Tuesday 13 September 2016

முருகன் ஒரு விளக்கம்


ஆதிகாலந்தொட்டே தமிழ்நாட்டில் முருகன் வழிபாடு இருந்தது. பழந்
தமிழர்கள் இறைவனை இயற்கை அழகு எல்லாவற்றிலும் கண்டனர்.
இறைவனை அழகன் என்ற அர்த்தமுள்ள சொல்லாலே அழைத்தார்கள்.
முருகன் என்றால் அழகன் என்றே பொருள். விரிவாகச் சொன்னால்
முருகன் என்றால் அழகு, இனிமை, இளமை, தெய்வத் தன்மை, மணம்,
மகிழ்ச்சி .. என்ற ஆறு தன்மைகளும் ஒருங்கேயுடையவன் என்பதாகும்.
முருகன் உயர்வானவன். ஆகவே அவனுக்கு உயர்ந்த இடங்களிலே
வீடு அமைத்தார்கள். குறிஞ்சிக்கிழான் என்றுங் கூறுவர். பஞ்ச
பூதங்களிலும் எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கும் பரம்
பொருளாகையால் அவனுக்கு ஆறு முகங்களை உருவகித்து,
ஆறுமுகன் என்றுங் கூறுவர். முருகன் ஆறறிவு படைத்த மனிதன்
வணங்குதற்குரிய தெய்வம் என்றுங்கொள்ளலாம்.




இறைவன் ஞான வடிவினன். ஞான பண்டிதன் சக்தியின் துணை
கொண்டு உலகைப் படைத்துக் காத்து ரட்சிக்கின்றான். அதை
விளக்கும் சொருபமே முருகன். முருகன் ஞான சொருபம். வள்ளி
இச்சா சக்தி (விருப்பம், ஆசை). தெய்வானை கிரியா சக்தி
(செயலாற்றல்). வள்ளித் திருமணத்தில் சிறந்த தத்துவம் அடங்கி
உள்ளது. இறைவன் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவன்.
இறைவன் சாதி வித்தியாசங்களைப் பார்ப்பதில்லை. ஆகவே இந்து
சமயம் சாதி வித்தியாசக் கொள்கையை ஆதரிக்கவில்லை என்பதை
வள்ளித் திருமணம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மேலும் வள்ளித்
திருமணம் வள்ளியாகிய சீவன், பேரின்பமாகிய சிவத்துடன்கலப்பதை
விளக்குகிறது.



முருகன் உருவ விளக்கம்-என் பார்வையில்---
1, வாகனம் ----மயில் ---பறவைகளில் ,பெறியது ,அழகான தோகைஉடையது ,தோகையில் நிறைய கண் போன்ற அமைப்பு உள்ளது,வேகமாக பறக்கக்கூடியது .-இது மனம் என்பதை குறிக்கிறதுமனிதமனம் விசித்திரமானது ----மிகவும் வேகம் நிறைந்தது --அதனால் தான்----மனோ வேகம் ----என்று குறிப்பிடுகிறார்கள்

கலர் கலரான தோகையை போல --வண்ணமயமான கற்பனை நிறைந்தது .

மனதை அடக்குதலே --அதை வாகனமாக்கிகொள்ளுதலின் அர்த்தம் .

நாம் ஓட்டும் வாகனம் நம் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் .அப்போதுதான் போகவேண்டிய இடத்துக்கு போகமுடியும் .


2.பந்தம் -----பாம்பு ---பாம்பு ,சுற்றி சுற்றி ஏறும் ,விஷம் நிறைந்தது

---அதேபோல் போல் தான் ,உலக உறவுகள் ,நம்மைசுற்றியுள்ள சொந்தங்கள் .

அதை அடக்கி காலுக்கு கீழே வைக்க வேண்டும் .

மயிலான மனம் அதை தின்று ஜீரணிக்க வல்லது .

மயிலான மனம் --உலக ஆசை பந்தங்களான பாம்பை தன் காலடியில்பற்றியுள்ளது .




3.வலக்கையில் வேல் ---

இது தைரியம் ,வீரம் ஆகியவற்றைகுறிக்கின்றது .தைரியம் ,வீரம் --என்றால் கத்திஎடுத்து குத்துவதோ ,திருடன்வந்தால் போரிடுவதோ அல்ல ?அது மட்டும் தான் தைரியம் அல்ல .

நாம் இந்த உலகில் பிறந்து விட்டோம் .நமக்குஎன்று ஒரு சூழ் நிலை அமைந்து விடுகின்றது .

அந்த சூழ் நிலையில் நாம் வாழ எல்லாநேரத்திலும் தைரியத்துடனும் நடக்கவேண்டும் .இது மிகவும் ஆழமாகநினைக்க வேண்டிய ஒன்று


4.இடக்கையில் சேவல் கொடி ----

விழித்திரு என்பதை குறிக்கிறது . சூரியன் உதிப்பது எப்படித்தான்தெரிகிறதோ ?:எல்லாரும் விழித்து எழுந்திருங்கள் என்று "சுற்றுவட்டாரத்தையே கூவி எழுப்பும் பறவை உள்ள கொடி ---அறிவு விழித்திருக்கவேண்டும் என்பதை குறிக்கின்றது

வலதுகை செயலாற்றும் கை ---அதில் -தைரியம் வீரம்வைராக்கியம் ஆகியவற்றை குறிக்கும் ---வேல்

இடது கை ---வலதுகைக்கு உதவி புரியும் கை ---வீரத்திற்கு உதவிபுரியும் --
விழித்திருப்பதை குறிக்கும் ------சேவல் கொடி !


5,ஆறுமுகம் -------ஐந்து முகம் --ஐம்புலன்கள் +அவைகளைவழிநடத்த வேண்டிய விவேகம் ஆறாவது முகம்

No comments:

Post a Comment