Friday 8 July 2016

பர்வதமலை

பர்வதமலை :




திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மற்றுமொரு சிவன் தலம் பர்வத மலைஇம்மலை மிகவும் தொன்மையானதுகைலாயத்திற்குச் சமமானது என்ற பெயர் பெற்றதுஇங்கு அருள்மிகு மல்லிகார்ஜுனரும் அன்னை  பிரம்மராம்பிகையும்   எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள்.

சிவபெருமான் கைலாயத்திலிருந்து அண்ணாமலைக்கு வந்தபோது அவர் தம்   முதல் காலடியை பர்வதமலையில் வைத்தாராம்அதனைத் தாங்க முடியாமல் இந்த மலை அழுந்தியதால் தனது இரண்டாவது அடியை திருவண்ணாமலையில் வைத்ததாகச் செவிவழிச் செய்திகள் உள்ளன.


மலை அடிவாரத்தில் மிகவும் பழமையான பச்சையம்மன் கோவில்... இந்தக்   கோவிலின் வெளிப்புறத்தில் சப்த முனிகள் கம்பீரமாக   எழுந்தருளியிருக்கிறார்கள்இத்திருக்கோவிலில் பச்சையம்மன் என்ற திருப் பெயரில் அன்னை பார்வதி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறாள்இவளை   வணங்கி மலையேறினால் வீரபத்திரர்துர்க்கையம்மன்ரேணுகாதேவி,  சப்தகன்னியர் போன்றோரை தரிசிக்கலாம்.


விசுவாமித்திரர் குன்று என்ற பாறையிலிருந்து மேல்நோக்கிப் பார்த்தால்மலை உச்சியில் உள்ளகோவில் நன்கு தெரியும்மலையில் உள்ள சுனையிலிருந்து   பெருகி வரும் நீர்வீழ்ச்சியின்அழகையும் காணலாம்.மலை ஏறும் பாதையும்   திகில் ஊட்டுவதாகவே இருக்கும்சிறிது தூரம் மலையேறி களைத்து  மலைத்து பின் திரும்பிச் சென்றவர்களும் உண்டுமலை உச்சியில் உள்ள கோபுர   தரிசனத்தைக் கண்டுசூடம் ஏற்றி வழிபட்டுத் திரும்பியவர்கள் ஏராளம்.


மலை ஏறும் வழியில் உரல் வடிவில் ஒரு கற்பாறைஅதில் ஒரு குழிஅதனால் அந்த இடத்திற்கு உரல் பாறை என்று பெயர்உரல் பாறையைக் கடந்து சிறிது   தூரம் மேல்நோக்கிச் சென்றால்பாழடைந்த மண்டபம் உள்ளதுஇதனை "பாதி   மண்டபம்என்பர்அதாவது மலை உச்சியைஅடைவதற்கு பாதி தூரம் வந்து விட்டதை  இந்தப் பெயர் அறிவிக்கிறது.

மலைக்குத் தென்திசையில் உள்ள கடலாடி என்னும் ஊரிலிருந்து ஒற்றையடிப்   பாதை வழியில்வந்தாலும் இந்தப் பாதி மண்டபத்தை அடையலாம்இங்கிருந்து மேல்நோக்கிச் செல்லும் வழி செங்குத்தானதுஇப்பகுதியை குமரி நெட்டு என்பர்.
அதைக் கடந்து மேல்நோக்கிப் பயணித்தால் கடப்பாறை நெட்டு என்ற பகுதியை அடையலாம்.இந்தப் பகுதி மிகவும் செங்குத்தானது மட்டுமல்லமிகவும் அச்சம்   தரக்கூடியது கூட!

