Sunday 16 July 2017

அருள்மிகு திரியம்பகேசுவரர் திருக்கோயில், திரியம்பகம், நாசிக் - மகாராஷ்டிரா



சிவபெருமானின் ஜோதிர்லிங்க ஸ்தலம் ; ஒரே ஆவுடையாரில் மூம்முர்த்திகள் ஒன்றாக லிங்கங்களாக காட்சி தரும் ஈசன் வாசஸ்தலம் ; கவுதமரும் தரிசனம் அளித்த சிவபெருமான் அருளும் பவித்ர தேசம்..

Ⓜ®🅱💲 BRS Ⓜ®🅱💲


மூலவர் : *திரியம்பகேஸ்வரர்*

அம்மன்/தாயார் : *ஜடேசுவரி*

தீர்த்தம் : *குசாவர்த்த தீர்த்தம், கங்காத் துவாரம், கோடிதீர்த்தம், பல்வ தீர்த்தம், நீலகங்காதீர்த்தம், கோதாவரி, ராமகுண்டம், லட்சுமண குண்டம், கவுதம குண்டம், வாணாசி தீர்த்தம், மணிகர்ணிகத் தீர்த்தம், கஞ்சன் தீர்த்தம்.*

பழமை : *2000-3000 வருடங்களுக்கு முன்*

ஊர் : *திரியம்பகம்*

மாவட்டம் : *நாசிக்*

மாநிலம் : *மகாராஷ்டிரா*

🅱 *திருவிழா:*🅱

🌹 பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி, கும்பமேளா

🅱 *தல சிறப்பு:*🅱

🎭 சிவபெருமானே இது புனிதத் தலம் என, சிபாரிசு செய்த தலம் ஆகும்.

🎭 சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று.

🎭 மகேசன் சுயம்பு லிங்கமாக அருள்புரிகிறார்.

🎭 லிங்கக் கருவறையில் எப்பொழுதும் நீர் ஊறுகிறது.

🎭 கோதாவரி உற்பத்திக்கும் ஸ்நானம்.

🎭 இங்குள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன.

🎭 பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக்கோயில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இது அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டிடமாக உள்ளது.

🎭 மும்மூர்த்திகள் வழிபட்டு பரப்பிரும்மத்தின் அருள்பெற்ற திரியம்பகேஸ்வரத்தில் கவுதம முனிவர் வசித்த தலம்.

🅱 *திறக்கும் நேரம்:*🅱

🗝 *காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.*🗝

🅱 *பொது தகவல்:*🅱

🦋 மகாவிஷ்ணு, பிரம்மா, கிருஷ்ணர், பலராமர், ராமர், பாலாஜி, கங்காதேவி, விநாயகர், நந்தி, கோதாவரி அம்மன் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.

🦋 கோமாதாவின் காரணமாக உற்பத்தியான நதி கோதாவரி என்று பெயர் பெற்றது.

🦋 கோதாவரி நதிக்கு கவுதமி என்ற பெயரும் உண்டு.

🦋 பகீதரதனுக் காகப் பாய்ந்த கங்கை பாகீரதி என்று அழைக்கப்பட்டது போன்றே கவுதமருக்காகப் பாய்ந்த கங்கை கவுதமி என்று பெயர் பெற்றாள்.

🦋 கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் மலை மீது அமைந்துள்ளது ஆலயம்.

🦋 கருப்பு கற்களால் கட்டப்டுள்ள இந்த கோவிலில் நந்தி மட்டும் வெள்ளை கல்லால் ஆன சிலையாக இருக்கிறது.

🦋 நந்தியை தாண்டி உள்ளே சென்றால் மூல ஸ்தானம்.

🦋 இங்கு சிவ லிங்கம் தாழ்வான் பகுதியில் ஒரு பள்ளத்தில் இருப்பதை காணலாம் .

🦋 நம் ஊரில் இருப்பது போல சிவன் கோவிலில் அம்மன் சன்னதி இங்கு காணப்படவில்லை .

🦋 கோவில் உள்ளயே ஒரு தெப்பகுளம் இருக்கிறது .

🦋 கோவிலுக்கு பின்புறம் தெரியும் மலை தான் ப்ரிம்மகிரி மலை .இது தான் கோதாவரியின் நதி மூலம் .

