Monday 7 May 2018

அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில் (அ) நேத்ரார்ப்பணேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை – திருவாரூர்

Related image

ஞானசம்பந்தர் பெருமானுக்கும், அப்பர் பெருமானுக்கும் இறைவன் படிக்காசு தந்தருளி அவர்கள் மூலமாகச் சிவனடியார்க்கு அமுதூட்டிய தலம் ; திருமால் இறைவனைப் பூஜை செய்து  தம் சக்கரத்தைப் பெற்ற தலம் ;  இறைவன், சம்பந்தப் பெருமானுக்குத் தாம் சீர்காழியிலிருக்கும் தோணியப்பர் திருக்கோலத்தை  விண்ணிழி விமானத்தில் காட்டியருளிய மிக சிறப்பு வாய்ந்த சிவஸ்தலம்..

🍄💧🍄💧 BRS🍄💧🍄💧🍄

தொலைபேசி : +91-4366-273 050, 94439 24825

🔵⚜🔵⚜ BRS🔵⚜🔵⚜🔵

மூலவர் : வீழிநாதேஸ்வரர் ( கல்யாணசுந்தரேஸ்வரர்)

 உற்சவர் : கல்யாணசுந்தரர்

 அம்மன்/தாயார் : சுந்தரகுசாம்பிகை (அழகியமாமுலையம்மை)

 தல விருட்சம் : வீழிச்செடி

 தீர்த்தம் : வீஷ்ணுதீர்த்தம், 25 தீர்த்தங்கள்

 பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

 புராண பெயர் : திருவீழிமிழலை

 ஊர் : திருவீழிமிழலை

 பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்றது. சேந்தனார், அருணகிரிநாதர்

வழிபட்டோர் : திருமால் (சக்கராயுதம் பெற), சுவேதகேது எனும் மன்னன் (எமபயம் நீங்க), வசிட்டர், காமதேனு, ரதிதேவி, மனு

Related image

🅱 தேவாரப்பதிகம்:🅱

எடுத்தான் தருக்கினை இழித்தான் விரனூன்றிக் கொடுத்தான் வாளாளாக் கொண்டான் உறைகோயில் படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே. - திருஞானசம்பந்தர்

🍧 தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 61 வது தலம். 🌀

🅱 திருவிழாக்கள் :🅱

🌻 மகா சிவராத்திரி,

🌻 மார்கழி திருவாதிரை

🌻 சித்திரை மாதத்தில் பெருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

🌻 நவராத்திரி, சஷ்டி, முதலிய பெரு உற்சவங்களும் நன்கு நடைபெறுகின்றன.
 
🅱 தல சிறப்பு:🅱
 
🎭 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🎭 இங்கு பாதாள நந்தி உள்ளது. முழு கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது.

🎭 இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார்.

🎭 மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

🎭 கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.

🎭 இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட "வவ்வால் நந்தி மண்டபம்' உள்ளது. இது நூறு கால் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. சஷ்டியப்த பூர்த்தி திருமணங்கள் இங்கு நடத்தப்படுகின்றன.

🎭 தேவார மூவராலும் பாடல் பெற்ற தலங்கள் பல உண்டு. அவற்றில் திருவீழிமிழலை தலமும் ஒன்றாகும். இத்தலம் 23 திருப்பதிகங்களையுடையது. வீழிச்செடிகள் நிறைந்திருந்ததால் இவ்வூருக்கு திருவீழிமிழலை என்று பெயர் ஏற்பட்டது.

🎭 இத்திருக்கோயிலைச் சுற்றி, பத்மதீர்த்தம், புஷ்கரணி, விஷ்ணுதீர்த்தம், திரிவேணிசங்கமம், குபேரதீர்த்தம், இந்திரதீர்த்ம், வருணதீர்த்தம், இலக்குமி தீர்த்தம், வசிட்டதீர்த்தம் முதலாக 25 தீர்த்தங்கள் உள்ளன.

