Saturday 1 July 2017

அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோயில், திருநீலக்குடி, திருவிடைமருதூர்


மார்க்கண்டேயர் சிரஞ்சீவி வரம் பெற்ற சிறப்புவாய்ந்த தலம் ; பிரம்மா, தேவகண்டர், வசிஷ்டர், சூரபத்மன் ,காமதேனு ஆகியோர் வழிபட்டு சாப நிவர்த்தி பெற்ற தலம் ; யோக மார்க்கத்தில் செல்பவர்களுக்கு இது மூலாதாரமான தலம் ; குண்டலினி சக்தியை தட்டி எழுப்புவர்களுக்கு உடனடியாக பலம் தரும் விசேச சக்தி படைத்த சிவதலம்..*

⚜🌺⚜🌺 BRS⚜🌺⚜🌺⚜

மூலவர் : நீலகண்டேசுவரர்

அம்மன்/தாயார் : ஒப்பிலாமுலையாள்

தல விருட்சம் : 5 இலைவில்வம், பலாமரம்

தீர்த்தம் : தேவிதீர்த்தம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : தென்னலக்குடி

ஊர் : திருநீலக்குடி

பாடியவர்கள் : திருநாவுக்கரசர்

🅱 தேவாரப்பதிகம் : 🅱

கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்திங்கள் பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன் நெற்றிக் கண்ணுடை நீலக்குடியரன் சுற்றித் தேவர் தொழுங்கழல் சோதியே. - திருநாவுக்கரசர்

🌤 தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 32வது தலம். 🌤

🅱 திருவிழா: 🅱

🐲 சித்திரை மாதம் - பிரம்மோற்சவம் - 18 நாட்கள் திருவிழா வாகனங்களில் மார்க்கண்டேயாரால் ஏற்படுத்தப்பட்ட இந்த திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

🐲 திருவிழா நாட்களில் தினந்தோறும் சுவாமி வாகனங்களில் சுவாமி வீதியுலா செல்வார். அப்போது திருநீலக்குடி மட்டுமல்லாது சுற்றியுள்ள 18 கிராமங்களுக்கும் சுவாமி செல்வார்.18 வது நாளில் எலந்துறையில் எழுந்தருள்வார். 18 வது நாளில் எலந்துறை (பவுண்டரீகபுரம்)என்ற ஊரில் சுவாமி அருள்பாலிப்பார். இது மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.

🐲 திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை ஆகிய நாட்கள் இத்தலத்தில் விசேசமாக இருக்கும்.

🐲 மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும்.

🐲 வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

🅱 தல சிறப்பு : 🅱

🦋 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🦋 இங்கு இரண்டு அம்பாள்கள் உள்ளனர்.

🦋 ஒப்பில்லா முலை அம்மன்(அனுபமஸ்தினி) திருமணக் கோலத்தில் உள்ளார்.

🦋 மற்றொருவர் பக்தனது விருப்பத்தை நிறைவேற்றுபவள் (பக்தாபிஷ்டபிரதாயினி) தபசு கோலத்தில் உள்ளார்.

🦋 இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

🦋 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 95 வது தேவாரத்தலம் ஆகும்.

🅱 திறக்கும் நேரம்: 🅱

🦆 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 🦆

🅱 பொது தகவல் : 🅱

🍁 தேவி தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஷீர குண்டம் என்று நான்கு சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களை கொண்ட சிவ தலம்.

🍁 இத்தலத்தில் நடைபெறும் சித்திரைப் பெருவிழா சிறப்புடையது.

🍁 மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவி பதம் தரப்பட்டதால், அதற்கு நன்றிக் கடனாக மார்க்கண்டேயர் இறைவனை பல்லக்கில் வைத்து இளந்துளை, ஏனாதிமங்கலம், திருநாகேசுவரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவகுடி என்று ஊர் ஊராக அழைத்துச் சென்றார்.

🍁 இவ்விழாவில் பன்னிரண்டாம் நாளில் சுவாமி பல்லக்கில் புறப்பட்டு ஏழூர் சென்று வருவது அற்புதமான காட்சியாகும்.

🍁 இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் முகமாகவே இத்தலத்து சித்திரைத் திருவிழா நடத்தப்படுகிறது.(ஏழூர்களாவன - இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேச்சுரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடீ, திருநீலக்குடி).

