Friday 7 July 2017

அருள்மிகு பீமாசங்கரர் திருக்கோயில், சகியாத்திரி மலைத்தொடர் , பீமாசங்கரம், புனே ,மகாராஷ்டிரா



ஈசன் திரிபுராசுரனை வதைத்த தலம் ; சிவாலய வாயிலில் எதிரே கடலாமை மூலவரைப் பார்த்தவாறு காட்சித் தரும் ஜோதிர் லிங்கத் தலம் , இந்துக்களின் புனித யாத்திரைத் தலம்..

🔵⚜🔵⚜ BRS🔵⚜🔵⚜🔵

மூலவர்: பீமாசங்கரர்

அம்மன்/தாயார்: கமலாட்சி பச்சிஷ்டா தேவி

தீர்த்தம்: மோட்ச குண்டம், சர்வ தீர்த்தம், குடசாரண்ய தீர்த்தம், பீமாநதி.

பழமை: 2000-3000 வருடங்களுக்கு முன்

ஊர்: பீமா சங்கர்

மாவட்டம்: புனே

மாநிலம்:  மகாராஷ்டிரா

🅱 திருவிழாக்கள் :🅱
 
🌻 சிவராத்திரி, பிரதோஷம்

🅱 தல சிறப்பு:🅱
 
🎭 சைவம், வைணவம், கௌமாரம், காணாபத்தியம், சௌரம், சாக்தம் இவை ஆறு வகையான வழிபாடுகள். சிவனை வழிபடும் பிரிவினர் சைவர் எனப்படுவர். சிவபெருமான் பெரும்பாலும் லிங்க வடிவிலேயே வழிபடப்படுகிறார். கீழேயுள்ள ஆவுடையும், அதன் மேல் அமைந்துள்ள லிங்கமும் ஆண் பெண் ஐக்கியத்தை உணர்த்துவன.

🎭 சிவனை வழிபட விசேஷமான நாள் சிவராத்திரி. அன்று இரவு முழுவதும் கண் உறங்காது சிவனை வழிபடுவோருக்கு சிவலோகம் கிடைக்கும் என்பது சாஸ்திரம்.

🎭 சிவபெருமானுக்கு உகந்த பஞ்சபூதத் தலங்கள் தமிழ் நாட்டில் காஞ்சிபுரம் (மண்), சிதம்பரம் (ஆகாயம்), காளஹஸ்தி (வாய்), திருவானைக்கா (நீர்), திருவண்ணாமலை (அக்னி) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. அது போன்று பன்னிரெண்டு ஜோதிர் லிங்கத் தலங்கள் நம் இந்தியாவில் ஸ்ரீசைலம் (மல்லிகார்ஜூனர்), சோமநாதம் (சோமநாதர்), உஜ்ஜயினி (மகாகாளர்), ஓம்காரம் (அம்லேஷ்வர்), கேதாரம் (கேதாரேஷ்வர்), வாரணசி (விசுவநாதர்), நாசிக் (த்ரியம்பகேஷ்வர்), தாருகாவனம் (நாகேஷ்வர்), வெருல் (க்ருஷ்ணேஷ்வர்), ராமேஸ்வரம் (ராமநாதர்), பீமாசங்கரம் (பீமாசங்கரர்), பர்லி (வைத்தியநாதர்) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இவற்றை தரிசிப்பது அளப்பரிய நன்மைகளைத் தருமென சிவ புராணம் உரைக்கிறது.

🎭 இப்பன்னிரண்டு தலங்களில் நாசிக், பரலி, வெருல் (எல்லோரா குகைகளுக்கு அருகில் உள்ளது), பீமாசங்கர் ஆகிய நான்கும் மகாராஷ்டிர மாநிலத்திலேயே அமைந்துள்ளது. இவற்றில் இறைவன் திரிபுராசுரனை வதைத்து கோவில் கொண்ட இடமே பீமாசங்கர்.

🎭 பீமாசங்கரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🎭 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று..

🎭 மூலவர் கூம்புவடிவில் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.

🎭 லிங்கத்தின் மீது கவசமிட்டே எல்லாப்  பூசைகளும் தரிசனங்களும் நடக்கின்றன. பகல் பன்னிரெண்டு மணி வாக்கில் மகாபூசைக்காக சில நிமிடங்கள் மட்டும் கவசம் இல்லாமல் பீமாஷங்கரை தரிசிக்க  முடியும்.

🎭 இத்தலத்தில் கடல் ஆமை பிரசித்தி பெற்றதாகும்.வாயிலின் எதிரே நந்தியும் அதன் பிறகு கடலாமையும் மூலவரைப் பார்த்தவாறு காட்சித் தருகின்றன.

🎭 அவசரப்படாமல் வழிபட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக கருவறைக்கு முன் ஆமை.

🎭 கருவறையின் வெளியே கால பைரவரையும், நேர் எதிரே சனி பகவானையும் தரிசிக்கலாம்.
 
🅱 நடை திறப்பு:🅱
 
🗝 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்...🗝

🅱 பொது தகவல்:🅱

🦋 இங்கு விநாயகர், கவுரி, இராமர், இலக்குமணர் பரிவார மூர்த்திகள் உள்ளனர்.

🦋 பீமா சங்கரம் கோயில் மலைச்சாரலில் உள்ளது.

🦋 கோயிலுக்குச் செல்லும் வழி மேலேயிருந்து கீழே பள்ளத்தாக்கு நோக்கிச் செல்கிறது. வழி நெடுகப் படிக்கட்டு அமைக்கப் பட்டுள்ளது.

🦋 மூலத்தானத்தில் சிவலிங்கம் பூமிமட்டத்திலிருந்து கீழே உள்ளது.

🦋 கோயில் கூம்பு வடிவத்தில் காணப்படுகிறது.

🦋 கருங்கற்களால், பலவிதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது.

🦋 மூலவருக்குப் பரிவார தேவதைகளாக மற்றுமொரு பீமேசலிங்கம், நந்தி, அம்மன் முதலியவர்கள் உள்ளனர்.

🦋 மேலே உள்ள கோபுரக் கலசத்தை நாம் அவசியம் தரிசிக்க வேண்டும்.

🦋 சிற்பங்கள் மிக அழகாக உள்ளன.

🦋 கர்ப்பக்கிரகத்தின் உள் சுவரில் பார்வதி தேவியின் அழகிய சிறிய திருச்சிலை ஒரு மாடத்தில் காணப்படுகிறது. கர்ப்பக்கிரகத்துக்குள் செல்லும் படிக்கட்டுத் தூண்களில் தேவ, மனித உருவங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.

🦋 கருவறையின் எதிரில் கம்பீரமான நந்தி உயரத்திலிருந்து சிவனைப் பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார்.

🦋 சிவ சன்னிதியை அடுத்து, சபா மண்டபத்துக்கு எதிரில் சனி பகவானின் சன்னிதி தனியாக உள்ளது. காக்கை வாகனத்தின் மேல் அமர்ந்து சனிபகவான் அனுக்ரகம் செய்கிறார்.

🦋 இச்சன்னிதிக்கு எதிரில் இரண்டு தூண்களுக்கு மத்தியில் பெரிய அழகிய போர்த்துகீசிய மணி காணப்படுகிறது. பாஜிராவ் பேஷ்வாவின் சகோதரர் சிம்னாஜி அப்பா என்பவர் இதனைக் காணிக்கையாகச் சமர்ப்பித்துள்ளார். சிம்னாஜி அப்பா, போர்த்துகீசியர்களை, வாஸாய் கோட்டையில் வென்று இரண்டு பெரிய மணிகளை வெற்றியின் சின்னமாகக் கொண்டு வந்தார். ஒன்றை பீமாசங்கர் கோயிலுக்கும், மற்றொன்றை கிருஷ்ணா நதிக்கரையில் வாயி என்ற இடத்திலுள்ள மேநோ வாலி சிவன் கோயிலுக்கும் காணிக்கையாக அளித்துள்ளார்.

🦋 சிவபுராணத்தில் பீமாசங்கர் ஆலயம் அசாமிலுள்ள காமரூபத்தில் அமைந்துள்ளதாகக் காணப்படுகிறது. எனினும் திரிபுராசுரனை அழித்து ஈசன் பீமரூபமாகக் கோவில் கொண்டது சஹயாத்ரி மலையில் என்ற குறிப்புகளும் புராணாங்களில் காணப்படுவதால் இதுவே சரியான பீமாசங்கர் தலம் எனக் கூறப்படுகிறது. எனவே இத்தலம் ஜோதிர்லிங்கத் தலமாகப் போற்றப்படுகிறது.