🎭 சுவாமி சந்நிதியில் உள்ளது - புஷ்கரணிதீர்த்தம்

🎭 மேற்கு மதிலைச் சார்ந்த உள்ளது - விஷ்ணுதீர்த்தம்

🎭 தாமரைக் குளம் உள்ளது - பிரம, பத்மதீர்த்தங்கள் என்பன.

🎭 ஆதியில் செப்புத் தகடுகள் வேயப்பட்ட இவ்விமானம் இன்று தங்கக் கவசத்தோடு, தனி அழகுடன் விளங்குகிறது. பதினாறு சிங்கங்கள் இதைத் தாங்குகின்றன.

🎭 திருமால் கண்ணை இடந்தளிக்கும் காட்சி விமானத்தில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள உலாத் திருமேனிகளுள் ஒருவராகச் சிவபெருமான் ‘சக்ரதானர்’ என்ற திருக்கோலத்தில் விளங்குகிறார்.

🎭 காஞ்சிபுராணத்தின் படி, திருவீழிமிழலைக்குரிய வரலாறு அருகிலுள்ள திருமாற்பேறு எனும் திருத்தலத்திற்கும் கூறப்படுகிறது.

🎭 திருமாலின் உற்சவத் திருமேனி ஒன்று ஒரு கையில் தாமரை மலரும், மறுகையில் கண்ணும் கொண்டு, நின்ற கோலத்திலிருப்பதை இக்கோயிலில் காணலாம். இங்கு இறைவனுக்கு முன்னே நந்தி தேவருக்குப் பதிலாக, திருமால் கூப்பிய கரத்தோடு நின்றிருக்கிறார் !

🎭 திருமால் சிவனை ஆராதனம் செய்து சக்ரத்தைப் பலமுறை பெற்றுள்ளார். ஆதியில் சிவபெருமான் அளித்தது சுதர்சனம் எனும் சக்ரமாகும்.

🎭 அதர்வண வேதத்தில், சரபோபநிடதத்தில் ‘எவருடைய இடதுபாதத்தில் விஷ்ணு தம் கண்ணை அர்ச்சித்துச் சுதர்சனம் எனும் சக்ரத்தைப் பெற்றுக் கொண்டாரோ அந்த ருத்ர மூர்த்திக்கு வணக்கம்’’ என்று வருகிறது.

🎭 கூர்ம புராணத்தில் ‘மாயோன் நேமி பெற்ற அத்தியாயம்’ என்ற  ஒரு தனிப்பகுதியே விரிவாக அளிக்கப்பட்டுள்ளது.

Image result for திருவீழிமிழலை
 
🅱 நடை திறப்பு:🅱

🔑 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.🔑
 
🅱 பொது தகவல்:🅱
 
🍁 கோயிலின் எதிரில் பெரிய குளம் உள்ளது.

🍁 மிகப் பெரிய கோயில். கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. இக்கோயில் மாடக்கோயில் அமைப்புடையது.

🍁 தெற்குப் பிராகாரத்தில் தல விநாயகர் (படிக்காசு விநாயகர்) சன்னதியும், மேற்கில் சோமாஸ்கந்தர், முருகன், மகாலட்சுமி சன்னதிகளும், வடக்கில் சண்டேசுவரர் சன்னதியும் உள்ளது.

🍁 நடராசர் சன்னதி சிறப்பானது.

🍁 'தில்லை மூவாயிரவர்' என்பது போல இத்தலத்து வாழ்ந்த ஐந்நூறு அந்தணர்கள் ( ஐஞ்ஞூற்று அந்தணர்) போற்றப்பட்டனர்.

🍁 இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமானது.

