Friday 9 February 2018

இராமேஸ்வரம் - 7

Image result for இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்

திருப்புல்லாணி 

திருப்புல்லாணி, இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்திலுள்ளது.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பட்ட திருத்தலம் திருப்புல்லாணி ஆதிஜகன்னாத பெருமாள் கோயில்.

Related image

வைணவர்களின் 108 திருப்பதிகளில் ஒன்றான திருப்புல்லாணி திருத்தலத்தில் தான் ஸ்ரீராமபிரான் தர்ப்பை புல்லின் மேல் படுத்திருந்தாராம். சமுத்திரராஜனின் வருகைக்காகக் காத்திருந்தாராம். அவன் வரத் தாமதப்படுத்தியதால் கோபம் கொண்டு அவன் கர்வத்தை அடக்கி அனுமனின் உதவியுடன் சேதுப் பாலத்தைக் கட்டியதாக ஒரு கதை உண்டு.

Related image

இங்கு ஸ்ரீ ராமன் தர்ப்ப சயனக் கோலத்தில் காட்சி தருவது சிறப்பானதாகும். திருப்புல்லாணி ஸ்ரீ இராமன் தரிசனத்துடன் ராமேஸ்வரம் ஸ்ரீஇராமநாத சுவாமியின் புனித யாத்திரை நிறைவடைகிறது.

★★★★★★★★★★★★★★★★



உங்கள் கவணத்திற்கு…..


மூலவர்: இராமநாதசுவாமி, இராமலிங்கேஸ்வரர்

அம்மன்/தாயார்: பர்வதவர்த்தினி, மலைவளர்காதலி 

Related image

தீர்த்தம்: கோயிலுக்கு உள்ளே 22 தீர்த் தங்களும், கோயிலுக்கு வெளியே 36 தீர்த்தங்களும் உள்ளன. 

புராணபெயர்: கந்தமாதன பர்வதம், திருவிராமேச்சுரம் 

ஆலயத்தின் காலகட்டம்: சுமார் 1000-2000 வருடங்கள் பழமையான திருக்கோயில்.



எங்கே உள்ளது: இராமநாதபுரம் மாவட் டம். மதுரையில் இருந்து 200 கி.மீ. தூரத்தில் இராமேஸ்வரம் உள்ளது.

எப்படிச் செல்வது: இரயில் மூலம் இராமேஸ்வரம் வரலாம். சென்னை, மதுரை, கோவை என்று பரவலாக தமிழகத்தின் எல்லா இடங்களில் இருந்தும் நேரடிப் பேருந்துகள் வருகின்றன. விமானம் மூலம் வருபவர்கள் மதுரை விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து வரலாம். 

எங்கே தங்குவது: இராமேஸ்வரத்திலேயே நல்ல பெரிய ஹோட்டல்கள், விடுதிகள் உள்ளன. தேவஸ்தான விடுதிகளும், சத்திரங்களும் கூட இருக்கின்றன. 

தரிசன நேரம்: காலை 4 மணிமுதல் 1.00 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை. 


Rameshwaram ramanatha temple

இராமேஸ்வரம் ஆலயத்தில் நாள்தோறும் நடைபெறும் பூஜைகள்: 

காலை 5.00 மணி - பள்ளியறை தீபாராதனை

காலை 5.30 மணி - ஸ்படிகலிங்க பூஜை

காலை 5.45 மணி – திருவனந்தல்

காலை 7.00 மணி - விளார் பூஜை

முற்பகல் 10.00 மணி – காலசந்தி

பிற்பகல் 12.00 மணி - உச்சிகால பூஜை

மாலை 6.00 மணி – சாயரட்சை

இரவு 9.00 மணி - அர்த்தசாம பூஜை

இரவு 9.30 மணி – பள்ளியறை


பண்டிகைகள் விழாக்கள்: 

இராமநாத சுவாமி கோயிலின் திருவிழாக்கள், ஒவ்வொன்றும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. 

மாத விழாவாகக் கார்த்திகை நாள்கள் சுப்பிரமணியருக்கு நடைபெறும். இந்த விழாவின் போது மயில்வாகனத்தில் கார்த்திகேயனை எழுந்தருளச் செய்து இரவு 8 மணிக்குமேல் 9 மணிக்குள் வீதிஉலாவாக எடுத்து வருவார்கள். 

பிரதோஷ நாள்களில் இராமநாதசுவாமி ரிஷப வாகனத்தில் மூன்றாம் பிராகாரத்துக்குள் வலம் வருவார். 

Image result for இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்

வாராவாரம் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு மேல் தங்கப் பல்லக்கில் பர்வதவர்த்தினி மூன்றாம் பிராகாரத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவாள். 

