Friday 9 February 2018

இராமேஸ்வரம் - 5

Image result for ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் நந்தி
மலைவளர் காதலி !

பர்வதவர்த்தினி ராமநாத சுவாமியின் பத் தினி. அழகிய தமிழில் "மலைவளர் காதலி” என்று இவள் மீது பதிகம் பாடியுள்ளார் தாயுமானவர். தாயுமானவர் ஒருமுறை, பெரிய போர்ப் படைக்குத் தலைமை ஏற்று இந்த சேதுவுக்கு வந்தாராம் ! எதற்காக ?

ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயத்தில் விலையுயர்ந்த நகைகளும் பொருட்களும் சிலைகளும் இருக்கின்றன என்பதை டச்சுக்காரர்கள் எப்படியோ அறிந்து கொண்டார்கள். திரிகோணமலைக்குச் சென்று அங்கே உள்ள கோயிலைத் தகர்த்துக் கொள்ளையடித்துவிட்டு அப்படியே ராமேஸ்வரத்திலும் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டினார்கள்.

இந்தச் செய்தி தாயுமானவருக்குத் தெரியவந்தது. கிட்டத்தட்ட முப்பதாயிரம் பேருடன், அவர்களுக்குத் தளபதியாக பொறுப்பேற்று ராமேஸ்வரத்துக்கு வந்திறங்கினார் தாயுமானவர். அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதிக்குச் சென்றார். அவளின் எழிலார்ந்த திருவுருவத்தைக் கண்டு பரவசமடைந்து பாடல் புனையத் தொடங்கினார். திருட்டுக் கூட்டம் திரும்பிப் போய்விட்டது.

அந்தப் பாடலை அம்பாள் சந்நிதியின் தென்புறச் சுவரில் வெள்ளைச் சலவைக் கல்லில் வடித்துப் பதித்து வைத்திருக்கிறார்கள்.

இந்த பர்வதவர்த்தினியை வழிபட்டால், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அம்பாளின் கருவறை ஈசன் சந்நிதிக்கு வலப்புறமாக அமைந்திருப்பது சிறப்பு. ராமேஸ்வரம், திருவானைக்கா, மதுரை, திருமயிலை கபாலீச்சரம் ஆகிய தலங்களில் மட்டுமே அம்பாள் வலப்புறமாகக் குடிகொண்டு இருக்கிறாள்.

பர்வதவர்த்தினி வலமாகவும், அன்னை விசாலாட்சி இடப்புறமாக இந்த இரு லிங்கக் கோயில்களை இங்கே மட்டும்தான் தரிசிக்க முடியும்.

மலைவளர் காதலியான அம்பாளின் சந்நிதியிலுள்ள ஸ்ரீ சக்ரத்தைத் தரிசித்து ஆசிபெறுவது சிறப்பானதாகும்.

அம்பிகையின் அழகு உருவம் !

இத்திருத்தலத்தில் மிகவும் சிறப்பானதாகப் போற்றப்படுகிறது பள்ளிஅறை பூஜை.

 பள்ளியறை, அம்பாள் சந்நிதியின் வட கிழக்கு மூலையில் அமைந்துள்ளது. கண்ணாடியால் ஆனதாக இந்த மாடம் காட்சியளிக்கிறது.

ராமநாதர் சந்நிதியில் உள்ள, தங்கத்தால் ஆன ராமநாதர் விக்ரகத்தை பள்ளியறைக்கு ஒவ்வொரு நாளும் இரவு எழுந்தருளச் செய்வார்கள்.

பள்ளியறையில் இதேபோல தங்கத்தால் ஆன அம்பாள் பள்ளியறை நாயகியாய் விளங்குகிறாள்.

ராமநாதரும் அம்பிகையும் திருப்பள்ளி கொள்வதையும் திருப்பள்ளியெழுச்சி பெற்று மீள்வதையும் பூஜையாகவே கொண்டாடுகிறார்கள்.

அதாவது இரவில் சயன பூஜையும் அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சி பூஜையும் செய்தபின் ராமநாதரை மூலஸ்தானத் துக்கு எழுந்தருளச் செய்யும் வைபவம் நடைபெறுகிறது.

Rameshwaram ramanatha temple

இந்த இரண்டு பூஜைகளுமே பரவசமூட்டு கின்றன. பள்ளியறையில் திருப்பள்ளியெழுச்சி பூஜையின் போது பக்தர்கள் நீராடி வந்து துதிபாடி தரிசனம் செய்கிறார்கள். அப்படி தரிசனம் செய்ய வரும் அநேக வட இந்திய பக்தர்கள் அழகே உருவான அன்னைக்குக் கால் கொலுசு அணிவித்து மகிழ்கிறார்கள்.