🦋 பீமாசங்கரர் கோயில் புதியனவும் பழையனவுமான கட்டிடங்களின் கலவையாக உள்ளது. இக்கட்டிடங்கள் நாகரக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்துள்ளன.

🦋 மிதமான அளவுள்ள இக் கோயில் 18 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் கட்டப்பட்டது.

🦋 இக் கோயிலின் சிகரம் நானா பட்னாவிஸ் என்பவரால் கட்டப்பட்டது.

🦋 புகழ் பெற்ற மராட்டிய மன்னன் சிவாஜியும் இக் கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளார்.

🦋 இக் கோயில் கட்டிடங்கள் ஒப்பீட்டளவில் புதியவையாக இருந்தாலும், பீமாசங்கரம் என்னும் இக் கோயில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌹 சந்திரபாகா நதியில் நீராடி, பீமசங்கரப் பெருமானை வழிப்பட்டால், மனிதர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையுள்ளது.

🌹 மோட்ச குண்டத்தில் நீராடினால் மோட்சம் கிடைக்கும்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

💥 சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து, பூ, வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். பக்தர்கள் வளையல், மஞ்சள், குங்குமம், ரவிக்கை துணி போன்றவற்றை பக்தியுடன் அம்பாளுக்கு சமர்ப்பித்து மகிழ்கிறார்கள்.
 
🅱 தலபெருமை:🅱

🔥 பீமன் என்னும் அரக்கனுக்காக, சிவபெருமான் இங்கே தோன்றி ஜோதிர்லிங்கமாக விளங்குவதால் பீமாசங்கரம் எனப்பெயர் பெற்றது. இந்த திருக்கோயில் ஒரு கானகத்தின் நடுவே அமைந்துள்ளது.

🔥 புனேயிலுள்ள கேத் என்ற இடத்துக்கு வட மேற்கே முப்பது மைல் தொலைவில் போவாகிரி என்ற கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தின் புறத்தே இந்தக் கானகம் அமைந்திருக்கிறது.

🔥 பீமா அல்லது சந்திரபாகா நதியின் தோற்று வாயில் இந்தக் கோயில் உள்ளது.

🔥 வெளிப்புறத் தரை மட்டத்துக்குக் கீழே, ஒரு முழ உயரத்தில் கருப்பக் கிருகத்தில் இந்த லிங்கம் அமைந்திருக்கிறது.

🔥 அமைதியான, மனதுக்கு இதம் அளிக்கும் சூழ்நிலை. கோயில் மிகவும் பழமையானது.

🔥 முக்கிய சாலையிலிருந்து மூன்று கி.மீ. தூரம் கீழே படிக்கட்டு மூலம் இறங்க வேண்டும். மலைச்சரிவுப் பள்ளத்தாக்கில் கோயில் உள்ளது. கோயில் தனியே உள்ளது. பக்கத்தில் எதுவும் இல்லை. போகும் வழியில் படிக்கட்டில் உள்ள கடைகள்தாம்.

🔥 மலைக் காட்டுப்பகுதி. கோயிலின் வலதுபக்கம் பீமாநதி, சிறு ஓடைபோல ஓடுகிறது. சிறு தொட்டியில் நீரைத் தேக்கிவைத்து பக்தர்கள் நீராடு கின்றனர். மேலும் மோட்ச குண்டம், சர்வ தீர்த்தம், குடசாரண்ய தீர்த்தம் உள்ளன.

🔥 கோயில் கோபுரம் வாழைப்பூ போன்று, கூம்பு வடிவில் மிக உயரமாக உள்ளது. மிகவும் அழகிய, மிக நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கோயில் திகழ்கின்றது. போவாகிரி என்ற சிற்றூர் இதன் அருகே உள்ளது.

🔥 தற்போது கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு ராமர்கோயில் கட்டப்பட்டுள்ளது. சலவைக் கல்லினாலான இராமர், சீதை முதலானோர் விக்கிரகங்கள் உள்ளன.

🔥 இந்துக்களின் புனித யாத்திரைத் தலம்.

