Sunday 26 June 2016

ஓம் என்பது ??

ஓம் :

ஓம் என்பது பிரணவம். பிரணவம் என்பது பஞ்ச பூதங்களைக் குறிகின்றது .உலகம் விரிதலை குறிகின்றது .இப்பொழுதுஒம்என்ற சொல் அகமும்-புறமும் ஆக செயல்படுகிறது.

அகம்உள் உறுப்புக்கள், புறம்பஞ்ச பூதங்கள் . உள் உறுப்புக்கள் அனைத்தும் பஞ்ச பூதங்களால் செய்யப்பட்டுள்ளது . புறத்திலுள்ள பஞ்ச பூதங்கள்,நம்மை இயக்குகின்றன.இதைதான்நமசிவய வாழ்க,நாதன் தாழ் வாழ்கஎன்கின்றோம் .இங்கு நமசிவய என்பது புறத்திலுள்ள பஞ்ச பூதத்தையும்,நாதன் என்பது அகத்திலுள்ள உயிராகிய சிவா பெருமானை குறிப்பதாகும்.

பிரணவ மந்திரத்தின் மகிமைகள்

ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள்.

ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்ட தெய்வத்தை அழைக்கிறோம். ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும்.

ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம்.

ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம்,வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.

வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள்ஒம், “ஓம், “ஓம்என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் . . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம்.கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று.மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும்.மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும்,குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.


ஓம் நமசிவாய ஓம்

No comments:

Post a Comment