Sunday 16 July 2017

அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் உஜ்ஜைனி - மத்தியபிரதேசம்.



*சிவபெருமானின் ஜோதிர்லிங்க ஸ்தலம் ; உலகப் பிரசித்தி பெற்ற சிவத்தலம் ; அமுதம் சிந்திய நகரங்கள் மிகவும் புராதனமான நகரம்..*

Ⓜ®🅱💲 *BRS* Ⓜ®🅱💲


மூலவர்: *மகாகாளேஸ்வரர்*

அம்மன்/தாயார்: *சங்கரி, ஹரசித்திதேவி*

தல விருட்சம்: *ஆலமரம்*

தீர்த்தம்: *சிப்ராநதி தீர்த்தம், சூரிய குண்டம், நித்திய புஷ்கரணி, கோடிதீர்த்தம்.*

பழமை: *1000-2000 வருடங்களுக்கு முன்*

புராண பெயர்: *அவந்திகா*

ஊர்: *உஜ்ஜைனி* மாநிலம்: *மத்திய பிரதேசம்*

🅱 *திருவிழா:* 🅱

🍁 சிவராத்திரி, பிரதோஷம், நவராத்திரி, கார்த்திகை மாதப் பவுர்ணமி, ஆடி - நாகு பஞ்சமி

🅱 *தல சிறப்பு:* 🅱

🎭 சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று.

🎭 தினமும் மூன்று வேளையும் பூஜை நடந்து வருகிறது.

🎭 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா வெகு விமர்சையாக கொண்டாடப் பட்டு வருகிறது.

🎭 மாகாளரை தரிசித்தாலே இந்த ஜென்மன் சாபல்யம்

அடைந்து விடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

🎭 *” ஹர்சித்தி மாதா “* என்று அழைக்கப்படும், அன்னை பார்வதி தேவியின் *“சக்தி பீடம்”* அமைந்த இடம். சதியின் முழங்கை விழுந்த இடம்- 51 சக்தி பீடங்களுள் ஒன்று.

🎭 51 சக்தி பீடங்களில் இது மகோத்பலா சக்தி பீடம் ஆகும்.

🎭 புராண காலம், சரித்திர காலம், இராமாயண, மகாபாரத

இதிகாசங்கள் காலம் ஆகிய கால கட்டங்களிலும்

சிறப்பு வாய்ந்த தலம்.

🎭 சிவபெருமான் திரிபுரங்களை எரித்து அசுரர்களை வெற்றி கொண்ட இடம். என்பதால் *“உஜ்ஜெயின்”*

என்றும் (வெற்றித்தலம் என்றும்),தேவர்களும்,அசுரர்களும் அமிர்தத்தை கடைந்து

பொழுது, அசுரர்களுக்கு பங்கு தராமல் தேவகுரு

கலசத்தை தூக்கிக் கொண்டு ஓடும் பொழுது அமிர்தம்

சிந்திய இடங்களுள் *“உஜ்ஜைனி”* என்ப் பெயர் பெற்றது என்பர்.

🎭 மகாகாளவனம் என்று இந்தத் தலத்தை ஸ்கந்தபுராணம்

கூறுகிறது.

🎭 ஆடுகளை மேய்த்து வரும் ஒரு சாதாரண

ஆட்டிடையனின் வாயில் எச்சில் தாம்பாலத்தை

உமிழ்ந்து –அவனை உலகமே வியக்கும் *"மகாகவி காளிதாஸ்“* என்ற பெரிய கவிஞனை உருவாக்கிய

*” கர்காளி “* என்றும் *“ கடுகாளி “*என்றும் அழைக்கப்படும்

உஜ்ஜையினி காளி மாதாவின் பெருமைகளை கொண்ட தலம்.

🎭 உஜ்ஜையினி நகரின் அருகில் பாய்ந்தோடும் *”ஷிப்ரா”*

நதிக்கரையில், பார்வதி தேவியால் விதைக்கப்பட்டு

வளர்க்கப்பட்ட ஆலமரத்தின் கீழ் அமர்ந்து குழந்தை

முருகப் பெருமானை வளர்த்ததும் இந்த இடத்தில் தான்.