🔥 பீமாசங்கரம் கோயில் முன் மண்டபம் விசாலமாகவுள்ளது. கர்ப்பகிரகத்தின் உள்ளேயும் மூலத்தான இடம் பூமி மட்டத்திற்குக் கீழ் அமைந்துள்ளது.

🔥 பூமியை ஒட்டியே சிவலிங்க ஆவுடையார் வட்டமாக உள்ளது. சிவலிங்கம் சுமார் ஓர் அடி உயரமே உள்ளது.

🔥 பக்தர்கள் சிவலிங்கத்தைச் சுற்றிலும் வட்டமாக அமர்ந்து, சிவலிங்கத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை செய்ய முடியும்.

🔥 ஆண், பெண் அனைவரும் உள்ளே செல்லலாம்.

🔥 ஆனால் ஆண்கள் சட்டைபோடாமல் செல்ல வேண்டும்.

🔥 இம்மலையில் மூலிகைகளின் காற்று வீசுகிறது. வழிக்கடைகளில் மூலிகை மருந்து விற்கிறார்கள்.

🔥 சுயம்புவான சிவலிங்கத்தின் மீது கவசம் அணிவிக்கப்பட்டு, ஐந்து தலை நாகக் குடை அழகு செய்கிறது.

🔥 மேலேயுள்ள தாரா பாத்திரத்திலிருந்து நீர் விழுந்து கொண்டேயிருக்கிறது.

🔥 இந்த சிவலிங்கம் அர்த்த நாரி ரூபமாகக் கூறப்படுகிறது. எதிரில் நந்தி அமைந்துள்ளது.

🔥 வெளிப் பிரகாரத்தில் சிவபெருமானுக்கு எதிரில் துவஜஸ்தம்பத்தின் கீழ் சிறிய சனீசுவரர் சன்னிதி அமைந்துள்ளது.

🔥 பிரகாரத்தைச் சுற்றிலும் தேவி, பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு சன்னிதி உள்ளது.

🔥 கி.பி. 1350-ம் ஆண்டில், காடாக இருந்த இவ்விடத்தில் மரம் வெட்டச் சென்ற ஒருவன், ஒரு மரத்தை வெட்டியபோது ரத்தம் வர, அவன் பயந்து தன் பசுவைக் கொண்டு அந்த வெட்டிய இடத்தில் பாலைக் கறந்தான். உடன் ரத்தம் நின்றுவிட அவன் வீடு சென்றான். மறு நாள் அவ்விடத்திற்கு சென்று பார்க்க, அங்கு மரத்திற்கு பதில் ஒரு சிவலிங்கம் காட்சியளிக்க, பக்தியில் பரவசமான அவன் அங்கு ஒரு ஆலயத்தை உருவாக்கினான்.

🔥 அதன் பின் கி.பி. 1737-ல் பேஷ்வாக்கள் காலத்தில் நானாபட்னவிஸ் என்பவரால் ஆலயம் விரிவாக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு தூண்கள், கோபுரம், மண்டபங்கள் ஆகியவை கட்டப்பட்டதாக சான்றுகள் உள்ளன.

🔥 சிவாஜி மகாராஜா இவ்வாலயத்திற்கு ‘கரோஸி’ என்ற கிராமத்தை தானமாகக் கொடுத்துள்ளார்.

🔥 இத்தலத்தின் புனிதம் மகாராஷ்டிர மகான்களாகிய ஞானேஸ்வர், நாமதேவர் ஆகியோரது பாடல்களில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இங்குள்ள பீமரதி நதியின் மகிமையும், அதில் நீராடுவதால் ஏற்படும் புண்ணியமும் கூறப்பட்டுள்ளது.

🔥 பீமாசங்கர் ஆல்யத்திலிருந்து சற்று தொலைவில் கமலஜாவின் ஆலயம் உள்ளது. பெரிய கற்பாறை உருவில் சுயம்புவாக அமைந்துள்ள தேவிக்கு முன் வெள்ளி முகம் வைக்கப்பட்டுள்ளது. இந்த தேவி, பார்வதியின் அம்சமாகப் போற்றப்படுகிறாள்.

