Saturday 1 July 2017

அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு - (காரைக்கால்) புதுச்சேரி


தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று ; உன்மத்த நடனம் ஆடும் தியாகராஜர் பதி ; சோமாஸ்கந்தமூர்த்தி வடிவத்தின் பிறப்பிடம் ; பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க காரணமாக இருந்த பதிகம் பெற்ற பெருமையை உடைய சிவத்தலம்..

🔵⚜🔵⚜ BRS🔵⚜🔵⚜🔵


மூலவர் : தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர்

அம்மன்/தாயார் : பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்

தல விருட்சம் : தர்ப்பை

தீர்த்தம் : நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம். இது தவிர அன்னதீர்த்தம், கங்காதீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள் எனப்படும் எட்டு தீர்த்தங்கள் இருந்தன.

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருநள்ளாறு

ஊர் : திருநள்ளாறு

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

🅱 தேவாரபதிகம் : 🅱

போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம் பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி, ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின்மேல் நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே.

- திருஞானசம்பந்தர்

🥀 தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 52வது தலம்.

🅱 திருவிழா: 🅱

⚜ மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.

🅱 தல சிறப்பு: 🅱

🔥 இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🔥 மூலவர் தர்ப்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தி சிவலிங்கத்தின் மீது முளைத்த தழும்பு உள்ளது.

🔥 இத்தலம் சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று.

🔥 இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம்.

🔥 இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

🔥 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 115 வது தேவாரத்தலம் ஆகும்.

🅱 பொது தகவல்: 🅱

🎭 இது சிவத்தலமாயினும் சனிபகவான் சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றது.

🎭 இத்தல விநாயகர் சொர்ணவிநாயகர் என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

🎭 திருமால், பிரம்மன், இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன்,நளன் முதலியோர் வழிபட்டு பேறுபெற்ற தலம்.

🎭 கோயிலின் தென்புறம் இடையனார் கோயில் உள்ளது.

🎭 இங்கு இடையன், அவன் மனைவி, கணக்கன் ஆகியோர் உருவங்கள் உள்ளன.இதுப்பற்றிச் சொல்லப்படும் தலவரலாற்றுச் செய்தியாவது -

🎭 "இடையன் ஒருவன் அரசன் ஆணைப்படிக் கோயிலுக்குப் பால் அளந்து கொடுத்து வந்தான். கணக்கன் அப்பாலைத் தன் வீடடுக்கு அனுப்பிப் பொய்க் கணக்கு எழுதி, இடையனையும் அச்சுறுத்தி வந்தான். செய்தியறிந்த மன்னன் கோபம் கொண்டான். அப்போது இறைவன், இடையனைக் காக்கவும் கணக்கனைத் தண்டிக்கவும் எண்ணித் தம் சூலத்தை ஏவினார். அச்சூலத்திற்கு வழிவிடவே இக்கோயிலினள் பலிபீடம் சற்று விலகியுள்ளது. சூலம் கணக்கன் தலையைக் கொய்தது - இடையனுக்கு இறைவன் காட்சி தந்து அருள் புரிந்தார்."

🅱 பிரார்த்தனை : 🅱

🌺 சனித்தொல்லை நீங்க நள தீர்த்தத்திலும், முந்தைய சாபங்கள் ஒழிய பிரம்ம தீர்த்தத்திலும், கவி பாடும் திறன் பெற வாணி தீர்த்தம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

🅱 நேர்த்திக்கடன்: 🅱

💥 பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

🅱 தலபெருமை: 🅱

🍁 *சோமாஸ்கந்தமூர்த்தி வடிவத்தின் பிறப்பிடம்: * 🍁

🚂 திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரும், அம்பிகை பிராணேஸ்வரியும் குழந்தை இல்லாத தம்பதியருக்கு அருள் புரிவர். திருமாலுக்கு குழந்தையில்லாமல் இருந்த வேளையில் அவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி மன்மதனை மகனாகப் பெற்றார். அதற்கு பரிசாக முருகப்பெருமானை சுவாமி, அம்பாள் இடையே அமர்த்தி சோமாஸ்கந்தமூர்த்தி என்ற புதிய வடிவை உருவாக்கினார். இந்த வடிவத்தை தேவலோகத்துக்கு எடுத்துச் சென்று வழிபட்ட இந்திரன், ஜெயந்தன், ஜெயந்தி என்ற குழந்தைகளைப் பெற்றான்.