🎭 உஜ்ஜயினிக்கு இன்னும் சில சிறப்புகளும் உண்டு. அது காளிமாதாவின் இருப்பிடங்களில் ஒன்று. அங்குள்ள காளியை உச்சினி மாகாளி என்று தமிழில் சொல்லுவார்கள்.

🎭 மாந்திரீகத்தில் அழைக்கப்படும் முக்கிய தேவியாக உச்சினி மாகாளி விளங்குகிறாள். உச்சினி மாகாளியின் அருளைப் பெற்றவர்களை வெல்லமுடியாது என்பது ஐதீகம்.

🎭 விக்கிரமாதித்தனுக்குப் பல ஆற்றல்களைக் கொடுத்தவள் காளி மூர்த்தங்களில் ஆத்யகாளி, மகாகாளி, மகாகாளி தசமுகி போன்ற வடிவங்கள் இருக்கின்றன.

🎭 பத்ரகாளி என்னும் காளி, மங்கலகரமான காளி; மங்கலத்தைச் செய்பவள். *'பத்ர'* என்றாலே *'சாந்தம்'*, *'அமைதி'*, *'மங்கலம்'* என்று பொருள்.

🎭 பத்ரகாளிகளில் மிகவும் புராதனமாக விளங்குபவள் உஜ்ஜைனி என்னும் நகரில் இருக்கும் உஜ்ஜைனி மாகாளி.

🅱 *திறக்கும் நேரம்:* 🅱

🗝 காலை 4 மணி முதல் இரவு 10.30 மணி வரை திறந்திருக்கும். 🗝

🅱 *பொது தகவல்:* 🅱

🦋 உஜ்ஜைனியை புராண காலத்தில் *“ அவந்தி “ “அவந்திகா” அவந்திபூர் “ (அவந்திபுரம்)* என்றே அழைத்து வந்தனர்.

🦋 சமண மதத்தை சார்ந்த சுதன்வா என்ற மன்னன் தன் நாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான்.ஜைன மதம் அவ்வூரில் எங்கும் வியாபித்திருப்பதைக்

கண்டு *உஜ்+ஜைன் - உச்சத்தில் இருக்கும் ஜைனம்*என்று பொருள் பட உஜ்ஜைய்ன் என்று பெயர் சூட்டினான்.

🦋 உஜ்ஜைனி தன்னிடத்தே பல பெருமைகளை

கொண்ட நகரம். சைவ, வைணவ, புத்த மற்றும் சமண மதத்தினருக்கு மிக முக்கியமான யாத்திரை தலம்.

🦋 இத்தலத்தில் விநாயகர், ஓங்காரேசுவரர், தாரகேசுவரர், பார்வதி தேவி, சுப்ரமணியர், நந்தி ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.

🦋 கருட புராணத்தில், முக்தி தலங்களாக போற்றப்படுபவை ஏழு.

அத்தலங்களாவன துவாரகா, அயோத்யா, வாரணாசி, ஹரித்துவார்

மதுரா, காஞ்சி, அவந்திகா (உஜ்ஜைன்) ஆகும். –இதில்

இத்திருத்தலமான உஜ்ஜையினியும் ஒன்று.

🦋 துவாபர யுகத்தில் சாந்தீப முனிவரிடம் பகவான் கிருஷ்ணர்,

பலராமர், சுதாமர், குசேலன் ஆகியோர் பயின்ற தலம்.

🦋 சாந்தீபினி ஆஸ்ரமம் அமைந்த இடம்.

🦋 சித்திவடம் என்ற அதிசய ஆலமரம் ஒன்று உள்ளது. அது பல நூறு வருடங்களாகச் சிறிய அளவிலேயே இருந்து

வருகிறது.

🦋 ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்தது உஜ்ஜைனியின்

நதிக்கரையில் தான்.

🦋 சுதன்வா என்ற ஜைன அரசன் தான், அவந்திகை என்ற இந்த நகரத்துக்கு உஜ்ஜைனி என்று பெயரிட்டான்.