🔥 திரிபுராசுர வதத்தின் போது, சிவபெருமானுக்கு உதவிய பார்வதியை பிரம்மா தாமரை புஷ்பங்களால் வணங்கியதால் கமலஜா என்ற பெயர் பெற்றாள். தேவர்களின் வேண்டுகோளின்படி இங்கேயே கோயில் கொண்ட தேவிக்கு தாமரை புஷ்ப அர்ச்சனை செய்வது சகல நலன்களையும் உண்டாக்கும்.

🔥 ‘பீமாசங்கர்’ ஆலயத்திற்குப் பின்னால் அமைந்துள்ள ‘மோட்ச குண்ட்’ என்ற சதுர வடிவத்தில் 30 அடி நீள அகலத்தில் அமைந்துள்ள கிணற்றில் ஸ்நானம் செய்து மூதாதையருக்கான காரியங்கள் செய்வது அவர்களின் முந்தைய ஏழு தலை முறையினருக்கு மோட்சம் தரும் எனக் கூறப்படுகிறது.

🔥 இதன் அருகிலுள்ள சர்வ தீர்த்தம் தத்தாத்ரேயரால் ஏற்படுத்தப்பட்ட ஞான குண்ட், குஷாரண்ய தீர்த், குப்த பீமேஷ் ஆகியவை முக்கிய தீர்த்தங்களாகும். பீமா சங்கர் மகாத்மியத்தில் இவை பற்றிய பெருமைகள் உரைக்கப்பட்டுள்ளன.

🔥 க்ரீட்தீர்த் என்ற இடத்தில் பார்வதியும், சிவனும் உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அடர்ந்த காடுகளுக்கிடையிலும், சரிவுகளிலும் க்ரீட்தீர்த் அமைந்துள்ளதால் இங்கு சென்று தரிசிப்பது சற்று கடினமான காரியமே.

🔥 தினமும் பீமாசங்கர் பகவானுக்கு மூன்று வேளை வழிபாடுகள் நடைபெறுகின்றன. விடிகாலையில் ‘கக்கட ஆரத்தி’ பூஜை நடத்தப்படுகிறது. பகல் 12 மணிக்கு ‘மகாபூஜாவும்’, ‘மகா நைவேத்யமும்’ செய்யப்படும். அடுத்து மாலை ஆரத்தி நடத்தப்படுகிறது. இங்கு ‘உர்த்ர ஏகாதசினி’ பூஜை செய்வது மிக விசேஷம். பக்தர்கள் பலராலும் அதிகம் செய்யப்படும் பூஜை இதுவே.

🔥 மகாசிவராத்திரி மிக விசேஷமாக இங்கு கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் சுற்றிலும் உள்ள அனைத்து கிராம மக்களும் கலந்து கொள்வார்கள்.

🔥 இம்மலைத் தொடரில் பீமா நதி உற்பத்தியாகி, தென்கிழக்காகப் பாய்ந்து ராய்ச்சூர் அருகில் கிருஷ்ணா நதியில் கலக்கிறது. பீமா நதி உற்பத்தியாகுமிடம் குப்தபீமா என்றழைக்கப்படுகிறது.

🔥 பீமாசுரனுடன் நடந்த போரின்போது சிவனாரின் மேனியிலிருந்து வழிந்த வியர்வையே பீமா நதியாகப் பாய்வதாக ஐதீகம்.

🔥 அனைத்துச் சிவத் தலங்களைப் போலவே பீமாசங்கர் திருத்தல கர்ப்ப கிரகமும் உள்ளாழ்ந்து தாழ்வாகக் காணப்படுகிறது. சிவலிங்கத்துக்கும் ஆவுடையாருக்கும் வெள்ளிக் காப்பிடப்பட்டுள்ளது. கர்ப்பக் கிருகத்தின் உள்ளே வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மூலம் மிகத் தெளிவாக வெளியில் இருந்தவாறே சிவபெருமானை தரிசிக்க முடிகிறது. தவிர, பக்தர்கள் தாங்களே சிவலிங்கத்தைத் தொட்டு அபிஷேகம் செய்து வழிபடலாம்.