🚂 ஒரு கட்டத்தில் வாலாசுரன் என்பவன் தேவேந்திரனுடன் போருக்கு வந்த போது, முசுகுந்தன் சோழ மன்னன் உதவியுடன் அவனை வென்றான் இந்திரன். இதற்கு பரிசாக அந்த சோமாஸ்கந்த மூர்த்தியைப் பெற்று வந்தான். அதை திருவாரூரில் பிரதிஷ்டை செய்தான். அதே போல மேலும் ஆறு மூர்த்திகளைப் படைத்தான். அதில் ஒன்றை திருநள்ளாறில் வைத்தான். அதுவே தற்போது "தியாகவிடங்கர்' என வழங்கப்படுகிறது.

🚂 தியாகவிடங்கருக்கு இங்கே தனி சன்னதி இருக்கிறது.

🚂 தியாகவிடங்கரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

🔵 பச்சைப் பதிகம் : 🔵

💥 திருஞானசம்பந்தரின் இத்தலத்திற்கான "போகமார்த்த பூன்முலையாள்" என்று தொடங்கும் பதிகம் "பச்சைப் பதிகம்" என்ற சிறப்புடையது.

💥 சம்பந்தரை மதுரையில் சமணர்கள் வாதிற்கு அழைத்தனர். அனல் வாதம் மற்றும் புணல் வாதம் செய்வது என்றும் அதில் வெல்பவர் சமயமே உயர்ந்தது என்று மதுரை மன்னர் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி சமணர்கள் தங்கள் சமயக் கருத்துக்களை ஒரு ஏட்டில் எழுதி அதை தீயில் இட்டனர்.

💥 ஏடு தீயில் எரிந்து சாம்பலாயிற்று. அதன் பின் சம்பந்தர் முறை வரும் போது அவர் திருமுறை ஏட்டில் கயிறு சார்த்தி பார்த்த போது திருநள்ளாறு தலத்திற்கான "போகமார்த்த பூன்முலையாள்" என்ற பதிகம் வந்தது. சம்பந்தர் அதை தீயில் இட்டார். ஏடு தீயில் கருகாமல் பச்சை ஏடாகவே இருந்தது.

💥 சமணர்கள் வாதில் தோற்றனர். மதுரை மன்னனும் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறினான். இவ்வாறு பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க காரணமாக இருந்த பதிகம் பெற்ற பெருமையை உடையது திருநள்ளாறு தலம்.

🔴 வாசல்படிக்கு மரியாதை கொடுங்கள்: 🔴

🔘 திருநள்ளாறு செல்பவர்கள் ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்ததும், முதல் படியை தொட்டு வணங்க வேண்டும்.

🔘 ஏனெனில், இந்த வாசல்படி மாடத்தில் சனீஸ்வரன் தங்கியிருப்பதாக ஒரு நம்பிக்கை.

🔘 நளன் தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குள் நுழைந்ததுமே, நியாயத்துக்கு புறம்பாக செயல்பட்டதற்காக இறைவனிடம் தண்டனை அடைய வேண்டி வருமோ என்று பயந்த சனீஸ்வரன் வாசல்படியோடு நின்று, அவனை விட்டு நீங்கி விட்டதாக சொல்வர். ஆனால், இறைவன் சனீஸ்வரனின் நிலையைப் பாராட்டி ஈஸ்வரப் பட்டம் வழங்கி, தன் கோயில் முகப்பிலேயே வைத்துக் கொண்டார்.

