Monday, 7 May 2018

சூரிய பூஜை... பனையபுரத்தின் அற்புதம் !

ட்டடக் கலையில் உலக அதிசயங்களுக்கு இணையானது, புராணப் பெருமைகள் மிகுந்தது, தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலம், தக்கன் பேறுபெற்றதும் சிபிச் சக்ரவர்த்தி முக்திபெற்றதுமான திருத்தலம், இறைவனையும், இறைவியையும் சூரியன் ஏழுநாள்கள் ஒருசேர வழிபடும் அபூர்வ க்ஷேத்திரம், சோழமன்னனின் குறுநாட்டுத் தலைநகரம், சோழ மன்னனின் காதலி பரவை நங்கை வாழ்ந்த ஊர், கண்கோளாறுகள் போக்கும் பரிகாரத் தலம்... ஆகிய பல சிறப்புகளுடன் திகழ்கிறது, விழுப்புரம் மாவட்டம், பனையபுரத்தில் அமைந்துள்ள புறவார்ப் பனங்காட்டீசர் திருக்கோயில். சென்னைக்குத் தெற்கே 150 கி.மீ. தொலைவில் உள்ளது.   

ராஜேந்திர சோழ வளநாட்டின் துணைக் கோட்டங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது பனையூர். இதன்  உட்பகுதி நாடான புரையூர் நாட்டின் பரவை புரமாக விளங்கியதே இன்றைய பனையபுரம். பிற்காலச் சோழர் காலத்தில் தனியூராக விளங்கியது. பல ஊர்களின் தலைமை ஊருக்கு தனியூர் என்ற பெயர் உண்டு. இங்குள்ள சிவன் கோயில் நடுநாட்டின்  20-வது பாடல் பெற்ற தலமாகும். இது நடுநாட்டு சூரியத்தலம் என்பது குறிப்பிடத் தக்கது.

ராஜேந்திர சோழன் போற்றிய க்ஷேத்திரம்!

இவ்வூரில் வாழ்ந்த நாட்டியப் பேரொளி பரவை நங்கையின் மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்தார் முதலாம் ராஜேந்திர சோழன். அவளின் பெயரால் பல அறக்கொடைகளையும், தான தர்மங்களையும்  வழங்கியிருக்கிறார் ராஜேந்திரன். ஓர் அரசிக்கு இணையாக அவளை மதித்துப் போற்றியிருக்கிறார் சோழப் பேரரசர். இதற்கு ஆதாரமாகக் கோயிலின் தென்புறச் சுவரில்  இரண்டாம் ராஜேந்திர சோழனின் (கி.பி. 1052-கி.பி.1065) ஆறாவது ஆட்சி ஆண்டில்  செதுக்கப்பட்ட கல்வெட்டு விளங்குகிறது. 

இந்தக் கல்வெட்டின் மூலம், ராஜேந்திரன் மற்றும் பரவை நங்கை ஆகிய இருவரின் சிலைகள் இருந்ததாகவும், அவற்றுக்கு விளக்கேற்றவும், நைவேத்தியம் செய்யவும் வழங்கப்பட்ட கொடைகளைப் பற்றியும்  அறிய முடிகிறது. ஆனால், கலைநயம் கொண்ட இச்சிலைகளின் இருப்பிடம் அறியப் படவில்லை.  
இந்தக் கல்வெட்டில்  இவ்வூர்  பரவைபுரம் எனக் காணப்படுகிறது.  பரவையாரைப் பற்றிய குறிப்பு திருவாரூர் தியாகராஜர் கோயில் கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் பரவையாரின் பெயரில் ஓர் ஊரை உருவாக்கி ஆலயம் எழுப்பப்பட்ட செய்தி காணப்படுகிறது. ஆக, பரவைபுரம் என்பதே  பனையபுரமாக மருவியிருக்க வாய்ப்புண்டு.  அந்நாளில் பரவையாரின் பிறந்தநாளை கௌரவிக்கும் வகையில், சித்திரை மாதத்தில் ஜோதி திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டது.
 
புறவார் என்ற சொல்லை புறவு + ஆர்  எனப் பிரித்துப் பொருள் கொண்டால்,  புறா நிறைவுற்ற இடம் என அறிய முடிகிறது. புறாவின் உயிரைக் காக்க, தன் தசையை அரிந்துகொடுத்து,   தன் உயிரையும்  மாய்க்கத் துணிந்த சிபிச்சக்ரவர்த்தியை இறைவன் தடுத்தாட்கொண்ட இடம் என்கிறது புராணம். கோயிலின் ராஜகோபுரத்தின் எதிரே உள்ள வாகன மண்டபத்துக்குள் உள்ள  நடுவரிசைத் தூணில் இக்காட்சி புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளதைக் காணலாம். 

சூரியனும் தட்சனும் பேறுபெற்ற திருத்தலம் 

தட்ச யாகத்தில் கலந்துகொண்டதால் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு பற்களை இழந்து தன் பலத்தையும் இழந்த சூரியபகவான், இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டு சாபமும் பாவமும் நீங்கிப் பழைய நிலையை அடைந்ததாக தல புராணம் சொல்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் சித்திரையில், ஏழு நாள்கள் சூரிய பூஜை நடைபெறுகிறது.  

அதேபோல், தனது பழி பாவம் தீர தட்சன் வழிபட்ட சிவத் தலங்களில் ஒன்றாகவும் பனையபுரம் திகழ்கிறது. இதற்குச் சான்றாக  ராஜகோபுரத்தின் உள்ளே  வடக்கு முகமாக ஆட்டுத் தலையுடன் தட்சன் வழிபடும் சிலை, புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது.

சரித்திரத்தில் பனையபுரம்...

இங்கே கல்வெட்டுகள் பல காணப்பட்டாலும் அரசு மரபினரால் நிர்மாணிக்கப்பட்டவை 16 மட்டுமே. இவற்றில், முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012), 2-ம் ராஜேந்திரன் (கி.பி.1058), உடையார் ஆதிராஜேந்திர தேவன் (கி.பி. 1070), முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1118), முதலாம் ஜடவர்ம சுந்தரபாண்டியன் (கி.பி.1265), மூன்றாம் விக்கிரபாண்டியன்(கி.பி.1288)  ஆகியோரது குறிப்பிடத்தக்கவையாகும். 

இவற்றின் நகல்கள் மைசூர் தலைமைக்  கல்வெட்டாளர் அலுவலகத்தில் இன்றும் உள்ளது. மூலக் கல்வெட்டுகள், கோயில் புரனமைப்பின்போது  இடம்மாறி  மறைந்து விட்டனவாம். 

சோழப் பேரரசின்போது இதன் நிர்வாகம் வெகு சிறப்பாக இருந்து வந்தது. அதேபோல, மூன்றாம் விக்கிரம பாண்டியன் காலத்திலும் (கி.பி. 1288) மேலும் புத்துயிர் பெற்றதாம்.  
இவ்வாலய நிர்வாகத்தை  திருவொண்ணாழி சபையோம் என்ற குழு கண்காணித்து வந்ததை  இரண்டாம் ராஜேந்திரசோழன் காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது அதேபோல், இவ்வாலய நிர்வாகத்தை நகரத்தார் கண் காணித்ததையும், கோயில் காப்பாளர் களாக சிவபிராமணர்கள்  நிர்வகித்த தகவலை யும் அறியமுடிகிறது.

முகலாயர் ஆட்சிக்காலத்திலும், கி.பி.17-ம் நூற்றாண்டிலும், பொருளாதார நெருக்கடியினால் இக்கோயிலின் செல்வச் சிறப்பு குறைந்தது. அதன்பின், இந்து சமய அறநிலையத்துறை இக்கோயிலைத் தன் பொறுப்பில் எடுத்தபோது நிலைமை மேம் பட்டது. ஆண்டுதோறும் சூரிய பூஜையும், அதன்பின் வரும் பிரம்மோற்சவமும்  ஊர்ப் பெரியவர்கள் மற்றும் பக்ககத்து ஊர் மக்களின் ஆதரவோடு  சிறப்பாக  நடைபெற்று வருகிறது. 

சோழர்கள் காலத்தில் இக்கோயில் மிகப் பெரிய பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது. அதேபோல்,  பசிப்பிணி போக்கும் வகையில்  சிவனடியார்கள் மற்றும் சிவபிராமணர்களுக்கு  நாள்தோறும்  உணவளித்து வந்தது.  இக்கோயிலில் கல்வி போதிக்கும் சிறுவர் பள்ளி இயங்கிவந்ததையும்  மூன்று தண்ணீர்ப் பந்தல்கள் இருந்ததையும் அறிய முடிகிறது.

அம்மையும் அப்பனும்! 

இக்கோயில் 73 சென்ட் நிலப்பரப்பளவில் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்தைச் சேர்ந்த இக்கோயிலில், கருவறைச் சிற்பங்கள் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தவை. இதற்குச் சான்றாக தட்சிணாமூர்த்தி, பிரம்மா,  துர்க்கை  இன்றும் காட்சி  தருகின்றனர். 

ராஜகோபுரம் அறுபது அடி உயரத்தில் நான்கு நிலைகளைக் கொண்டு நிமிர்ந்து  நிற்கின்றது. இதுவும் இதன் அருகே உள்ள சிங்கமுகத் தூண்களும் விஜயநகரக் காலத்தவை ஆகும். 

கருவறையில் மூலவர் வட்ட வடிவ ஆவுடையாராகக் கிழக்கு முகமாகக் காட்சி தருகின்றார். இவரின் வடிவம் எளிமையாக, அதே நேரத்தில் ஒளி பொருந்தியதாக அமைந்து,  நம்மை ஈர்க்கின்றது.  திருஞான சம்பந்தர்,  புறவார் பனங்காட்டீசன் என அழைத்தாலும்,  கல்வெட்டுகளில்  கண்ணமர்ந்த நாயனார் என்றும்,  பரவை ஈஸ்வரமுடைய மகாதேவர் என்றும், திருப்பனங்காட்டுடைய மகாதேவர் என்றும் பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  
சிவனின் இடப்புறத்தில் சற்றுத் தொலைவில் அம்பிகைக்குத் தனியாக ஆலயம் அமைந்துள்ளது. இறைவி பெயர் மெய்யாம்பிகை.  இவளுக்கு புறவம்மை, சத்தியாம்பிகை  என்ற பெயர்களும் வழக்கில் உண்டு.  

கிழக்கு முகமாய் நின்ற கோலத்தில் மேலிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய வரத முத்திரைகள் கொண்டும்  நான்குகரங்களுடன், எழிலான கோலத்தில் அன்னை  காட்சி தருகின்றாள். பூரண அலங்காரத்தில்  இவளின் திருவுருவம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அன்னையின் அழகைக் காண கண் கோடி வேண்டும் என்றால் அது மிகையல்ல. 

இது தவிர, கொடிமரம் அருகே  பல்லவர் கால கற்பலகை விநாயகர், விநாயகர், வள்ளி- தெய்வயானை யுடன் ஆறுமுகம் சந்நிதிகள், 63 நாயன்மார்கள் சிலைகள் மற்றும் திருநீலகண்டர் தன் துணைவியுடன் கோல் தாங்கி நிற்கும் அரிய கோலம்,  ராஜ கோபுரம் உள்புறம் விநாயகரைத் தொழும் தக்கனின்  கோலம் ஆகியன அமைந்துள்ளன. மேலும், இவற்றிற்கெல்லாம்  மகுடமாக,  இது சூரியத் தலமாக விளங்குவதால்  சிவனின் சந்நிதி வளாகத்துக்குள், தனித்து காட்சி தரும் சூரிய பகவானைத் தரிசிப்பது சிறப்பு.

இவ்வூரில் தீராத பஞ்சாயத்து வழக்குகளில் முடிவாக, அன்னை மெய்யாம்பிகை மீது சத்தியம் செய்யச் சொல்வது வழக்கம். தவறாக பொய்ச் சத்தியம் செய்பவர், அடுத்து எட்டு நாள்களுக்குள் தண்டனை பெறுவது உறுதி என்பதை இன்றும் இவ்வூர் மக்கள் நம்புகிறார்கள். அவ்வளவு சக்தி வாய்ந்த அன்னையாக இவள் திகழ்கிறாள். 

ஆதவன் வழிபடும் அற்புதம்! 


ஆண்டுதோறும் சித்திரை மாதம்  முதல் நாளில் இருந்து தொடர்ந்து ஏழு நாள்கள் சூரிய உதயத்தின்போது, சூரியன் தன்னுடைய பொன்னிற ஒளிக் கதிர்களால், நீண்டு வளர்ந்துள்ள ராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் இவற்றை எல்லாம் கடந்து கருவறையில் வீற்றிருக்கும் பனங்காட்டீசனின் சிரசின் மீது பட்டு வணங்குகிறது. இதன்பின் அது மெல்லக் கீழிறங்கி, சிவனின் பாதத்தினை அடைகிறது. 

பாதத்தைத் தொடும் அதே வேளையில், சற்றுத் தொலைவில் உள்ள அருள்மிகு மெய்யாம்பிகை  அம்மனின் சிரசின் மீதும்  ஒளிக் கதிர்கள் விழுகின்றன. 

பின்பு அது மெள்ள கீழிறங்கி அன்னையின் பாதத்தினை அடைவ துடன், அன்றைய சூரிய பூஜை நிறைவு பெறுகிறது. 

இப்படித் தொடர்ந்து ஏழு நாள்கள் ஆண்டு தோறும் நிகழ்கின்றது. சிவனுக்கு  சக்தி அடக்கம் என்ற தத்துவத்தை இது உணர்த்தும் விதமாக அமைந் துள்ளது.

சூரியன் தன் ஒளிக் கதிர்களால்   நிகழ்த்திவரும்  இத்தகு அரிய நிகழ்ச்சி  இக்கோயிலின் தனிச் சிறப்பு ஆகும்.   இறைவனையும் இறைவியையும்  சூரியன் வழிபட்டு வணங்குவதாக ஐதீகம். பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது சூரியபூஜை. வானவியல் சாஸ்திரத்துக்கு ஏற்ற படி, குறிப்பிட்ட நாள்களில் சூரியக்கதிர்கள் உள்ளே விழும்படி அமைக்கப்பட்ட கட்டடக் கலையைத்தான் உலக அதிசயம்  என்று அழைக்கிறோம்.  