🅱 *பிரார்த்தனை:*🅱

🍁 இறந்த முன்னோர்களுக்குச் சிரார்த்தம் செய்தால் அவர்கள் சுவர்க்கம் அடைவார்கள் என்பதும், சர்ப்பதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து, தகுந்த வழிபாடு செய்தால் அது நீங்கிவிடும் எனவும் நம்புகின்றனர்.

🅱 *நேர்த்திக்கடன்:*🅱

☀ இங்குள்ள மூலவருக்கு மலர்கள் மற்றும் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

🅱 *தலபெருமை:*🅱

🔥 திரியம்பகம் பன்னிரு ஜோதிர் லிங்கத்தலங்களில் ஒன்று. இதனருகே பிரம்ம கிரியில் கோதாவரி நதி உற்பத்தி ஆகிறது.

🔥 அம்மலையில் கவுதமர் வாழ்ந்த குகையும், அவரால் உண்டாக்கப்பட்ட புனித தீர்த்தமும் உள்ளன.

🔥 கவுதமர் வழிபட்ட 1008 லிங்கங்களும் அக்குகையில் உள்ளன.

🔥 ஆன்மீக வாழ்க்கைக்கு ஏற்ற இயற்கை சூழல் நிலவுதால் சித்தர்கள் வாழ்ந்த இடங்களும், ரிஷிகள் வாழ்ந்த தபோ வனங்களும் உள்ளன.

🔥 மூலஸ்தானத்தில் மூன்று சிறிய லிங்கங்கள் ஒரே ஆவுடையாரில் உள்ளன. அதில் நீர் எப்போதும் சுரந்து கொண்டேயிருக்கும் அதிசயம் நிகழ்கிறது.

🔥 புனித தீர்த்தங்கள் பல உள்ளன.

🔥 குரு சிம்ம ராசியில் வரும் போது பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா கொண்டாடப்படுகிறது.

🔥 நமது நாட்டின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரியம்பகேசத்திற்கு வந்து செல்கின்றனர்.

🔥 இங்குள்ள மலைப்பகுதியானது அமைதிக்கும் மனநிம்மதிக்கும் ஏற்ற இடம் எனப் பல காலத்திலும் பல யோகிகளும், சாமியார்களும், பக்தர்களும் வந்து தங்கி அமைதி காண்கின்றனர்.

🔥 யாத்திரை வந்த பக்தர்களும் மனம் நிறைவு பெற்றுச் செல்கின்றனர்.

🔥 உலகில் உள்ள புனித ஆறுகளும், குளங்களும், தேவர்களும் கூட இங்கே வந்து அவர்கள் அடைந்த பாவங்களைப் போக்கித் தூய்மை பெற்றுச் செல்லும் சிறப்புமிக்க தலம்.

🔥 குசாவர்த்த தீர்த்தத்தைத் திருமாலே இங்கேயிருந்து காவல் காத்து வருகிறார் எனில் இதன் சிறப்பு கூறவும் முடியாது.

🔥 கும்பமேளா காலத்தில் இத்தீர்த்தம் மேலும் புனிதம் அடைகிறது.

🔥 ஒவ்வொரு ஆண்டும் மகமாதம் தசமியன்று நிலாவில் தேவர்கள் வந்து கோதாவரியை வாழ்த்துகின்றனர். அதனை இத்தலத்தில் பெரிய விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

🔥 இராமர் இலக்குமணருடன் இங்கே வந்து, தமது தந்தை தசரதருக்கு இத்தீர்த்தத்தில் சிரார்த்தம் செய்து, அவரது ஆத்மா சாந்தியடையச் செய்துள்ளார். எனவே இங்கே, இறந்த முன்னோர்களுக்குச் சிரார்த்தம் செய்தால் அவர்கள் சுவர்க்கம் அடைவார்கள்.

🔥 சர்ப்பதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து, தகுந்த வழிபாடு செய்தால் அது நீங்கிவிடும்.

🔥 இக்கோயில் சிவாஜி மகாராஜா காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. பல சொத்துக்களும், நகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

🔥 தினசரி, ஒரு முக வெள்ளிக்கவசம் வைத்து வழிபாடு நடைபெறுகிறது.

🔥 திங்கள் மட்டும் ஐந்து முகத் தங்கமுலாம் பூசப்பட்ட கவசம் வைத்து பூசிக்கப்படுகிறது.

