Saturday 17 September 2016

கருடன்


*மகாவிஷ்ணுவின் வாகனமான கருடன்.,இந்துக்கள் அனைவராலும் கருடாழ்வார் என வணங்கபடுகிறார்.

*பெருமாள் கோயிலில் மூலவருக்கு நேராக கைகளைக் கூப்பிய நிலையில் கருடாழ்வார் எழுந்தருளிப்பார்.

*வைகுண்டத்தில் இருந்து திருமலையான சப்தகிரியை (திருப்பதி) பூலோகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தவர். சப்தகிரி என்றால் ஏழு மலை. அந்த ஏழுமலைகளில் ஒன்றுக்கு கருடனின் பெயரில் கருடாத்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது.

*பெரும்பாலும் தெய்வத்தின் வாகனத்திற்கு,வாகனம் கிடையாது ஆனால் விஷ்ணுவின் வாகனமான கருடனுக்கு வாகனம் உண்டு.

*கருடனுக்கும் ஒரு வாகனம் இருப்பதாக விஷ்ணு சகஸ்ரநாமத்தில், சுபர்ணோ வாயு வாஹனா: என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது காற்றே அதன் வாகனம்.

*கருடனைப் பார்ப்பதும், அதன் குரலைக் கேட்பதும் நன்மையின் அறிகுறியாகும்.ஒவ்வொரு தினக்களிலும் கருடனின் தரிசனம் ஒவ்வொரு பலனை தரும்.

*ஞாயிறு – நோய் நீங்கும், திங்கள் – குடும்பம் செழிக்கும்,செவ்வாய் – உடல் பலம் கூடும்,புதன் – எதிரிகளின் தொல்லை நீங்கும்,வியாழன் – நீண்ட ஆயுள் பெறலாம், வெள்ளி – லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும், சனி – மோட்சம் கிடைக்கும்.

*கருடனின் சகுனம் முக்கியமாக கருதபடுவதால்தான்,தமிழகத்தின் உள்ள அனைத்து கோயில் கும்பாபிஷேகங்களிலும் கருடனின் தரிசனம் கிடைத்தபிறகே கலசத்தில் நீர் ஊற்றபடுகிறது.

No comments:

Post a Comment