🔥 சஹ்யாத்ரி மலைத் தொடரின் முடிவில் அமைந்துள்ளதால் இவ்விடத்திலிருந்து பார்க்கும்போது நதிகளும் மலைகளும் காடுகளும் மிக அழகாகக் காட்சியளிக்கின்றன. இயற்கையை ரசிப்பவர்களுக்கு, டிரெக்கிங் செல்பவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் பிரதேசமாகவும் இது விளங்குகிறது. பக்தர்கள் வாகனங்களை விட்டிறங்கி படிக்கட்டுகள் வழியாக சிறிது தூரம் நடந்து கீழிறங்கி கோயிலைச் சென்றடைய வேண்டும்.

🔥 மக்கள் சந்தடியிலிருந்து விலகி, இயற்கை அழகு கொஞ்சும் மலைத்தொடரில், பசுமையான அடர்ந்த காடுகளின் இடையே அமைந்துள்ள இக்கோயில் யாத்ரீகர்களின் சுவர்க்கமாக விளங்குகிறது.

🅱 தல வரலாறு:🅱

⛱  இங்கு இறைவன் குடியேறிய சம்பவம் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறப்படுகிறது. ‘கணானாம் த்வா கணபதிம்’ என்ற மந்திரத்தை உருவாக்கியவர் கிரித்ஸமதா என்ற முனிவர். மிக்க தவ வலிமை மிகுந்தவர். அவர் ஒரு முறை இருமியபோது, அந்த இருமலிலிருந்து செந்நிறத்தில் உருவானவனே திரிபுராசுரன். அவன் பல நூற்றாண்டுகள் செய்த தவத்தினால் மூவுலகும் அதிர்ந்தது. காற்றையே சுவாசித்து, தன்னை மறந்த நிலையில் கைகளைத் தலைக்கு மேல் கூப்பி, ஒருமையான மனதுடன் அவன் செய்த தவத்தில் மகிழ்ந்த பிரம்மா அவன் முன் தோன்றினார். திரிபுராசுரன் மூன்று வரங்களைக் கேட்டான்.

⛱ தான் மூவுலகுக்கும் தலைவனாக வேண்டும். வாயு, ஜல மார்க்கமாக தான் உலகின் எப்பகுதிக்கும் செல்லும் திறமையுள்ள வாகனம் வேண்டும். கணேசப் பெருமானால் அளிக்கப்பட்ட இரும்பு, தங்கம், வெள்ளிக் கோட்டைகளை யாராலும் அழிக்க முடியாதபடி செய்ய வேண்டும் என்ற மூன்று வரங்களைக் கேட்க, பிரம்மாவும் ‘அப்படியே’ என்று சொல்லி, ‘யாரால் மூன்று கோட்டைகளும் ஒரே அம்பினால் அழிக்கப்படுமோ, அன்று நீயும் அழிவாய்’ என்றார்.

⛱ அதனை அலட்சியமாக எண்ணிய திரிபுராசுரனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

⛱ அவன் வரத்தின் படி மூவலுகுக்கும் தலைவனானான். அதனால் கர்வம் உண்டாக, தேவர்களைத் துன்புறுத்த ஆரம்பித்தான். அவனது கொடுமையால் மூவுலகும் திணறியது. தர்மம் அழிந்து அதர்மம் தலை விரித்தாடியது. மூன்று தேவர்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் கூட தம் லோகங்களை விட்டு மறைந்து வாழ்ந்தனர். திரிபுராசுரன் மற்றும் அவனது அசுரர் கூட்டத்தாரின் கொடுமையை நீக்க வேண்டி இந்திரனும், ஏனைய தேவர்களும் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் புரிந்தனர்.

⛱ அவர்களின் தவத்துக்கு மெச்சிய ஈசன், ‘தாம் திரிபுராசுரனை விரைவில் அழிப்பதாகவும், சஹயாத்ரியிலுள்ள தன் ஜோதிர் லிங்கத்தின் முன்பு தவம் செய்யும்படியும்’ கூறி மறைந்தார். அதன்படி தேவர்கள் மீண்டும் தவத்தைத் தொடர, சிவபெருமான், ‘இன்னும் ஏழு நாட்களில் திரிபுரனை வதம் புரிவேன்’ என்று சொல்லி மறைந்தார்.

🔥 வாக்களித்தபடி ஈசன் பிரம்மாண்டமான பீமரூபமெடுத்து, திரிசூலம், டமரு இவற்றை ஆயுதங்களாக ஏந்தி, நந்தி  வாகனத்தில் ஏறி, தன் ஜடாமுடிகள் விரிந்து ஆட, தன் கணங்களுடனும், டாகினி, ஷாகினி என்ற சக்திகளுடனும் திரிபுராசுரனுடன் போருக்கு வந்தார்.