🔵 தீர்த்தங்கள் : 🔵

🌤 திருநள்ளாறு என்றாலே தீர்த்த ஸ்தலம் என்பதே நிஜம்.

🌤 தற்போது கோயிலைச் சுற்றி நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இதில் நள தீர்த்தத்தில் குளித்தால் சனித்தொல்லை நீங்கும். பிரம்ம தீர்த்தத்தில் குளித்தால் முந்தைய சாபங்கள் ஒழியும். வாணி தீர்ததம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மூடன் கூட கவி பாடுவான் என்று நம்பிக்கை. இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள் எனப்படும் எட்டு தீர்த்தங்கள் இருந்தன. ஒரு காலத்தில் உலகிற்கு ஏதேனும் கேடு நேர இருக்குமானால் கங்கா, பிரம்ம மற்றும் நள தீர்த்தங்களின் நீர் சிவப்பாக மாறிவிடுமாம். இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு தகுந்த பரிகார பூஜைகள் செய்து மக்கள் தப்பித்திருக்கிறார்கள் என்கின்றனர்.

🅱 சனீஸ்வரனை வணங்கும் முறை: 🅱

🎭 காலை 5 மணிக்கு நள தீர்த்தத்தில் நீராடி, கரையிலுள்ள நளவிநாயகர் மற்றும் பைரவரை வணங்க வேண்டும்.

🌤 கோயிலுக்குள் உள்ள கிணறான கங்காதீர்த்தத்தை தரிசித்து, கோபுர வாசலுக்கு வந்து ராஜகோபுர தரிசனம் முடித்து, உள்ளே நுழையும் போது முதல் படிக்கட்டை வணங்கி முதல் பிரகாரத்திற்கு செல்ல வேண்டும். இந்த சுவரில் வரையப்பட்டுள்ள நள சரிதத்தை பக்திப்பூர்வமாக பார்த்த பிறகு, காளத்திநாதரை வணங்க வேண்டும்.

🌤 பின்னர் சுவாமி சன்னதிக்குள் சென்று மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, தியாகவிடங்கர் சன்னதிக்கு செல்ல வேண்டும். இங்குள்ள மரகதலிங்கத்தை வணங்கிய பிறகு, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சண்டிகேஸ்வரரை வணங்கிய பின் வெளிப்பிரகாரம் செல்ல வேண்டும்.

🌤 அங்குள்ள தெய்வங்களை தரிசித்து கட்டைக் கோபுர வாசல் சென்று அம்பிகை பிராணேஸ்வரியை வழிபட வேண்டும். பிறகு தான் சனீஸ்வரர் சன்னதிக்கு செல்ல வேண்டும்.

🌤 சிலர் முதலிலேயே சனீஸ்வரனை தரிசிக்க சென்று விடுகின்றனர். இது சரியான வழிபாட்டு முறையல்ல. இங்குள்ள இறைவனை பார்த்த பிறகு சனீஸ்வரனைக் கண்டால் தான் சனிதோஷ விமோசனம் கிடைக்கும்.

🔴 தங்கக்கவசம்: 🔴

🔥 சனிப்பெயர்ச்சி மற்றும் முக்கிய காலங்களில் சனீஸ்வரன் தங்க காக வாகனத்தில் தங்கக்கவசம் அணிந்து பவனி வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.

🔥 சனீஸ்வரனைக் கண்டால் எல்லாருமே ஓட்டம் பிடிக்கும் நிலைமையில், இங்கே தங்கக்கவச சனீஸ்வரனைத் தரிசிக்க கூட்டம் அலை மோதும். தமிழகத்தை தவிர கன்னட மக்களுக்கு சனீஸ்வரன் மீது நம்பிக்கை அதிகம். எனவே, தமிழ் மக்களுக்கு ஈடாக கர்நாடக மாநில மக்களும் இங்கு அதிக அளவில் வருகிறார்கள்.

