Monday 30 January 2017

அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில் திருப்புகலூர் - திருவாரூர்


மூலவர் : வர்த்தமானீஸ்வரர்

உற்சவர் : கல்யாண சுந்தரர்

அம்மன்/தாயார் : மனோன்மணி

தல விருட்சம் : பின்னை

தீர்த்தம் : அக்னி தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காமீகம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : சரண்யபுரம்

ஊர் : திருப்புகலூர்

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

பண்ண வண்ணத்த ராகிப் பாடலொடு ஆடல் அறாத விண்ண வண்ணத் தராய விரிபுகல் ஊரரொர் பாகம் பெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொடு ஆணிணை பிணைந்த வண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 76வது தலம்.

திருவிழா:

வைகாசியில் முருகநாயனார் குருபூஜை, சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம்.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பபாலிக்கிறார். முருக நாயனார் அவதார தலம். திருநாவுக்கரசர் முக்தியடைந்த தலம். நவக்கிரகங்கள் "ட' வடிவில் இருப்பது விசேஷமான அமைப்பு.

திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

இத்தலவிநாயகர் வாதாபிகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் இந்திர விமானம் எனப்படுகிறது. கோயிலைச் சுற்றி மூன்று புறமும் தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்து லிங்கத்தை பெயர்த்துச் செல்ல முயன்ற பாணாசுரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் இது. பிரகாரத்தில் நளன் வழிபட்ட சனீஸ்வரர் காட்சி தருகிறார். அருகில் நளன் வணங்கியபடி இருக்கிறார். சரஸ்வதி, அன்னபூரணி இருவரும் அருகருகில் இருக்கின்றனர். வாதாபி கணபதி அருகில் இரண்டு அசுரர்கள் வணங்கியபடி இருக்க, தனிச்சன்னதியில் இருக்கிறார்.


பிரார்த்தனை

வர்த்தமானீஸ்வரரிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறுவதாக நம்பிக்கை. நிகழ்காலத்தில் செய்யும் செயல்கள் சிறப்பாக நிறைவேற, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.


நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, மலர்களால் அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்தலாம்.


தலபெருமை:

வர்த்தமானீஸ்வரரிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறுவதாக நம்பிக்கை. நிகழ்காலத்தில் செய்யும் செயல்கள் சிறப்பாக நிறைவேற, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.


தல வரலாறு:

வருணன், வாயு, அக்னி மூவருக்கும் ஒருசமயம் போட்டி உண்டானது. இதில் வருணனும், வாயுவும் சேர்ந்து அக்னியை, சக்தியில்லாமல் போகும்படி செய்துவிட்டனர். அக்னி சக்தி இழந்ததால், தேவலோகம், பூலோகத்தில் மகரிஷிகளால் யாகம் நடத்த முடியவில்லை. எனவே அக்னி தனக்கு மீண்டும் சக்தி வேண்டி சிவனை வேண்டினான். பூலோகத்தில் தன்னை வழிபட மீண்டும் சக்தி கிடைக்கும் என்றார் சிவன்.


அதன்படி இங்கு வழிபட்ட அக்னிக்கு சிவன், சக்தி தந்து 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் கொண்ட உருவத்தையும் கொடுத்தருளினார். அவர் வழிபட்ட சிவன் இத்தலத்தில் அக்னீஸ்வரராகவும், வர்த்தமானீஸ்வரராகவும் இங்கு எழுந்தருளியுள்ளனர்.


நாயன்மார்களில் ஒருவரான முருகனார் இத்தலத்தில் பிறந்தவர். சிவபக்தரான அவர் மலர்களை பறித்து, மாலையாக தொடுத்து தினமும் வர்த்தமானீஸ்வரரை வழிபட்டு வந்தார். இங்கு வணங்க வரும் பக்தர்களுக்காக மடம் ஒன்றையும் கட்டினார்.


திருஞானசம்பந்தரின் நண்பரான இவர், சீர்காழி அருகிலுள்ள திருப்பெருமணநல்லூரில் (ஆச்சாள்புரம்) சம்பந்தர் திருமணத்தில் கலந்து கொண்டார். சம்பந்தருடன் சேர்த்து ஜோதியில் ஐக்கியமாகி முக்தி பெற்றார். சிவன் இவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

No comments:

Post a Comment