🦋 கார்த்திகை மாதப் பவுர்ணமி இங்கே சிறப்பாகப் கொண்டாடப்படுகிறது. அந்தச் சமயத்தில் கவி காளிதாசரின் நினைவு விழாவும் நடக்கிறது.

🦋 இந்த நகரத்தின் அருகில், ரிணமுக் தேசுவரர், மங்களேசுவரர், பராகணபதி கோயில், கண்ணனின் குருவான ஸாந்தீபனி முனிவரின் ஆசிரமம், பர்த்ருஹரியின் குகை முதலியன காண வேண்டிய முக்கிய இடங்கள்.

🦋 ஜயஸிம்ஹன் நிறுவிய வான ஆராய்ச்சி நிலையம் உள்ளது.

🦋 சரித்திர புகழ் பெற்ற விக்ரமாதித்ய மகாராஜா

அமைச்சர் பட்டி, அரசாண்ட நகர்.

🦋 விக்கிரமாதித்த அரசன் அவ்வூரில் அமைந்துள்ள ஹர்சித்தி தேவியைத் தான்(அன்னை பார்வதி தேவியார்) தன் குல தெய்வமாக வழிபட்டு, அதனால் வரங்கள் பல பெற்று அந்நகரை

சிறப்பாக ஆட்சி செய்ததாக வரலாறு.

🦋 தமிழகத்தில் பிறந்து வளர்ந்த பட்டிணத்து அடிகளார் துறவு பூண்டு வடதிசைக்கு சென்ற பொழுது சிலகாலம்

சுற்றித் திரிந்ததும் இந்த உஜ்ஜையினி நகரத்திலே தான்.

🦋 வடநாட்டில், உஜ்ஜையினியை அரசாண்டு வந்த

மகாராஜா ஒருவர், தன் மனைவியின் நடத்தையில்

வெறுப்புற்று துறவறம் பூண்டு, பட்டிணத்தாரை பின்பற்றி –திருவிடை மருதூரில் வந்து ஞானம் பெற்றார். அவர் வேறு யாருமல்ல பத்ரகிரி மகாராஜா தான்.

🅱 *பிரார்த்தனை:* 🅱

🌹 அசுரகுணம் மறைய, கல்வியில் சிறந்து விளங்க இங்குள்ள ஷிப்ரா நதியில் நீராடி வழிபாடு செய்கின்றனர்.

🅱 *நேர்த்திக்கடன்:* 🅱

💥 சுவாமிக்கு பூ, வில்வத்தால் அர்ச்சனை, அபிஷேகம் செய்கின்றனர்.

🅱 *தலபெருமை:* 🅱

🔥 ஒரு தடவை பூஜித்த பொருள்களை நிர்மால்யம் என்பார்கள். நிர்மால்யத்தைக் களைந்து புதிததாக அலங்கரிப்பது மரபு. ஆனால், இந்த வழக்கத்தை இந்த ஜோதிர்லிங்கத்தைப் பொறுத்தவரை அநுஷ்டிப்பதில்லை.

🔥 பிரசாதத்தையும், வில்வம் போன்ற தளிர்களையும் மீண்டும் உபயோகிப்பது வழக்கமாக இருக்கிறது.

🔥 ஷிப்ரா நதி, புண்ணிய தீர்த்தங்களில் மிகவும் முக்கியமானது என்று அக்கினி புராணம் குறிக்கிறது. இந்த நதியில் மூழ்கி மகாகாளரை வணங்கி, காளி தரிசனம் செய்தால், கல்வியும் அறிவும் பெருகும், அசுர குணம் மறையும் என்பது அனுபவ உண்மை.

🔥 உஜ்ஜயினியை உத்+ஜைன = ஜைன சமயத்தை உச்ச நிலைக்கு கொண்டு வந்த நகரம் என்பது பொருள்.

🔥 மாமன்னர் விக்ரமாதித்தன் அரசாண்டு வெற்றியை தந்த மாநகர்.

🔥 தேவாமிர்தம் சிந்திய நான்கு புண்ணிய ஊர்களில் இதுவும் ஒரு புனித தலமாகும்.