🔵 சனீஸ்வரன் வரலாறு: (சுருக்கமாக) 🔵

🌺 சூரியனுக்குரிய மனைவியரில் ஒருத்தி உஷா. இவள் சூரியனின் வெப்பம் தாளாததால் தன் நிழலையே ஒரு பெண்ணாக்கி சாயாதேவி என்ற பெயரில் தங்கியிருந்தாள். சாயாதேவிக்கு சனீஸ்வரன் பிறந்தார். பின்னர் உண்மை தெரிந்தது. சூரியன் தன்னை ஏமாற்றிய மனைவியைக் கடிந்து கொண்டார். அவளுக்கு பிறந்த சனீஸ்வரனை வெறுத்து ஒதுக்கி விட்டார்.

🔥 சனி காசிக்கு சென்று விஸ்வநாதரை வணங்கி நவக்கிரக மண்டலத்தில் இடம் பெற்றார்.

🔴 கோவில் அமைப்பு: 🔴

🍁 நான்கு வீதிகளுக்கு நடுவில் கோயில் அமைந்துள்ளது.

🍁 உயர்ந்த ராஜகோபுரம். அதற்கு முன்புள்ள முற்றம் மண்டபமாக்கப்பட்டுள்ளது.

🍁 இங்கு வடபுறம் அலுவலகமும் தென்புறம் இடையனார் கோயிலும் உள்ளது.

🍁 விசாலமான பிராகாரத்துடனும், உயர்ந்த சுற்றுமதில்களுடனும் ஆலயம் அரைந்துள்ளது. சுவரில் நளன் வரலாறு வண்ண ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வசந்த மண்டபம் உள்ளது.

🍁 சனி பகவான் சந்நிதி முன்னால் மகர, கும்பராசிகளின் உருவங்கள் உள்ளன. மகர, கும்பராசிகளுக்குச் சனி அதிபதியாவார்.

🍁 அதையடுத்து அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம்.

🍁 உற்சுற்றில் சுந்தரர், அறுபத்துமூவர் மூல உருவங்கள் உள்ளன. வரிசை முடிவில் நளன் வழிபட்ட நளேஸ்வரர் சிவலிங்கம் உள்ளது.

🍁 கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், விநாயகரும், பிரமனும் துர்க்கையும் உள்ளனர்.

🍁 சொர்ண கணபதி சந்நிதி தலவிநாயகர் சந்நிதியாகும்.

🍁 சப்தவிடங்கத் தல சிவலிங்கத் திருமேனிகளும், சுப்பிரமணியர் சந்நிதியும், ஆதிசேஷன், நளநாராயணப் பெருமாள், மகாலட்சுமி, பைரவர் முதலிய சந்நிதிகளும் உள்ளன.

🍁 படிகளேறிச் செல்லும் போது பலிபீடம் சற்று விலகியிருப்பதைக் காணலாம்.

🍁 தினந்தோறும் ஆறுகால வழிபாடுகளும் செம்மையாக நடைபெறும் இத்திருக்கோயில் தருமையாதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

🍁 வைகாசியில் பெருவிழா நடைபெறுகிறது.