 ஏப்ரல் 14 முதல் 20-ம்தேதி வரை  சூரிய பூஜை நிகழும். இதைத் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் சூரிய உதயத்துக்கு முன்பே ஆலயத்துக்குள் இருக்க வேண்டும். நாமும் பனையபுரத்துக்குச் சென்று, அகிலநாயகனை ஆதவன் வழிபடும் அபூர்வக் காட்சியைத் தரிசித்து வருவோம்; அத்தலத்தில் உறையும் சிவனருளால் சிந்தை மகிழ வரங்கள் பெற்று மகிழ்வோம்.

அர்ச்சனை செய்யும்போது... 

அனுதினமும் இறை நாமங்களை மனதுக்குள் உச்சரித்து, பூக்களால் ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்து பூஜிப்பது, அற்புதமான பலன்களைத் தரும் எளிய வழிபாடு ஆகும்.

அவ்வாறு பூக்களால் அர்ச்சிக்கும்போது அவற்றின் இதழ்கள் மேற்புறமாகவும், காம்பு பாகம் கீழ்நோக்கி இருக்கும்படியும் சமர்ப்பித்து அர்ச்சனை செய்யவேண்டும். 

அதேபோல் அன்றலர்ந்த மலர்களையே அர்ச்சனைக்கும் பூஜைக்கும் பயன்படுத்தவேண்டும். வில்வம், துளசி, தாமரை ஆகியவற்றுக்கு நிர்மால்யம் கிடையாது. மீண்டும் பயன்படுத்தலாம்.


பக்தர்கள் கவனத்துக்கு...

இறைவன்: ஸ்ரீபுறவார் பனங்காட்டீசன் 

இறைவி: ஸ்ரீமெய்யாம்பிகை

தீர்த்தம்: 
பத்ம தீர்த்தம் 

ஸ்தல விருட்சம்:  

தலமரங்களாக...   ஆண்பனை  உயரமாகவும், பெண்பனை குள்ளமாகவும் காட்சி தருவது, வியப்பான ஒன்றாகும்.  

பெண் பனையி லிருந்து விழும் பழத்தை உண்பவர் களுக்கு  மகப்பேறு கிடைக்கும் என்பது  நம்பிக்கை. பனை மரங்கள் நிறைந்த பூமியாக இத்தலம் திகழ்ந்ததால், பனையபுரம் என அழைக் கப்பட்டதென கூறுவோரும் உண்டு.

எப்படிச் செல்வது ?: 

விழுப்புரம் மாவட் டம், விழுப்புரம் வட்டத்தில் அமைந் துள்ளது இவ்வூர். விழுப்புரத்திலிருந்து  வட கிழக்கே சுமார் 10 கி.மீ. தொலை வில், விக்கிரவாண்டி - தஞ்சாவூர்,  விழுப்புரம் - வழுதாவூர் சாலைகளின் சந்திப்பில்  அமைந்துள்ளது. விழுப்புரத் திலிருந்து ஏராளமான பேருந்துகள் இவ்வூர் வழியாகச் செல்கின்றன. 

விக்கிரவாண்டி சுங்கச்சாலையை அடுத்து இடதுபுறம் செல்லும் விக்கிர வாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ் சாலையின் முதல் ஊராக பனையபுரம் அமைந்துள்ளது.

இந்தத் தலத்தின் அருகிலுள்ள தரிசிக்க வேண்டிய இடங்கள்: 

இவ்வூரின் கிழக்கே 10 கி.மீ. தொலைவில் புகழ்பெற்ற வக்கிர காளி அம்மன் ஆலயமும், அருகே தொல்லி யல் சிறப்பு வாய்ந்த அரிய கல் மரங்களும், மேற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் தேவாரத் தலமான திருவாமாத்தூரும், வண்ணச்சரம் தண்டபாணி சுவாமிகளின் கௌமார மடமும் அமைந்துள்ளன. 

தொகையடியார்கள்!


ர், பெயர், அற்புதச் செயல்கள் ஆகியவற்றோடு கூடியவை அறுபத்து மூவரின் வரலாறுகள். நாயன்மார்கள் மட்டு மின்றி... சித்தத்தில் சிவத்தை ஏற்றி, முப்பொழுதும் சிவத்தொண்டில் ஈடுபட்டு, நன்னெறியில் வாழும் இன்னும்சில பெரியோர்களையும் தொகையடியார்களாகப் போற்றி வருகிறோம். 
திருத்தொண்டர் புராணத்தில் ‘உலகெ லாம்’ என்ற முதற் செய்யுளில் ஒன்பது ‘உ’காரங்கள் வருகின்றன என்றும், அவை ஒன்பது வகை தொகையடியார்களைக் குறிக்கும் என்றும் கூறுவர். 

சிதம்பரம் திருக்கோயிலில் சிவகங்கை தீர்த்தத்துக்கு வடக்குப் பகுதியில் ஒன்பது லிங்கங்களை உடைய சந்நிதி ஒன்றுள்ளது. ‘திருத்தொண்ட தொகையீச்சரம்’ என்ற பெயருடன் திகழும் அந்தச் சந்நிதி  ஒன்பது தொகையடியாரைக் குறிப்பதற்கு ஏற்பட்டதே என்பர்.  

சுந்தரர் திருத்தொண்டத் தொகையிலும், நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியிலும், சேக்கிழார் பெரிய புராணத்திலும் தொகையடியார்களைப் பற்றிக் கூறியுள்ளனர். நாமும் தொகையடி யார்களைத் தெரிந்துகொள்வோம். 

தில்லைவாழ் அந்தணர் 

தி
ல்லை நடராஜரை முதல்வராகக் கொண்டு மொத்தம் மூவாயிரம் அந்தணர் கள். இறைவன் திருவடித்தொண்டினை ஏற்று ஒழுகுபவர்கள். இவர்கள் நான்மறை, ஆறங்கங்களில் வல்லவர். 

தூய மரபினர்; திருநீற்றின் மகிமையைப் பற்றுக்கோடாகக் கொண்டவர்கள்.தானம், தவம் செய்பவர்; மானம், பொறுமை உடையவர்கள் இவர்கள் திருவாரூர் பெருமானின் திரு வாக்கினால், திருத்தொண்டத் தொகையின் முதலில் வைத்து சொல்லப்பெற்ற பெருமை உடையவர்கள். இம்மையில்  இறையருள் கிடைக்கப் பெற்றவர்.  

பொய்யடிமை இல்லாத புலவர் 

சொல் தெளிவு, பொருள் தெளிவு ஆகியவற்றுக்கு உண் டாகும் பலன்கள், இறையருள் பெறுதல் பொருட்டே என்று துணிந்தவர்கள் இவர்கள்.  

சிவனாரை அன்றி வேறு எவரையும் பாடாத மெய்யடி யவர் இவர்கள். நக்கீரர், கபிலர், பரணர் முதலிய பல புலவர் கள் இவ்வகையில் அடங்குவர்.

பத்தராய்ப் பணிவார் 


ஆசையோடு சிவனை வழி படுதலும், அடியாரைச் சார்ந்து வழிபடுதலும் இவர்களுக்கு உரித்தானது. செய்யும் எத்தொழிலையும் சிவனுக்கென்றே இயற்றுபவர். ‘நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், அடந் தாலும், விழித்தாலும், இமைத்தாலும் மன்றாடும் மலர்பதனொருகாலும்’ மறவாதவர். 

பரமனையே பாடுவார் 

சிவபெருமானையே பொருளாகக் கொண்ட இயலிசைப் பாட்டுகளை உள்ளம் உருகிப் பாடும் அடியார்கள்.

சித்தத்தை சிவன்பாலே வைத்தார் 

பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்து விளங் கும் நாதாந்தத்திலே சித்தம் வைத்துச் சிவத்தை அடைந்து நிற்கும் அடியார்கள். 

திருவாரூரில் பிறந்தார் 

திருக்கயிலை வீற்றிருக்கும் திருக்கணத்தாரே திருவாரூரில் பிறந்தவர்கள். ‘திருவாரூர் பிறக்க முக்தி’ என்பது பழமொழி. 

முப்போதும் திருமேனி தீண்டுவார் 


எப்போதும் இனியராகிய சிவபெருமானை, சிவாகம நெறி தவறாமல், அப்போதைக்கப்போது ஆர்வம் மிகும் அன்பினராய், முப்போதும் அர்ச்சிக்கும் ஆதிசைவர்கள். 

முழு நீறு பூசிய முனிவர் 

தர்மசீலர்; அதத்துவ நெறியுணர்ந்தவர்; நீதி பிழையா நெறி நிற்பவர்; விதிப்படி உருவாக்கிய திருநீற்றை, சிவனைப் போற்றி மேனி முழுவதும் அணியும் முனிவர். 

அப்பாலும் அடி சார்ந்தார் 


தமிழகத்துக்கு அப்பாலுள்ள பிரதேசங் களிலும்... திருத்தொண்டத் தொகையில் போற்றப் பட்ட அடியார்களின் காலத்துக்கு முன்னும் பின்னும், சிவபெருமானது அடியைச் சார்ந்தவர்கள்.  

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், திருநணா, பவானி - ஈரோடு.

Image result for சங்கமேஸ்வரர் கோவில்

தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலமான தட்சிணப்பிரயாகை ; பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும்  பரிகாரம் செய்யும் கூடுதுறை ;  மண்ணிற்குள் ஏராளமான சிவலிங்கங்கள் தன்னகத்தே கொண்ட மிக பிரபலமான சிவஸ்தலம்..

🌸🌷🌸🌷 BRS🌸🌷🌸🌷🌸

தொலைபேசி எண் : +91- 4256 - 230 192, +91- 98432 48588

💦🌿💦🌿 BRS 💦🌿💦🌿💦

Related image

மூலவர் : சங்கமேஸ்வரர் ( அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம், வானிலிங்கேஸ்வரர், வக்கிரேஸ்வரன், நட்டாற்றீஸ்வரன், திருநண்ணாவுடையார்), சங்க முகநாதேஸ்வரர்

அம்மன்/தாயார் : வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி

தல விருட்சம் : இலந்தை

தீர்த்தம் : காவிரி, பவானி, அமிர்தநதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காரண ஆகமம்

புராண பெயர் : திருநணா, பவானி முக்கூடல்

ஊர் : பவானி

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்

🅱 தேவாரப்பதிகம்:🅱

முத்தேர் நகையாள் இடமாகத் தம்மார்பில் வெண்ணூல் பூண்டு தொத்தேர் மலர்ச்சடையில் வைத்தார் இடம்போலும் சோலைசூழ்ந்த அத்தேன் அளியுண் களியால் இசைமுரல ஆலத்தும்பி தெத்தேன் எனமுரலக் கேட்டார் வினை கெடுக்கும் திருநணாவே. - திருஞானசம்பந்தர்

🌀 தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது 3வது தலம்.

🅱 திருவிழாக்கள் :🅱

🍄 ஆடிப் பதினெட்டுப்பெருக்குத் திருவிழா

🍄 சித்திரைமாதம், சித்திரை நட்சத்திரத்தில் ஸ்ரீசங்கமேஸ்வரருக்கு "திருத்தேர்விழா".

🍄 சித்திரை மாதம்  ஹஸ்தநட்சத்திரத்தில் ஸ்ரீஆதிகேசவபெருமாளுக்கு "திருத்தேர்விழா".

🍄 சித்ரா பவுர்ணமி

🍄 ரதசப்தமி சித்திரையில் 13 நாள் தேர்திருவிழா. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 

🍄 ஆடி அமாவாசை

🍄 தை அமாவாசை

🍄 கிரகண காலங்கள்

🍄 சிவராத்திரி

🍄 வைகுண்ட ஏகாதசி

🍄 மார்கழி, தை மாதங்களில் பவானித் திருமுறைக் கழகத்தினரால் பன்னிரு திருமுறை விழாவும், மார்கழி பஜனையும் நடைபெறுகின்றன.

Image result for சங்கமேஸ்வரர் கோவில்

🅱 தல சிறப்பு:🅱

🎭 சங்கமேசுவரப் பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🎭 மூலவர் கிழக்கு நோக்கியும், குபேரன் பூஜித்ததால் ராஜகோபுரம் வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது.

🎭 சிவன் சன்னதிக்கு பின்னால் பஞ்சபூத லிங்கங்கள் உள்ளது. 

🎭 விஸ்வாமித்திரர் நதியின் கரையில் தனியாக லிங்கம் அமைத்து காயத்ரி மந்திரம் சொல்லியதால் இது காயத்ரி லிங்கம் எனப்படுகிறது. 

🎭 வேதங்களுக்கெல்லாம் தலைவியாக விளங்குவதாலும், சதுர் வேதங்களால் பூசை செய்யப் பெற்றதாலும் அம்பாள் வேதநாயகி என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

🎭 ராவணன் இங்குள்ள சகஸ்ரலிங்கத்தை பூஜை செய்துள்ளான். 

🎭 நான்கு வேதங்களும் இங்கு தீர்த்தங்களாக உள்ளன. எனவே, இங்கு வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. 

🎭 இங்கு கோபுரமே லிங்கமாக வழிபடப்படுவதால், கோபுரத்திற்கு வெளியே நந்தி உள்ளது. 

🎭 அம்மனுக்கு பவானி, சங்கமேஸ்வரி, வேதநாயகி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி என்ற பெயர்கள் உண்டு. இந்த அம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடப்பட்டுள்ளது.

🎭 இத்தலத்திற்கு திருநணா, பவானி கூடல், முக்கூடல், சங்கம க்ஷேத்திரம், பராசர க்ஷேத்திரம், வக்கிரபுரம், பதரிவனம், வீரபுரம், விஜயாபுரி என்ற பெயர்கள் உண்டு.

🎭 தட்சிண அளகை, தட்சிண கைலாயம், தட்சிணப் பிரயாகை போன்ற சிறப்புப் பெயர்களுடன், மூன்று நதிகளும் கூடுவதால் முக்கூடல் , கூடுதுறை என்றும், பராசர முனிவரால் வழிபடப்பட்டதால் பராசர தலம் என்றும், குபேரனால் வழிபடப்பட்டதால் குபேரபுரி என்றும் வக்கிராசுரன் இறைவனை வழிபட்டதால் வக்கிரபுரி என்றும், விஜய அரசரால் வழிபடப்பட்டதால் விசயபுரி என்றும் அழைக்கப்படுகிறது.

