Sunday, 26 June 2016

எந்த தெய்வத்திற்கு என்ன மலர்

எந்த தெய்வத்திற்கு என்ன மலர் ?




ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடும்போதும் பூஜை செய்யும் போதும் நாம் பயன்படுத்தும் மலர்கள் வித்தியாசப்படும்.
எந்த தெய்வங்களுக்கு என்னென்ன மலர்கள் உகந்தவை மற்றும் எந்த மலர்கள் பூஜையில் விலக்கப்பட வேண்டியவை ?
பூஜைக்கு உகந்த மலர்கள் :

விநாயகர் – அறுகு, சண்பகம், பாதிரி, சூரியகாந்தி, வன்னி,

சிவன் – கொன்றை, வில்வம், தும்பைபூ, சங்குபூ, செம்பருத்தி

விஷ்ணு – துளசி, மாதவி, குருந்து, வாகை, மத்யாணி, கருங்கால் 
கொன்றை, முருக்கு, அலரி, செம்பரத்தை, செந்திலகம், மருக்கொழுந்து

பிரமன் – அலரி

வைரவர் – செவ்வலரி

சூரியன் – தாமரை

முருகன் – வெட்சி, கடம்பு, முல்லை, குறிஞ்சி, மல்லிகை, காந்தள்
பார்வதி – நந்தியாவர்த்தனம் , நீலோற்பலம், தாமரை, சூரியகாந்தி, செம்பவளமல்லி

துர்க்கை – செவ்வெருக்கு சிவப்பு, அரலி, கொன்றைமலர்

இலக்குமி – நெய்தல், செந்தாமரை

சரஸ்வதி – வெண்தாமரை

அக்னி – வன்னி

சூரியன் – செந்தாமரை

சந்திரன் – வெள்ளரலி

செவ்வாய் – செண்பகம்

புதன் – வெண்காந்தள்

வியாழன் – முல்லை

வெள்ளி – வெண்தாமரை

சனி – கருங்குவளை

ராகு – மந்தாரை

கேது -செவ்வல்லி

பூஜையின் போது விலக்கப்பட வேண்டிய   

 மலர்கள் :


விநாயகர் – துளசி

சிவன் – தாழம்பூ

விஷ்ணு – அட்சதை (எருக்கு, ஊமத்தம்பூ)

வைரவர் – நந்தியாவர்த்தனம் , மல்லிகை

சூரியன் – வில்வம்

பார்வதி – நெல்லி

துர்க்கை – அறுகு

இலக்குமி – தும்பைபூ

சரஸ்வதி – பவளம்

No comments:

Post a Comment