🅱 தல வரலாறு:🅱

🌷 நிடத நாட்டுமன்னனான நளன், விதர்ப்ப நாட்டு வீரசேனன் மகள் தயந்தியைச் சுயம்வரத்தின் மூலமாக மணந்து கொண்டான். தேவர்களைப் புறக்கணித்து நளனைத் தமயந்தி மணந்தது கேட்டு சனிபகவான் நளன்மேல் கோபம் கொண்டார். நளனிடம் ஏதும் குறைகாணாது 12ஆண்டுகள் காத்திருந்து, காலில் நீர்பட்டும் படாமலும் கழுவிச் சென்ற குற்றங்கண்டு அவனைப்பற்றினார். இதனால் நளன் பட்ட துன்பங்களை நாடறியும். துன்பங்கள் தீர்ந்து நாடாளத் தொடங்கியும் சநியின் வேகந்தணியாமையின் தீர்த்தயாத்திரையை நாரதர் உபதேசப்படி மேற்கொண்டான். திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலத்தில்) அவனைச் சந்தித்த பரத்வாஜ முனிவர், திருநள்ளாறு சென்று வழிபடுமாறு அறிவுரை கூறினார். அவ்வாறே நளன், திருநள்ளாறடைந்து, தீர்த்தம் உண்டாக்கி, நீராடி, தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட, திருநள்ளாற்று ஆலயத்துள் நுழைந்தான். அவனைப் பற்றியிருந்த 'சனி' உள்ளே நுழைய அஞ்சி அங்கேயே தங்கிவிட்டார். இதனால் இத்தலத்தில் சனிபகவான் சந்நிதி மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகின்றது.

🌷 கிழக்கு நோக்கி அமர்ந்து ஈஸ்வர பட்டத்துடன் "சனீஸ்வரன்' என்ற பெயர் தாங்கி அருள்பாலித்தார். கிழக்கு நோக்கிய சனீஸ்வரன் என்பதாலும், சிவனருள் பெற்றவர் என்பதாலும், இவரை வழிபட்டு, சனியினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கப் பெறலாம். நளசரிதம் படித்தவர்களும் சனித்தொல்லை நீங்கப் பெற்று, வாழ்வில் தன்னம்பிக்கை பெறுவர்.

🅱 ஒதுங்கிய நந்தி:🅱

🌷 இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம். இடையன் ஒருவன் அரசன் ஆணைப்படி கோயிலுக்குப் பால் அளந்து கொடுத்துவந்தான். கணக்கன் அப்பாலைத் தன்வீட்டுக்கு அனுப்பிப் பொய்க்கணக்கு எழுதி, இடையனையும் அச்சுறுத்தி வந்தான். செய்தியறிந்த மன்னன் கோபம் கொண்டான். அப்போது இறைவன், இடையனைக் காக்கவும், கணக்கனைத் தண்டிக்கவும் எண்ணி தம் சூலத்தை ஏவினார். அந்த சூலத்திற்கு வழிவிடவே இக்கோயிலில் பலிபீடம் சற்று விலகியுள்ளது. சூலம் கணக்கன் தலையைக் கொய்தது. இடையனுக்கு இறைவன் காட்சி தந்து அருள்புரிந்தார்.

🅱 சிறப்பம்சம்: 🅱

🦆 அதிசயத்தின் அடிப்படையில்:🦆

⚜ இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

⚜ இது அரசிலாற்றுக்கும் வாஞ்சநதிக்கும் நடுவில் இருப்பதால் நள்ளாறு என்று அழைக்கப்படுவதாயிற்று.

⚜ தர்ப்பாரணியம், நகவிடங்கபுரம், நளேசுரம் என்பன இதன் மறு பெயர்கள்.

⚜ இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. நளன் வழிபட்ட தலம்.

⚜ விநாயகர் கற்பகவிநாயகர், சொர்ணவிநாயகர், தியாகர் நகவிடங்கத் தியாகர்; அம்மன் நீலோற்பலாம்பாள்; நடனம் உன்மத்த நடனம். இத்தலத்தில் சனிபகவான் சந்நிதி மிகச் சிறப்புடையது.

⚜ இத்தலத்திற்கு அருகாமையில் 2 கி.மீ. தொலைவில் "தக்களூர்" என்ற் தேவார வைப்புத் தலம் உள்ளது. திருநள்ளாறு செல்பவர்கள் இத்தலத்திற்கும் சென்று வாருங்கள். இத்தலத்திலுள்ள இறைவன் பெயர் திருலோகநாத சுவாமி. இறைவியின் பெயர் தர்மசம்வர்த்தினி.

🅱 இருப்பிடம்:🅱

🚗 பேரளம், காரைக்கால், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃

🌿 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🌿

No comments:

Post a Comment