ருத்திராட்சத்தின் மகிமை.....
இன்றைய உலகில் இரத்தக் கொதிப்பு நோய் மனிதர்களை வாட்டி வதக்கிக்கொண்டிருக்கின்றது. இதற்கான மூல காரணம் மன அமைதியின்மை, மனப்பதட்டம்தான் என்று மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.பழங்காலத்தில் இந்த இரத்தக் கொதிப்பு நோய் இப்போது இருக்கும் அளவில் இல்லை. இதற்கு காரணம் மனிதன் முன்பு இயற்கையோடும், இயற்கையையும், மனிதர்களையும் படைத்த இறைவனோடும் நெருங்கிப் பழகிக் கொண்டிருந்தான். அதனால் மனதிற்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைத்தது.
இன்று விஞ்ஞானம் என்ற போர்வையில் செயற்கையான அன்பு, பாசம் வாழ்வினால் உண்டாகும் அமைதியின்மையால் இரத்தக் கொதிப்பு நோயும், மனத்தளர்வு என்னும் மென்டல் டெப்ரஷன் அதிகளவில் இருக்கின்றது.
இதனால் கிட்னிஃபெயிலியர், ஹார்ட்ஃபெயிலியர், லிவர்ஃபெயிலியர், லங்க்ஸ்ஃபெயிலியர் போன்ற நோய்கள் உருவெடுத்திருக்கின்றன.உருத்திராட்சம் என்னும் மரத்தின் காய்கள் இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்துகின்றது. கெட்ட எண்ணங்களை அகற்றிவிட்டு தூய்மையான எண்ணங்களை அளிக்கின்றது. நிம்மதியும், தூக்கத்தையும் வரவழைக்கின்றது. இந்தக் கொட்டையை இந்த சமுதாய மக்கள் பல நூற்றாண்டு காலமாகப் பயன்படுத்தி வருகின்றார்கள்.சிவபெருமானின் கண்ணிலிருந்து வழியும் நீர் காயாக மாறி ருத்ராக்ஷாவாக காட்சியளிக்கின்றது என்ற நம்பிக்கை சிவபக்தர்களிடம் காணப்படுகின்றது. இவ்வாறு மகாபாரதத்திலும் கூறப்பட்டுள்ளது.
ருத்ராக்ஷா ஒரு அழகான மரமாகும். இந்த மரத்தில் காய்கள் விளைகின்றன. அவைகள் சிறிதளவிலும், இலந்தை பழம் வடிவிலும் இருக்கும். இதை உலரவைத்து நூலால் கோர்த்து, மாலையாகவும், கை மணிக்கட்டிலும், முழங்கை மூட்டுக்கு மேலுள்ள சதை பகுதியிலும், வளையலாக அணிந்து கொள்வார்க்ள.
சிலர் இறைவனின் திருப்பெயர்களை மந்திரமாக ஜெபிக்கும் போது இந்த மாலையைக் கையில் வைத்துக் கொண்டு ஜெபிப்பார்கள். முனிவர்கள் தலைமுடி கொண்டையிலும் கட்டிக் கொள்வார்கள். மருத்துவர்கள் இதனை மருந்தாகத் தயார் செய்து தருவார்கள்.இந்த மரத்தை இந்து சமுதாய மக்கள் தெய்வீக மரமாகக் கருதி கோயில்களில் வைத்து வணங்குகின்றனர்.
இதைப்பற்றி சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டிருப்பதாவது :
இமயமலைச் சாரலில், நேபாளம் போன்ற இடங்களில் பயிராகும் இது அக்கமணி, கண்மணி, சிவநேத்திரம், உத்திராட்சம் என வேறு பல பெயர்களிலும் வழங்கப்படுகின்றன. இலையும், விதையும் மருத்துவப் பயன்களுக்குத் தேவையாகிறது. கார்ப்புச் சுவையுடன், வெப்பத்தன்மை கொண்டது. கோழை, பித்தம், தோஷங்களை நீக்கும். அதிக நாவறட்சியோடுள்ள நீர்வேட்கை, முக்குற்ற வேறுபாடுகள், விக்கல், அழல் இவைகளைப் போக்கும். ஐயத்தால் உண்டாகும் மரணத்தைப் போக்கும்.இலையின் சாறு, கற்ப செந்தூரங்களுக்கு உபயோகமாகிறது. கொட்டையைத் தேன்விட்டு உரைத்து நாக்கில் தடவ, விக்கல், பித்த மயக்கம், மரணத்தை உண்டாக்கும் கபம் இவைகளைப் போக்குகிறது. மன அமைதிபெறவும், பயம் நீங்கவும் உதவுகிறது.
இதைப்பற்றி சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டிருப்பதாவது :
இமயமலைச் சாரலில், நேபாளம் போன்ற இடங்களில் பயிராகும் இது அக்கமணி, கண்மணி, சிவநேத்திரம், உத்திராட்சம் என வேறு பல பெயர்களிலும் வழங்கப்படுகின்றன. இலையும், விதையும் மருத்துவப் பயன்களுக்குத் தேவையாகிறது. கார்ப்புச் சுவையுடன், வெப்பத்தன்மை கொண்டது. கோழை, பித்தம், தோஷங்களை நீக்கும். அதிக நாவறட்சியோடுள்ள நீர்வேட்கை, முக்குற்ற வேறுபாடுகள், விக்கல், அழல் இவைகளைப் போக்கும். ஐயத்தால் உண்டாகும் மரணத்தைப் போக்கும்.இலையின் சாறு, கற்ப செந்தூரங்களுக்கு உபயோகமாகிறது. கொட்டையைத் தேன்விட்டு உரைத்து நாக்கில் தடவ, விக்கல், பித்த மயக்கம், மரணத்தை உண்டாக்கும் கபம் இவைகளைப் போக்குகிறது. மன அமைதிபெறவும், பயம் நீங்கவும் உதவுகிறது.
No comments:
Post a Comment