இந்த மலைப் பாதையின் இருபுறமும் இரும்பு கடப்பாறைகள் பாறைக்குள்   ஊன்றப்பட்டுள்ளன.அவற்றைப் பிடித்துக் கொண்டுதான் மேலே செல்ல   வேண்டும்திரும்பிப் பார்க்காமல் மேலே ஏறுதல் நல்லதுமேலே சென்றால்   சுழல்பாறை என்னும் பகுதியை அடையலாம்வட்ட வடிவமாக அமைந்துள்ள   இரண்டு பெரும் பாறைகளுக்கு இடையில்வளைந்து ஒருவர் பின் ஒருவராக  மன உறுதியுடன் செல்ல வேண்டும்

"ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டேசென்றால் சிரமம்   தெரியாதுஇதனைக் கடந்தால் ஏணிப்படி வழி வரும்இரண்டு மலைகளுக்கு  இடையில் கனமான தண்டவாளங்களை இணைத்திருக்கிறார்கள்இந்தப்   பாதையைக் கடக்கும்பொழுது மனதில் அச்சம் எழுவது இயற்கைஇந்தப்   பாதையைக் கவனமுடன் கடந்து சென்றால் ஒரு கல் மண்டபத்தினை   அடையலாம்இதனைத் தீட்டுக்காரி மண்டபம் என்பர்கோவிலுக்குச் செல்ல   பெண்களும் மலையேறி வருவதுண்டுஅப்போது அவர்களுக்கு மாதாந்திர  தொந்தரவுகள் ஏற்பட்டால் இத்துடன் திரும்பிச் சென்று விடுவார்களாம்.  அதனால் இந்தப் பெயர்அமைந்திருக்கிறது.

இந்த மண்டபத்தைக் கடந்து சென்றால் சிங்கக் கிணறு என்னும் சுனையைக்   காணலாம்இதில் ஒரு சுரங்கப் பாதை உள்ளதாகச் சொல்லப் படுகிறதுஅதன்   வழியே சென்றால் ஓர் அதிசய உலகத்தைக் காணலாமாம்அதை   மானிடர்களாகிய நாம் காண வழியில்லைசித்தர் பெரு மக்கள் இச்சுனையில்  உள்ள சுரங்க வழியில் சென்று தவம் செய்வதாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சுனை நீரில் கைகால்முகம் கழுவிக் கொண்டுதாகத்திற்குத் தண்ணீர்   குடித்தால் மலை ஏறிவந்த களைப்பு நீங்கி தெம்பு பிறக்கும்இந்தச் சுனை நீர்   மருத்துவ குணம் கொண்டதுஇந்த நீரை ஒரு சிறிய கேனில் எடுத்துச் செல்வது  நல்லதுமலை உச்சியில் தண்ணீர் கிடைப்பது அரிது.

பாதாளச் சுனை என்றும் சிங்கக் கிணறு என்றும் சொல்லப்படும் இந்த இடத்தில்   சற்று ஓய்வுஎடுத்தபின் மெதுவாக நடந்தால் கணக்கச்சி விழுந்த பள்ளம்-  அதாவது பாதாளப் பகுதி வரும்இந்தப் பகுதியை கணக்கச்சி ஓடை மலை   என்றும் சொல்வர்இங்கே கவிழ்ந்து நிற்கும் பாறை ஒரு புறமும் பாதாளமாக   காட்சி தரும் பயங்கரமான பள்ளம் மறுபுறமும் உள்ளனஇங்கு ஒருவர் மட்டுமேகுனிந்து பாறையை ஒட்டிச் செல்ல முடியும்.

இந்த பயங்கரமான பாதாளத்தைக் கடந்து சென்றால் வருவது பிள்ளையார்   நெட்டுஆபத்தான இடங்களில் கம்பி வலையினால் பாதுகாப்பு   செய்யப்பட்டிருப்பதாலும்வலுவான கடப்பாறைகளைப் பிடித்துக் கொண்டு   செல்ல வசதி இருப்பதாலும் பக்தர்கள் அஞ்சாமல் மேல்நோக்கிச் செல்கிறார்கள்.
அதைக் கடந்து சென்றால் ஓரளவு சமவெளிப் பிரதேசத்தை அடையலாம்.  பக்தர்களெல்லாம் நிம்மதிப் பெருமூச்சு விடும் இடம் மிகவும் சிரமப்பட்டு   ஆபத்தான பாதையில் நடந்து வந்த களைப்பெல்லாம் நீங்கிட மலை மேல் கோவில் கொண்டுள்ள இறைவனும் இறைவியும்அருள்புரிகிறார்கள்.
மலைமேல் உள்ள கோவிலில் தனிச் சந்நிதியில் சிவலிங்கமாக கிழக்கு நோக்கி   எழுந்தருளியுள்ள மல்லிகார்ஜுனரை காரியாண்டிக் கடவுள் என்றும் அழைப்பர்.  இவரை பக்தர்களே அபிஷேகித்து,மலர்கள் சூட்டிப் பூஜை செய்யலாம்.  பக்தர்களுக்கு இடையில் எந்தப் பூசகர்களும் இல்லைபூக்களைச்சூட்டி மகிழும்   பக்தர்கள்சிவலிங் கத்தைத் தொட்டு வணங்கலாம்அதனால் சிவலிங்கத்தை மறைக்கும் அளவிற்குப் பூக்குவியலுக்குள் இறைவன் உறைந்துள்ளார்கருவறை மிகவும் சிறியதாக இருப்பதால் பக்தர்கள் நெருக்கியடித்துக் கொண்டு   தரிசிக்கிறார்கள்.