🎭 பெருமாளுக்கும் தாயாருக்கும் நடுவே யோகநரசிம்மர் லட்சுமியுடன் சாந்தமாக அருளுகிறார். சைவம் வைணவம் இரண்டிற்கும் சேர்த்து ஒரே ராஜகோபுரம். சிவன் சன்னதிக்கு பின்னால் பஞ்சபூத லிங்கங்கள் உள்ளது.

🎭 விஸ்வாமித்திரர் நதியின் கரையில் தனியாக லிங்கம் அமைத்து காயத்ரி மந்திரம் சொல்லியதால் இது காயத்ரி லிங்கம் எனப்படுகிறது. 

🎭 வேணுகோபாலர் சன்னதிக்கு பின்புறத்தில் பசு ஒன்று உள்ளது. இந்த பசுவின் முன்பகுதியில் தலை இருப்பதோடு, பின் உடல் பகுதியில் மற்றொரு தலையும் இருக்கிறது.இவ்வாறு பசு ஒரே உடல், இரண்டு தலைகளுடன் காட்சியளிப்பது வித்தியாசமாக உள்ளது. 

🎭 பெருமாளுக்கும் தாயாருக்கும் நடுவே யோகநரசிம்மர் லட்சுமியுடன் சாந்தமாக அருளுகிறார். சைவம் வைணவம் இரண்டிற்கும் சேர்த்து ஒரே ராஜகோபுரம்.

🎭 ஆண்டுதோறும் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது பட்டு சூரிய பூஜை நடப்பது சிறப்பு.

🎭 கூடுதுறையிலிருந்து திருக்கோயில் வரும் வழியில் அமிர்தலிங்கேசுவரர் சன்னதி அமைந்துள்ளது. கையில் எடுப்பதற்கு வாகாக அமைந்துள்ளதால் , இந்த மேல்பாகத்தைக் குழந்தை இல்லாத தாய்மார்கள் இடுப்பில் வைத்துக் கொண்டு மூர்த்தியை வலம் வந்து மீண்டும் அதே இடத்தில் வைத்து விட்டால் குழந்தைப்பேறு உண்டாகும் என்கின்றனர்.

🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 207 வது தேவாரத்தலம் ஆகும்.

🅱 நடைதிறப்பு:🅱

🔑 காலை 5.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 🔑

பூஜை விவரம் : ஆறுகால பூஜைகள்.

🌹 காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி

🌿 காலை 8 மணிக்கு காலை சாந்தி 

🌹 நண்பகல் 12 மணிக்கு உச்சிக்காலம் 

🌿 மாலை 4.30 மணிக்கு இடைக்காலம், 

🌹 மாலை 5.15 மணிக்கு சாயரட்சை 

🌿 இரவு 7.30 மணிக்கு அர்த்த ஜாமம் என ஆறு காலப் பூஜைகள் நடைபெறுகின்றன.

Image result for சங்கமேஸ்வரர் கோவில்

🅱 பொது தகவல்:🅱

🌸 சிவனுக்கும் அம்மனுக்கும் இடையே முருகன் தனி சன்னதியில் உள்ளார். இது சோமாஸ்கந்த அமைப்பு கோயிலாகும். இங்குள்ள முருகனை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். 

🌸 இத்தலம் நான்கு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது.

🌸 இத்தலத்திற்கு பத்மகிரி என்ற பெயர் உண்டு. இதை சுற்றிலும் நாககிரி, வேதகிரி, மங்களகிரி, சங்ககிரி உள்ளது. 

🌸 வட இந்தியாவில் கங்கையுடன், யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் தலம் திரிவேணி சங்கமம் (அலகாபாத்) எனப்படுகிறது. இங்கு சரஸ்வதி நதி கண்ணுக்கு தெரிவதில்லை. இது போல தென்னகத்தில் காவிரியுடன், பவானி மற்றும் அமுதநதி ஆகிய மூன்று நதிகளும் இத்தலத்தில் சங்கமிக்கின்றன. இதில் அமிர்தநதி மட்டும் கண்ணிற்கு தெரியாது.

🌸 இந்த நதியானது பூமிக்கடியில் இருந்து இவ்விடத்தில் சங்கமிப்பதாக ஐதீகம். மூன்று நதிகள் சங்கமிப்பதால் இத்தலம், "தென்திரிவேணி சங்கமம்' என அழைக்கப்படுகிறது. எனவே இத்தல இறைவன் சங்கமேஸ்வரர் எனப்படுகிறார்.

🌸 வடநாட்டின் திருக்காசியைப் புண்ணியத் தலமாக வழிபடுவதற்கு இணையாகத் தென்நாட்டில் பவானி கூடுதுறையை “இளைய காசி” என்று அழைத்து வழிபடுகிறார்கள். காசியைப் போன்றே இங்கு இறந்தாலும், மோட்சம் என்றும், இறந்தவர்களின் அஸ்தியை இங்கு கரைக்கப்படுவதும் பெருகி வருகின்றன. நீண்ட ஆயுளுக்கும், திருமணத்தடை நீங்கவும், இங்கு வழிபடுவதும் வழமை.

🌸 இங்கு பெருமாள் ஆதிகேசவப்பெருமாள் என்ற திருநாமத்துடனும், தாயார் சவுந்தரவல்லி என்ற திருநாமத்துடனும், இத்தல விநாயகர் சங்கம விநாயகர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.

🌸 அகால மரணமடைந்தவர்களுக்காக "நாராயணபலி' பூஜை செய்யப்படுகிறது. இதனால் அவர்களது ஆத்மா சாந்தியடைவதாக ஐதீகம்.

🌸 இக்கோயிலில் உள்ள கல் சிற்பங்கள் புராணக் கதைகள், தேவாரக் கதைகளை விளக்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது.

🅱 பிரார்த்தனை:🅱

🌹 குழந்தை பாக்கியம் பெறவும், நினைத்த காரியங்கள் நடக்கவும் நதியில் குளித்து விட்டு இங்குள்ள அமிர்த லிங்கத்தை கையில் எடுத்து ஆவுடையை 3 தடவை சுற்றி வந்து தரிசித்தால் சிறந்த பலன் உண்டு.

🌹 குழந்தை பாக்கியம் வேண்டுபவர் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி தல விநாயகரையும், சங்கமேஸ்வரரையும் வழிபட்டு இங்குள்ள இலந்தை பழங்களை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

🌹 மாந்தி(சனி மகன்) கிரகத்தின் ரூபத்தில் சனிபகவான் தனி சன்னதியில் உள்ளார். மாந்தி தோஷம், குளிக சாந்தி தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும்.

🌹 ஜுரஹரேஸ்வரர் தனி சன்னதியில் அருளுகிறார். அடிக்கடி காய்ச்சல், தோல் வியாதி, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து மிளகு ரச சாதத்துடன் அரைக்கீரை கூட்டு நைவேத்தியம் செய்து வழிபட்டால் உடனடி நிவாரணம் கிடைப்பதாக கூறப்படுகிறது. வாயு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு, இவரை வில்வத்தினால் அர்ச்சித்து அதை உணவில் சேர்த்து கொண்டால் நலம்.

🌹 நாக தோஷம் உள்ளவர்கள், கல்லில் செய்த நாகரைக்கொண்டு வந்து, ஆற்றின் கரையில் இருக்கும் விநாயகர் அருகே பிரதிஷ்டை நாக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.செவ்வாய் தோஷம் உள்ள ஆண்கள், வாழை மரத்திற்கு தாலி கட்டி அதை ஆற்றில் விடுகிறார்கள். பெண்கள், அரசங்கொத்திற்கு பூஜை செய்து அதை ஆற்றில் விடுகிறார்கள்.

Image result for சங்கமேஸ்வரர் கோவில்

🅱 நேர்த்திக்கடன்:🅱

♻ சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

🅱 தலபெருமை:🅱

🌱 அம்மன், நதி, தலம் மூன்றிற்கும் ஒரே பெயர். பார்வதியின் திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இந்தப்பெயரே நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்துள்ளது சிறப்பு. இத்தலம் வந்து நீராடி, இறைவனை தரிசிப்பவர்களுக்கு "யாதொரு தீங்கும் நண்ணாது (நெருங்காது)'. எனவே இத்தலத்திற்கு "திருநணா' என்ற புராணப்பெயரும் உண்டு.

🌱 இத்தலம் நான்கு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது. பத்மகிரி என்ற பெயர் கொண்ட இத்தலத்தைச் சுற்றிலும் நாககிரி, வேதகிரி, மங்களகிரி, சங்ககிரி ஆகியவை உள்ளன.

வளம் சேர்க்கும் ஆடி 18 : Ⓜ

🌱 பவானி கூடுதுறையில் எப்போது நீராடினாலும் சிறந்த பலன் உண்டு. இருந்தாலும் அமாவாசை நாட்களிலும், ஆடி 18 அன்றும் இங்கு பெரும் கூட்டம் கூடுகிறது. ஆடி 18ம் நாளில் இக்கூடுதுறையில் சுமங்கலிப்பெண்கள் ஆயிரக்கணக்கில் கூடி, தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி, மஞ்சள் கயிறு ஆகியவற்றை வைத்து வழிபடுவர்.

🌱 காவிரி அம்மனுக்கு தீபாராதனை செய்து, மாங்கல்யம் நிலைக்கவும், வீட்டில் உள்ள இளம் பெண்களுக்கு திருமணம் கைகூடவும் வேண்டி, மஞ்சள் நூல் கயிற்றை அணிந்து கொள்வர்.

🌱 சிறுமிகளுக்கும், கன்னிப்பெண்களுக்கும் கூட இக்கயிறை, வயதில் மூத்த சுமங்கலிப் பெண்கள் அணிவிப்பர்.பின்னர் தேங்காய், பழம், காதோலை கருகமணி ஆகியவற்றை இலையில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவர்.

🌱 திருமணமான புதுத்தம்பதியினர் காவிரிக்கு பூஜை செய்து, தாங்கள் திருமணத்தன்று அணிந்திருந்த மணமாலைகளை பத்திரப்படுத்தி இந்த நாளில் ஆற்றில் விடுவர்.

பரிகார தலம் :

🌱 தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று. பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. இந்த ஊரில் எரிக்கப்படும் சடலங்களின் மண்டை ஓடு வெடித்து சிதறுவதில்லை. இத்தலத்து மண்ணிற்குள் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பதால் இவ்வாறு நடப்பதாக கூறப்படுகிறது.

🌱 இங்குள்ள நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்வதால் பிதுர்களுக்குரிய பூஜை செய்தால் அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகிறது.

இலந்தை பழம் நைவேத்தியம் :

🌱 கோயிலின் தென்மேற்கு மூலையில் உள்ள மேடை மீது உள்ள தல விருட்சம் இலந்தை மரம் தனி சிறப்பு கொண்டது. இங்கு தான் குபேரனுக்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக தரிசனம் தந்துள்ளார். இம்மரம் தினமும் இறைவனின் நைவேத்தியத்திற்கு சுவைமிக்க பழங்களை தருகிறது.

கோவில் அமைப்பு:

🍁 பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

🍁 பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

🍁 கோவிலுக்கு இரண்டு வாயில்கள். இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது.

🍁 திருக்கோவிலின் முகப்பிலேயே நந்தீஸ்வரர் நம்மை வரவேற்க, கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது.

🍁 இராஜ கோபுரம் முகப்பில் இருக்கும் விநாயகர், அனுமன் சன்னதிகளை வணங்கி இராஜகோபுரத்தை கடந்தால் இடப்பக்கம் திருக்கோவில் அலுவலகமும் வலது புறம் அருள்மிகு வேணுகோபாலர் காக்கும் கடவுள் வெங்கடாசலாபதி சன்னதியின் கொடிமரம் ஆகியவற்றைக் கடந்தால் லட்சுமி நரசிம்மர்,மகாலட்சுமி சன்னதிகள் மற்றும் திருக்கோவில் அலுவலர்களால் அழகாக பராமரிக்கும் புல்வெளிகள் ,பூச்செடிகள் அழகு.

🍁 அதைத்தாண்டிச்சென்றால் சித்தி விநாயகர் சன்னதி தரிசித்து சென்றால் வேதநாயகி அம்மன் சன்னதி முன் கொடிமரம் தரிசித்து மூலவரை தரிசிக்க சற்று நடந்தால் சங்கமேஷ்வரர் ஆலய முகப்பில் கொடிமரம் வணங்கி விநாயகர் ,முருகரை வணங்கி உட்பிரகாரத்திள் நந்தீஷ்வரர் அவர்க்கு பின் சூரிய ,சந்திர சிலைகள் இடது புறம் நால்வர்கள் சிலை வலதுபுறம் நடராஜர் சன்னதி,முன்பகுதியில் காக்கும் கடவுள்களை வணங்கி ஆலய உட்பகுதிக்கு சென்றால் வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து சென்றால் இந்தக் கோவிலின் மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒரு சுயம்பு லிங்கம்.

🍁 சுப்பிரமணியக் கடவுளாம் முருகனுக்கு அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிக்கு நடுவில் சந்நிதி அமந்திருப்பது இந்தக் கோவிலின் சிறப்பம்சம். அம்பாளுக்கும் ஸ்வாமிக்கும் நடுவே சுப்ரமணியர் அமைந்திருப்பது சோமாஸ்கந்த அமைப்பு. இது ரொம்பவே விசேஷம் என்பார்கள்.

🍁 அருள்மிகு சங்கமேஸ்வரரின் சன்னதியை தரிசனம் செய்த அரும் பாக்கியம் கிட்டுகிறது . நல்ல வெண் திருநீரு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மூலவர் தரிசித்து பின் இடப்புறமாக வெளியே வந்தால் 68 நாயன்மார்களையும் ,தட்சிணாமூர்த்தியை தரிசித்து மூலவர் பின்புறம் விநாயகர் , வள்ளி தெய்வானையுடன் முருகர் தரிசனம் முடித்து, மூலவரின் இடப்புறம் சண்டிகேஷ்வரர் அருள்பெற்று இடப்புறம் வெளியே வந்தால் நவகிரக சன்னதியும் காலபைரவர் சன்னதியும் அருகருகே அமைந்துள்ளது.

🍁 வெளிப்பிரகாரம் சுற்றினால் திருக்கோவிலின் ஸ்தல விருட்சம் பழங்கால "இலந்தமரம்" அதன் அடியில் ஆனைமுகந்தோன் சன்னதியை காணலாம். சனிஷ்வரர்க்கும், முருகருக்கும் தனி சன்னதியகளில் பூஜை நடைபெறுகிறது.அதன் பின் வேதநாயகி அம்மனை தரிசிக்கலாம்.