🍁 இத்தலத்துத் தலபுராணம், திருவாவடுதுறை ஆதீனத்து, இரண்டாவது குருமூர்திகளான ஸ்ரீ மறை ஞானதேசிகருடைய மாணவரான ஸ்ரீ மெய்ஞ்ஞான முனிவரால் இயற்றப்பட்டது  உள்ளது.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌹 திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
 
🅱 நேர்த்திக்கடன்:🅱
 
💥 சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Related image

🅱 தலபெருமை:🅱
 
Ⓜ ஸ்ரீ கார்த்தியாயினி அம்பிகையின் திருமணம்Ⓜ

🔥 முனிவர்களில் சிறந்தவர் ஆகிய கார்த்தியாயன முனிவர் இத்தலத்தை அடைந்து தீர்தபுஷ்கரணி கரையில் ஓர் தவச்சாலை அமைத்து தினந்தோறும் தீர்தபுஷ்கரனியில் நீராடி அழகியமாமுளை அம்மையும் விழினாதரையும் வழிபட்டுப்பன்னகசலையில் தம் பத்தினியோடு அருந்தவம் புரிவராயினர்.

🔥அவருக்குப் புத்திர பேரின்மையால் அதைக்குறித்து அறிய வேள்விகளையும் செய்தார். அப்பொழுது அம்பிகை ஆனவள் இடக்கரத்தில் அன்னப்பத்திரமும், வலக்கரத்தில் அன்னம்படைக்கும் அகப்பையோடும் அன்னபூரணியாக காட்சியளித்து "அருந்தவ முனிவா நீ விரும்பிய வரம் யாது? புகல்வாய் " என்றனள்...

🔥 " தாயே நீ புத்திரியாக வரவேண்டும் " என்றார் . அவருக்கு அம்பிகை அவ்வரத்தை தந்தாள்.

🔥அம்பிகை பரமநிடத்தில் விடைபெற்று முனிவர் தவம் புரியும் பான்னஹசாலைக்கு அருகே உள்ள தீர்தபுட்கரனியில் ஒரு சிறந்த பெரிய நீலோற்பலமலரில் அழகிய பெண்குழந்தை வடிவமாக திகழ்ந்தார் அதனை முனிவர் பத்தினி ஆகிய சுமங்கலை என்பவள் கண்டு ஆனந்தம் கொண்டு அக்குழந்தையை எடுத்து மார்போடு அனைத்து கார்த்தியாயன முனிவரிடம் கொடுத்துக் கார்த்தியாயினி என்று பெயரிட்டு மிக மகிழ்ச்சியோடு வளர்து வருவாராயினர் .

🔥 கர்தியாயினிக்கு உரிய மணப்பருவம் வருவதை அறிந்து பரமனை குறித்து அருந்தவம் புரிந்தார். முனிவர் தவத்திர்கிணங்கி பரமன் வெளிப்பட்டார்.

🔥இறைவன் திருவடிகளில் வணங்கிப் பெருமானே இக்கன்னிஹையை தேவரீர் மனக் கோலத்தோடு வந்து திருமணம் கொண்டருள வேண்டுமென்று பிரார்த்தித்தார்.

🔥 பரமன் திருவுளம் மகிழ்ந்து நாம் சித்திரை மாதத்தில் மக நக்ஷத்திரதன்று திருமணம் கொண்டருளுவோம் என்று அருள்புரிந்தார்.

🔥 இறைவன் முனிவருக்கு வாக்களித்தபடி சித்திரை மாதத்தில் மக நக்ஷதிரத்தன்று ஸ்ரீ கைலாயதிநின்றும் எளுந்தருளித்திருமால் பெருமான் நந்தி முதலிய கணங்கள் புடைசூழ, சர்வலன்கர ரூபராய் இத்தளத்தை நாடி திருவீழிமிழலையில் கார்த்தியாயன முனிவர் இருக்கும் இடத்தை அடைந்தார்.