🔥 உஜ்ஜயினி பல காலமாகப் பிரசித்தி பெற்ற தலம். பல மன்னர்கள் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த தலம். இங்கு எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. எனவே உஜ்ஜயினிக்கு வருடம் முழுவதும் யாத்திரை செல்லலாம்.

🔥 கார்த்திகை மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

🔥 பெரிய நகரம் ஆனதால் தங்குவதற்கு வசதி, உணவு வசதியும் உள்ளன.

🔥 உஜ்ஜயினி காலம் காலமாகப் பல சிறப்பம்சங்கள் கொண்ட நகரம்.

🔥 பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தலத்தில் கும்பமேளா விழா கொண்டாடப்படும் புனிதத் தலம்.

🔥 கிருஷ்ணர், பலராமர், சுதாமர் ஆகியோர் உஜ்ஜயினியில் தான் சாந்தீப முனிவரிடம் கல்வி பயின்றுள்ளார்கள்.

🔥 கிருஷ்ணர் இங்கே வானசாத்திரம் கற்றதாகவும் கூறுகின்றனர். இப்பிரதேசத்தில் முன்னொரு காலத்தில் அசுரர்களும், வேதாளங்களும் நிறைந்திருந்தமையால், பக்தர்களைக் காக்க வேண்டி சிவபெருமான் கயிலையை விட்டு இங்கே சதா எழுந்தருள வேண்டியது ஆகிவிட்டது.

🔥 முன்காலத்தில் மாளவதேசத்தின் தலைநகராகவும், விக்கிர மாதித்திய மகாராஜாவின் தலை நகரமாகவும் விளங்கியது.

🔥 தேவாமிர்தம் சிந்திய நான்கு புண்ணிய ஊர்களில் இதுவும் ஒரு சிறந்த புனிதத் தலமாகும்.

🔥 அசோகச் சக்ரவர்த்தி உஜ்ஜயினி வர்த்தகர் மகளையே மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார். மவுரியப் பேரரசின் கிளைத் தலைமைப் பீடம் இங்கே இருந்திருக்கிறது. அசோகருடைய கல்வெட்டுகளில் உஜ்ஜயினி பேசப்படுகிறது.

🔥 பாணினி, பெரிபுளூசு, ஹியான்சான் போன்ற வெளிநாட்டுத் தூதர்கள் உஜ்ஜயினி வந்து இத்தலத்தைப் புகழ்ந்து எழுதியுள்ளார்கள்.

🔥 பதஞ்சலி, காளிதாசன், திருமங்கை ஆழ்வார் ஆகியோர் தமது இலக்கியப் படைப்பில் புகழ்ந்து பாடல்கள் பாடியுள்ளார்கள்.

🔥 திரிபுர அசுரர்களைச் சிவபெருமான் வெற்றி கொண்ட புனிதத்தலம் உஜ்ஜயினி ஆகும்.

🔥 மகாபாரத காலத்தில் அவந்தி இளவரசர்கள், கவுரவர்கள் பக்கம் நின்று மகாபாரதப்போரில் யுத்தம் புரிந்தனர் என்றும் கூறப்படுகிறது.

🔥 அக்கினித் தீர்த்தமெனும் புனித ஷிப்ராநதி தீர்த்தம் நல்ல முறையில் வைத்துள்ளார்கள்.

🔥 இங்கே இராமாயண காலத்தில் இராமர் வந்து நீராடியதால், ராமர் காட் என்னும் குளியல் கட்டம் ஏற்பட்டு உள்ளது. இங்கே மீன்களை கடவுளாக வழிபடுகின்றனர்.

🔥 தமிழ் இலக்கிய நூல் பெருங்கதை என்பதில் வரும் உதயணன் கதை நிகழ்ச்சிகள் நடந்த தலம் உஜ்ஜயினி என்கின்றனர்.

🔥 பட்டி, விக்கிரமாதித்தர் ஆகியோர் காளியிடம் வரம் பெற்று சாகசங்கள் பல புரிந்து ஆட்சி செய்த தலம்.

🔥 விக்கிரமாதித்த ராஜாவின் தெய்வீக சிம்மாசனம் இருந்த இடம் இது.

