"வரிவளையாள் மானிக்கும் அடியேன்."
"நின்றசீர் நெடுமாறனின் மனைவியாவார். திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவேற்றுத் தம் கணவரை சைவராக்கினார்."
“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”
நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சோமநாதர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சோமகமலாம்பிகை
அவதாரத் தலம் : கீழப்பழையாறை
முக்தி தலம் : மதுரை
குருபூஜை நாள் : சித்திரை - ரோகிணி்
"மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
வளவர் திருக்குலக் கொழுந்து வளைக்கைமானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள் பிரான் சண்பையர்கோன் அருளினாலே
இருந்தமிழ்நாடு உற்ற இடர் நீக்கித் தங்கள்
பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரைப்
போற்றுவார் கழலெம்மாற் போற்றலாமே."
பாடல் விளக்கம்:
மங்கையர்க்கரசி அம்மையார் புராணம்

திருஞானசம்பந்தரைத் தமது நாட்டிற்கு அழைத்து வந்து, சமணத்தைப் பின்பற்றி வந்த கணவரான பாண்டியன் நின்றசீர் நெடுமாற நாயனாருக்கு மன மாற்றம் ஏற்படுத்தி சைவராக மாற்றினாள். இவ்வாறு மங்கையர்க்கரசியார், சைவத்திற்கும், சைவக் கொள்கைக்கும் ஆற்றிய அருந்தொண்டினை, சேக்கிழார் சுவாமிகள் வெகுவாகப் புகழ்ந்து சிறப்பித்துள்ளார்.
"வரும் நாள் ஒன்றும் பிழையாத் தெய்வப் பொன்னி
வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும் தங்கள்
திருநாடு போற்செழியர் தென்னாடு விளக்கும்
சீர்விளக்கின் செய்ய சீறடிகள் போற்றி
ஒருநாளுந் தன்செயலில் வழுவாது அன்பர்க்கு
உடைகீளும் கோவணமும் நெய்து நல்கும்
பெருநாமச் சாலியர் தங்குலத்தில் வந்த
பெருந்தகையார் நேசர் திறம் பேசலுற்றாம்."
பாடல் விளக்கம்:
நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
No comments:
Post a Comment