Related image

மூர்த்தி சங்கமம்:

🌀 வேதகிரி (ஊராட்சிக் கோட்டை மலை), சங்ககிரி, நாககிரி (திருச்செங்கோட்டு மலை), மங்களகிரி (பெருமாள் மலை), பதுமகிரி ஆகிய இம்மலைகளுக்கிடையே “பவானி” திருத்தலம் அமைந்துள்ளதால் “பஞ்சகிரி மத்திய பிரதேசம்” என்றும் அழைக்கப்படுகிறது.

🌀 ஒரே ராஜகோபுரத்தின் கீழ், சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ளதால் “சேத்திர சங்கமம்” என்றும், அமிர்தலிங்கேஸ்வரர், சகசுவரலிங்கேசுவரர் மற்றும் காயத்ரி லிங்கேசுவரர் என பல்வேறு மூர்த்திகள் ஒருங்கிணைந்து உள்ளதால் “மூர்த்தி சங்கமம்” என்றும் வழங்கப்படுகிறது.

🌀 பதுமகிரி அமைந்துள்ள, காயத்ரி லிங்கேசுவரர் சன்னதி உள்ளது. இம்மலையும் அதனை அடுத்துள்ள காயத்ரி மடுவும், காயத்ரி லிங்கமும் மிகப்பழமையானதாகும்.ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலைச் சுற்றிலும் பல்வேறு லிங்கங்கள் இருந்தாலும், கோயில் வளாகத்திலேயே காவிரிக் கரையோரம் “காயத்ரி லிங்கேசுவரர்” தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்.

மூர்த்தி - லிங்கம், 
தலம் - பதுமகிரி, 
தீர்த்தம் - காயத்ரி மடு.

🌀 விசுவாமித்திர மாமுனிகள், இங்குதான் காயத்ரி மந்திரத்தை ஓதினார் என்பதால், இங்கிருந்து காயத்ரி மந்திரத்தை தவறின்றி ஓர் முறை ஓதினாலும், ஓராயிரம் முறை ஓதியதற்குச் சமமாக பல நன்மைகள் கிட்டும் என்று நம்பப்படுகிறது.

🌀 இங்குள்ள காயத்ரி மடு, நீத்தம் கற்றவர்கள் கூட, நீந்திவர இயலாமல் திணறும் அளவிலான சுழற்சி உடைய , வளைந்த பாறையால் அமைந்துள்ளது வியப்புக்குரியது. இதன் காரணமாகவே தற்போது இது மூடப்பட்டுள்ளது.

🌀 இவ்வாலயத்தின் மேற்கில் ஒரே லிங்கத்தில் 1008 லிங்க முக அமைப்புடன் கூடிய “சகசுவர லிங்கேசுவரர்” சன்னதி மிக அழகான வடிவமைப்பு கொண்டது. சங்கமேசுவரர் ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் ஒரு மேடையின் மீது, “இலந்தை மரம்” தல மரமாக அமைந்துள்ளது. இம்மரம் நாள்தோறும், இறையனாரின் பூசைக்கு, மிகச்சுவையான ஒரு கனியைக் கொடுப்பதாகவும், குழந்தை பேறு தரவல்லது என்றும் நம்பப்படுகிறது.

🌀 இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் கல் தூண்களின் இருபுறங்களிலும் கல்லினால் செய்த கற்சங்கலி மிகுந்த வேலைப்பாடு உடையது. சங்கமேசுவரர் சன்னதிக்கு வடக்கில், சுரகரேசுவரர் எழுந்தருளியுள்ளார். இவருக்கு மிளகு ரசம் வைத்து படையலிட்டு, அப்பிரசாதத்தை அருந்திவர, சுரம் (காய்ச்சல்) பித்தம், வாதம் போன்ற நோய்கள் நீங்குவதாகவும் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.

🌀 வேதநாயகி அம்மன் சன்னதியின் முன் மண்டபத்தில், “சிரிக்கும் சிலை” மற்றும் மிக அழகிய பல சிற்பங்கள் அமையப் பெற்றுள்ளது. சிரிக்கும் சிலை மீது தண்ணீர் ஊற்றினால் அச்சிலை சிரிக்கும் தோற்றமளிப்பது குறிப்பிடத்தக்கதாகும். இக்கலை, “கல் விரிக்கும் கலை” எனப் போற்றப்படுகிறது.

🌀 இக்கோவிலின் ,வேதநாயகி அம்மன் சன்னதிக்கு நேர் எதிரில், கிழக்கு மதிற்சுவரில் மூன்று துவாரங்கள் காணப்படுகின்றன. இந்த துவாரங்களின் பின்னணியில் ஒரு சுவையான கதையும் கூறப்படுகிறது. 1804ஆம் ஆண்டில் இங்கு ஆட்சியராக இருந்தவர் வில்லியம் கேரோ. தினசரி சங்கமேசுவரர் ஆலயத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதையும், கூடுதுறையில் நீராடுவதையும், அம்மன் புகழ் பாடுவதையும் கேட்டு ஆச்சரியம் கொண்டிருந்திருக்கிறார்.

🌀 ஒரு நாள் மேல்மாடியில் இருந்த தம் அறையில் அவர் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், திடீரென, வேதநாயகி அம்மன் போன்று தோற்றம் உடைய ஒரு சிறு பெண் குழந்தை தம்மை எழுப்பி, கையைப் பிடித்து வெளியே அழைத்து வருவது போல் கனவு கண்டு , உடனே விழித்துக் கொண்டவர் எழுந்து வெளியே வந்து பார்த்திருக்கிறார். அந்த நேரத்தில் அவர் படுத்திருந்த இடத்தின் மேலிருந்த விட்டம் முரிந்து  மேற்கூரையே முற்றிலும் இடிந்து விழக் கண்கூடாகக் கண்டார்.

Related image

🌀 அம்பிகையே நேரில் வந்து தம் உயிரைக் காத்ததாக நம்பிய ஆட்சியர் அவர்கள், மனம் கனிந்துறுகி, தமது காணிக்கையாக அம்மனுக்கு அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய , யானைத் தந்தத்தினால் ஆன, பல்லக்கு ஊஞ்சலும், ஆபரணங்களும் வழங்கியுள்ளார்.

🌀 ஆயினும், இவர் வேற்று மதத்தவரானக் காரணத்தால் அம்மனை தரிசிக்க அனுமதியில்லை. இதை அறிந்த தாலுக்கா தாசில்தார், அம்பிகையைத் தரிசிக்கும் பொருட்டு, மூன்று துவாரங்களை அமைத்துக் கொடுத்தார். அதன் மூலம் அம்மனை அவர் மனமார தரிசித்திருக்கிறார்.

🌀 வேதநாயகி அம்மன் ஆலயத்தை அடுத்து சௌந்திரவல்லித் தாயார் சன்னதியும் , ஆதிகேசவப் பெருமாள் சன்னதியும் உள்ளன. இப்புனிதமான இரு சன்னதிகளுக்கிடையில் யோக இலக்குமி நரசிம்மர் சன்னதி உள்ளது. கிழக்கு நோக்கியுள்ள ஆதிகேசவப் பெருமாள்  சங்கு சக்கரதாரியாக திவ்ய தரிசனம் அளிக்கிறார். இங்குள்ள வேணுகோபாலர், பாமா, ருக்குமணி உருவச் சிலைகள் சாலிக்கிராமத்தால் மிகவும் அழகுற அமைக்கப் பெற்றவைகளாகும்.

நூல்கள் ; கல்வெட்டுகள்:

💦 புலவர் கு.குமாரசுவாமி பிள்ளையவர்களால் கூடற்புராண வசனம் என்னும் நூலும், பவானிப் பதிற்றுப்பத்தந்தாதி என்னும் நூலும் இயற்றப்பட்டுள்ளது. ஓலைச்சுவடியிலிருந்து வேதநாயகியம்மன் சதகம் என்னும் நூலும் கிடைத்துள்ளது. கலம்பகம், உலா போன்ற நூல்களுடன், திருமுகவூர் மு.ரா. கந்தசாமிக்கவிராயர் அவர்கள் இயற்றிய பவாநி வேதநாயகியம்மன் பிள்ளைத்தமிழ் என்னும் நூலும் பவானி தலத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றன.

💦 “நணா” எனும் தலத்திற்கு உடைய இறைவன் “நண்ணாவுடையார்” எனபடுகிறார். ”மிகத்தொண்மையான துவாரபாலகர் கற்சிலைகள் கொண்ட பவானிச் சிவாலயத்தில் முற்கால அரசர்கள் பலருடைய கல்வெட்டுகள் இருந்திருக்க வேண்டும். இங்கு கிடைக்கும் முதல் கல்வெட்டு விசய நகர மன்னன் கிருட்டிண தேவராயனின் (1509 - 1529) கொங்கு மண்டல நிர்வாகி பாலதேவராசன் காலக்கல்வெட்டுத்தான் . 1640 முதல் கெட்டி முதலிகளின் கல்வெட்டுகளும், பிற கல்வெட்டுகளும் உள்ளன. “ என்கிறார் புலவர் கல்வெட்டு ராசு அவர்கள்.

💦 மேலும் அவர், 1640, 1645, 1741ஆம் ஆண்டுக் கல்வெட்டுகளில் நண்ணாவுடையார் , நண்ணாவுடையார் சுவாமி, பண்ணார் மொழியம்மை, பண்ணார் மொழியம்மன் என்றே குறிக்கப்படுகிறது, என்கிறார்.

💦 11.01.1840-ல் கலெக்டர் வில்லியம் கேரோவின் எழுத்துப் பொறிப்பில் “ஸ்ரீ பவாநி கூடல் வேதநாயகி அம்மன்” என்ற தொடரைக் காணுகின்றோம். தலைதடுமாறிக் கலைந்து கிடந்த வேதங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டதால் நான்றா - புராண ஐதீகத்தால் “வேதகிரி” என்றும், அம்மன் வேதநாயகி என்றும் அழைக்கப்பட்டதாகக் கூறுகிறார்.

💦 பண்ணார் மொழியம்மையின் பெயர் வேதநாயகியாக மாற்றம் பெற்றதற்கு “வேதகிரியே” காரணம் என்கிறார். நாரதர் செய்த வேள்வியின் சாம்பலால் இம்மலை ஏற்பட்டதாகக் கொங்கு மண்டலச் சதகம் கூறுகிறது. நண்ணாவுடையார் எழுந்தருளியுள்ள பவானியை “நண்ணாவூர்” எனக் குறிக்கும் வழக்கமும் முன்பு இருந்துள்ளது.

🅱 தல வரலாறு:🅱

🔥 வடக்கு திசைக்கு அதிபதியான குபேரன் பூலோகத்தில் உள்ள புனித தலங்களை தரிசிக்க விரும்பினான். அவன் ஒவ்வொரு தலங்களாக சென்று தரிசித்த பின் இத்தலத்திற்கு வந்தான்.

🔥 அங்கு யோகிகள், ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் தவம் செய்வதையும் கண்டான். அத்துடன் மான், பசு, புலி, யானை, சிங்கம், நாகம், எலி ஆகிய அனைத்து உயிரினங்கள் சண்டையின்றி ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவம் செய்பவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பதையும் பார்த்த குபேரன் மிகுந்த ஆச்சரியமடைந்தான்.

🔥 இந்த இடத்தில் தெய்வீக சக்தி இருப்பதை அறிந்து அவனும் இறைவன் தரிசனம் வேண்டி தவம் செய்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த சிவனும் திருமாலும் குபேரனுக்கு தரிசனம் தந்தார்கள். அத்துடன் சிவபெருமான் அங்கிருந்த இலந்தை மரத்தின் கீழ் சுயம்புவாக தோன்றி அருள்புரிந்தார்.

🔥 அப்போது அசரீரி தோன்றி, "குபேரனே ! வேண்டும் வரம் கேள்,'' என்றது. -"இறைவா ! உனது பெயரான அளகேசன் என்ற பெயரால் இத்தலம் விளங்கி, உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்தருள வேண்டும்,'' என வேண்டினான். அன்றிலிருந்து இத்தலம் "தட்சிண அளகை' என்ற பெயர் பெற்றது. திருமாலும் சிவனுக்கு இடப்பக்கம் ஆதிகேசவப்பெருமாள் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார்.

🅱 சிறப்பம்சம்:🅱
   
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ சுயம்பு மூர்த்தியாக உருவான சங்கமேசுவரப் பெருமான் உறையும் பழம்பெரும் ஆலயம்.

♻ இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது.

♻ திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை ஜுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் பாதிப்பில் இருப்பவர்கள் இன்றும் ஜூரகரீஸ்வரரை வணங்கினால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர்.

♻ கோவிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன.

♻ கொங்கு நாட்டுத் தலங்கள் எல்லாவற்றிலும் சனீஸ்ர பகவானுக்கு தனி சந்நிதி இருக்கும். இத்தலத்திலும் சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நிதி உண்டு. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று மக்கள் நம்புகின்றனர். மேலும் இக்கோவிலில் உள்ள அமிர்தலிங்கேஸ்வரர் சந்நிதி சிறப்புடையதாகும்.

♻ லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் எனபது மக்களின் நம்பிக்கையாகும்.

♻ சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் திருப்பணிகள் மேற்கொண்ட ஆலயம் இது.

♻ திருஞானசம்பந்தர், அக்காலத்தில் திருநணா என்று வழங்கிய பவானி கூடுதுறைக்கு வந்தபொழுது, “அல்லாத சாதிகளும் வந்து கைதொழுது ஏத்தும் திருநணா” என்று பாடியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, வில்லியம் காரோ என்ற வேற்று நாட்டைச் சேர்ந்த, வேற்று மதத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் வந்து கைதொழுவார் என்று அம்பிகையிடம் பாலை உண்டு, அனைத்தையும் உணர்ந்த திருஞானசம்பந்தருக்குத் தெரியாமலா இருக்கும் ?


🅱 இருப்பிடம்:🅱

✈ ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மி. தொலைவிலும், சேலத்தில் இருந்து 56 கி.மி. தொலைவிலும் பவானி உள்ளது. சேலம், ஈரோட்டில் இருந்து பவானிக்கு பேருந்து வசதிகள் உள்ளது.

🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀

🍄 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🍄

அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில் (அ) நேத்ரார்ப்பணேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை – திருவாரூர்

Related image

ஞானசம்பந்தர் பெருமானுக்கும், அப்பர் பெருமானுக்கும் இறைவன் படிக்காசு தந்தருளி அவர்கள் மூலமாகச் சிவனடியார்க்கு அமுதூட்டிய தலம் ; திருமால் இறைவனைப் பூஜை செய்து  தம் சக்கரத்தைப் பெற்ற தலம் ;  இறைவன், சம்பந்தப் பெருமானுக்குத் தாம் சீர்காழியிலிருக்கும் தோணியப்பர் திருக்கோலத்தை  விண்ணிழி விமானத்தில் காட்டியருளிய மிக சிறப்பு வாய்ந்த சிவஸ்தலம்..

🍄💧🍄💧 BRS🍄💧🍄💧🍄

தொலைபேசி : +91-4366-273 050, 94439 24825

🔵⚜🔵⚜ BRS🔵⚜🔵⚜🔵

மூலவர் : வீழிநாதேஸ்வரர் ( கல்யாணசுந்தரேஸ்வரர்)

 உற்சவர் : கல்யாணசுந்தரர்

 அம்மன்/தாயார் : சுந்தரகுசாம்பிகை (அழகியமாமுலையம்மை)

 தல விருட்சம் : வீழிச்செடி

 தீர்த்தம் : வீஷ்ணுதீர்த்தம், 25 தீர்த்தங்கள்

 பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

 புராண பெயர் : திருவீழிமிழலை

 ஊர் : திருவீழிமிழலை

 பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்றது. சேந்தனார், அருணகிரிநாதர்

வழிபட்டோர் : திருமால் (சக்கராயுதம் பெற), சுவேதகேது எனும் மன்னன் (எமபயம் நீங்க), வசிட்டர், காமதேனு, ரதிதேவி, மனு

Related image

🅱 தேவாரப்பதிகம்:🅱

எடுத்தான் தருக்கினை இழித்தான் விரனூன்றிக் கொடுத்தான் வாளாளாக் கொண்டான் உறைகோயில் படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே. - திருஞானசம்பந்தர்

🍧 தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 61 வது தலம். 🌀

🅱 திருவிழாக்கள் :🅱

🌻 மகா சிவராத்திரி,

🌻 மார்கழி திருவாதிரை

🌻 சித்திரை மாதத்தில் பெருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

🌻 நவராத்திரி, சஷ்டி, முதலிய பெரு உற்சவங்களும் நன்கு நடைபெறுகின்றன.
 
🅱 தல சிறப்பு:🅱
 
🎭 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🎭 இங்கு பாதாள நந்தி உள்ளது. முழு கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது.

🎭 இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார்.

🎭 மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

🎭 கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.

🎭 இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட "வவ்வால் நந்தி மண்டபம்' உள்ளது. இது நூறு கால் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. சஷ்டியப்த பூர்த்தி திருமணங்கள் இங்கு நடத்தப்படுகின்றன.

🎭 தேவார மூவராலும் பாடல் பெற்ற தலங்கள் பல உண்டு. அவற்றில் திருவீழிமிழலை தலமும் ஒன்றாகும். இத்தலம் 23 திருப்பதிகங்களையுடையது. வீழிச்செடிகள் நிறைந்திருந்ததால் இவ்வூருக்கு திருவீழிமிழலை என்று பெயர் ஏற்பட்டது.

🎭 இத்திருக்கோயிலைச் சுற்றி, பத்மதீர்த்தம், புஷ்கரணி, விஷ்ணுதீர்த்தம், திரிவேணிசங்கமம், குபேரதீர்த்தம், இந்திரதீர்த்ம், வருணதீர்த்தம், இலக்குமி தீர்த்தம், வசிட்டதீர்த்தம் முதலாக 25 தீர்த்தங்கள் உள்ளன.

🎭 சுவாமி சந்நிதியில் உள்ளது - புஷ்கரணிதீர்த்தம்

🎭 மேற்கு மதிலைச் சார்ந்த உள்ளது - விஷ்ணுதீர்த்தம்

🎭 தாமரைக் குளம் உள்ளது - பிரம, பத்மதீர்த்தங்கள் என்பன.

🎭 ஆதியில் செப்புத் தகடுகள் வேயப்பட்ட இவ்விமானம் இன்று தங்கக் கவசத்தோடு, தனி அழகுடன் விளங்குகிறது. பதினாறு சிங்கங்கள் இதைத் தாங்குகின்றன.

🎭 திருமால் கண்ணை இடந்தளிக்கும் காட்சி விமானத்தில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள உலாத் திருமேனிகளுள் ஒருவராகச் சிவபெருமான் ‘சக்ரதானர்’ என்ற திருக்கோலத்தில் விளங்குகிறார்.

🎭 காஞ்சிபுராணத்தின் படி, திருவீழிமிழலைக்குரிய வரலாறு அருகிலுள்ள திருமாற்பேறு எனும் திருத்தலத்திற்கும் கூறப்படுகிறது.

🎭 திருமாலின் உற்சவத் திருமேனி ஒன்று ஒரு கையில் தாமரை மலரும், மறுகையில் கண்ணும் கொண்டு, நின்ற கோலத்திலிருப்பதை இக்கோயிலில் காணலாம். இங்கு இறைவனுக்கு முன்னே நந்தி தேவருக்குப் பதிலாக, திருமால் கூப்பிய கரத்தோடு நின்றிருக்கிறார் !

🎭 திருமால் சிவனை ஆராதனம் செய்து சக்ரத்தைப் பலமுறை பெற்றுள்ளார். ஆதியில் சிவபெருமான் அளித்தது சுதர்சனம் எனும் சக்ரமாகும்.

🎭 அதர்வண வேதத்தில், சரபோபநிடதத்தில் ‘எவருடைய இடதுபாதத்தில் விஷ்ணு தம் கண்ணை அர்ச்சித்துச் சுதர்சனம் எனும் சக்ரத்தைப் பெற்றுக் கொண்டாரோ அந்த ருத்ர மூர்த்திக்கு வணக்கம்’’ என்று வருகிறது.

🎭 கூர்ம புராணத்தில் ‘மாயோன் நேமி பெற்ற அத்தியாயம்’ என்ற  ஒரு தனிப்பகுதியே விரிவாக அளிக்கப்பட்டுள்ளது.

Image result for திருவீழிமிழலை
 
🅱 நடை திறப்பு:🅱

🔑 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.🔑
 
🅱 பொது தகவல்:🅱
 
🍁 கோயிலின் எதிரில் பெரிய குளம் உள்ளது.

🍁 மிகப் பெரிய கோயில். கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. இக்கோயில் மாடக்கோயில் அமைப்புடையது.

🍁 தெற்குப் பிராகாரத்தில் தல விநாயகர் (படிக்காசு விநாயகர்) சன்னதியும், மேற்கில் சோமாஸ்கந்தர், முருகன், மகாலட்சுமி சன்னதிகளும், வடக்கில் சண்டேசுவரர் சன்னதியும் உள்ளது.

🍁 நடராசர் சன்னதி சிறப்பானது.

🍁 'தில்லை மூவாயிரவர்' என்பது போல இத்தலத்து வாழ்ந்த ஐந்நூறு அந்தணர்கள் ( ஐஞ்ஞூற்று அந்தணர்) போற்றப்பட்டனர்.

🍁 இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமானது.

🍁 இத்தலத்துத் தலபுராணம், திருவாவடுதுறை ஆதீனத்து, இரண்டாவது குருமூர்திகளான ஸ்ரீ மறை ஞானதேசிகருடைய மாணவரான ஸ்ரீ மெய்ஞ்ஞான முனிவரால் இயற்றப்பட்டது  உள்ளது.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌹 திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
 
🅱 நேர்த்திக்கடன்:🅱
 
💥 சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Related image

🅱 தலபெருமை:🅱
 
Ⓜ ஸ்ரீ கார்த்தியாயினி அம்பிகையின் திருமணம்Ⓜ

🔥 முனிவர்களில் சிறந்தவர் ஆகிய கார்த்தியாயன முனிவர் இத்தலத்தை அடைந்து தீர்தபுஷ்கரணி கரையில் ஓர் தவச்சாலை அமைத்து தினந்தோறும் தீர்தபுஷ்கரனியில் நீராடி அழகியமாமுளை அம்மையும் விழினாதரையும் வழிபட்டுப்பன்னகசலையில் தம் பத்தினியோடு அருந்தவம் புரிவராயினர்.

🔥அவருக்குப் புத்திர பேரின்மையால் அதைக்குறித்து அறிய வேள்விகளையும் செய்தார். அப்பொழுது அம்பிகை ஆனவள் இடக்கரத்தில் அன்னப்பத்திரமும், வலக்கரத்தில் அன்னம்படைக்கும் அகப்பையோடும் அன்னபூரணியாக காட்சியளித்து "அருந்தவ முனிவா நீ விரும்பிய வரம் யாது? புகல்வாய் " என்றனள்...

🔥 " தாயே நீ புத்திரியாக வரவேண்டும் " என்றார் . அவருக்கு அம்பிகை அவ்வரத்தை தந்தாள்.

🔥அம்பிகை பரமநிடத்தில் விடைபெற்று முனிவர் தவம் புரியும் பான்னஹசாலைக்கு அருகே உள்ள தீர்தபுட்கரனியில் ஒரு சிறந்த பெரிய நீலோற்பலமலரில் அழகிய பெண்குழந்தை வடிவமாக திகழ்ந்தார் அதனை முனிவர் பத்தினி ஆகிய சுமங்கலை என்பவள் கண்டு ஆனந்தம் கொண்டு அக்குழந்தையை எடுத்து மார்போடு அனைத்து கார்த்தியாயன முனிவரிடம் கொடுத்துக் கார்த்தியாயினி என்று பெயரிட்டு மிக மகிழ்ச்சியோடு வளர்து வருவாராயினர் .

🔥 கர்தியாயினிக்கு உரிய மணப்பருவம் வருவதை அறிந்து பரமனை குறித்து அருந்தவம் புரிந்தார். முனிவர் தவத்திர்கிணங்கி பரமன் வெளிப்பட்டார்.

🔥இறைவன் திருவடிகளில் வணங்கிப் பெருமானே இக்கன்னிஹையை தேவரீர் மனக் கோலத்தோடு வந்து திருமணம் கொண்டருள வேண்டுமென்று பிரார்த்தித்தார்.

🔥 பரமன் திருவுளம் மகிழ்ந்து நாம் சித்திரை மாதத்தில் மக நக்ஷத்திரதன்று திருமணம் கொண்டருளுவோம் என்று அருள்புரிந்தார்.

🔥 இறைவன் முனிவருக்கு வாக்களித்தபடி சித்திரை மாதத்தில் மக நக்ஷதிரத்தன்று ஸ்ரீ கைலாயதிநின்றும் எளுந்தருளித்திருமால் பெருமான் நந்தி முதலிய கணங்கள் புடைசூழ, சர்வலன்கர ரூபராய் இத்தளத்தை நாடி திருவீழிமிழலையில் கார்த்தியாயன முனிவர் இருக்கும் இடத்தை அடைந்தார்.

🔥 கார்த்தியாயன முனிவர் இறைவனை எதிர்கொண்டு வணங்கி திருமணத்திற்கு ஆவன செய்தார். மகா அலங்காரத்தோடு மிக சிறப்புற ஸ்ரிகைலாசபதிக்கும் கார்த்தியாயினி அம்பிகைக்கும் திருமண வைபவம் நடைபெற்றது.

Ⓜ பெயர்க்காரணம்:Ⓜ

🌀 ஒருகாலத்தில் இத்தலம் முழுவதும் வீழி எனப்படும் வீழிச்செடி, சந்தனம், செண்பகம், பலா, விளா முதலிய மரங்களடர்ந்த காடாய் பல காலம் இருந்தது.

🌀 மிழலைக் குறும்பர் என்னும் வேடுவர் ஒருவர் இத்தலத்தில் வசித்து வந்தார். அவர் தினம் ஒரு விளாங்கனி நிவேதனம் செய்து வீழிநாதரை வழிபட்டு வந்தார்.

🌀 அதன் பலனாக ஈசன் அவர் முன் தோன்றி அருளாசி வழங்க, அவர் தவக்கோலம் பூண்டு, அருந்தவங்கள் செய்து அட்டமாசித்திகள் கைவரப் பெற்றார். இந்த மிழலைக் குறும்பருக்கு இத்தலத்தின் தனி சந்நிதி உள்ளது.

🌀 வேடுவரால் நிவேதனம் செய்யப்பட்ட விளாங்கனி வீழிநாதரின் பாதத்தில் இன்றும் காட்சியளிக்கிறது. இதனால் இத்தலம் திரு+வீழி+மிழலை என்று அழைக்கப்படுகிறது.

Ⓜ படிக்காசு அருளியது:Ⓜ

💓 திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சேர்ந்தே இத்தலத்திற்கு வருகிறார்கள். அவர்கள் வரும்போது நாட்டில் பஞ்சம். மக்கள் உணவின்றித் தவிக்கின்றனர்.

💓 இந்த நிலையில் அப்பர், சம்பந்தர் இவர்களுடன் வந்த அடியார்களுக்கு உணவு அளிப்பது சிரமமாக இருக்கிறது. இருவரும் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி பதிகங்கள் பாடுகிறார்கள்.

💓 மறுநாள் காலையில் கிழக்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும், மேற்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும் இருப்பதை இருவரும் காண்கிறார்கள்.

💓 அவற்றைக் கொண்டு அடியவர்களுக்கு உணவு அளிக்கின்றனர். நாட்டில் பஞ்சம் தீரும் வரையில் இவ்வாறு தினமும் படிக்காசு பெற்று தொண்டு செய்திருக்கின்றனர்.

💓 படிக்காசு அளிப்பதிலும் இறைவன் அப்பருக்கு நல்ல காசும், சம்பந்தருக்கு மாற்றுக் குறைந்த காசும் கொடுத்தார்.

💓 சம்பந்தர் அதைப் பார்த்து  "வாசி தீரவே காசு நல்குவீர்"  என்னும் பதிகம் பாடிய பிறகு அவருக்கும் நல்ல காசு கொடுத்து அருள் செய்தார்.

💓 அவ்வாறு வைத்தருளிய பலிபீடங்கள் கோயிலின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ளன. படிக்காசுப் பிள்ளையார் மேற்கு பலிபீடத்தின் அருகில் உள்ளார். அருகில் சம்பந்தர், அப்பரின் உருவங்கள் உள்ளன. இவ்விருவரும் தங்கியிருந்த திருமடங்கள் வடக்கு வீதியில் கீழ்க்கோடியிலும் (சம்பந்தர்) மேற்குக் கோடியிலும் (அப்பர்) உள்ளன.

