Thursday 30 June 2016

365 லிங்கங்கள் நிறைந்த திருவாரூர் தியாகராஜர் கோயில்

365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய 

திருவாரூர் தியாகராஜர் கோயில்:

இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று.
திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார்.
*இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்*
*தியாகராஜர்* என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள்.
*தியாகராஜர்* கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது.
*9 ராஜ கோபுரங்கள்*
*80 விமானங்கள்*
*12 பெரிய மதில்கள்*
*13 மிகப்பெரிய மண்டபங்கள்*
*15 தீர்த்தக்கிணறுகள்*
*3 நந்தவனங்கள்*
*3 பெரிய பிரகாரங்கள்*
*365 லிங்கங்கள்*
(இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்),
*100க்கும் மேற்பட்ட சன்னதிகள்*
*86 விநாயகர் சிலைகள்*
*24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள்* என பிரமாண்டமாக விளங்குகிறது.
இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர்.
*திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள்*
*3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு.*
கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள்,
முன்காலத்தில்,
திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
*தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது.*
*இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு*
*(வீதி விடங்க லிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.*
*அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த "லிங்கம்" வைக்கப்படும்*.
*அதன் மேல் வெள்ளி குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும்*.
*மற்ற நேரங்களில்*,
*பூட்டிய இந்த பெட்டி *தியாகராஜரின்* *வலதுபுறத்தில் இருக்கும்.*
*திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.*
*தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.*
நான்கு புறமும் கோபுரங்களையும்,
தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது.
திருவாரூர் கோவில்,
அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை *ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.*
*கோயில் ஐந்து வேலி*,
*குளம் ஐந்து வேலி,* *செங்கழுநீர் ஓடை ஐந்து வேல*
என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம்.
*(ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்).*
இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டு மானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.

*தல வரலாறு*:-
~~~~~~~~~~~
*ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது.*
*அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான்.*
*அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் என்ன வேண்டும்?’ என கேட்க*,
*திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த ""விடங்க லிங்கத்தை"" கேட்டார்*
தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த *லிங்கத்தை* ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை.
*தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான்* *வைத்திருப்பதைப்போலவே*
*6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான்.*
*முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார்.*
*வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான்*.
*அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது.*
*மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோயில்களில் உள்ளன.*
இவை *சப்தவிடங்கத்தலங்கள்* எனப்படுகின்றன.
*“சப்தம்‘ என்றால் ஏழு.*
*திருவாரூரில் "வீதி விடங்கர்*"
*திருநள்ளாறில் “நகர விடங்கர்"*
*நாகப்பட்டினத்தில் “சுந்தர விடங்கர்"*
*திருக்குவளையில் “அவனி விடங்கர்"*
*திருவாய்மூரில் “நீலவிடங்கர்"*
*வேதாரண்யத்தில் “புவனி விடங்கர்"*
*திருக்காரவாசலில் “ஆதி விடங்கர்" என்ற பெயர்களில்*
*விடங்க லிங்கங்கள்* *அழைக்கப்படுகின்றன.*
*இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்கும்.*
*சப்தவிடங்கத்தலங்கள் உள்ள கோயில்களில் சுவாமியை “தியாகராஜர்" என்பர்.*

*வழிபாடு நேரம்* :-
~~~~~~~~~~

*காலை 6 மணி - திருப்பள்ளி எழுச்சி ,பால் நிவேதனம்*
*காலை 7.30 மணி*-
*மரகத லிங்க அபிஷேகம்*
*காலை 8 மணி* -
*முதற் கால பூஜை*
*மதியம் 11.30 மணி*-
*மரகத லிங்க அபிஷேகம்*
*பகல் 12 மணி* -
*உச்சிக்கால பூஜை*
*பகல் 12.30 மணி* - *அன்னதானம்*
*மாலை 4 மணி - நடை திறப்பு*
*மாலை 6 மணி - சாயரட்சை பூஜை*
*இரவு 7.30 மணி* -
*மரகத லிங்க அபிஷேகம்*
*இரவு 8.30 மணி - அர்த்தசாம பூஜை*
*பிரதான மூர்த்திகள்*
*திருவாரூர் ஆலயத்தின்* *மூலவர் வன்மீகர்*
*அவர் அருகே அன்னை சோமகுலாம்பிகை* *இருக்கிறாள்*
*இறைவன் சூரிய குலம்* *அம்பிகை சந்திர குலம்*
*வன்மீகரின் வலப்பக்கத்தில் - தனிச் சந்நிதியில்*, . . .
🙏 *ஸ்ரீதியாகராஜர்* 🙏

🙏ஹர ஹர மஹா தேவா  
🙏திருச்சிற்றம்பலம்🙏
 🙏ஓம் நமசிவாய🙏

தகவல் சிவத்திருப்பணி அணி

No comments:

Post a Comment