🔥 சாலி வாகன சகாப்தம் என்ற ஒரு சகாப்தத்தையே உண்டாக்கிய திறமை மிக்க அரசர் இங்கு ஆட்சி செய்துள்ளார்.

🅱 *கோயில் அமைப்பு:* 🅱

🎠 கோயில் மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது.

🎠 முதல் அடுக்கில் ஓங்காரேஸ்வரரும், இரண்டாம் அடுக்கில் தாரகாஸ்வரரும் அமையப் பெற்றுள்ளனர்.

மூன்றாம் அடுக்கு பூமிக்கு கீழே அமைந்துள்ளது.

🎠 மூலவர் *“ மகா காளேஷ்வர் “* பெரிய அளவு லிங்க ரூபமாக காட்சியளிக்கிறார்.

தென்னிந்தியா போல் அல்லாமல் மூலவர் கருவறைக்குள்

சென்று, மூலவரை தொட்டு நாமே நம் கைகளால் அபிஷேகம் செய்யலாம். வட மாநிலத்தவர் பாலாபிஷேகம்

செய்வதோடு நில்லாமல் லிங்க சொரூபத்தை அப்படியே

கட்டி தழுவி ஆராதிக்கின்றனர்.

🎠 முகலாயரின் படையெடுப்பின் போது, அல்டுமிஷ் என்பவன்

இக்கோயிலை இடித்து விட்டு, அங்கிருந்த சிவலிங்கத்தை

எடுத்து சென்று விட்டான். அதன் பிறகு ராமச்சந்திரன்

என்பவர் புதிய லிங்கத்தை ஸ்தாபிதம் செய்து புதிய கோவிலை உருவாக்கினார். பின்னர் பல மன்னர்களின்

கைங்கரியத்தினாலும், பொது மக்களின் திருப்பணிகளாலும்

இன்று இத்திருக்கோயில் ஐந்து அடுக்குடன் மிகச்சிறப்புடன்

விளங்குகிறது.

🅱 *ஷிப்ரா நதிக்கரை :* 🅱

🌷 ஷிப்ரா நதிக்கரை இயற்கை எழில் மிகுந்தது.

🌷 ஷிப்ரா நதிகரையருகில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் தான் பட்டிணத்தார் அமர்ந்து நிஷ்டையில்

ஈடுபட்டிருந்தார்.

🌷 சூரபத்மனை அழிக்க சிவபெருமான், முருகப் பெருமானை

அனுப்பியபோது அவருக்கு சக்தி மிக்க வேல் எனும் ஆயுதத்தை பார்வதி தேவியார் இந்த ஷிப்ரா நதிக்கரைக்கு

வந்து அங்கு ஒர் ஆலமரத்தை வளரச் செய்து சிவபெருமானை நோக்கி தவம் செய்தப் பின் முருகனுக்குக்

கொடுத்தாளாம்.

🌷 இங்குள்ள நதிக் கரையில் ஆல

மரத்தடியின் கீழ் சிவபெருமான் சப்த மாத்ருக்களுடன்

சேர்ந்து ஸ்தாபிக்கப்பட்டு பார்வதியினால் பூஜிக்கப்பட்டு

இருக்கிறார் என்பதினால் அந்த சிவலிங்கமும் சக்தி

வாய்ந்தது என்கிறார்கள்.

🌷 இந்த நதியின் கரையில் தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்த நதியில் நீராடினால் எண்ணிய எண்ணம் யாவும் நிறைவேறு வதுடன், முன் வினை பாவம் உடனே அகலும் என்பது ஐதீகம்.

🅱 *”ஜோதிர்லிங்கம்”:* 🅱

Ⓜ இறைவன் ஒளிமயமானவன்.

அவ்வாறு ஒளியாய் விளங்கும் பரம்பொருளைத் தியானிப்பது அல்லது பூஜை செய்வது,

வணங்குவது என்பது பொதுவாக மனிதர்களுக்கு கடினமாய்த் தென்பட்டது. ஆகவே அந்த ஒளியை எளிதாய் வழிபட லிங்க

உருவத்தைக் கண்டு - அதைப் பல்வேறு கோணங்களில் உலகின் பல பாகங்களிலும், பல மதத்தினரும் வணங்கி வந்துள்ளனர் என்பது சரித்திர ஆய்வாளர்களின் முடிவு.