🔥 இக்கோயில் சிற்பக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது..

🅱 *கும்பமேளா: புனித நீராடுவது மட்டுமல்ல… அது ஒரு புனித அனுபவம்..* 🅱

☃ *அமுதம் சிந்திய நகரங்கள் :* ☃

🌻 இந்த நகரங்களில் மட்டும் ஏன் கும்பமேளா நடைபெறுகிறது என்பதற்கு ஒரு புராண கதை கூறப்படுகிறது.

🌻 தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, இந்திரனின் மகன் ஜெயந்தனுக்கு அவசரம் தாங்கவில்லை. பறவை வடிவில் வந்து அமுதக் கும்பத்தைத் தூக்கிக்கொண்டு பறந்தான். அசுரர்கள், வாயு வேகத்தில் அவனைத் தொடர்ந்தார்கள்.

🌻 இருவருக்கும் இடையே பன்னிரண்டு நாட்கள் (அதாவது பன்னிரண்டு வருடங்கள்) இழுபறிப் போர் நடந்தது. அந்த சமயம் சந்திரன் கும்பத்திலிருந்து அமுதம் சிந்தாமல் தடுக்க முயற்சி செய்தான். சூரியன், கும்பம் உடைந்து விடக்கூடாதே என்று வருத்தப்பட்டான்.

🌻 பிரகஸ்பதி அசுரர்கள் அபகரித்துச் சென்றுவிடாமல் காப்பாற்ற முயன்றான். சனி பகவானோ, ஜயந்தன் ஒரே மிடறில் சாப்பிட்டுவிட்டால் என்ன செய்வதென்று கவலைப் பட்டான்.

🌻 இப்படி நால் வரும் கூடி முயன்றும் நான்கு இடங்களில் அமுதம் சிந்திவிட்டது. அதன் விளைவால் அந்த இடங்களின் புனிதம் பலமடங்கு உயர்ந்தது. அந்த இடங்கள்தான் *ஹரித்வார், பிரயாகை, உஜ்ஜயினி, நாசிக்* ஆகியவை.

🅱 *மகா கும்பமேளா :*🅱

Ⓜ பூர்ண கும்ப மேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், ஆர்த கும்ப மேளா 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.

Ⓜ கும்பமேளா ஹரித்துவாரில் முதலில் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து பிரயாக், நாசிக், உஜ்ஜயினி நகரில் நடைபெறுகிறது.

Ⓜ கும்பமேளா திருவிழா ஹரித்துவார், பிராயாக், நாசிக், உஜ்ஜயினி, ஆகிய மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.

🅱 *தல வரலாறு:*🅱

🍄 மும்மூர்த்திகள் வழிபட்டு பரப்பிரும்மத்தின் அருள்பெற்ற திரியம்பகேஸ்வரத்தில் கவுதம முனிவர் வசித்து வந்தார்.

நாள்தோறும் புனிதக்குளத்தில் நீராடி திரியம்பகேஸ்வரரைப் பூஜை செய்து வேள்விகள் புரிந்தும் தவம் செய்தும் தூய வாழ்க்கை வாழ்ந்தார். ஒருமுறை நாட்டில் வறட்சியும், பஞ்சமும் உண்டாயின. எல்லா இடங்களிலும் நீர் வற்றிப்போய் தண்ணீர் பஞ்சம் உண்டாயிற்று.

🍄 ஆனால் கங்காதரனை நினைந்து உள்ளன்போடு சிவசிவ என்றே வாழ்ந்த கவுதமரின் ஆசிரமத்தில் எந்தவிதமான பஞ்சமும் இல்லை.

🍄 திரியம்பகேஸ்வரத்தில் இருந்த நீர்நிலைகளில் நீர்வளம் பெருகியிருந்தது. இதையறிந்து நாட்டின் பல பகுதிகளிலும் இருந்த முனிவர்கள் திரியம்பகேஸ்வரத்தில் குடியேறினர். தம் குடும்பத்துடன் வந்து முனிவர்களை, கவுதமரும் அன்புடன் வரவேற்று அப்பகுதியில் தபோவனம் அமைத்து நன்கு வாழ வைத்தார்.

🍄 காலம் செல்லச் செல்ல ஒருசில முனிவர்கள் கவுதமர் மீது பொறாமை கொண்டனர். அவரது தவ வலிமையைக் குறைக்க வேண்டும். அவரை எப்படியாவது இப்பகுதியினின்றும் விரட்டி விட வேண்டும் என எண்ணினர். அதில் ஒரு முனிவருக்கு விநாயகரை வரவழைக்கும் மந்திரம் தெரியும். எனவே எல்லோரும் ஒன்று சேர்ந்து யாகம் செய்து, விநாயகரை வரவழைத்துத் தங்களது வேண்டுதலைக் கூறினார்கள்.

🍄 விநாயகர் முனிவர்களது எண்ணம் தவறானது என்றும், அதனால் தீங்கு ஏற்படும் என அறிவுரை கூறிச் சென்று விட்டார்.

🍄 முனிவர்கள் விடுவதாக இல்லை. பார்வதி தேவியின் தோழிகளில் ஒருவரான ஜெயா என்ற வன தேவதையை வரவழைத்து, ஒரு பசுவாக உருவெடுத்து கவுதமமுனிவர் ஆசிரமத் தோட்டத்தில் மேயும்படிச் செய்தனர். தோட்டத்தில் ஒரு பசு மேய்வதைக் கண்ட கவுதமமுனிவர் தர்ப்பைப் புல்லால் பசுவை விரட்டினார். மாயப் பசுவானதால் பசு இறந்தது போல் நடித்துப் படுத்துக் கிடந்தது. மற்ற முனிவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, கவுதம முனிவர் மேல் பசுவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டினர்.

🍄 உழுவதற்குப் பாடுபட்டும் பயிர்வளர் எருவைத் தந்தும் மனித இனத்திற்கு மகத்தான உதவி புரிந்து உண்டி கொடுத்து உயிர் காக்கின்றன.

🍄 சிவபெருமானின் திருமுழுக்காட்டிற்காகப் பால், தயிர், வெண்ணை, நெய், திருநீறு ஆகிய பஞ்ச கவ்வியம் எனப்படும் ஐந்து அபிஷேகப் பொருட்களைக் கொடுக்கும் புனிதப் பிறவிகளாகப் பசு மாடுகள் உள்ளன.

🍄 இத்தகைய பசுமாடுகள் முனிவர்களும் தேவர்களும் தெய்வங்களும் வந்து வணங்கும் புண்ணியம் வாய்ந்தவை. இனிய குணங்கள் கொண்ட பாலைத் தரும் நல்ல பண்புள்ள சொந்தமான பசுக்கள் மெய்ப்பொருளின் வாகனமும் தரும தேவனுமான நந்தியின் குலத்தைச் சேர்ந்தவை.

🍄 அத்தகைய புண்ணிய ஆத்மாவான இந்தப் பசுவை எப்படியாவது உயிர்பிழைக்கச் செய்ய வேண்டும் என்று முனிவர்கள் முடிவெடுத்தனர்.

🍄 கோடிலிங்கார்ச்சனை செய்து பரம்பொருளை வழிபட்டுக் கங்கை நதியைப் பசுவின் உடலில் பாயச் செய்தால் கோமாதா மீண்டும் உயிர் பெற்று எழுவார் என்று மாதவ முனிவர் ஆலோசனை கூறினார்.

🍄 பசுவைக்கொன்ற தோஷம் நீங்க பிரம்மகிரி மலையை 108 முறை சுற்றி வரவேண்டும் எனவும், 1008 லிங்கங்கள் வைத்துப் பூசை செய்ய வேண்டும் எனவும் கூறினர்.

🍄 கிரியைப் சுற்றப் போதுமான வலிமையில்லாமை யினால் கவுதமர், 1008 மண்லிங்கங்களை வைத்து விரதமிருந்து சிவபெருமானை வைத்து வழிபட்டார். கடும் தவம் மேற்கொண்டார்.

🍄 சிவபெருமான் குற்றமற்ற கவுதம முனிவர்முன் தோன்றினார். தீயமுனிவர்கள் எண்ணம் தவறு என்றும், கவுதமருக்குப் பசுவைக் கொன்ற தோஷம் இல்லை என்றும் கூறினார்.