சிறப்பு விழாவாகக் கருதப்படுபவை சங்கராந்தி தை(புஷ்ய) மாத முதல் நாள் விழா, மகா கிருத்திகை (திருக்கார்த்திகை தினம்) தெப்போற்சவம் தை மாத பெளர்ணமியன்று பஞ்சமூர்த்தி உற்சவம்.

வைகுண்ட ஏகாதசி, ராம நவமி தினங்களில் இராமருக்கு உற்சவம் நடைபெறும்.

ஆடி, தை மாத அமாவாசை தினங்களில் ஸ்ரீகோதண்டராமர் கருட வாகனத்தில் அக்னி தீர்த்தத்துக்கு எழுந்தருளி சேவை சாதிப்பார், தீர்த்தம் கொடுப்பார். 

இவைபோக,

மகா சிவராத்திரி: 

ரிஷப வாகனத்தில் இராமநாதர் எழுந்தருளி தரிசனம் தருவார். இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். 

வசந்தோற்சவம்: 

இதுவும் 10 நாள்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசி சுக்ல சஷ்டி வைகாசி (மே, ஜூன்)யில் தொடங்கி வைசாக பெளர்ணமி தினத்தன்று நிறைவுபெறும். 

இராமலிங்கப் பிரதிஷ்டை உற்சவம்: 

 ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருள்வார். மூன்று நாள்கள் நடைபெறும் இந்த உற்சவம், ஜேஷ்ட சுக்ல சுத்த சஷ்டியில் ஆரம்பித்து அஷ்டமியில் முடிவடையும். பக்தர்கள் கண்டிப்பாகக் கலந்து கொண்டு காணவேண்டிய உற்சவம்.

திருக்கல்யாண உற்சவம்: 

வெள்ளி ரதத்தில் ரிஷப வாகனராக சுவாமி காட்சியளிப்பார். இந்த உற்சவத்தின்போது தபசு நாளில் தங்கப்பல்லக்கில் சயனம் சாதிக்கும் திருக்கல்யாண நாளாகப் போற்றப்படுகிறது. 

நவராத்திரி விழா: 

தசரா, விஜயதசமி எனப் போற்றப்படும் இந்த விழா 10 நாள் கள் கொண்டாடப்படுகிறது.

கந்த சஷ்டி (சஷ்டி நாள்): 

ஆறுநாள்கள் அமோகமாக நடைபெறும் விழா.

ஆருத்திரா தரிசனம்: 

பத்து நாள்கள் விமரிசையாகக் கொண்டாடப்படும் விழா. திருவாதிரையன்று ஏழு திரைகள் அமைத்து சபாபதி பெருமான் சந்நிதியில் விமரிசையாக பூஜை நடைபெறும். 

இது தவிர, சீதையின் நினைவாக ஒவ்வொரு ஆங்கில மாதம் 2ஆம் தேதியன்று அம்பிகையை ஒரு மேடையில் எழுந்தருளச் செய்து பஞ்ச விளக்குகள் 108 ஏற்றிப் பூஜை செய்யப்படுகிறது. சுமங்கலி, கன் னிப் பெண்கள் இந்தப் பூஜையில் கலந்து கொள்வார்கள்.

சீரும் சிறப்பும் மிக்க இந்த விழா நாள்களில் இராமேஸ்வரத்தில் தங்கி ஏதாவது ஒரு விழாவையாவது பூரணமாகத் தரிசிப்பவர்களுக்கு சிவபெருமான் அருள்கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Related image

 சரி, வெளியூரிலிருந்து இத்தலத்துக்கு வருபவர்கள் எங்கே தங்கலாம் ? 

இராமேஸ்வரம் பக்தர்கள் தங்குமிடம் பக்தர்கள் வந்தால் தங்குவதற்கான விடுதிகள், இராமேஸ்வரத்தில் நிறையே இருக்கின்றன. நல்ல வசதிகளுடன் அமைந்திருக்கின்றன.

ஆலயத்துக்குச் சொந்தமான யாத்திரிகர்கள் தங்கும் விடுதிகள் பத்துப் பதினைந்து விடுதிகள் உள்ளன. நவீன வசதிகளுடன் கூடிய விடுதிகளைக் குறைந்த வாடகையில் தேவஸ்தானம் அளித்து வருகிறது. இது தவிரவும் ஆலயத்துக்கு அருகிலும் சுற்றுவட்டாரத்திலும் அநேக சத்திரங்களும், ஹோட்டல்களும், ஏராளமான லாட் ஜுகளும் இருக்கின்றன.

devipattinam-rameshwaram

    - திருத்தல புனித யாத்திரை நிறைவடைகிறது..

No comments:

Post a Comment