⛱ திரிபுராசுரனும் தன் அத்தனை சக்திகளையும் பிரயோகித்து, பெரும் போர் புரிந்தான். இந்த பிரம்மாண்டமான போரில் உலகமே ஆடியது. பூமியைத் தாங்கும் ஆதிசேஷன், அந்த ஆட்டத்தைத் தாங்க முடியாமல் கதறினான். இருவருக்கும் வெற்றி, தோல்வியின்றி போர் பல்லாண்டு நடந்தது.

⛱ திரிபுரனின் சக்தி வாய்ந்த பாணாங்களால் சோர்வுற்ற பரமசிவனின் ரதத்தின் அச்சு முறிந்தது. உலகையே ஆளும் இறைவனாலேயே அவனை அழிக்க முடியவில்லையே என்று அனைவரும் விசனப்பட, அங்கு வந்தார் நாரத மகரிஷி. ஸ்ரீகணபதி பெருமானை வணங்கி ஆரம்பிக்காததாலேயே திரிபுராசுரனை வெல்ல முடியவில்லை என்பதை எடுத்துக் கூற, ஈசனும்  கணபதியை  அழைத்தார்.

⛱ அவர் முன் மகாகணபதியாக ஐந்து முகங்கள், பத்து கைகள், பாம்புகளை ஆபரணமாகக் கொண்டு, மண்டை ஓடு, மாலை இவற்றுடன் காட்சி தந்த விநாயகர், ‘பீஜ மந்திரத்தை உச்சரித்தபடி ஒரு அம்பை விட்டால் அவனது வாகனமும், மூன்று கோட்டைகளும் அழியும். பின் அவனும் மடிவான்.’ என்று கூறி மறைந்தார்.

⛱ அந்த இடமே அஷ்ட விநாயகத் தலங்களில் ஒன்றான ‘ராஞ்சன் காவ்ன்’ என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகாகணபதி ஆலயம். புனேக்கு அருகிலேயே இத்தலமும் அமைந்துள்ளது.

⛱ மீண்டும் திரிபுராசுரனுடன் போருக்குச் சென்ற சிவபெருமான், இம்முறை ஒரு விசித்திரமான தேரை உருவாக்கினார். பூமியைத் தேராக்கி, சூரிய சந்திரரை சக்கரங்களாக்கி, மேரு வில்லாகவும், திருமால் அம்பாகவும், அசுவனி குமாரர்களை குதிரைகளாகவும் கொண்டு, பிரம்மா சாரதியாக விளங்க, அதில் ஏறி போருக்கு வந்த ஈசன், திரிபுரனின் கோட்டையை நோக்கி அம்பு விட்டார். அந்த நேரம் ஏற்பட்ட ஒளி ஆயிரம் கோடி மின்னல்களுக்கு சமமாயிருந்த்து. அவனது மூன்று கோட்டைகளும் ஒரே அம்பில் அழிய அவன் உயிரிழந்து கீழே விழுந்தான். அவனது ஆவி ஜோதி வடிவத்தில் சிவபெருமானின் உடலில் கலந்து, மோட்சம் அடைந்தான்.

⛱ போரினால் களைப்புற்று அமர்ந்த சிவபெருமானின் உடலிலிருந்து பெருகி ஓடிய வியர்வை ‘பீமரதி’ என்ற புண்ணிய நதியாக மாறியது. அவரை துதித்துப் போற்றிய தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இறைவன் ‘பீமா சங்கர்’ என்ற பெயரில் அங்கேயே கோவில் கொண்டார். பீமரத நதியில் புனித நீராடுபவருக்கு சகல புண்ணியமும் கிடைக்க இறைவன் அருள்புரிந்தார் என இத்தல புராணத்தில் சொல்லப்படுகிறது..