🍄 கவுதமரும் மகிழ்ந்து ஈசனிடம் தீய முனிவர்களின் தீய எண்ணம் மறையவும், அவர்கள் செய்த தவறின் தோஷம் அவர்களை விட்டு நீங்கவும், நாடு செழிப்பாக ஆகி மக்கள் பஞ்சமின்றி வாழவும் அருள் புரிய வேண்டும் எனவும் வரம் கேட்டார்.

🍄 சிவபெருமான் தமது ஜடாமுடியினின்றும் சிறிது கங்காதீர்த்தம் வரவழைத்துக் கவுதமரிடம் கொடுத்துச் சென்றார். சிவபெருமான் கொடுத்த நீரே ஆறாகப் பெருகி ஓடியது. அதுவே கோதாவரி அல்லது கவுதம நதி என்று கவுதமரின் பெயரால் தற்போது விளங்குகிறது. அந்தக் கோதாவரி நதி நீரில் மூழ்கி கவுதமர் தாம் இழந்த தபோ பலமெல்லாம் பெற்றார்.

🍄 தீய முனிவர்களையும் அவர்கள் தோஷம் நீங்க நீராடக் கூறினார். ஆனால் கோதாவரி நதி நீர் மறைந்துவிட்டது. கவுதமர் மீண்டும் தர்ப்பைப்புல்லைத் தக்க மந்திர உபதேசம் செய்து மறைந்த கோதாவரி நீர் குசாவர்த்தகம் என்னும் இடத்தில் தோன்றச் செய்து, தீய முனிவர்களை அதில் நீராட வைத்து அவர்கள் தோஷம் நீங்கச் செய்தார். அதன் பிறகு நாடு செழித்து நாட்டு மக்கள் பஞ்சமின்றி வாழ, கோதாவரி நதியாக நாட்டில் ஓடச் செய்தார்.

🍄 அதன்படியே இன்றும் பிரம்மகிரியில் உற்பத்தி ஆகும் கோதாவரி, முதலில் ஆல மர வேரிலிருந்து தோன்றி, மலைக்குள் சிறு தொட்டியில் நிறைந்து, பின் மீண்டும் மறைந்து குசாவர்த்தம் என்னும் குளத்தில் வெளிப்படுகிறது. பின்பு கோதாவரி நதியாகத் திரியம்பகேசுவரர் கோயில் முன்பு கோடி தீர்த்தமாக உருவெடுத்து, இன்றும் ஓடுகிறது.

🍄 இந்தக் கதையே வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. போதிய மழை இல்லாமையால், உலகத்தின் நன்மையின் பொருட்டு கவுதம முனிவர், தம் மனைவி அகல்யையுடன் பிரம்மகிரியில் கடுந்தவம் செய்தார்.

🍄 வருணன் கட்டளைப்படி ஒரு குளத்தை உருவாக்கினார். வருணனின் அருளால், அந்தக் குளத்தில் வற்றாமல் நீர் சுரந்தது. நீர் வளம் மிகுந்து அவருடைய ஆசிரமம் செழிக்கத் தொடங்கியது. மற்ற முனிவர்களும் தம் தம் பத்தினிகளுடன் இங்கே வந்து தங்கினர். சில நாட்களில் ரிஷி பத்தினிகளுக்குள் விரோதம் உண்டாயிற்று.

🍄 அகல்யையின் கர்வத்தை அடக்க, அவளை இந்த இடத்தை விட்டே துரத்த வேண்டும் என்று மற்ற ரிஷிபத்தினிகள் தீர்மானித்து, விநாயகரின் நியாயத்தை எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்கவில்லை.

🍄 பசு உருத் தாங்கிய விநாயகர், கவுதமர் பயிரிட்டிருந்த செடிகளைப் போய் மேய்ந்தார். பசுவைத் துரத்தக் கோலுடன் கவுதமர் ஓடியதுமே, அந்த மாயப் பசு உயிர் துறந்தது. அதனால் பசுவதை செய்த தோஷம் ஏற்பட்டு விட்டதாக மற்ற முனிவர்கள் கூறினார்கள்.

🍄 இந்த தோஷம் நீங்க, பிரம்ம கிரியை 101 முறை வலம் வரவேண்டுமென்றும், ஒரு கோடி மண் லிங்கங்களைப் பிடித்து வணங்க வேண்டுமென்றும், கங்கையை இந்த இடத்துக்கு வரவழைக்க, வேண்டுமென்றும், அந்த முனிவர்கள் கூறினார்கள்.