இந்தப் பள்ளியறை நாயகியான அம்பிகையின் உருவம் நேர்த்தியாக அமைந்திருப்பது தனிச் சிறப்பு.

எப்போதும் வலதுகரம்தான் இறைவனின் தோள் சேரும்படி அமைந்திருப்பது வழக் கம். அப்போது வலக்கையுடன் முகமும் மார்பும் அம்பிகை மீது சரிவது போலிருக்கும்.

ஆனால், இங்கே அம்பிகை வலக்கைப் பக்கமாகச் சாயாமல் இடதுபக்கமாகச் சாய்ந்திருக்கும் தோற்றம் கொண்டவளாகக் காணப்படுகிறாள். இதனால் வலது கரத்தை இறைவனின் கையுடன் இணைக்கும் போது முகம் இடதுபுறமாக விலகிப்புது மணப்பெண் நாணி ஒதுங் குவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. இந்த எழில்மிக்க காட்சி மிகவும் ரசமாக இருக்கிறது.

அம்பிகையின் உருவம் நெளிவு எதுவுமின்றி அடிமுதல் நுனிவரை ஒரே நேர்கோடாக அமைந்திருக்கிறது இப்படி அமைந்திருப்பதை ‘நிர்ப்பங்க வடிவம் என்பார்கள்.

தங்க பந்தனம் என்று சொல்லப்படும் தங்க ஆபரணங்கள் சார்த்தப்பட்ட திருக்கோலத்தில் இங்கே அம்பிகை ஜொலிக்கிறாள். நான்கு கரங்களில் இரண்டில் மலர்களை ஏந்தியும் அபயகரமும், வரத கரமும் கொண்டு உபய பாவனையில் காட்சிதரு கிறாள் அம்பிகை.

பிரம்மாண்ட நந்தி

அம்பிகையின் கோயிலில் இருந்து ராம நாதர் சந்நிதிக்கு வரும் வழியில் உள்ளது நந்தி மண்டபம். சிவதீர்த்தம் வழியாகவும் நந்தி மண்டபம் வரலாம். தஞ்சாவூர், திரு விடைமருதூர் ஆலயங்களில் உள்ள நந்தி போன்றே பிரம்மாண்டமாக இருக்கிறார் நந்திதேவர்.

கி.பி. 16ஆம் நூற்றாண்டில் மதுரை மன்னர் விஸ்வநாத நாயக்கர் ஆட்சியின் கீழ் குறு நில மன்னராக இருந்த சின்ன உடையான் சேதுபதி கட்டத்தேவர் என்பவர் நந்தி மண்டபத்தையும் இன்னும் சில திருப்பணிகளையும் செய்து இருக்கிறார்.

Image result for ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில்

இந்த மண்டபத்திலுள்ள நந்தியின் நீளம் 22 அடி:அகலம் 12 அடி உயரம் 17 அடி. இந்த நந்திச் சிற்பம் செங்கல் மற்றும் சுண் ணாம்பு கலந்து கட்டப்பட்ட சுதைச் சிற்பம் இந்த நந்தி சிற்பத்தின் இருபுறத்திலும் மதுரை மன்னர்களான விஸ்வநாத நாயக் கர், கிருஷ்ணப்பநாயக்கர் ஆகியவரின் உருவங்களும் உள்ளன. நந்தியின் பின்புறம் கொடிமரம் !

இந்த மண்டபத்தின் எதிரே கிழக்கில் நவக்கிரக சலவைக்கல் மேடை இந்த நவக்கிரக மேடைக்கும் முருகன் சந்நிதிக்கும் இடையே ஒரு மேடையில் பெரிய எண்ணெய்க் கொப்பரைச் சட்டியுள்ளது. நரக வேதனையைத் தவிர்க்க வேண்டிக் கொள்ளும் இடம்.

இது கிழக்குப் பார்த்த சந்நிதி. எனவே வாசலில் சூரியன் தேவியுடன் இருக்கிறார். சூரியனின் எதிரே சோமாஸ்கந்தர் மண்டபம் உள்ளது. மகாமண்டபம் என்றும் சொல்லப்படுகிறது.

இருபத்திமூன்றாவது தீர்த்தமாகக் கருதப்படும் சர்வ தீர்த்தம் இங்கே இருக்கிறது. மற்றும் சபாபதி, அம்பலவாணர், சிதம்பரேசர் என்று நடராஜப் பெருமானின் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன.

கணங்கள் குழுமியிருக்கும் இடத்தில் நடனம் ஆடுபவர் சபாபதி

ஆகாசத்தில் நடனம் ஆடுவர் சிதம்பரேசர்

யோகியர் மட்டுமல்லாமல் எல்லோருக்கும் காட்சி தந்து ஆடுபவர் அம்பலவானர்.


