Tuesday 13 September 2016

திருநீறு அல்லது விபூதி பற்றிய சிறு பார்வை


திரு நீறு என்ற வார்த்தையிலேயே திரு மற்றும் நீறு என்ற இரு வார்த்தைகள் உள்ளன. திரு என்பது தெய்வத் தன்மை என்று பொருள். நீறு என்பது வினைகளை நீக்குவது என்று பொருள். திருநீறுக்கு வினைகளை அகற்றி தெய்வத்தன்மையை கொடுக்கும் சக்தி உள்ளதால் அதை திருநீறு என்று அழைத்தனர்.

மேலும் அனைவருக்கும் ஐஸ்வரியத்தை தரும் வல்லமையுடையதால் இதை விபூதி என்றும் பெயர் பெற்றது. லக்ஷ்மி வாசஞ் செய்யும் பசு மாட்டின் பின்புறத்திலிருந்து வெளிப்படும் சாணம் எரிக்கப்பட்டு விபூதி தாயாரிக்கப்படுகிறது. மேலும் அனைத்து தேவதைகளும் பசுவின் உடம்பில் இருக்கிறார்கள் எனவே பசுமாட்டின் சாணத்திலிருந்து தாயாரிக்கப்டும் விபூதி அருட்செல்வத்தின் சின்னமாகும். பூதி என்பது அருட்செல்வத்தின் பெயர். திருநீறு அருட்ச்செல்வத்தை தருவதாலும் அதை விபூதி என்று பெர்பெற்றது.

திருநீறை இட்டுகொண்டால் தீயிடைப்பட்ட விறகு போல் வினையும் நோயும் வெந்து போய்விடும் என்கிறார் அப்பர்.

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்கமாற் பூசி மகிழ்வாரே யாமாகில்
தங்கா வினைகளுஞ் சாரும்
சிவகதி சிங்காரமான திருவடி சேர்வரே.


திருநீறை அணிவதால் தடையில்லாத இறைசிந்தனையும் நம் பாவங்கள் அனைத்து அழிந்து முக்தி அடைமுடியும் என்கிறார் திருமூலர்.


அணுக்கதிர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் சாணத்திற்கு உண்டு எனவே தான் பசுஞ்சாணத்தில் விபூதி தயாரிக்கப்படுகிறது. நமது உடலில் துர்நாற்றங்களை அகற்ற பசுஞ்சாணத்தால் தயாரிக்கப்பட்ட விபூதி பயன்படுகிறது.

சுக்ஷூம்னா என்ற நாடி நமது இதயத்திலிருந்து மூளைக்கு நெற்றியின் ஊடே செல்கிறது. அந்த நாடியின் சிறப்பாக செயல் பெற பசுஞ்சாணத்தால் முறையாக தயாரிக்கப்பட்ட திருநீறு நெற்றியில் தரிக்க வேண்டும்.திருநீறு ஆன்மாக்களை ரக்ஷித்ததால் ரக்ஷை என்றும், சிவத்தத்துவத்தை விளக்குவதால் பசிதம் என்றும்,பாவங்களை நீக்குவதால் பஸ்மம் என்றும், நம் பாவ மலத்தை நீக்குவதால் க்ஷாரம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment