லி
உமிழ்நீரைச் சுரக்கவைக்கும். வாய்க் கசப்பைப் போக்கும். மலச்சிக்கலைக் குறைக்கும்.
நார்ச் சத்து, கால்சியம், கோலின், பொட்டாஷியம், தாமிரம், ஆகியவை அதிகமாக இருக்கின்றன. புரதம், எண்ணெய், மாவு, பாஸ்பரஸ், இரும்பு, பீட்டா கரோட்டின், ஃபோலிக் ஆசிட், மெக்னீஷியம், மாங்கனீஷ், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. மிகக் குறைந்த அளவில் நியாசினும் உண்டு.