சகஸ்ரலிங்கதரிசனத்தை இங்கே காணலாம். இதுவும் ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. இந்த லிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்தது விபீஷணன் என்று சொல்லப்படுகிறது.

அனுமன் கொண்டு வந்த லிங்கத்துக்கே முதல் பூஜை

அடுத்ததாக உள்ளது, காசிவிஸ்வநாதர் சந்நிதி. 

காசியில் விஸ்வநாதர் சந்நிதி தண்ணிர் நிரம்பிய தொட்டி போன்ற அமைப்பில் உள்ளது போலவே இங்கேயும் விஸ்வநாதரின் கருவறை நீர் விட்டு நிரப்பும் அமைப்பாகவே இருக்கிறது.

அனுமன் கொண்டுவந்த இந்த லிங்கத்துக்கும் அன்னை விசாலாட்சிக்கும் முதல் பூஜை என்ற பெருமையை அளித்தவர் ஸ்ரீ ராமபிரான்.

இந்தக் காசிவிஸ்வநாதர் பூஜை முடிந்த பின்தான் இராமலிங்கம் என்று போற்றி வணங்கப்படுவதும் ஸ்ரீ ராமர் பூஜை செய்த பெருமை கொண்டதுமான இராமநாதருக்குப் பூஜையைத் தொடங்குகிறார்கள்.

இதோ இராமநாத சுவாமியின் மூலஸ்தானம். இங்குள்ள லிங்கம் சீதையால் உருப்பெற்று ஸ்ரீ ராமனால் பூஜை செய்த புனிதம் கொண்டது. 

முன் மண்டபத்தில் உள்ள கேடகம் (ரதம்) ஒன்றில் ஸ்ரீ ராமபிரான், சீதாப்பிராட்டி, அனுமன், சுக்ரீவன் ஆகியோரின் விக்கிரகங்களைத் தரிசிக்கலாம். 

Image result for ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் நந்தி

இங்கே ஆஞ்சநேயர் இரண்டு கைக ளிலும் லிங்கத்தை அணைத்தபடியும், அனுமன் திரும்பி வந்ததை ராமனிடம் தெரிவிக்கும் தோரணையில் சுக்ரீவன் தலைவணங்கி வாய்பொத்திநிற்பதையும் காணமுடிகிறது.

அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தூண்களை உடைய முன் மண்டபம் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது.

சுவாமிக்கு முன்னால் மரகத ஸ்படிக லிங்கம் வைத்துத்தான் அபிஷேகம் நடக்கிறது. அந்த ஸ்படிக லிங்கத்தின் வழியே மூலவரான இராமலிங்கத்தைத் தரிசிப்பது சிறப்பானதாகும்.

ஐந்து தலைநாகம் குடைபிடித்த கவசம் கம்பீரமாகக் காட்சிதருகிறது. 

திருமேனியில் ருத்திராட்சமாலை, பதக்கங்களுடன் பீடத்தில் காட்சித் தருகிறார் இராமலிங்கம். இரண்டு புறத்திலும் மேலங்கி பட்டு மடிப்பு வீசிய பாவனையில் வீற்றிருக்கிறார்.

 ஓங்கார வடிவில் 9 தங்க விளக்குகள். 25 விளக்குகள் கொண்ட வெள்ளிச் சுடர்விரியும் திருவாட்சி அழகுக்கு அழகு சேர்ப்பதாக விளங்குகிறது. 

இராமநாதரின் சந்நிதிக்குள் விழிமூடி மனம் வழியே இறைவனைத் தரிசித்து இந்தப் பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களை அவர் முன் சமர்ப்பித்து மனம் உருக வேண்டிக் கொண்டால் வினைகள் விடுபட்டுப் போகின்றன.

இறைவனின் திருமேனியைக் கண்குளிரக் கண்டு சேவித்து மனம் லேசாகிப் பரவச நிலை பெறுவதே சுகானுபவம்தான்.

புனிதத் தீர்த்தங்களும், நீராடல் பலன்களும்…! 

Image result for ராமேஸ்வரம் புனிதத் தீர்த்தம்

இராமநாத சுவாமியின் திருக்கோயிலுக்குள் 22 தீர்த்தங்கள் இருக்கின்றன. அவை களின் பெருமையையும் அமைந்துள்ள இடத்தையும், நீராடினால் கிடைக்கும் பலன்களைப் பற்றியும் பார்ப்போம். 

Image result for ராமேஸ்வரம் 22 தீர்த்தங்கள்

1. மகாலசுஷ்மிதீர்த்தம்: இது கோயிலின் பிரதான வாசலில் அனுமன் சன்னிதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் நீராடினால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம். 

2. சாவித்திரி தீர்த்தம்: அனுமன் கோயிலுக்கு மேல்புறம் உள்ளது. இதில் நீராடி னால் சகல நோய்களும் தீரும். 