🔥 கார்த்தியாயன முனிவர் இறைவனை எதிர்கொண்டு வணங்கி திருமணத்திற்கு ஆவன செய்தார். மகா அலங்காரத்தோடு மிக சிறப்புற ஸ்ரிகைலாசபதிக்கும் கார்த்தியாயினி அம்பிகைக்கும் திருமண வைபவம் நடைபெற்றது.

Ⓜ பெயர்க்காரணம்:Ⓜ

🌀 ஒருகாலத்தில் இத்தலம் முழுவதும் வீழி எனப்படும் வீழிச்செடி, சந்தனம், செண்பகம், பலா, விளா முதலிய மரங்களடர்ந்த காடாய் பல காலம் இருந்தது.

🌀 மிழலைக் குறும்பர் என்னும் வேடுவர் ஒருவர் இத்தலத்தில் வசித்து வந்தார். அவர் தினம் ஒரு விளாங்கனி நிவேதனம் செய்து வீழிநாதரை வழிபட்டு வந்தார்.

🌀 அதன் பலனாக ஈசன் அவர் முன் தோன்றி அருளாசி வழங்க, அவர் தவக்கோலம் பூண்டு, அருந்தவங்கள் செய்து அட்டமாசித்திகள் கைவரப் பெற்றார். இந்த மிழலைக் குறும்பருக்கு இத்தலத்தின் தனி சந்நிதி உள்ளது.

🌀 வேடுவரால் நிவேதனம் செய்யப்பட்ட விளாங்கனி வீழிநாதரின் பாதத்தில் இன்றும் காட்சியளிக்கிறது. இதனால் இத்தலம் திரு+வீழி+மிழலை என்று அழைக்கப்படுகிறது.

Ⓜ படிக்காசு அருளியது:Ⓜ

💓 திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சேர்ந்தே இத்தலத்திற்கு வருகிறார்கள். அவர்கள் வரும்போது நாட்டில் பஞ்சம். மக்கள் உணவின்றித் தவிக்கின்றனர்.

💓 இந்த நிலையில் அப்பர், சம்பந்தர் இவர்களுடன் வந்த அடியார்களுக்கு உணவு அளிப்பது சிரமமாக இருக்கிறது. இருவரும் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி பதிகங்கள் பாடுகிறார்கள்.

💓 மறுநாள் காலையில் கிழக்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும், மேற்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும் இருப்பதை இருவரும் காண்கிறார்கள்.

💓 அவற்றைக் கொண்டு அடியவர்களுக்கு உணவு அளிக்கின்றனர். நாட்டில் பஞ்சம் தீரும் வரையில் இவ்வாறு தினமும் படிக்காசு பெற்று தொண்டு செய்திருக்கின்றனர்.

💓 படிக்காசு அளிப்பதிலும் இறைவன் அப்பருக்கு நல்ல காசும், சம்பந்தருக்கு மாற்றுக் குறைந்த காசும் கொடுத்தார்.

💓 சம்பந்தர் அதைப் பார்த்து  "வாசி தீரவே காசு நல்குவீர்"  என்னும் பதிகம் பாடிய பிறகு அவருக்கும் நல்ல காசு கொடுத்து அருள் செய்தார்.

💓 அவ்வாறு வைத்தருளிய பலிபீடங்கள் கோயிலின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ளன. படிக்காசுப் பிள்ளையார் மேற்கு பலிபீடத்தின் அருகில் உள்ளார். அருகில் சம்பந்தர், அப்பரின் உருவங்கள் உள்ளன. இவ்விருவரும் தங்கியிருந்த திருமடங்கள் வடக்கு வீதியில் கீழ்க்கோடியிலும் (சம்பந்தர்) மேற்குக் கோடியிலும் (அப்பர்) உள்ளன.

Ⓜ கோவில் விபரம்: Ⓜ

🌱 இறைவன் நேத்ரார்ப்பன ஈசுவரர் சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. மூல்வர் சுயம்பு உருவில் சுமார் 5 அடி உயரத்தில் நற்காட்சி தருகிறார்.

