Monday 7 May 2018

தொகையடியார்கள்!


ர், பெயர், அற்புதச் செயல்கள் ஆகியவற்றோடு கூடியவை அறுபத்து மூவரின் வரலாறுகள். நாயன்மார்கள் மட்டு மின்றி... சித்தத்தில் சிவத்தை ஏற்றி, முப்பொழுதும் சிவத்தொண்டில் ஈடுபட்டு, நன்னெறியில் வாழும் இன்னும்சில பெரியோர்களையும் தொகையடியார்களாகப் போற்றி வருகிறோம். 
திருத்தொண்டர் புராணத்தில் ‘உலகெ லாம்’ என்ற முதற் செய்யுளில் ஒன்பது ‘உ’காரங்கள் வருகின்றன என்றும், அவை ஒன்பது வகை தொகையடியார்களைக் குறிக்கும் என்றும் கூறுவர். 

சிதம்பரம் திருக்கோயிலில் சிவகங்கை தீர்த்தத்துக்கு வடக்குப் பகுதியில் ஒன்பது லிங்கங்களை உடைய சந்நிதி ஒன்றுள்ளது. ‘திருத்தொண்ட தொகையீச்சரம்’ என்ற பெயருடன் திகழும் அந்தச் சந்நிதி  ஒன்பது தொகையடியாரைக் குறிப்பதற்கு ஏற்பட்டதே என்பர்.  

சுந்தரர் திருத்தொண்டத் தொகையிலும், நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியிலும், சேக்கிழார் பெரிய புராணத்திலும் தொகையடியார்களைப் பற்றிக் கூறியுள்ளனர். நாமும் தொகையடி யார்களைத் தெரிந்துகொள்வோம். 

தில்லைவாழ் அந்தணர் 

தி
ல்லை நடராஜரை முதல்வராகக் கொண்டு மொத்தம் மூவாயிரம் அந்தணர் கள். இறைவன் திருவடித்தொண்டினை ஏற்று ஒழுகுபவர்கள். இவர்கள் நான்மறை, ஆறங்கங்களில் வல்லவர். 

தூய மரபினர்; திருநீற்றின் மகிமையைப் பற்றுக்கோடாகக் கொண்டவர்கள்.தானம், தவம் செய்பவர்; மானம், பொறுமை உடையவர்கள் இவர்கள் திருவாரூர் பெருமானின் திரு வாக்கினால், திருத்தொண்டத் தொகையின் முதலில் வைத்து சொல்லப்பெற்ற பெருமை உடையவர்கள். இம்மையில்  இறையருள் கிடைக்கப் பெற்றவர்.  

பொய்யடிமை இல்லாத புலவர் 

சொல் தெளிவு, பொருள் தெளிவு ஆகியவற்றுக்கு உண் டாகும் பலன்கள், இறையருள் பெறுதல் பொருட்டே என்று துணிந்தவர்கள் இவர்கள்.  

சிவனாரை அன்றி வேறு எவரையும் பாடாத மெய்யடி யவர் இவர்கள். நக்கீரர், கபிலர், பரணர் முதலிய பல புலவர் கள் இவ்வகையில் அடங்குவர்.

பத்தராய்ப் பணிவார் 


ஆசையோடு சிவனை வழி படுதலும், அடியாரைச் சார்ந்து வழிபடுதலும் இவர்களுக்கு உரித்தானது. செய்யும் எத்தொழிலையும் சிவனுக்கென்றே இயற்றுபவர். ‘நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், அடந் தாலும், விழித்தாலும், இமைத்தாலும் மன்றாடும் மலர்பதனொருகாலும்’ மறவாதவர். 

பரமனையே பாடுவார் 

சிவபெருமானையே பொருளாகக் கொண்ட இயலிசைப் பாட்டுகளை உள்ளம் உருகிப் பாடும் அடியார்கள்.

சித்தத்தை சிவன்பாலே வைத்தார் 

பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்து விளங் கும் நாதாந்தத்திலே சித்தம் வைத்துச் சிவத்தை அடைந்து நிற்கும் அடியார்கள். 

திருவாரூரில் பிறந்தார் 

திருக்கயிலை வீற்றிருக்கும் திருக்கணத்தாரே திருவாரூரில் பிறந்தவர்கள். ‘திருவாரூர் பிறக்க முக்தி’ என்பது பழமொழி. 

முப்போதும் திருமேனி தீண்டுவார் 


எப்போதும் இனியராகிய சிவபெருமானை, சிவாகம நெறி தவறாமல், அப்போதைக்கப்போது ஆர்வம் மிகும் அன்பினராய், முப்போதும் அர்ச்சிக்கும் ஆதிசைவர்கள். 

முழு நீறு பூசிய முனிவர் 

தர்மசீலர்; அதத்துவ நெறியுணர்ந்தவர்; நீதி பிழையா நெறி நிற்பவர்; விதிப்படி உருவாக்கிய திருநீற்றை, சிவனைப் போற்றி மேனி முழுவதும் அணியும் முனிவர். 

அப்பாலும் அடி சார்ந்தார் 


தமிழகத்துக்கு அப்பாலுள்ள பிரதேசங் களிலும்... திருத்தொண்டத் தொகையில் போற்றப் பட்ட அடியார்களின் காலத்துக்கு முன்னும் பின்னும், சிவபெருமானது அடியைச் சார்ந்தவர்கள்.  

No comments:

Post a Comment