🍁 இத்தலத்தில் பெருமான் மார்க்கண்டேயருக்கு அருள் புரிந்திப்பதால் திருவிழாக்காலத்தில் சுவாமிக்கு முன்னால் எதிர்முகமாக மார்க்கண்டேயர் உற்சவமூர்த்தியாக செல்கிறார்.

🍁 இத்தல விநாயகர் நர்த்தனகணபதி எனப்படுகிறார்.

🍁 தேவி தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஷீர குண்டம் என்று நான்கு சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களை கொண்ட தலமாக இக்கோவில் விளங்குகிறது.

🍁 மேலும் பிரம்மா, தேவகண்டர், வசிஷ்டர், சூரபத்மன் ,காமதேனு ஆகியோர் வழிபட்டு சாப நிவர்த்தி பெற்ற தலம் என்ற பெருமையும், வருணனும் தேவகன்னியர்களும் பூஜித்து வரம் பெற்ற தலம் என்ற பெருமையும் இத்தலத்திற்கு உண்டு.

🍁 ஸ்ரீ மனோக்கியநாத சுவாமியை வழிபட்டால் மனஅமைதி கிடைக்கும்.

🅱 பிரார்த்தனை : 🅱

🔥 பிரிந்திருக்கும் தம்பதியர் இங்குள்ள திருநீலகண்டரை மனமுருக வழிபட்டால் மீண்டும் ஒன்று சேர்ந்து இல்லறம் நடத்துவர்.இந்த பிரார்த்தனைக்காக பக்தர்கள் இத்தலத்துக்கு பெருமளவு வருகின்றனர்.

🔥 இத்தலத்தில் வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகம்.

🔥 எம பரிகாரம், ராகு தோஷ பரிகாரங்கள் இத்தலத்தில் பக்தர்களால் செய்யப்படுகிறது.

🔥 திருநீலகண்டரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.

🔥 கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.

🔥 இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும்.

🔥 மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

🅱 நேர்த்திக்கடன்: 🅱

🔘 இத்தலத்தில் சுவாமிக்கு எண்ணெய் அபிசேகம் செய்வது மிகவும் விசேசம்.

🔘 பெருமளவு பக்தர்களால் செய்யப்படும் இந்த அபிசேக பூஜை சிறப்பும் புகழும் வாய்ந்தது பால் , தயிர், இளநீர் , சந்தனம்,விபூதி,மா பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றால் அபிசேகம் சுவாமிக்கு செய்யலாம்.

🔘 மேலும் சுவாமிக்கு வேட்டி படைத்தல் அம்பாளுக்கு சேலை வழங்கல்,கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.

🔘 சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.

🅱 தலபெருமை: 🅱

🌤 திருநீலக்குடி நீலகண்டேசுவர் என்றாலே இந்த எண்ணெய் அபிஷேகம் தான் என்கின்ற அளவுக்கு இந்த அபிசேகம் சிறப்பும் புகழும் கீர்த்தியம் வாய்ந்தது.

🌤 இங்குள்ள மூலவருக்கு எண்ணெய்யால் அபிசேகம் செய்யும் போது பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெய்யை சுவாமியின் மீது ஊற்றி அபிசேகம் செய்வார்கள்.

🌤 எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிசேகம் செய்தாலும் அத்தனை எண்ணெயும் சுவாமி மேலேயே உவரி விடும். அதாவது எண்ணெய் முழுவதும் சிவலிங்கத்திற்குள்ளேயே(உறிஞ்சி) இறங்கி விடுவது அதிசயமாக உள்ளது.

🌤 நாள் பூராவும் எணணெய் அபிசேகம் செய்தாலும். குடம் குடமாக கொட்டி அபிசேகம் செய்தாலும் கூட அத்தனையும் உறிஞ்சி விடுகிறது.

🌤 இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிசேகம் செய்த அடுத்தநாள் சுவாமியை பார்த்தால் அவரது சிவலிங்கத் திருமேனி கிட்டதட்ட 1 வருடமாக எண்ணெயே தடவாவது போல் அவ்வளவு உலர்ந்து காய்ந்து காணப்படும்.