மல்லிகார்ஜுனருக்கு இடப்புறம் அன்னை பிரம்மராம்பிகா தனிச் சந்நிதியில்   எழுந் தருளியுள்ளாள்.சிவன் சந்நிதிக்கு வலப்புறம் உள்ள சிறிய சந்நிதியில்   விநாயகப் பெருமானும் வள்ளி,தெய்வானையுடன் சுப்ரமணியரும் அருள் புரிவதைத் தரிசிக்கலாம்.

"திரிசூலகிரி', "நவிரமலை', "பர்வதமலை'   என்று  சொல்லப்படும்  இந்த மலைஏழைகளின் கைலாயம் என்று பெயர்   பெற்றதற்கு ஏற்பமேகக் கூட்டங்கள் அவ்வப்போது கோவிலின் மீது நின்று மெதுவாக நகரும் காட்சி மிகவும் ரம்மியமாக இருக்கும். "மேலும் இந்த பர்வதமலைக்கு சஞ்சீவிகிரிமல்லிகார்ஜுன மலை,  கந்தமலைதென் கயிலாயம் என்றும் பல பெயர்கள் உண்டு.
இம்மலைப் பகுதியில் அற்புதமான மூலிகைகள் பல உள்ளனசித்தர் பெருமக்கள் வாழ்ந்தகுகைகளும் உள்ளனஅந்தக் குகைகளில் தற்போதும் சித்தர் பெருமக்கள் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் சொல்லப் படுகிறது.

இக்கோவிலுக்கு அருகில் ஒரு மடம் உள்ளதுஅங்கு சாது ஒருவர் கோவிலுக்கு  வரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவதுடன் அன்னதானத்திற்கும் ஏற்பாடு   செய்கிறார்.

கோவிலில் மின்சார வசதி இல்லாததால் ஜெனரேட்டர் உதவியுடன் இரவு   பன்னிரண்டு மணி வரைமின் விளக்குகள் ஒளிவிடுகின்றனஅதற்குப்பின்   கோவில் உள்ள பகுதி இருள் சூழ்ந்துகாணப்படுகிறது.

கோவிலுக்கென்று தனியாக அர்ச்சகர்கள் கிடையாதுஆனால் அம்பாள்   சந்நிதியில் சாது ஒருவர்அமர்ந்து கொண்டு பக்தர்களுக்குப் பிரசாதம் மட்டும்   தருகிறார்கதவுகள் இல்லாத கோவில் இது.பர்வதமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் நான்காயிரத்து ஐந்நூறு அடி உயரம் கொண்டது.திருவண்ணாமலையை விட இந்த மலை உயரம்திருவண்ணாமலையை கிரிவலம் வரும் தூரம் 14கிலோமீட்டர்ஆனால்பர்வதமலை கிரிவலப் பாதையின் தூரம் 26 கிலோமீட்டர்.

திருவண்ணாமலை மாவட்டம்போளூரிலிருந்து செங்கம் செல்லும் வழியில்   தென்பாதிமங்கலம் என்னும் கிராமம் உள்ளதுஅங்கிருந்து மலை ஏறத்   துவங்கினால் பத்து கிலோமீட்டர் தூரம்.தென்பாதி மங்கலத்திலிருந்து நான்கு   கிலோமீட்டர் தூரம் சென்றால் கடலாடி கிராமம் வருகிறதுஅங்கிருந்து மலை   உச்சிக்கு எட்டு கிலோமீட்டர் தூரம்.

இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசனை தேவேந்திரன் பௌர்ணமி நாட்களில் வந்து வழிபடுவதாக நம்பிக்கை.  

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சிறப்புப் பூஜை நடைபெறும் இந்தக் கோவிலில் யாகங்களும் விடியவிடிய நடைபெறுவது தனிச்சிறப்பு ஆகும்.
சித்ரா பௌர்ணமிஆடிப் பதினெட்டுஆடிப் பூரம்புரட்டாசி மாதப் பிறப்புஐப்பசி அன்னாபிஷேகம்,கார்த்திகை தீபம்மார்கழி மாதப் பிறப்புசிவராத்திரிபிரதோஷ நாட்கள்பங்குனி உத்திரம் முதலியசிறப்பு நாட்களில் இக்கோவில்   விழாக்கோலம் காணும்.

பாவங்கள் போக்கும் பர்வதமலை ஈசன் நினைத்ததை நிறைவேற்றித் தருவான்   என்பது நம்பிக்கை.

இம்மலைக்கு வருபவர்கள் மிகவும் பக்தியுடன் விரதம் கடைப்பிடித்து வருவது   நல்லது.

பர்வத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம்ஆராதனை செய்தால்கீழே  தரை மட்டத்தில் வருடம் முழுவதும் பூஜை செய்த பலன் கிட்டும்.

"அடிக்கொரு லிங்கம் திருவண்ணாமலைஎன்று சொல்வதுபோல், "பிடிக்கொரு லிங்கம் பர்வதமலை'என்பர்.

இந்த மலையில் அமர்ந்து தியானம் செய்தால் தியானம்ஞானம் கைகூடும்;  திரிகால ஞானயோகம்கிட்டும் வாய்ப்பு உண்டு என்பது நம்பிக்கை.
வெயிலின் கடுமை குறை யட்டும் என்று காத்திருந்துமாலை வேளையில் மலை ஏறும் பக்தர்கள்வழி தடுமாறும் நிலை ஏற்பட்டால்அவர்களுக்கு உறுதுணையாக பைரவர் (நாய்முன்னால் நடந்துசென்று வழிகாட்டும் அதிசயத்தை இங்கு   காணலாம் என்கிறார்கள் கோவிலுக்கு வந்த பக்தர்கள்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று பர்வத மலையை கிரிவலம் வரும்   பக்தர்கள் கூட்டம்அதிகரித்து வருகிறதுவலம்வர சுமார் ஆறு மணியிலிருந்து   எட்டு மணி நேரம் ஆகலாம்.

மலைக்கு வரும் பக்தர்கள் மலைமேல் தங்குவதற்கு இப்போது வசதி உள்ளதால்பௌர்ணமி இரவில்இம்மலை விழாக் கோலம் காணும்.

இம்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது தனிச் சிறப்பினைப் பெறுகிறது.  பக்தர்கள் கொண்டுவரும் நெய்நல்லெண் ணெயை பெரிய கொப்பறையில் இட்டு காடா  துணியில்  பெரிய திரி தயார்செய்து பக்தர் களே சூடம் ஏற்றிதீபம்   ஏற்றுகிறார்கள்மேலும் கோவிலைச் சுற்றி பெரிய அகல்விளக்குகளில் பக்தர்கள் விளக்கு ஏற்றுவதால் தீப ஒளியில் சுவர்க்க லோகம்போல் காட்சி தரும்.
மலையடிவாரத்தில் மௌனகுரு ஆசிரமம் உள்ளதுஇங்கு மலையேறும்   பக்தர்களுக்கு வசதிகள்செய்து கொடுக்கிறார்கள்இரவில் இங்கு தங்கிச்   செல்லவும் வசதி உண்டுஅன்னதானமும்செய்யப்படுகிறது.
ஒருமுறை மலை ஏறி இறைவனையும் அம்பாளையும் தரிசித்து வந்தால்,  மறுபடியும் பக்தர்கள்மனம் இறைவனை நாடிச் செல்லும் என்பது மறுக்க   முடியாத   உண்மை.

No comments:

Post a Comment