🌱 மூலவர் லிங்கத்திற்கு பின்புற கர்ப்பக்கிருஹ சுவரில் பார்வதி பரமேசுவரர் திரு உருவங்கள் இருக்கின்றன.

🌱 கோவிலின் பிரதான நுழைவு வாயில் கோபுரத்தை விட கர்ப்பக் கிருஹத்தின் மேல் இருக்கிற 16 சிம்மங்கள் தாங்கக்கூடியதாக உள்ள விமானமே சிறப்பானது. இதற்கு விண்ணிழி விமானம் என்று பெயர்.

🌱 இது திருமால் கொணர்ந்தது என்பதை மேற்கூறிய பாடலில் திருநாவுக்கரசரும், ‘சலந்தரன் உடலம் தடிந்த சக்கிரம் எனக்கருளென்று அன்று அரி வழிபட்டிழிச்சிய விமானத்திறையவன் பிறையணி சடையன்’ என்று ஞானசம்பந்தரும் பாடியுள்ளதிலிருந்து உணரலாம்.

🌱 சக்கரம் பெற்ற திருமால் வைகுண்டத்தில் இருந்து கொண்டுவந்து இந்த விமானத்தால் இக்கோவிலை அலங்கரித்ததாக புராணங்கள் சொல்கின்றன.

🌱 இறைவி சுந்தர குசாம்பாள் சந்நிதி  மூலவர் சந்நிதிக்கு அருகில் உள்ளது.

🌱 ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் இருக்கும் நூற்றுக்கால் மண்டபம் சிற்ப வேலைக்கு ஒரு எடுத்துக் காட்டாக திகழ்கிறது.

🌱 மூலவரின் வலப்பக்க மண்டப அறையில் கையில் கண்ணோடு அர்ச்சிக்கும் பாவனையில் திருமால் காட்சி தருகிறார்.

🌱 கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்திற்கு முன் பெரிய அழகிய திருக்குளம் உள்ளது. இறைவன் நேத்ரார்ப்பனேஸ்வரர் ஈசுவரர் சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது.

🌱 இறைவன் உமையை மணந்து கொண்ட தலம் என்னும் நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணும் உள்ளன.

🌱 மகாமண்டபத்தில் கல்யாணசுந்தரர் மாப்பிள்ளை சுவாமியாகக் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் உற்சவமூர்த்தி.

🌱 அவரது வலது பாதத்தின் மேலே திருமால் அர்சித்த கண்மலரும், அதன் கீழே சக்கரமும் இருக்கக் காணலாம்.

🌱 பிட்சாடனர், ரதிதேவி, வசிஷ்டர், காமதேனு, மனு முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் இது.

🌱 வட இந்திய மன்னன் ஒருவனின் மகன் சுவேதகேது. அவனது ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள், 16 வயதில் அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்று கூறினார்கள். அரசன் முனிவர்களிடம் ஆலோசனை செய்ய, அவர்கள் திருவீழிமிழலை தலத்திற்குச் சென்று சிவபூஜை செய்தால் காலமிருத்யுவை வெல்லலாம் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள்.

🌱 சுவேதகேது அதன்படி திருவீழிமிழலை தலம் வந்து இறைவனை தினமும் ஆராதித்து வந்தான். நாட்கள் சென்றன.

🌱 சுவேதகேதுவின் உயிர் பிரிய வேண்டிய நேரம் வந்தது. உயிரை எடுக்க வந்த எமதர்மரைப் பார்த்த சுவேதகேது சிவலிங்கத்தை இறுகப் பற்றிக் கொண்டான். எமதர்மன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்தையும் சேர்த்து சுற்றிக் கொள்ள, சுவேதகேதுவோடு, பெருமானையும் இழுத்தான் எமதர்மன்.

🌱 அப்போது சிவலிங்கத்திலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டு, எமனைக் காலால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்தது போல், சுவேதகேதுவைக் காப்பாற்றினார்.

