வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையில், ‘தங்களில் யார் வலிமை உள்ளவன்?’ என்ற போட்டி ஏற்பட்டது. வாயு பகவான் மலைகளை எல்லாம் தம் வலிமையால் புரட்டி வீச முற்பட்டார். அப்போது வாயு பகவான் மலைகளை பெயர்க்க முடி யாதபடி தம் வலிமையால் ஆதிசேஷன் தடுத்து நின்றார். இதனால் இருவருக்கும் பெரும் போர் மூண்டது. இருவருமே சம பலம் காட்டி நின்றதால் வெற்றியடைய முடியாத வாயு பகவான், அனைத்து உயிர்களுக்கும் வழங்கும் பிராண வாயுவை நிறுத்திவிட, உயிர்கள் அனைத்தும் சோர்வடைந்தன. எனவே, இந்திரன் உள்ளிட்ட தேவர்க ளின் வேண்டுகோளுக்கு இணங்கி, ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கி நின்றார்.
அதே போல் ராகுவும் கேதுவும் இங்கே வந்ததற்கும் ஒரு கதை உண்டு. ஒரு முறை சிவனை விநாய கர் தொழுதபோது சிவனின் கழுத்திலுள்ள பாம்பு, விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வம் கொண்டது. அதனால் சினம் அடைந்த இறைவன், ‘நாக இனம் முழுதும் தங்கள் சக்தியை இழக்கும்!’ என்று சாபமிட்டார். இதை அறிந்த நாக இனங்கள், ராகு, கேது ஆகியோர் ஈசனைத் தொழுது தங்கள் பிழையைப் பொறுத்தருள வேண்டினர். ‘‘நீங்கள் அனைவரும் பாம்புரத்தில் உள்ள என்னை சிவ ராத்திரியில் பூஜித்து விமோசனம் பெறலாம்!’’ என்று ஈசன் அருளினார். அவ்வாறே மகா சிவராத்திரி நாளில் மூன்றாம் சாமத்தில் நாகங்களும், ராகுவும், கேதுவும் திருப்பாம்புர நாதரை வணங்கி சாப விமோசனம் பெற்றனர். இவர்கள் தவிர பாம்புரத் தில் வழிபட்டு வரம் பெற்றவர்கள்: பிரம்மன், பார் வதி, அகத்தியர், அக்னி, கங்கை, சந்திரன், சூரியன், தட்சன், சுனீதன் என்னும் வடநாட்டு மன்னன் மற்றும் கோச்செங்கட்சோழன் ஆகியோர் ஆவர்.
அம்மன் சந்நிதி, இறைவ னின் சந்நிதிக்கு வட புறமாக அமைந்துள்ளது. அம்மனின் பெயர் வண்டார்குழலி. அம் மன் ஒரு கையில் ருத்திராட்ச மாலையுடன் வரத ஹஸ் தம், அபய ஹஸ்தம் விளங்கத் தோற்றம் அளிக்கிறார்.
ஈசான மூலையில் தனிச் சந்நிதியாக ராகுவும் கேதுவும் ஓர் உடலாகி சிவனை நெஞ்சில் இருத்தி இருக்கிறார்கள். ராகு காலத்தில் இந்தச் சந்நிதியில் அபிஷேகம்- அர்ச்சனை செய்வோர் தோஷங்கள் விலகி நலம் பெறுகின்றனர். ராகு- கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு எழுந்தருளி இருக்கும் சுவாமி, அம்பாள் மற்றும் ஒரே உடல் கொண்ட ராகு- கேது பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். ராகு- கேதுவுக்கு நீலம் மற்றும் பல வண்ண ஆடையைச் சாற்ற வேண்டும். சங்குபுஷ்பம், மல்லிகை, நீல மந்தாரை, இலுப்பைப்பூ, செவ்வரளி, நாகலிங்கப்பூ ஆகிய மலர்கள் ராகு- கேது பகவானுக்குப் பிடித்தவை. அர்ச்சனை முடிந்த பின் உளுத்தம் பருப்புப் பொடி, மற்றும் கொள்ளுப் பொடி, அன்னம் நிவேதனம் செய்து, தானம் செய்ய வேண்டும்.
கடந்த 2002-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21-ஆம் நாள் காலையில் ஏழரை அடி நீளமுள்ள பாம்பு, தனது சட்டையை அம்பாள் மீது மாலையாகப் போட்டு இருப்பதைக் கண்டனர். அதே போல் 26.5.2002 அன்று சிவலிங்கத்தின் மேல் சுமார் 8 அடி நீளமுள்ள நல்ல பாம்பு சுற்றி இருந்தது. அர்ச்சகர் உள்ளே சென்றபோது நாகம் வெளியில் வந்து விட்டது. ஆனால், அதன் தோல் (சட்டை) சுவாமியைச் சுற்றி மாலை அணிவித்தது போல் இருந்தது. இந்த நிகழ்ச்சியைப் படம் பிடித்து கோயிலில் மாட்டி இருக்கிறார்கள்.
கோயிலுக்குச் செல்லும் வழி: கும்பகோணம்- காரைக்கால் சாலையும், மயிலாடுதுறை- திருவாரூர் சாலையும் கொல்லுமாங்குடி என்ற இடத்தில் சந்திக்கும். அங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பாம்புரம். கொல்லுமாங்குடியில் இருந்து திருப் பாம்புரத்துக்கு மினி பஸ் வசதி உண்டு. கும்பகோணத்தில் இருந்து காரைக்காலுக்குப் பயணிக்கும்போது கொல்லுமாங்குடிக்கு ஐந்து கி.மீ. முன்னதாகவே கற்கத்தி என்ற கிராமம் வரும். எனவே, கும்பகோணத்தில் இருந்து செல்பவர்கள் கொல்லுமாங்குடி செல்ல வேண்டியதில்லை. கற்கத்தியில் இருந்து தெற்கே மூன்று கி.மீ. தொலைவில் உள்ள திருப்பாம்புரத்துக்கு ஆட்டோவிலும் செல்லலாம்.
கும்பகோணத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் மயிலாடுதுறையில் இருந்து 24 கி.மீ. தொலைவிலும், திருவாரூரில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந் துள்ளது திருப்பாம்புரம்.
No comments:
Post a Comment