Ⓜ தாக்கினி மலைக் காட்டில் பீமா என்ற அசுரன், தன் தாய் கர்க்கடி என்பவளுடன் வசித்து வந்தான். கருணை, தயை போன்ற நற்குணங்கள் அவனைக் கண்டு அஞ்சி நடுங்கின. அவன் மனிதர்களை மட்டுமின்றி, தேவர்களையும் ஒருசேர பயமுறுத்தினான். தாங்கள் மட்டும் ஏன் இக்காட்டில் வசிக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் தினமும் உதித்தது. ராவணனின் சகோதரன் கும்பகர்ணனே தனது தந்தை என்பதையும், ஸ்ரீமகா விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்தது தனது தந்தை கும்பகர்ணனையும், பெரிய தந்தை ராவணனையும் வதைத்தார் என்பதையும் தன் தாயிடம் கேட்டறிந்த பீமாசுரன், ஸ்ரீமகா விஷ்ணுவை பழி தீர்க்க எண்ணினான். இதற்காக பிரம்மாவைக் குறித்து கடும் தவம் புரிந்தான். பிரம்மாவிடம் பெற்ற வரத்தால் மூவுலகையும் ஆட்டிப் படைத்தான். இந்திரனை வென்று தேவலோகத்தைக் கைப்பற்றினான். முனிவர்களையும் சாதுக்களையும் துன்புறுத்தினான்.

Ⓜ தேவர்கள், சிவனிடம் அபயம் வேண்டி நின்றனர். ஒருசமயம் காமரூபேஸ்வரர் என்ற பக்தர் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்தபோது அவரைத் தடுத்து சிவனுக்குப் பதில் தன்னை வணங்கும் படி வற்புறுத்தினான் பீமாசுரன். மறுத்த அவரைக் கொல்வதற்கு வாளை ஓங்கினான். உடனே மகாதேவர் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு பீமாசுரனுடன் யுத்தம் புரிந்தார். இருவருக்குமிடையே கடும் யுத்தம் நிகழ்ந்தது. நாரதர் வந்து போரை முடிக்கும்படி சிவனை வேண்ட, பீமாசுரன் சாம்பலாக்கப்பட்டான். தேவர்கள் மற்றும் முனிவர்களின் வேண்டுதலின்படி அவ்விடத்திலேயே ஜோதிர்லிங்கமாக மகாதேவர் ஐக்கியமாகி, பீமாசங்கர் எனத் திருப்பெயர் பெற்றார் என தகவலும் இத்தலத்தில் சொல்லப்படுகிறது.

🅱 சிறப்பம்சம்:🅱
 
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ பீமாசங்கரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻ 12 ஜோதிர்லிங்கங்களுள் இத்தலமும் ஒன்று..

♻ மூலவர் கூம்புவடிவில் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.

♻ மிகச் சிறிய கிராமமான பீமாசங்கருக்கு செல்ல புனேயில் இருந்து நிறைய பஸ் வசதிகள் உண்டு.

♻ ஜனவரி முதல் மே மாதம் வரை இங்கு செல்வதற்கு ஏற்ற காலமாகும்.

♻ மனதுக்கு ரம்மியமான மலைப்பாதை; வழி நெடுக காடுகளும், பள்ளத்தாக்கும் நிறைந்த சாலை; பல்வேறுபட்ட மூலிகைகளின் மணம் இவற்றை அனுபவித்தபடி பேருந்தில் சென்று, பீமாசங்கர் இறைவனை தரிசித்தபின் நம் மனம் அமைதி அடைவதோடு, அனைத்தும் மறந்து ஈசனுடன் ஐக்கியமாகிறது.

♻ பீமாசங்கர் வாழ்வில் நாம் அவசியம் தரிக்க வேண்டிய புண்ணியத் தலமாகும்.

🅱 இருப்பிடம்:🅱

✈ புனேயிலிருந்து வடக்கே 136 கி.மீ. தொலைவில் சகியாத்திரி மலைத் தொடரில் அற்பதமான இயற்கை அழகு கொஞ்சும் மலைகள், காடுகளுக்கிடையே பீமரதி நதிக்கரையில் அமைதியாக, மன சாந்தி தரும் ஆலயமாக அமைந்துள்ளது..

✈ மும்பைக்கு நேர் கிழக்கில் உள்ளது பீமா சங்கரம். நாசிக்கிற்கும், புனேவுக்கும் மத்தியில் நாசிக்கிலிருந்து தெற்கேயும், புனேயிலிருந்து வடக்கேயும் பீமாசங்கரம் உள்ளது.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
 🏹 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🏹
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

No comments:

Post a Comment