🌤 அபிசேகம் செய்யப்படும் எண்ணெயெல்லாம் எங்கு மாயமாகிறது என்பது இத்தனை காலமும் யாருக்கும் புலப்படவில்லை.

🌤 எண்ணெய் அபிசேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதால் சிவலிங்கத் திருமேனி வழுவழுப்பாகத்தானே இருக்க வேண்டும் ? ஆனால் இங்குள்ள ஈசனின் மேனி சொர சொரப்பாகவே இருக்கிறது.

🌤 ஈசன் ஆலகால விஷம் உண்டு தொண்டையில் விஷம் இருப்பதால் அந்த விஷத்தன்மை குறைக்க வேண்டியே இங்கு எண்ணெய் அபிசேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம் .

🌤 சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணெய் உட்கொண்டால் தீராத நோய்களும் குணமாகும்.

🌤 இத்தலத்தின் தலவிருட்சம் வில்வம் என்றாலும் கூட கோயிலின் உட்பிரகாரத்தில் இருக்கும் பலா மரம் சிறப்பு வாய்ந்தது.

🌤 இது தெய்வீகமான பலா மரம் என்று அழைக்கப்படுகின்றது.அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தை அறுத்து அதன் சுளைகளை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பின்னர் தான் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.அம்மரத்தில் காய்க்கும் பலாபழத்தை முழுப்பழமாக எடுத்துக் கொண்டு செல்லக்கூடாது. அதை மீறி எடுத்துச் செல்பவர்கள் இறைவனால் தண்டனை அடையப் பெறுவார்களாம்.

🌤 பரீட்சித்து பார்ப்பதற்காக மீறி எடுத்துச்சென்று தண்டனை பெற்றவர்களும் உண்டாம்.

🌤 சிவலிங்கத் திருமேனி வழுவழுப்பாக இல்லாமால் சொர சொரப்பாக உள்ளது. இறைவனுக்கு சிகை முடி வளர்ந்திருப்பது போல் உள்ளது.

🌤 ஐந்து இலை வில்வ மரம் இத்தலத்தின் தலமரமாக திகழ்கிறது.இது பஞ்ச வில்வ மரம் என்றும் அழைக்கப்படுகிறது.

🌤 ஒரே காம்பில் ஐந்து இதழ்களையுடைய இலைகள் இருப்பது என்பது அதிசயமாக உள்ளது.

🌤 மார்க்கண்டேயர் சிரஞ்சீவி வரம் பெற்ற சிறப்புவாய்ந்த தலம் இதுதான்.

🌤 தட்சனின் யாகத்திற்கு சென்ற தாட்சாயினி அவமரியாதை பெற்று திரும்பி இத்தலத்தில் வந்து இறைவனை பூஜித்து இறைவனோடு ஒன்றுபட்டார்.

🌤 பிரம்மா, தேவகண்டர், வசிஷ்டர், சூரபத்மன் ,காமதேனு ஆகியோர் வழிபட்டு சாப நிவர்த்தி பெற்ற தலம்.

🌤 வருணனும் தேவகன்னியர்களும் பூஜித்து வரம் பெற்ற தலம்.

🌤 அப்பர் பெருமானால் ஆத்மார்த்தமான தேவாரப்பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த தலம்.

🌤 கல்லினோடு அவன் கையர் என்று தன்னை கல்லோடு கட்டிப் போடும்போது அப்பர் இத்தலத்து இறைவனைத்தான் ஆத்மார்த்தமாகப் பாடி உயிர்பெற்றதாக இத்தலக் குறிப்பு கூறுகிறது.

🅱 கோவில் அமைப்பு: 🅱

🍄 இத்தலத்தில் இராஜ கோபுரம் இல்லை.

🍄 இரண்டு நுழைவாயிலகள் உள்ளன.

🍄 முதல் நுழைவாயில், 2-ம் நுழைவாயில் இரண்டிறகும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பிரகாரத்தில் நந்தி மண்டபம், கொடிமரம் மற்றும் பலிபீடம் உள்ளது.

🍄 கருவறையில் இறைவன் ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

🍄 இத்தலத்தில் இரண்டு அம்மன் சந்நிதிகள் உள்ளன.

🍄 ஒரு அம்மனின் பெயர் பக்தனது விருப்பத்தை நிறைவேற்றும் ஸ்ரீபக்தபீஷ்டப்பிரதாயனி என்கிற ஸ்ரீ தவக்கோல அம்மை.