Ⓜ கோவில் விபரம்: Ⓜ

🌱 இறைவன் நேத்ரார்ப்பன ஈசுவரர் சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. மூல்வர் சுயம்பு உருவில் சுமார் 5 அடி உயரத்தில் நற்காட்சி தருகிறார்.

🌱 மூலவர் லிங்கத்திற்கு பின்புற கர்ப்பக்கிருஹ சுவரில் பார்வதி பரமேசுவரர் திரு உருவங்கள் இருக்கின்றன.

🌱 கோவிலின் பிரதான நுழைவு வாயில் கோபுரத்தை விட கர்ப்பக் கிருஹத்தின் மேல் இருக்கிற 16 சிம்மங்கள் தாங்கக்கூடியதாக உள்ள விமானமே சிறப்பானது. இதற்கு விண்ணிழி விமானம் என்று பெயர்.

🌱 இது திருமால் கொணர்ந்தது என்பதை மேற்கூறிய பாடலில் திருநாவுக்கரசரும், ‘சலந்தரன் உடலம் தடிந்த சக்கிரம் எனக்கருளென்று அன்று அரி வழிபட்டிழிச்சிய விமானத்திறையவன் பிறையணி சடையன்’ என்று ஞானசம்பந்தரும் பாடியுள்ளதிலிருந்து உணரலாம்.

🌱 சக்கரம் பெற்ற திருமால் வைகுண்டத்தில் இருந்து கொண்டுவந்து இந்த விமானத்தால் இக்கோவிலை அலங்கரித்ததாக புராணங்கள் சொல்கின்றன.

🌱 இறைவி சுந்தர குசாம்பாள் சந்நிதி  மூலவர் சந்நிதிக்கு அருகில் உள்ளது.

🌱 ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் இருக்கும் நூற்றுக்கால் மண்டபம் சிற்ப வேலைக்கு ஒரு எடுத்துக் காட்டாக திகழ்கிறது.

🌱 மூலவரின் வலப்பக்க மண்டப அறையில் கையில் கண்ணோடு அர்ச்சிக்கும் பாவனையில் திருமால் காட்சி தருகிறார்.

🌱 கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்திற்கு முன் பெரிய அழகிய திருக்குளம் உள்ளது. இறைவன் நேத்ரார்ப்பனேஸ்வரர் ஈசுவரர் சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது.

🌱 இறைவன் உமையை மணந்து கொண்ட தலம் என்னும் நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணும் உள்ளன.

🌱 மகாமண்டபத்தில் கல்யாணசுந்தரர் மாப்பிள்ளை சுவாமியாகக் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் உற்சவமூர்த்தி.

🌱 அவரது வலது பாதத்தின் மேலே திருமால் அர்சித்த கண்மலரும், அதன் கீழே சக்கரமும் இருக்கக் காணலாம்.

🌱 பிட்சாடனர், ரதிதேவி, வசிஷ்டர், காமதேனு, மனு முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் இது.

🌱 வட இந்திய மன்னன் ஒருவனின் மகன் சுவேதகேது. அவனது ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள், 16 வயதில் அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்று கூறினார்கள். அரசன் முனிவர்களிடம் ஆலோசனை செய்ய, அவர்கள் திருவீழிமிழலை தலத்திற்குச் சென்று சிவபூஜை செய்தால் காலமிருத்யுவை வெல்லலாம் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள்.

🌱 சுவேதகேது அதன்படி திருவீழிமிழலை தலம் வந்து இறைவனை தினமும் ஆராதித்து வந்தான். நாட்கள் சென்றன.

🌱 சுவேதகேதுவின் உயிர் பிரிய வேண்டிய நேரம் வந்தது. உயிரை எடுக்க வந்த எமதர்மரைப் பார்த்த சுவேதகேது சிவலிங்கத்தை இறுகப் பற்றிக் கொண்டான். எமதர்மன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்தையும் சேர்த்து சுற்றிக் கொள்ள, சுவேதகேதுவோடு, பெருமானையும் இழுத்தான் எமதர்மன்.

🌱 அப்போது சிவலிங்கத்திலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டு, எமனைக் காலால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்தது போல், சுவேதகேதுவைக் காப்பாற்றினார்.

🌱 பின் தேவர்கள் வேண்டுகோளின் பேரில் எமனை உயிர்ப்பித்து, இனி தன் பக்தர்கள் சிவபூஜையில் ஈடுபட்டிருக்கும் போது உயிரைப் பறிக்க வரக்கூடாது என்று ஆணையிட்டார். இத்தகைய சிறப்பு பெற்றது திருவீழிமிழலை திருத்தலம்.

Image result for திருவீழிமிழலை

🅱 தல வரலாறு:🅱

🍧 முன்னொருமுறை இந்திரனை அழிக்க எழுந்த தன் சினத்தை சிவனார் கடலில் வீசினார். அது குழந்தையாக மாறியது. அக்குழந்தைக்கு ஜலந்தரன் எனப்பெயர் சூட்டி வருணன் வளர்த்து வந்தான்.

🌀 கர்வமிகுதியால் தேவர்களைத் துன்புறுத்தி வந்த ஜலந்தரனைத் தண்டிக்க எண்ணினார் சிவபெருமான்.

🍧 முனிவராக மாறி அவன் முன்தோன்றி, தரையில் ஒரு சக்ரத்தை வரைந்து, அதைப் பெயர்த்து மேலே எடுக்க முடியுமா என்று கேட்டார்.

🌀 சக்ரத்தைப் பெயர்த்தெடுத்த ஜலந்தரன், மிகுந்த செருக்குடன் தன் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டான். சக்ரம் வலிமை பெற்று அவன் தலையை இரண்டாகப் பிளந்தது.

🍧 சிவபெருமான் ஜலந்தராசுரனை அழித்த சக்ரத்தை, தான் பெற வேண்டி திருமால் திருவீழிமிழலையில் தவம் புரிந்தார்.

🌀 ஆற்றல் பொருந்திய சக்கரம் பெறுவதற்காக மஹாவிஷ்னு சிவபெருமானை பூஜித்ததாக பல்வேறு புராணத் தகவல்கள் உண்டு. அப்படி சிவபெருமானை விஷ்னு பூஜித்ததாக திருமாற்பேறு, திருப்பைஞ்ஞீலி, திருவீழிமிழலை ஆகிய சிவஸ்தலங்களின் தல புராண வரலாறுகள் கூறுகின்றன.

🍧 இம்மூன்று தலங்களில் திருவீழிமிழலை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

🌀 திருமாலுக்கு சலந்திரனைச் சம்ஹரிக்கச் சக்கரம் தேவைப்படுகிறது. அதைப் பெருவதற்காக திருவீழிமிழலையில் சிவபெருமானிடம் வருகிறார்.

🍧 ஆயிரம் தாமரை மலர்களால் சிவனை அர்ச்சித்தால் என்னியது கிடைக்கும் என்று அறிகிறார். அதன்படி ஆயிரம் தாமரை மலர்கள் சேர்த்து அர்ச்சனை செய்ய ஆரம்பித்து 999 மலர்களால் அர்ச்சனை செய்து விடுகிறார். ஆயிரமாவது மலர் இல்லை. இன்னொரு தாமரை மலரைக் கொண்டு வந்து அர்ச்சனையை தொடர நேரமும் இல்லை.

Image result for திருவீழிமிழலை

🌀 குறைந்த ஒரு மலருக்குப் பதிலாக தாமரை மலருக்கு ஒப்பான தனது இரு கண்களில் ஒன்றையே பெயர்த்து எடுத்து பூஜையை குறை இல்லாமல் முடித்தவுடன் சிவனும் காட்சி கொடுத்து திருமால் விரும்பியபடி அவருக்கு சக்கராயுதம் கொடுத்து அருள் செய்கிறார்.

🍧 இப்படி மஹாவிஷ்னு தன் கண்ணையே கொடுத்து சிவனை அர்ச்சித்த தலம் தான் திருவீழிமிழலை.

🌀 இப்படி திருமால் ஈசனை வழிபட்ட செய்தியை திருநாவுக்கரசர் தனது பதிகம் மூலமாக பாடுகிறார். நான்காம் திருமுறையில் இடம் பெற்றிருக்கும்  "பூதத்தின் படையர் பாம்பின்" என்று தொடங்கும் பதிகத்தின் 8வது பாடலில் இத்தல வரலாற்றைக் குறித்துப் பாடுகிறார்.

நீற்றினை நிறையப் பூசி, நித்தல்ஆ யிரம்பூக் கொண்டு
ஏற்றுழி யொருநா ளொன்று குறையக்கண் நிறைய விட்ட
ஆற்றலுக் காழி நல்கி, யவன்கொணர்ந் திழிச்சங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்தனாரே.

Ⓜ இப்பாடலின் பொழிப்புரை Ⓜ

திருநீற்றை நன்கு அணிந்து நாடோறும் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்த காலத்தில் ஒரு நாள் ஒரு பூக்குறையவே அப்பூவின் தானத்தில் தன் கண்ணைப் பிடுங்கி அர்ச்சித்த முறுகிய பக்தியை உடைய திருமாலுக்குச் சக்கரத்தைக் கொடுத்து அவன் விண்ணிலிருந்து கொணர்ந்து நிறுவிய கோயிலில் வீற்றிருந்து வீழிமிழலை விகிர்தனார் எல்லோருக்கும் அருள் செய்கிறார்.

நான்காம் திருமுறையில் இடம் பெற்றிருக்கும்  "ஆதியில் பிரமனார் தாம்" என்று தொடங்கும் திருக்குறுக்கை வீரட்டம் தலத்திற்கான பதிகத்தின் 5வது பாடலிலும் இத்தல வரலாற்றைக் குறித்துப் பாடுகிறார்.

"ஏறு உடன் ஏழ் அடர்த்தான் எண்ணி ஆயிரம் பூக்கொண்டு
ஆறு உடைச் சடையினானை அர்ச்சித்தான் அடி இணைக்கீழ்
வேறும் ஓர் பூக் குறைய மெய்ம் மலர்க்கண்ணை யீண்டக்
கூறும் ஓர் ஆழி ஈந்தார் குறுக்கை வீ ரட்டனாரே" 

Ⓜ இப்பாடலின் பொழிப்புரை : Ⓜ

ஏழு இடபங்களையும் ஒரு சேர அழித்த கண்ணனாக அவதரித்த திருமால் கங்கா சடாதரனை அவன் திருவடிகளின் கீழ் ஆயிரம் தாமரைப்பூக்கள் கொண்டு அருச்சித்தானாக அப்பூக்களில் ஒரு பூக்குறைய அக்குறைவை நீக்கத் தாமரை போன்ற தன் கண் ஒன்றனைப் பெயர்த்து அருச்சிக்க, அத்திருமாலுக்கு எல்லோராலும் புகழப்படும் சக்கராயுதத்தை வழங்கினார் குறுக்கை வீரட்டனார்.

🅱 சிறப்பம்சம்:🅱

Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻ ஞானசம்பந்தரும், அப்பரும், படிக்காசு பெற்றபோது அவற்றைக் கடைத்தெருவிற்குக் கொண்டு சென்று பொருள்களை வாங்கிய கடைத்தெரு இப்போது ஐயன்பேட்டை என வழங்குகிறது. அங்கே உள்ள சுவாமி பெயர் - செட்டியப்பர். அம்பாள் - படியளந்த நாயகி. உற்சவமூர்த்தி தராசுபிடித்த கையோடும், அம்பாள் படியைப் பிடித்த கையோடும் காட்சி தருகின்றனர்.

♻ நடராஜர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், சக்கரதானர், பிட்சாடனர், காலசம்ஹாரர், சுவர்க்காவதாநேசர், நாயன்மார்கள் முதலிய உற்சவத்திருமேனிகள் உள்ளன.

♻ தலவிருக்ஷம் ஒவ்வொரு யுகத்துக்கும் ஒவ்வொன்றாக உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. முதலில் சந்தனமாகவும், பிறகு சண்பகமாகவும், பின் வீழிச்செடியாகவும் உள்ளது. அடுத்து இருக்கவுள்ளது பலாமரமாகும்.

திருஞான சம்பந்தர் அருளிய முதல திருமுறை - வாசிதீரப் பாடியது 

வாசி தீரவே காசு நல்குவீர் 
மாசின் மிழலையீர் , ஏச லில்லையே 
காழி மாநகர் , வாழி சம்பந்தன் 
வீழி மிழலைமேல் , தாழும் மொழிகளே . 

2 ஆம் திருமுறை - இரதி தேவிக்கு மன்மதனைத் தோற்றுவித்தமை 

கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப் 
பெண்ணுக் கருள்செய்த பெருமா னுறைகோயில் 
மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும் 
விண்ணிற் புயல்காட்டும் வீழி மிழலையே . 

3 ஆம் திருமுறை - கார்தியாயனியின் திருமணம் 

பூதபதி யாகியபு ரானமுனி புண்ணியணன் மாதைமருவிப் 
பேதமதி லாதவகை பாகமிகை வைத்தபெரு மானதிடமாம் 
மாதவளர்க ளன்னமறை யாளர்கல்வ ளர்த்தமலி வேல்வியதனால் 
எதமதி லாதவகை இன்பமமர் கின்றவெழில் வீழிநகரே. 

5 ஆம் திருமுறை - சுவேதகேது இயமனை வென்றது 

பழகி நின்னாடி சூடிய பாலனைக் 
கழகின் மேல்வைத்த காலனைச் சாடிய 
அழக னேயணி வீழி மிழலையுள் 
குழக னேயடி ஏனைக் குறிக்கோளே 

அருணகிரி நாதர் அருளிய திருவீழிமிழலைத் திருப்புகழ் 

எருவாய் கருவாய் தனிலே யுருவாய் 
இதுவே பயிராய் விளைவாகி 
இவர்போ யவராய் அவர்போ இவராய் 
இதுவே தொடர்பாய் வெறிபோல 
ஒருதா இருந்தாய் பலகோடி யதாய் 
உடனே யவமாய் அழியாதே 
ஒருகால் முருகா பரமா குமரா 
உயிர்கா வேனவோ தருல்தாராய் 
முருகா வேனவோர் தருமோ தடியார் 
முடிமே லினதால் அருள்வோனே 
முனிவோ ராமறோர் முறையோ வெனவே 
முதுசூ ருரமேல் விடும்வேலா 
திருமால் பிரமா அறியா தவர்சீர் 
சிறுவா திருமால் மருகோனே 
செழுமா மதில்சேர் அழகார் பொழில்சூழ் 
திருவீ ழியில்வாழ் பெருமாளே

🅱 இருப்பிடம்:🅱

✈ கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 28 கி.மீ. தூரத்தில் பூந்தோட்டம் உள்ளது. அங்கிருந்து நகர பேருந்துகள் மூலமாக தென்கரை சென்று கோயிலை அடையலாம். அடிக்கடி பேருந்து வசதி இல்லை என்பதால் பூந்தோட்டத்தில் இருந்து ஆட்டோக்களில் செல்வது சிறந்தது. அருகில் உள்ள பெரிய ஊர் பேரளம்.