🌱 பின் தேவர்கள் வேண்டுகோளின் பேரில் எமனை உயிர்ப்பித்து, இனி தன் பக்தர்கள் சிவபூஜையில் ஈடுபட்டிருக்கும் போது உயிரைப் பறிக்க வரக்கூடாது என்று ஆணையிட்டார். இத்தகைய சிறப்பு பெற்றது திருவீழிமிழலை திருத்தலம்.

Image result for திருவீழிமிழலை

🅱 தல வரலாறு:🅱

🍧 முன்னொருமுறை இந்திரனை அழிக்க எழுந்த தன் சினத்தை சிவனார் கடலில் வீசினார். அது குழந்தையாக மாறியது. அக்குழந்தைக்கு ஜலந்தரன் எனப்பெயர் சூட்டி வருணன் வளர்த்து வந்தான்.

🌀 கர்வமிகுதியால் தேவர்களைத் துன்புறுத்தி வந்த ஜலந்தரனைத் தண்டிக்க எண்ணினார் சிவபெருமான்.

🍧 முனிவராக மாறி அவன் முன்தோன்றி, தரையில் ஒரு சக்ரத்தை வரைந்து, அதைப் பெயர்த்து மேலே எடுக்க முடியுமா என்று கேட்டார்.

🌀 சக்ரத்தைப் பெயர்த்தெடுத்த ஜலந்தரன், மிகுந்த செருக்குடன் தன் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டான். சக்ரம் வலிமை பெற்று அவன் தலையை இரண்டாகப் பிளந்தது.

🍧 சிவபெருமான் ஜலந்தராசுரனை அழித்த சக்ரத்தை, தான் பெற வேண்டி திருமால் திருவீழிமிழலையில் தவம் புரிந்தார்.

🌀 ஆற்றல் பொருந்திய சக்கரம் பெறுவதற்காக மஹாவிஷ்னு சிவபெருமானை பூஜித்ததாக பல்வேறு புராணத் தகவல்கள் உண்டு. அப்படி சிவபெருமானை விஷ்னு பூஜித்ததாக திருமாற்பேறு, திருப்பைஞ்ஞீலி, திருவீழிமிழலை ஆகிய சிவஸ்தலங்களின் தல புராண வரலாறுகள் கூறுகின்றன.

🍧 இம்மூன்று தலங்களில் திருவீழிமிழலை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

🌀 திருமாலுக்கு சலந்திரனைச் சம்ஹரிக்கச் சக்கரம் தேவைப்படுகிறது. அதைப் பெருவதற்காக திருவீழிமிழலையில் சிவபெருமானிடம் வருகிறார்.

🍧 ஆயிரம் தாமரை மலர்களால் சிவனை அர்ச்சித்தால் என்னியது கிடைக்கும் என்று அறிகிறார். அதன்படி ஆயிரம் தாமரை மலர்கள் சேர்த்து அர்ச்சனை செய்ய ஆரம்பித்து 999 மலர்களால் அர்ச்சனை செய்து விடுகிறார். ஆயிரமாவது மலர் இல்லை. இன்னொரு தாமரை மலரைக் கொண்டு வந்து அர்ச்சனையை தொடர நேரமும் இல்லை.

Image result for திருவீழிமிழலை

🌀 குறைந்த ஒரு மலருக்குப் பதிலாக தாமரை மலருக்கு ஒப்பான தனது இரு கண்களில் ஒன்றையே பெயர்த்து எடுத்து பூஜையை குறை இல்லாமல் முடித்தவுடன் சிவனும் காட்சி கொடுத்து திருமால் விரும்பியபடி அவருக்கு சக்கராயுதம் கொடுத்து அருள் செய்கிறார்.

🍧 இப்படி மஹாவிஷ்னு தன் கண்ணையே கொடுத்து சிவனை அர்ச்சித்த தலம் தான் திருவீழிமிழலை.