🍄 2-வது அம்மனின் பெயர் திருமணக் கோலத்தில் உள்ள ஸ்ரீஅனூபமஸ்தநி என்கிற ஸ்ரீஅழகாம்பிகை.

🅱 தல வரலாறு: 🅱

🌸 யோக மார்க்கத்தில் செல்பவர்களுக்கு இது மூலாதாரமான தலம்.

🌸 மொத்தம் ஆறு ஆதாரங்கள் உள்ளன.அவை மூலாதாரம்,சுவாதிட்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்னை முதலியன.இந்த ஆறு ஆதாரங்களில் இது மூலாதாரமான தலம்.

🌸 குண்டலினி சக்தியை தட்டி எழுப்புவர்களுக்கு உடனடியாக பலம் தரும் விசேச சக்தி படைத்த சிவதலம் இது.

🌸 மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க மிருகண்டு தமபதியினர் 16 வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர்.

🌸 மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயருக்கு கூறினர்.

🌸 சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் போது திருநீலக்குடி தலத்திற்கும் வந்து ஈசனை வழிபட்டார்.

🌸 இங்கு வந்து நாளும் பொழுதும் சிவபெருமானை எண்ணி தியானிக்கிறார். முடிவில் இறைவன் அவர் முன் தோன்றினார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். மார்க்கண்டேயர் தமது விருப்பத்தை சொன்னவுடன் அதுபடியே மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவியாக இருக்க ஈசன் வரம் அளித்தார். அத்தகைய சிறப்பு பெற்ற தலம் திருநீலக்குடி.

🌸 பாற்கடலை அமிர்தம் பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டார். அது அவர் வயிற்றுக்குள் செல்லாமல் தடுக்க உமை அவரின் கழுத்தைப் பிடிக்க விஷம் அவர் கழுத்தில் தங்கியது. இறைவனும் நீலகண்டேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

🅱 சிறப்பம்சம்: 🅱

🕊அதிசயத்தின் அடிப்படையில்: 🕊

🐘 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🐘 திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

🐘 பல்லவ மன்னன் அமணர்களின் ஆலோசனைப்படி அப்பர் பெருமானை கல்லோடு கட்டிக் கடலில் வீழ்த்திய போது, அவர் இத்தலத்து இறைவனைத்தான் ஆத்மார்த்தமாகப் பாடி உயிர்பெற்றதாக இத்தலக் குறிப்பு கூறுகிறது.

🐘 இத்தலத்து பதிகத்தின் 7-வது பாடலில் அப்பர் இதனைக் குறிப்பிடுகிறார்.

🐘 "அமணர்கள் பேச்சைக் கேட்டு கல்லினோடு என்னைச் சேர்த்துக்கட்டி மன்னர் உத்திரவின்படி கடலில் வீச, என் வாக்கினால் நெல்வளம் உடைய நீண்ட வயல் சூழ்ந்த நீலக்குடி இறைவனுடைய நல்ல நாமத்தைச் சொல்லி நன்றே உய்ந்தேன்"

என்று அப்பர் பாடியுள்ளார்.

🐘 மேலும் தனது பதிகத்தில் "தேடிவைத்த செல்வமும், மனைவியும், மக்களும் நீர் இறக்கும் போது உம்முடன் வரார், ஆகையால் நாள் தோறும் நினைத்து தொழுது சிவகதி சேர்வீர் என்றும், உயிர் உடலை விட்டுப் பிரிந்துபோவதற்கு முன்பே, நிழல் உடையதாய்ச் செறிந்த பொழில்களையுடைய நீலக்குடி இறைவனுடைய கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழுது உய்வீர்களாக" என்றும் அறிவுறுத்துகிறார்.

🅱 இருப்பிடம்: 🅱

🚗 கும்பகோணம் - காரைக்கால் சாலையில் கும்பகோணத்தில் இருந்து 16 கி.மி. தொலைவில் உள்ளது தென்னலக்குடி என்ற திருநீலக்குடி.

🚗 ஆடுதுறையில் இருந்ததும் திருநீலக்குடி வர சாலை வசதி உள்ளது.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃

🌿 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🌿

No comments:

Post a Comment