Ⓜ சிவனுக்கு உருவ வழிபாடு கிடையாது. லிங்க வடிவில் தான்

வணங்குகிறோம். இந்த லிங்க வடிவங்களிலும் கூட

ஜோதிர்லிங்கங்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு.

Ⓜ ஜோதி என்றால் ஒளி என்று பொருள்.

ஜோதிர்லிங்கம் என்றால் ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருவது. பொதுவாக ஜோதிலிங்கத்துக்கும்,

பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும், உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியைத் துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக ஜோதிலிங்கத்தைக் காண்பார்கள் என்பது

இந்துக்களின் நம்பிக்கை.

Ⓜ ஹிமாலயப் பள்ளத்தாக்கில் உள்ள ஜ்வாலாமுகி என்னும்

இடத்தில் தொடர்ந்து நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது.

இதை சக்தி பீடம் என்பர்.

Ⓜ ஜோதி வடிவாக நின்று அருள் புரியும் தலங்களே ஜோதிர்லிங்கஸ் தலங்கள் ஆகும்..

Ⓜ சிவலிங்க உருவம் தொன்று தொட்டு பாரதத்தின் 12 முக்கிய

திருத்தலங்களில் பிரசித்தமாய் பல்வேறு பெயர்களில்

வணங்கப்பட்டு வருகிறது. துவாபரயுக ஆரம்பத்தில் விக்கிரமாதித்த மன்னரால்

ஜோதிர்லிங்க வழிபாடானது முதல் முதலில் ஆரம்பித்து

வைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

Ⓜ ஆக, முழுமுதற் கடவுளாம் சிவனை - ஜோதி உருவாய்த்

திகழ்பவரை மனதார எண்ணி, புத்தியின் மூலமாய் தியானம்

செய்வது அவருடைய வழி பாட்டின் உன்னத நிலையாகும்.

Ⓜ திருவாதிரை நாளில் சிவன் தன்னை ஒளிமயமான லிங்க

வடிவில் வெளிப்படுத்திக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

அதனால் மற்ற நாட்களை விட திருவாதிரை தினத்தன்று

ஜோதிர்லிங்க வழிபாடு செய்வது விசேஷம். இந்தியாவில் மொத்தம் 12 இடங்களில் ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் உள்ளன.

இரண்டு கடற்கரையிலும், நான்கு மலைகளிலும், மற்ற மூன்று

சமதளங்களிலும் உள்ளன.

Ⓜ சிவபெருமான் ருத்ர தாண்டம் ஆடிய

பொழுது விழுந்த தீப்பிழம்பின் சிதறல்களே ஜோதிர்லிங்க

ஸ்தலம் என்றும் கூறுவர்.

🅱 *தல வரலாறு:* 🅱

🌱 *மகாகாளர் என்ற ஜோதிர்லிங்கத்தைப் பற்றிச் சிவபுராணத்தில் கூறியுள்ள கதை இது*

🍄 அவந்திமாநகரில் விலாசன் என்ற அந்தணன் இருந்தான். சிறந்த சிவபக்தன். அவனுக்கு நான்கு பிள்ளைகள். இரத்தின மாலை என்ற மலையில் வாழ்ந்த தூஷணன் என்ற அரக்கன், இந்த நகரைச் சூறையாடி, மக்களைத் துன்புறுத்தினான்.

🍄 குடிகள் விலாசனை அணுகி, தங்களைக் காக்கும்படி வேண்டினர். சிவலிங்கம் பிடித்து வைத்து அன்றாடம் பூசை செய்வது அந்தணர் வழக்கம். ஒரு நாள் அவர் அப்படிச் செய்யத் தொடங்கிய போது, அந்த அரக்கன் வந்து, பூஜைப் பொருள்களைத் தூக்கி எறிந்து, சிவலிங்கத்தையும் அழித்தான். அந்தக் கணத்தில் பெருத்த சப்தம் எழுந்தது. எல்லாரும் திடுக்கிட்டனர்.