🍄 கவுதமரும் கடுந்தவம் இயற்றத் தொடங்கினார். அவருடைய தவத்துக்கு இரங்கி, சிவபெருமான் தரிசனம் அளித்தார்.

🍄 ரிஷி பத்தினிகளின் கெட்ட எண்ணத்தைக் கூற, தோஷம் எதுவும் கிடையாது என்றும் சொன்னார். தம் சடை முடியிலிருந்து சிறிதளவு கங்கா நீரையும் கொடுத்தார். அந்த நீரைப் பிரம்மகிரியில் வளர்ந்திருந்த பெரிய அத்தி மரத்தின் வேரில் விட்டார் கவுதமர். கங்கை பெருகத் தொடங்கிற்று.

🍄 கவுதமர் இந்த நதியைக் கொண்டு வந்தமையால் கோதாவரி அல்லது கவுதமி என்று அழைக்கப்படுகிறது. தம்மிடமிருந்த குசத்தினால் (தர்ப்பை) கங்கையின் போக்கை மாற்றி, மற்ற முனிவர்களும் தூய்மையடையச் செய்தார் கவுதமர்.

🍄 பவித்ர தேசம் என்று அழைக்கப்படும் இந்தத் தல மூர்த்தியைத் தரிசித்தால் மனமாசுகள் அகன்று ஆன்ம ஒளி சிறக்கும்.

🅱 *சிறப்பம்சம்:*🅱

Ⓜ *அதிசயத்தின் அடிப்படையில்:*

♻ இங்குள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும்.

♻ சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று.

♻ மும்மூர்த்திகள் உண்டாக்கிய குளத்தோடு கவுதம் முனிவர் ஏற்படுத்திய கோதாவரி நதியும் திரியம்பகேஸ்வரம் திருக்கோவிலின் புனிதத் தீர்த்தம் ஆயிற்று.

♻ கவுதமர் செய்த கோடியர்ச்சனைக்கும் தவத்திற்கும் கருணை கூர்ந்து ஒரு நதியையே புதியதாகப் படைத்து அருளி கவுதம முனிவருக்கு அளவற்ற ஆனந்தம் அளித்த பராபரனுக்கு கவுதமேஸ்வரர் என்று திருப்பெயர் உண்டாயிற்று.

♻ உலகம் தோன்றிய காலத்திலிருந்து கோடிக்கணக்கான ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்புரியும் அருமை பெருமை மிக்க திரியம்பகம் திருத்தலத்தை சென்று தரிசனம் செய்து வழிபடுகின்றவர்களுக்கு அவர்கள் புரியும் தொழில் சிறப்புடன் விளங்குகின்றது. வாழ்க்கையில் தண்ணீர் பஞ்சம் உண்டாவது இல்லை. வாழ்வில் அளவில்லாத ஆனந்தம் உண்டாகும்.

♻ இத்தலம் செல்ல அடர்ந்த காடுகளிடையேயும் மலைப்பாதைகளைக் கடக்கும் போதும் இயற்கை அள்ளித்தரும், மனத்தை கொள்ளைக் கொள்ளும் ஈடில்லா காட்சிகள் நம்மைக்கிறங்க வைக்கும்.

♻ மூவருக்கும் அருள்புரிந்த பரமேஸ்வரனுக்குத் திரியம்பகேஸ்வரர் என்று பெயர்.

♻ திரியம்பகேஸ்வரர் எழுந்தருளியுள்ள கர்ப்பக்கிரகம் தாழ்வாக உள்ளது. மேலேயுள்ள மண்டபத்திலிருந்து திரியம்பகேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும்.

🅱 *இருப்பிடம்:*🅱

✈ திரியம்பகம் மகாராட்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில், நாசிக்கிலிருந்து நேர்மேற்கே 30 கி.மீ.இல் உள்ளது.

✈ பிரம்மகிரி மலை அடிவாரத்தில் உள்ளது. துங்கபத்திரை நதிக்கரையில் உள்ளது.

🅱 தங்கும் வசதி :*

🎸 நாசிக்கில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்குச் செல்லலாம்.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃

🎠 *தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்*🎠

No comments:

Post a Comment