
'தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானே' என்று சான்றுரைக்கிறார் மணிவாசகர். நாவுக்கரசு சுவாமிகளும் 'முத்தமிழும் நான் மறையும் ஆனான் கண்டாய்' என்று இறைவன் முத்தமிழுமாய் விளங்கும் தன்மையினை வழிமொழிகிறார்.
தமிழுக்கு அகத்தியர் ஆற்றிய பணி அளப்பரியது. பரமனருளாலும் தமிழ்க் கடவுள் என்று போற்றப் படும் முருகப் பெருமானின் அருளாலும் தேனினும் இனிய தமிழ் மொழிக்கு இலக்கணம் அருளியவர் அகத்தியர்.
அருணகிரிநாதர் கந்தர் அலங்காரம் 22ஆம் பாடலில் 'முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்' என்று குறிக்கிறார். தமிழால் தன்னை வசை பாடும் அடியவரையும் வாழ வைக்கும் தெய்வம் குமரவேளன்றி வேறொருவரும் உளரோ?
திருவேங்கடத் திருப்புகழில் 'தமிழ் மொழியினால் உள்ளம் உருகத் தன்னைப் பன்முறை பணிந்தேத்தும் அடியவர்களின் ஜனன மரணத் துன்பத்தை நீக்கி சிவ முக்தியை அடைவிக்கிறான் ஆறுமுகக் கடவுள்' என்றும் பாடுகிறார். வேதத்தினும் விழுமியது அருணகிரியாரின் வாக்கு.

சரவணபவ நிதி அறுமுக குருபர
சரவணபவ நிதி அறுமுக குருபர
சரவணபவ நிதி அறுமுக குருபர எனவோதித்
தமிழினில் உருகிய அடியவர் இடமுறு
சனன மரணமதை ஒழிவுற சிவமுற
தருபிணி துள வரம் எமதுயிர் சுகமுற அருள்வாயே

ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்
'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்றும் போற்றுகிறார் மகா கவி. தமிழ் மொழியின் சிறப்பினை உணர்வோம்; வளரும் தலைமுறையினர்க்கு முறையாக அதனைப் பயில்விப்போம்; பயன்பாட்டில் மிகுதியாகக் கொண்டு வருவோம்; உய்வு பெறுவோம்.ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்

பொதிகை மலைச் சாரலில் அகத்தியருக்கு முருகப் பெருமான் தமிழைக் கற்பிக்கும் காட்சி

No comments:
Post a Comment