🌀 இப்படி திருமால் ஈசனை வழிபட்ட செய்தியை திருநாவுக்கரசர் தனது பதிகம் மூலமாக பாடுகிறார். நான்காம் திருமுறையில் இடம் பெற்றிருக்கும்  "பூதத்தின் படையர் பாம்பின்" என்று தொடங்கும் பதிகத்தின் 8வது பாடலில் இத்தல வரலாற்றைக் குறித்துப் பாடுகிறார்.

நீற்றினை நிறையப் பூசி, நித்தல்ஆ யிரம்பூக் கொண்டு
ஏற்றுழி யொருநா ளொன்று குறையக்கண் நிறைய விட்ட
ஆற்றலுக் காழி நல்கி, யவன்கொணர்ந் திழிச்சங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்தனாரே.

Ⓜ இப்பாடலின் பொழிப்புரை Ⓜ

திருநீற்றை நன்கு அணிந்து நாடோறும் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்த காலத்தில் ஒரு நாள் ஒரு பூக்குறையவே அப்பூவின் தானத்தில் தன் கண்ணைப் பிடுங்கி அர்ச்சித்த முறுகிய பக்தியை உடைய திருமாலுக்குச் சக்கரத்தைக் கொடுத்து அவன் விண்ணிலிருந்து கொணர்ந்து நிறுவிய கோயிலில் வீற்றிருந்து வீழிமிழலை விகிர்தனார் எல்லோருக்கும் அருள் செய்கிறார்.

நான்காம் திருமுறையில் இடம் பெற்றிருக்கும்  "ஆதியில் பிரமனார் தாம்" என்று தொடங்கும் திருக்குறுக்கை வீரட்டம் தலத்திற்கான பதிகத்தின் 5வது பாடலிலும் இத்தல வரலாற்றைக் குறித்துப் பாடுகிறார்.

"ஏறு உடன் ஏழ் அடர்த்தான் எண்ணி ஆயிரம் பூக்கொண்டு
ஆறு உடைச் சடையினானை அர்ச்சித்தான் அடி இணைக்கீழ்
வேறும் ஓர் பூக் குறைய மெய்ம் மலர்க்கண்ணை யீண்டக்
கூறும் ஓர் ஆழி ஈந்தார் குறுக்கை வீ ரட்டனாரே" 

Ⓜ இப்பாடலின் பொழிப்புரை : Ⓜ

ஏழு இடபங்களையும் ஒரு சேர அழித்த கண்ணனாக அவதரித்த திருமால் கங்கா சடாதரனை அவன் திருவடிகளின் கீழ் ஆயிரம் தாமரைப்பூக்கள் கொண்டு அருச்சித்தானாக அப்பூக்களில் ஒரு பூக்குறைய அக்குறைவை நீக்கத் தாமரை போன்ற தன் கண் ஒன்றனைப் பெயர்த்து அருச்சிக்க, அத்திருமாலுக்கு எல்லோராலும் புகழப்படும் சக்கராயுதத்தை வழங்கினார் குறுக்கை வீரட்டனார்.

🅱 சிறப்பம்சம்:🅱

Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻ ஞானசம்பந்தரும், அப்பரும், படிக்காசு பெற்றபோது அவற்றைக் கடைத்தெருவிற்குக் கொண்டு சென்று பொருள்களை வாங்கிய கடைத்தெரு இப்போது ஐயன்பேட்டை என வழங்குகிறது. அங்கே உள்ள சுவாமி பெயர் - செட்டியப்பர். அம்பாள் - படியளந்த நாயகி. உற்சவமூர்த்தி தராசுபிடித்த கையோடும், அம்பாள் படியைப் பிடித்த கையோடும் காட்சி தருகின்றனர்.