✈ திருஅன்னியூர், சிறுகுடி, திருப்பாம்பரம் மற்றும் திருமீய்ச்சூர் ஆகியவை இத்தலத்தின் அருகில் உள்ள மற்ற சிவஸ்தலங்கள்.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
🏹 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🏹

அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள் - கும்பகோணம் (தஞ்சாவூர்)


Image result for அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள்

சிவபெருமான் பக்தர்களுக்காக அவர் மனவருத்தம் தீர்ப்பதற்காக எதையும் செய்வார் ; வளைந்தும் கொடுப்பார் ; நிமிர்ந்தும் நிற்பார் என்பதை உணர்த்தும் பதி ; அன்புக்கும், பக்திக்கும் மயங்கும் அருணஜடேஸ்வரர் அருள்பாளிக்கும் அற்பூத சிவ ஷேத்திரம்..

🌸🌷🌸🌷 BRS🌸🌷🌸🌷🌸

தொலைபேசி எண் :  +91 - 4352 – 456422

💦🌿💦🌿  BRS 💦🌿💦🌿💦

மூலவர் : அருணஜடேசுவரர், செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர், ஜடாதரர்

அம்மன்/தாயார் : பிருகந்நாயகி, பெரிய நாயகி, தாலவனேஸ்வரி

மூர்த்தி : சொக்கநாதர், நர்த்தன விநாயகர், முருகர், சப்த கன்னியர், அறுபத்து மூவர், பஞ்சபூத லிங்கங்கள், பைரவர், சூரியர், சந்திரர், சப்தகன்னியர், குங்கிலியக் கலயர்.

தல விருட்சம் : பனைமரம்

தீர்த்தம் : பிரமதீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை தீர்த்தம், விட்டுணு தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், ஆதிசேட தீர்த்தம், அரித்துவச தீர்த்தம், நாககன்னிகை தீர்த்தம், தருமசேன தீர்த்தம், கூபதீர்த்தம், மண்ணியாறு முதலாகிய பல தீர்த்தங்கள் ஆலயத்தின் உள்ளும் புறமும் இருக்கின்றன.

ஆகமம்/பூஜை : காரண, காமிக ஆகமப்படி ஆறுகால பூஜைகள் நாடோறும் நடைபெறுகின்றன.

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : தாடகையீச்சரம், திருப்பனந்தாள்

ஊர் : திருப்பனந்தாள்
 
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்

🅱 தேவாரப்பதிகம்:🅱

விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்திறைஞ்ச எரித்தவன் முப்புரங்கள் ளியலேமுல கில்லுயிரும் பிரித்தவன் செஞ்சடைமேல் நிறை பேரொலி வெள்ளந்தன்னைத் தரித்தவனூர் பனந்தாள் திருத்தாடனை யீச்சரமே.  -  திருஞானசம்பந்தர்

🌀 தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 39வது தலம். 🌀

🅱 திருவிழாக்கள் :🅱
 
🍄 சித்திரையில் பிரமோற்சவம் நடைபெறுகிறது.

🍄 ஆடிப்பூரம்

🍄 நவராத்திரி

🍄 மகா சிவராத்திரி

🅱 தல சிறப்பு:🅱

🎭 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🎭 பனையின் தாளின் இறைவன் எழுந்தருளியிருத்தலாலும்; பனைமரம் தலமரமாதலின் பனந்தாள் என்று பெயர் பெற்றது. கோயிலுக்கு தாடகையீஸ்வரம் - தாடகேச்சுரம் என்று பெயர்; தாடகை பூசித்தமையால் இப்பெயர் பெற்றது.

🎭 இத்தலத்தில் சந்திர பகவான் ஈசனை வேண்டித் துதித்து தனது தோஷங்களைப் போக்கிக் கொண்டார்.  இங்கு வழிபட்டால் சந்திர தோஷங்கள் அகலும்.

🎭 இத்தல இறைவன் பிரம்மனுடைய சாபத்தை நிவர்த்தி செய்து அவனுக்குரிய பதவியையும், பெருமையையும் திரும்பத் தந்தவர்.

🎭 பசியோடு வருந்தி வந்த காளமேகப் புலவனுக்குச் சிவாச்சாரியார் வடிவத்தில் வந்து அன்னத்தை அளித்தவர் இத்தல இறைவன்.

🎭 அழகும், பெருமையும் இழந்து, தேய்ந்து, சிறுத்துப் போய், குருவின் மனைவியை விரும்பிய சந்திரனுடைய சாபத்தைத் தீர்த்துப் பொலிவும், பெருமையும் தந்தவர் இத்தல இறைவன்.

🎭 அனைத்தும் அறிந்த அன்னை பார்வதி தேவி திருவைந்தெழுத்தின் பெருமையை அறிய விரும்பினாள். அவளுக்குப் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்த ஞான குருவாக இருப்பவர் செஞ்சடையப்பர். குருவாய் இருந்து குருதோஷ நிவர்த்திகளைச் செய்பவர் இத்தல இறைவன்.

🎭 திருமணத் தடை அகற்றி மக்கட்பேற்றினை அருளும் மகேஸ்வரன் அவர்.

🎭 தல விருட்சத்தின் பக்கத்தில் உள்ள சிவலிங்கத்தையடுத்துள்ள கிணறு, நாககன்னிகை பிலம் எனப்படும். இதன் வழியாக நாககன்னியர் வந்து இறைவனை வழிபட்டதாக ஐதீகம் சொல்லப்படுகிறது.

🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 39 வது தேவாரத்தலம் ஆகும்.

Image result for அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள்
 
🅱 நடைதிறப்பு:🅱
 
🔑 காலை 5.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.🔑

🅱 பொது தகவல்:🅱

🌸 இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

🌸 கொள்ளிடம் ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் மேற்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம்.

🌸 கிழக்கில் 5 நிலை கோபுரம், மூன்று பிரகாரகங்களுடன் கோயில் உள்ளது.

🌸 சிவனும் அம்மனும் கிழக்கு நோக்கி திருமண கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.

🌸 திருப்பனந்தாளில் வாழ்ந்த நக்கன்தரணி என்பவனால் இக்கோயில் கருங்கல்லால் கட்டப்பட்டது.

🌸 இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் மேற்கு கோபுரத்தின் தென்பால், குங்குலியக்கலய நாயனாரின் கோயில் உள்ளது. இந்நாயனாரின் மனைவியின் பெயர் நீலாயி என்று கல்வெட்டு கூறுகிறது.

🌸 தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான இக்கோயிலில் குமரகுருபரர் ஏற்படுத்திய காசிமடம் உள்ளது.

🅱 திருப்பனந்தாள் பெயர் காரணம்: 🅱

🌿 ஊருக்கு ஒரு பெயர்; கோயிலுக்கு ஒரு பெயர் பழங்காலத்தில் வழக்கத்தில் இருந்தது உண்டு. திருப்பனந்தாள் என்ற பெயர் ஒரு காலத்தில் ஊருக்கும் கோயிலுக்கும் இருந்தது. பனை மரத்து அடியில் சுயம்பு லிங்கம் எழுந்தருளியிருந்ததால் பனந்தாள் என்ற பெயர் வந்தது.

🌿 அந்த லிங்கத்தைப் பின்னர்த் தாடகை என்பவள் வழிபட்டாள். தாடகை வழிபட்ட ஈஸ்வரன் இருந்த ஆலயம் தாடகைஈச்சரம் எனப்பட்டது. ‘தண் பொழில் சூழ்பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே’ என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.

🌿 பனை மரங்கள் மிகுந்திருந்த ஊர் பனந்தாள். பனை மரத்தடியில் சிவலிங்கம். பனைமரத்துக்கு என ஒரு விசேஷம் உண்டு. தேவலோகத்தில் கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடிய பொருள்கள் மூன்று உண்டு. ஒன்று காமதேனு என்னும் பசு. இன்னொன்று கற்பக விருட்சம். மூன்றாவது சிந்தாமணி. இந்த மூன்றும் இருப்பதே தேவலோகத்துக்குப் பெருமை.

🌿 கேட்டதெல்லாம் கொடுக்கக்கூடிய, நினைத்ததையெல்லாம் நிறைவேற்றக்கூடிய மரமான கற்பக மரங்களைப் பஞ்ச தருக்கள் என்பார்கள். ஐந்து வகையான மரங்களே பஞ்ச தருக்கள். கற்பக மரம், பாரிஜாத மரம், ஹரிசந்தன மரம், மந்தார மரம் ஆகியவை அவை.

🌿 பூலோக பாரிஜாதம் பவளமல்லிகை. பூலோகத்தில் சந்தன மரம் உண்டு. ஹரிசந்தனம் மற்றும் மந்தார மரங்கள் முறையே பெருஞ்சேரி சிதலைப்பதி என்ற தலங்களில் தலவிருட்சங்கள்.

🌿 பஞ்சதருக்களில் முதலாவதான கற்பக மரம் தேவலோகத்துக்குப் பெருமை தரக்கூடியது. இந்திரன் இந்த மரத்தில் மலர்ந்த பூக்களிலிருந்து சிந்தும் தேனுக்குக் கீழே வீற்றிருக்கிறான் என்பார் கம்பர். தேவலோகத்தைக் கற்பக நாடு என்றும் சொல்வார்கள்.

🌿 பூலோகத்தில் இருக்கக் கூடிய கற்பக மரம் எது தெரியுமா ? பனைமரம்தான். சில தலங்களில் பனை மரம் தலவிருட்சம். மூன்று தலங்கள் அப்படி உண்டு. அவற்றில் விசேஷமானது திருப்பனந்தாள். பனை மரத்தடியில் இருக்கும் கற்பகம்தான் செஞ்சடையப்பர். அவரை வழிபடக் கேட்டதெல்லாம் கிடைக்கும்; நினைப்பதெல்லாம் நடக்கும். கற்பக மரத்துக் கடவுள் கட்டாயம் அடியவர் தேவைகளை நிறைவேற்றுவார்.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌹 சர்ப்பதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபாடு செய்வது சிறப்பு.

🌹 குறிப்பாக பெண்களுக்கான தோஷ நிவர்த்தி தலம்.

🅱 நேர்த்திக்கடன்:🅱
 
♻ சுவாமி,  அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
 
🅱 தலபெருமை:🅱

🌱 கீழப்பெரும்பள்ளம், காளகஸ்தி, திருநாகேஸ்வரம் ஆகியவை ஆண் நாகம் வழிபாடு செய்த தலமாகும்.

🌱 திருப்பனந்தாள் பெண் நாகம் (நாககன்னி) வழிபாடு செய்த தலமாகும்.

🌱 மிகவும் சக்தி வாய்ந்த துர்க்கை இங்கு அருள்பாலிக்கிறாள்.

🌱 இரண்டு ஆண் பனைமரங்கள் கோயில் பிரகாரத்தில் உள்ளன.

🌱 இத்தல இறைவனை பார்வதி, ஐராவதம், சங்கு கன்னன், நாகு கன்னன், நாக கன்னியர், பிரம்மா, விஷ்ணு, இந்திரன், அகத்தியர், சூரியர், சந்திரர், ஆதிகேசன், தாடகை, குங்குலியக் கலயநாயனார் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.

🌱 ஆவணி அமாவாசையன்று இங்குள்ள பிரம தீர்த்தத்தில் இறைவன் எழுந்தருள்வார்.

🌱 ஆஸ்தான மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவர் உள்ளார்.

🌱 திருநாவுக்கரசர், ஐயடிகள் காடவர்கோன், நம்பியாண்டார் நம்பி, அருணகிரிநாதர், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், செஞ்சடை வேதிய தேசிகர், தருமை சண்முகத்தம்பிரான் ஆகியோர் இத்தலத்தை போற்றி பாடியுள்ளனர்.

🌱 இத்தலத்திற்குத் தாடகையீஸ்வரம் என்று பெயர்.

🌱 இத்தலத்தில் தான் குமரகுருபர சுவாமிகள் நிறுவியுள்ள ஸ்ரீ காசிமடம் உள்ளது.

🌱 இத்தலம் உமையம்மையார் சிவ பூசையியற்றி ஞானோபதேசம் பெற்ற சிறப்புடையது.

🌱 தாழை மலரைச் சான்று காட்டி சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாகப் பொய் கூறிய பிரமனுக்கு அதனாலேற்பட்ட பாதகத்தைப் போக்கியது. இந்திரனுக்கு விருத்திராசுரனைக் கொன்ற பாதகமும், கெளதமர் மனைவியைக் களவாற் சேர்ந்த தோஷமும் போக்கிய அருள் பாலித்தது.

🌱 பிருந்தையைப்  புணர்ந்த திருமாலுக்கு அருள் செய்து. தக்கனுடன் கூடிச் சிவத்துரோகத்தில் ஈடுபட்ட சூரியனுக்கு அத்துரோகத்தால் உண்டான பாவத்தைத் தீர்த்தது.

🌱 குருபத்தினியைக் கூடின சந்திரனுக்கு மாபாதகத்தை நீக்கியது. அகத்தியரால் பூசித்து வழிபடப் பெற்றது. ஆதிசேடனால் பூசிக்கப் பெற்றது. தாடகை சிவ பூசையின் போது அணிவித்த மாலையை ஏற்றுக் கொள்ளத் திருமுடிசாய்த்தருளிய இறைவனைக் குங்குலியக்கலய நாயனார் அன்புக் கயிற்றால் இழுத்து நிமிர்த்தி வழிபட்டது.