🍄 அந்த லிங்கத்திலிருந்து வெடித்துப் பிளந்து கொண்டு மகாகாளர் தோன்றி, தூஷணை அழித்தார். அரக்கன் அழிந்த மகிழ்ச்சியில் மக்கள், மகாகாளரை அங்கேயே தங்கி, தங்களைக் காக்கும்படி வேண்டினர்.

🍄 பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, மகாகாளர் லிங்க உருவில் ஆவிர்ப்பவித்தார்.

🍄 தேவகிக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்த கண்ணனை யசோதையின் வீட்டில் விட்டு, அங்கே பிறந்திருந்த பெண்ணை வசுதேவர் தூக்கி வந்தார். அந்தப் பெண்ணைக் கம்ஸன் விண்ணில் தூக்கி எறிந்து வாளால் வெட்டப் போனான். ஆனால் அந்தக் குழந்தை காளி உருக்கொண்டு இங்கே தங்கி விட்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.

🍄 காளிதாசருக்கு அருள் புரிந்த காளி மாதா இவள்தான்.

🅱 *மகாகாளி வரலாறு :* 🅱

🍄 உஜ்ஜயினியில் மகாகாளர் கோயில் இருப்பது போலவே, மகாகாளி கோயிலும் சிப்ர நதிக்கரையில் உள்ளது. இக்காளி கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. விக்கிரமாதித்திய மன்னனும், பட்டியும் இந்த மகா காளியிடம் வரம் பெற்றுத்தான், பல வருடங்கள் ஆட்சி புரிந்து பல சாகசங்கள் செய்ததாகக் கூறப்படுகின்றன.

🍄 இந்த மகா காளிக்கு ஹரசித்திதேவி என்ற வேறு பெயரும் உண்டு. இப்பெயருக்கு ஒரு புராணக்கதை கூறுகின்றனர்.

🍄 ஒரு சமயம் கயிலையில் சிவபெருமானும், பார்வதி தேவியும் வெகு உல்லாசமாகக் சொக்கட்டான் ஆடிக்கொண்டு இருந்தனர். அப்போது சண்டன், பிரசண்டன் என்ற இரண்டு அசுரர்கள் அங்கே வந்தனர். அவர்களிருவரும் தவமிருந்து மும்மூர்த்திகளாலும் வெல்ல முடியாத வரம் பெற்றிருந்தனர்.

🍄 வரத்தின் பலத்தினால் ஆணவம் கொண்ட அவ்விரு அரக்கர்களும் தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களை அடிமை ஆக்கினர். தேவர், முனிவர், மக்கள் யாவரையும் துன்பப்படுத்தினர்.

🍄 கயிலாயம் வந்து அங்கும் அமைதியைக் குலைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். காவல் புரிந்து வந்த நந்தி தேவரை அடித்து இம்சை செய்தனர். சிவபெருமானும் பார்வதி தேவியும் ஆடும் சொக்கட்டான் ஆட்டத்திற்கு இடையூறு செய்தனர்.

🍄 சிவபெருமானைப் போருக்கும் அழைத்தனர். சிவபெருமான் பார்வதி தேவியிடம், சண்டன் பிரசண்டன் பெற்ற வரம் பற்றிக் கூறினார். அவர்களை அழைக்கும் வல்லமை பார்வதி தேவிக்கே உள்ளது என்றும் கூறினார். எனவே அவ்விரு அசுரர்களையும் அழித்து விடக் கூறினார். பார்வதி தேவியும் தன்பதியான அரனுடைய சித்தம் அறிந்து, தமது உல்லாசத்திற்குக் கேடு உண்டாக்கிய அசுரர்கள் மீது கடுங்கோபம் கொண்டு மகாகாளியாக மாறினார்.

🍄 நவசக்தி தேவிமார்களையும் தம்முடன் அழைத்துக் கொண்டு, மிகுந்த கோபத்துடன் அசுரர்களுடன் போருக்குச் சென்றார். மகாகாளியின் உருவத்தைக் கண்ட அசுரர்கள் இருவரும் பயந்து போய், உஜ்ஜயினி காட்டுக்குள் ஓடி ஒளிந்தனர்.