3. காயத்ரி தீர்த்தம்: அனுமன் கோயிலுக்கு மேல்புறம் உள்ளது. இதில் நீராடினால் பிறர் தந்த சாபத்திலிருந்து விடுபட லாம். 

Image result for ராமேஸ்வரம் புனிதத் தீர்த்தம்


4. சரஸ்வதி தீர்த்தம்: அனுமன் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. கலைகள் வளரும். வித்தைகள் கைகூடும்.

5. சேது மாதவ தீர்த்தம்: இது மூன்றாம் பிராகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம். இதில் நீராடினால் லஷ்மி கடாசுஷ்ம் பெறலாம்.

6. நள தீர்த்தம்: மூன்றாம் பிராகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னிதிக்கு தென்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சூரிய தேஜஸை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

Related image

7. நீல தீர்த்தம்: மூன்றாம் பிராகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னிதிக்கு வடபுறம் உள்ளது. இதில் நீராடுவதால் சமஸ்த யாகம் செய்த பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர். 

8. கவாய தீர்த்தம்: இத்தீர்த்தம் மூன்றாம் பிராகாரம் சேது மாதவர் சன்னிதியின் முன்புறம் உள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடுவதால் உயர் பதவிகிட்டும். தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

 9. கவாட்ச தீர்த்தம்: இது மூன்றாம் பிராகாரம் சேது மாதவர் சன்னிதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் நரகத்துக்குச் செல்ல மாட்டார்கள். மன வலிமை, தேக ஆரோக்கியம் கிட்டும். செய்த பாவம் குறையும்.

10. கந்தமாதன தீர்த்தம்: சேது மாதவர் சன்னிதியின் முன்பகுதியில் உள்ளது. இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெறுவர். 

11. சங்கு தீர்த்தம்: இராமநாதசுவாமி கோயில் பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிராகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப்பெறும். 

12. சக்கர தீர்த்தம்: இராமநாதசுவாமி கோயில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிராகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி செளக்கியம் பெறுவர்.

13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம்: இது இரண்டாம் பிராகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னிதி அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் பிரம்மஹத்திதோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாகும். பில்லி சூனியமும் நீங்கும். 

14. சூர்ய தீர்த்தம்: இந்தத் தீர்த்தம் இரண்டாம் பிராகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது. இந்தத் தீர்த்தத்தில் நீராடுவதால் நடக் கப் போவதை அறியும் ஆற்றல் ஏற்படும். நோய்கள் தீரும். 

15. சந்திர தீர்த்தம்: இது இரண்டாம் பிராகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடுவதால் உணவுக்குக் கஷ்டமில்லாத வாழ்க்கை அமை யும். நோய் நொடி விலகும். 

16. கங்காதீர்த்தம்: இத்தீர்த்தம் திருக் கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் அமைந்துள்ளது. இதில் நீராட அரசியல் செல்வாக்கு மேலோங்கும். 

17. யமுனா தீர்த்தம்: திருக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் அமைந்துள்ளது. இதில் நீராடினால் ராஜ வாழ்க்கை அமையும். 

18. கயா தீர்த்தம்: இந்தத் தீர்த்தமும் திருக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் தான் அமைந்துள்ளது. இதில் நீராட வம்ச விருத்திகிட்டும். 

19. சாத்யாம்ருத தீர்த்தம்: திருக்கோயிலின் அம்பாள் சன்னிதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டல சுஷ்மி சன்னிதியின் தெற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடினால் தேவதா கோபம் பிராமண சாபம் நிவர்த்தியாவதுடன், மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும். 

20.சிவதீர்த்தம்: இந்த தீர்த்தம் சுவாமி சன்னிதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னிதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்திதேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது. இதில் நீராடினால் சகல செளபாக்கியமும் கிடைக்கும். 

21. சர்வ தீர்த்தம்: இந்தத் தீர்த்தம் முதல் பிராகாரத்தில் ராமநாதசுவாமி சன்னிதி முன் உள்ளது. இதில் நீராடினால் பிறவிக் குருடு, நோய், நரை திரையும் நீங்கி சுகம் பெறலாம்.

Image result for ராமேஸ்வரம் 22 தீர்த்தங்கள்

22. கோடி தீர்த்தம்: விசாலாட்சி அம்மன் சன்னிதியின் அருகில், ராமர் தன் வில்லால் உருவாக்கிய கோடி தீர்த்தம் அமைந்துள்ளது. இதில் நீராடினால் உலக ஞானம் பெறலாம். கல்வியறிவு கிட்டும்.

Related image

                                              - திருத்தல யாத்திரை வ(ள)ரும்..

No comments:

Post a Comment