♻ நடராஜர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், சக்கரதானர், பிட்சாடனர், காலசம்ஹாரர், சுவர்க்காவதாநேசர், நாயன்மார்கள் முதலிய உற்சவத்திருமேனிகள் உள்ளன.

♻ தலவிருக்ஷம் ஒவ்வொரு யுகத்துக்கும் ஒவ்வொன்றாக உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. முதலில் சந்தனமாகவும், பிறகு சண்பகமாகவும், பின் வீழிச்செடியாகவும் உள்ளது. அடுத்து இருக்கவுள்ளது பலாமரமாகும்.

திருஞான சம்பந்தர் அருளிய முதல திருமுறை - வாசிதீரப் பாடியது 

வாசி தீரவே காசு நல்குவீர் 
மாசின் மிழலையீர் , ஏச லில்லையே 
காழி மாநகர் , வாழி சம்பந்தன் 
வீழி மிழலைமேல் , தாழும் மொழிகளே . 

2 ஆம் திருமுறை - இரதி தேவிக்கு மன்மதனைத் தோற்றுவித்தமை 

கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப் 
பெண்ணுக் கருள்செய்த பெருமா னுறைகோயில் 
மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும் 
விண்ணிற் புயல்காட்டும் வீழி மிழலையே . 

3 ஆம் திருமுறை - கார்தியாயனியின் திருமணம் 

பூதபதி யாகியபு ரானமுனி புண்ணியணன் மாதைமருவிப் 
பேதமதி லாதவகை பாகமிகை வைத்தபெரு மானதிடமாம் 
மாதவளர்க ளன்னமறை யாளர்கல்வ ளர்த்தமலி வேல்வியதனால் 
எதமதி லாதவகை இன்பமமர் கின்றவெழில் வீழிநகரே. 

5 ஆம் திருமுறை - சுவேதகேது இயமனை வென்றது 

பழகி நின்னாடி சூடிய பாலனைக் 
கழகின் மேல்வைத்த காலனைச் சாடிய 
அழக னேயணி வீழி மிழலையுள் 
குழக னேயடி ஏனைக் குறிக்கோளே 

அருணகிரி நாதர் அருளிய திருவீழிமிழலைத் திருப்புகழ் 

எருவாய் கருவாய் தனிலே யுருவாய் 
இதுவே பயிராய் விளைவாகி 
இவர்போ யவராய் அவர்போ இவராய் 
இதுவே தொடர்பாய் வெறிபோல 
ஒருதா இருந்தாய் பலகோடி யதாய் 
உடனே யவமாய் அழியாதே 
ஒருகால் முருகா பரமா குமரா 
உயிர்கா வேனவோ தருல்தாராய் 
முருகா வேனவோர் தருமோ தடியார் 
முடிமே லினதால் அருள்வோனே 
முனிவோ ராமறோர் முறையோ வெனவே 
முதுசூ ருரமேல் விடும்வேலா 
திருமால் பிரமா அறியா தவர்சீர் 
சிறுவா திருமால் மருகோனே 
செழுமா மதில்சேர் அழகார் பொழில்சூழ் 
திருவீ ழியில்வாழ் பெருமாளே

🅱 இருப்பிடம்:🅱

✈ கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 28 கி.மீ. தூரத்தில் பூந்தோட்டம் உள்ளது. அங்கிருந்து நகர பேருந்துகள் மூலமாக தென்கரை சென்று கோயிலை அடையலாம். அடிக்கடி பேருந்து வசதி இல்லை என்பதால் பூந்தோட்டத்தில் இருந்து ஆட்டோக்களில் செல்வது சிறந்தது. அருகில் உள்ள பெரிய ஊர் பேரளம்.

✈ திருஅன்னியூர், சிறுகுடி, திருப்பாம்பரம் மற்றும் திருமீய்ச்சூர் ஆகியவை இத்தலத்தின் அருகில் உள்ள மற்ற சிவஸ்தலங்கள்.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
🏹 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🏹

No comments:

Post a Comment