🍄 மகாகாளி அவர்களை விடாமல் பின்தொடர்ந்து வந்து போரிட்டார்.

🍄 அரக்கரிருவரும் எருமைக்கடா உருவம் எடுத்து தேவியைப் பலமாகத் தாக்கினர். நவசக்தியுடன் தேவி சிங்கவாகனம் ஏறிவந்து, அவ்வரக்கர்களை வதம் செய்தார். அரன் என்னும் சிவபெருமான் சித்தத்தைப் பூர்த்தி செய்தமையால், மகாகாளிக்கு அரசித்தி தேவி எனப்பெயர் வழங்கலாயிற்று.

🍄 அரசித்தி தேவியாக மகாகாளி தோன்றிய இடத்தில் ஒரு கோயில் கட்டி மக்கள் வழிபட்டு வருகின்றனர். மகா காளிக்கு எருமைக்கடா பலியிடும் வழக்கமும் ஏற்பட்டது. சிப்ரா நதிக்கரையில் அரசித்திதேவி கோயில் இன்றும் உள்ளது.

🍄 விக்ரமாதித்தியன் குலதெய்வம் இந்தத் தேவியே ஆகும். இவர் மிகவும் சக்தி வாய்ந்தவராகவும் வரப்பிரசாதியாகவும் இன்றும் விளங்கி வருகின்றார்.

🍄 கவிஞர்கள், புலவர்கள், உபாசகர்கள், ஆற்றல்மிக்கவர்கள், சக்கரவர்த்திகள், மந்திரவாதிகள் போன்றவர்கள் மிகவும் விரும்பிவழிபட்ட தெய்வம் உஜ்ஜைனி மாகாளி.

🅱 *சிறப்பம்சம்:* 🅱

Ⓜ *அதிசயத்தின் அடிப்படையில்:*

♻ சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று.

♻ அம்மனின் சக்திபீடங்களில் இது மகோத்பலா பீடம் ஆகும்.

♻ ஒரு காலத்தில், நள்ளிரவு இரண்டு மணியளவில்

சுடுகாட்டு சாம்பலை கொண்டு வந்து மகாகாளேஷ்வரருக்கு

*” பஸ்மார்த்தி “* என்று சொல்லப்படும் சாம்பல் அபிஷேகம்

செய்து வந்தார்களாம்.

♻ இப்பொழுது அந்த அளவிற்கு இல்லாமல், சம்பிரதாயத்திற்கு

சிறிதளவு சாம்பலால் அபிஷேகம் செய்கிறார்கள்.

*” பஸ்மார்த்தி “* யை கண்டு களிக்க இரண்டு நாட்களுக்கு

முன்னரே முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதுவும் குறைந்த எண்ணிக்கை பக்தர்கள் மட்டுமே

அனுமதிக்கப்படுகிறார்கள்.

♻ காளிதாசனுக்கு காளி , சியாமளாவாகவும் ராஜராஜேஸ்வரியாகவும் காட்சியளித்து அவனுக்கு ஈடு இணையற்ற கவித்துவத்தை அளித்தாள். அதனை காளிதாசனுடைய சியாமளா தண்டகத்திலிருந்து அறியலாம்.

♻ இவ்வூரில் அதிசயிக்கத்தக்க கட்டிடங்கள்

உள்ளன. இக்கட்டிடங்களின் நிழலைக் கொண்டு மணி, நிமிடம்,

திதி, நட்சத்திரம் இவற்றை அறிய முடியும்.

🅱 *இருப்பிடம்:*🅱

✈ சென்னையிலிருந்து விஜயவாடா வழியாக அகமதாபாத் செல்லும் வழியில் உஜ்ஜைனி ஸ்டேஷன் உள்ளது.

✈ நாசிக்கிலிருந்து 350 கி.மீ., பம்பாயிலிருந்து 660 கி.மீ., டெல்லியிலிருந்து 870 கி.மீ. போபாலிலிருந்து மேற்கே 190 கி.மீ. உள்ளது. இந்தூரிலிருந்து மேற்கே 320 கி.மீ.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃

🎠 *தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்*🎠

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

No comments:

Post a Comment