🌱 வாசுகியின் மகளாகிய சுமதி என்னும் நாக கன்னிகையால் பூசிக்கப் பெற்றது. மேற்கூறிய ஒவ்வொருவரும் தத்தம் பெயரால் தீர்த்தங்கள் அமைத்து சிவலிங்கப் பிரதிட்டையும் செய்துள்ள பெருமை மிக்கது. அவ்வத் தீர்த்தங்களில் அன்போடு மூழ்கியவர்களின் பவப்பிணி மாய்த்துப் பெரும் பேறடையச் செய்வது இத்தலம்.

Ⓜ நாககன்னிகை தீர்த்தம்: Ⓜ

🍁 இது சுவாமி சந்நிதியில் மேலை இராஜ கோபுரத்தின் வடபால் கோயிலுக்குள் அமைந்துள்ளது. நாக கன்னிகையால் தோற்றுவிக்கப்பட்டது. இதில் மூழ்கினோர் சகலபிணிகளும் நீங்கப் பெறுவர்.

Ⓜ மண்ணியாறு: Ⓜ  

🍁 அம்மையார் விருப்பத்தின்படி, முருகப்பெருமானால் அழைக்கப்பட்டது. இறைவனது சந்நிதானத்தின் இரண்டு பர்லாங் தொலைவில் வடக்கு நோக்கி ஓடிகின்றது. வடக்கு நோக்கி ஓடுவதால் உத்தரவாகினி என்ற சிறப்போடு போற்றப்படுகிறது.

Ⓜ சிற்பஓவிய மேம்பாடு: Ⓜ

🍁 சிற்பங்கள் பல்லவர் கால வேலைப்பாடுடையன இராச கோபுரத்தின் மீது சுதை வேலைப்பாட்டுடன் கூடிய கந்தர்வர், கிம்புருடர் உருவங்கள் அமைந்துள்ளன. பதினாறுகால் மண்டபத்தில் தாடகையினால் சாத்தப்பட்ட மாலையினை ஏற்றுக் கொள்ள பெருமான் தலை குனிந்ததும் அதனை நிமிர்த்த அரசன் யானைகளைக் கட்டி இழுத்ததும், கலயனார் அரிகண்டம் போட்டு நிமிர்ந்ததும், அப்போது சிவலிங்கத்திடையே இறைவரது திருக்கரம் தோன்றியதும், நாயனார் வழிபட்டதும் ஆகிய உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

🍁 சிங்க வாயிலினுள் நுழைந்ததும் வடபுற மதியில் திருக்குறிப்புத் தொண்டர் வரலாற்றினையொட்டிச் சில உருவங்கள் அமைந்திருக்கின்றன.

🍁 சுப்ரமண்யர் உற்சவருக்குப்பின் தாடகை பெருமானை வழிபட்டுப் பதினாறு கைகள் பெற்ற ஐதீகம் செதுக்கப் பெற்றிருக்கிறது. கோயில் கட்டிய தரணி நக்கனார் சிற்பமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

🍁 வெளவால் நெற்றி மண்டபத்தில் சுதையினால் பஞ்ச மூர்த்திகளும் வேலை செய்யப் பட்டிருக்கின்றன. அலங்கார மண்டபத்தின் முன் மேலே விதானத்தில் தாடகை வரலாறு ஒவியமாக வரையப்பட்டுள்ளது. அறுபத்து மூவர் வரிசையில் சிலைகளுக்குப் பின் அந்த அந்த நாயனாரின் உருவங்கள் எழுதப் பெற்றுள்ளன. 1942-ல் திருப்பனந்தாளில் வாழ்ந்த துளசி ராஜா என்பவர் இவ்வோயித்தை வரைந்தவர் ஆவர்.

🍁 வெளவால் நெற்றி மண்டபத்தில் உள்ள பஞ்ச மூர்த்திகளின் உருவத்திற்கு (சுதை) எதிரே பஞ்ச பூதத்தலங்களின் படமும் அதனையடுத்து இறைவனின் தாண்டவங்களும் தத்ரூபமாக வரையப் பெற்றுள்ளன. அதன் விபரம்.
1.     சிதம்பரம் – ஆனந்த தாண்டவம் – கனகசபை
2.     மதுரை – சந்தியா தாண்டவம் – இரசிதசபை
3.     திருக்குற்றாலம் – திரிபுர தாண்டவம் – சித்ரசபை
4.     திருவாலங்காடு – ஊர்த்துவ தாண்டவம் (காளி தாண்டவம்)– இரத்தினசபை
5.     திருநெல்வேலி – காளிகா தாண்டவம் (முனி தாண்டவம்) – தாமிரசபை

Related image

Ⓜ அம்மையார் ஞானோபதேசம் பெற்றது: Ⓜ

🌹 முன்னொரு கற்பத்தில் அம்மையார் இறைவனை வணங்கி ’ஞானோபதேசம் புரிந்தருளல் வேண்டும்’ எனப் பிரார்த்திக்க, இறைவன் ‘நீ தாலவனம் சென்று எம்மை பூசித்தால் அருள் செய்வோம்’ என்று உரைத்தனர்.

🌹 அம்மையாரும் இறைவன் ஆணைப்படி இத்தலத்து வந்து எதிர்முகமாக வடபுறத்தமர்ந்து தவஞ் செய்தார். இறைவன் காட்சியளித்து அம்மையாருக்கு ஞானத்தை உபதேசித்து அருள் செய்தனர். இவ்வுண்மையினையே இறைவர் மேற்குமுகமாக எழுந்தருளியிருப்பதும் இறைவி கிழக்கு முகமாக எழுந்தருளி இருப்பதும் வலியுறுத்தும், அம்மையார் உபதேசம் பெறுமுன் பாலாம்பிகை எனவும், உபதேசம் பெற்றபின் பிரகந்நாயகி எனவும் பெயர் வழங்கப் பெறுகின்றார்.

Ⓜ ஐராவதம்: Ⓜ

🌹 அசுரர்களின் அல்லலுக்கு ஆற்றாராகிய அமரர்கள் ஓடிவந்து இந்திரனிடம் முறையிட்டார்கள். செவியேற்ற இந்திரன் ‘போர் புரிதற்கு ஐராவதத்தைக் கொண்டு வருக’ எனக்கூறினான்.

🌹 ஐராவதம் போகத்தை விரும்பி மண்ணுகைத்துள்ள மந்தரமலையை அடைந்திருக்கிறது என்பதை உணர்ந்த இந்திரன், தனது சமயத்துக்கு உதவாத காரணத்தால் தெய்வ வலிமையையிழந்து மண்ணுலகத்தில் காட்டானையாகத் திரிந்தது. தன் எதிர்பட்ட நாரதரை வணங்கி, அவராணைப்படியே இத்தலத்திற்கு வந்தது.

🌹 தாலவனநாதரை வணங்கித் தன் சாபத்தைப் போக்கிக் கொண்டது. தன் பெயரினால் மேற்பால் ஓர் தடாகமும் சிவலிங்கப் பிரதிட்டையும் செய்து பூசித்துத் தன்னுலகடைந்தது. (ஐராவது ஆனை தங்கி இறைவனை வணங்கிய இடம் “ஆனைகோயில்” என்று தற்போது வழங்கப் படுகிறது. இது செஞ்சரையப்பர் கோயிலுக்கு மேற்கே மண்ணியாற்றின் கரையில் உள்ளது.)

குங்கிலியக்கலயனார்:

🍄 கலயனார் இவ்வூரில் தங்கியிருந்த காலத்தில் அவரது மகன் இறந்தான். தன் மகன் இறந்த செய்தி தெரிந்து வீடு சென்று இதுவும் திருவருட்செயல் போலும் என எண்ணி மகனை எடுத்துக் கொண்டு ஈமக்கடன் முடிக்கச் சென்றார். வழியில் உள்ள விநாயகர் அசரீரியாக அருளியபடி நாயனார் அவ்வுடலைக் கொண்டு வந்து நாக கன்னிகை தீர்த்தத்தில் நனைக்க, மகனும் உயிர் பெற்று எழுந்தான். (பெரியபுராணத்தில் இதற்கு ஆதரம் இல்லை) இவ்விநாயகர் இன்றும் ‘பிணமீட்ட விநாயகர்’ என்ற திருநாமத்துடன் திரு வீதியின் வாயுமூலையில் எழுந்தருளியுள்ளார்.

Image result for அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள்

நாகன்னிகை:

🍁 நாகலோகத்தில் வாசுகி தன் மகன் சுமதிக்கு மணஞ் செய்விக்கக் கருதிய காலை ‘சுமதி அதைப் பற்றிய முயற்சி தங்கட்கு வேண்டாம்’ எனக் கூறி கன்னி மாடத்தமர்ந்திருந்தாள். இறைவன் அவளது கனவில் தோன்றி ‘நீ தாலவனமடைந்து பூசிப்பாய்’ என அருள் செய்தனன். சுமதியும் அவ்வாறே பிலத்தின் வழியாக வந்து அம்மையார் சந்நிதானத்திலுள்ள கூபத்தில் தோன்றி இறைவனை வழிபட்டு வந்தாள்.

🍁 தலயாத்திரை செய்து வரும் அரித்துவசன் என்னும் அரசனும் இத்தலத்தையடைந்தான். சுமதி அவனைக் கண்டு விருப்பமுற்று, நாகலோகத்திற்கு அழைத்துச் சென்று மணமுஞ் செய்து கொண்டாள். சில நாள் அங்கிருந்து மீண்டும் பிலத்தின் வழியாக வந்து அம்மையருக்கு மேல்புறம் ஓர் தடாகமைத்து நாடோறும் வழிபாடியற்றி வந்தாள்.

🍁 அரித்துவசனும் ஆலயத்திற்குத் தென்பால் ஓர் தடாகமும் இலிங்கமும் அமைத்தான். இவ்வாறு இருவரும் பூசித்துப் பல திருப்பணிகளும் செய்து முத்தியின்பம் பெற்றார்கள்.

Related image

🅱 திருப்பனந்தாளில் அகத்தியர் 🅱

🌀 தென்னகம் நோக்கிப் புறப்பட்ட அகத்திய முனிவருக்குச் சிவபெருமான் தமிழை உபதேசித்தார். சிவனிடம் அறிந்த தமிழுக்கு அகத்தியர் மிகப்பெரிய இலக்கண நூல் ஒன்றை வகுத்துத் தந்தார். அந்த நூலுக்கு அகத்தியம் என்று பெயர் என்கிறது இலக்கிய வரலாறு.

🌀 சிவபெருமான் அகத்தியருக்குத் தமிழை அறிவித்தார் என்ற உண்மையைக் கம்பரும் குறிப்பிட்டிருக்கிறார்.

🌀 தழல்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் என்று அவர் அகத்தியரை குறிப்பார்.

🌀 அரியவளான தாடகை பனசைப் பதியில் இறைவனை முடியை வளைத்த செய்தியை ஸ்தல மான்மியத்தை அறிந்தார் அகத்திய முனிவர். உடனே திருப்பனந்தாளுக்கு செல்ல முடிவெடுத்தார். பல்வேறு முனிவர்களுடன் திருப்பனந்தாளுக்குச் சென்றார்.

🌀 புண்ணியப் புனல்களில் மூழ்கினார்; சிவ பஞ்சாட்சர ஜெபம் செய்தார். உரிய நியாசங்களைப் புரிந்தார். முறைப்படிப் பூஜைகளைச் செய்தார். எட்டு வகை மலர்களை இட்டு அர்ச்சித்தார். பல்வேறு விதமான அபிஷேகங்களைச் செய்தார்.

🌀 தூய்மையான நீர், எண்ணை, மஞ்சள், மாப்பொடி, மஞ்சள் பொடி, நெல்லி முள்ளி, பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், இளவெந்நீர், வில்வக் குழம்பு, பாளிதம், பால், தயிர், தேன், கனிச்சாறு, இளநீர் முதலான பல அபிஷேகங்களைச் செய்தார். அவ்வப்போது தூப, தீபங்களையும் காட்டினார். செய்ய வேண்டிய எல்லாவகை பூஜைகளையும் முறைப்படிச் செய்தார். இறுதியில் சுவாமியை அலங்கரித்தபின் எட்டுவிதார்ச்சனைகள் செய்தார். ஈரெட்டு உபசாரங்களைச் செய்தார். உண்மையான அன்புடன் பணிந்தார்.

🌀 இப்படிப் பல நாட்கள் பெரியநாயகியுடனான செஞ்சடையப்பரை இடைவிடாது வழிபட்டார். விழுந்து வணங்கும் போது அடியற்ற மரம் போல மிகுந்த ஆர்வத்துடன் உள்ளம் உருகி வணங்குவார். அப்போது அவர் விழியிலிருந்து அருவி போலக் கண்ணீர் கொட்டும். இப்படிப்பட்ட பேரன்புடன் தன்னை வழிபடுவதைக் கண்டார் செஞ்சடையப்பர்.

🌀 சிவநாம ஜெபத்தில் மூழ்கிக் கிடந்த  அகத்தியர் முன் அருட்காட்சி தந்தார் சிவன். "உன் பூஜைக்கு மகிழ்ந்தோம். எனவே உனக்குக் காட்சி தந்தோம். வேண்டும் வரம் கேள் தருகிறோம்" என்றார்.

🌀 அப்போது அகத்திய முனிவர், "ஒப்பில்லாத தெய்வமே ! உன்னை அன்போடு வழிபடுபவர்களுக்கு இந்த லிங்கத்தில் எழுந்தருளியிருந்து தமிழ், இயல் ஞானத்தை அதாவது தமிழ் அறிவைக் குறையாமல் அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

🌀 இறைவனும் "அப்படியே செய்கிறோம்" என்று அருள் செய்தார் என்கிறது திருப்பனந்தாள் புராணம்.

🅱 தல வரலாறு:🅱

🔥 அருணஜடேஸ்வரர் யுக யுகாந்திரமாக இருக்கும் சுயம்புநாதர். அவரைப் புராண காலத்தில் பூஜித்தாள் ஒரு பூவை. அவள் அச்சம்,  மடம், நாணம், பயிர்ப்பு என்ற உத்தம குணங்களுக்குச் சொந்தக்காரி. சிவபூஜையில் நாட்டம் அதிகம் கொண்ட நங்கை. அவள் தினந்தோறும் சிவலிங்கத்தை பூஜிப்பது பழக்கம். வெவ்வேறு இடங்களிலிருந்து மலர்களைக் கொண்டு வருவாள். சிவலிங்கம் இருக்கும் கோயிலைத் தூய்மை செய்வாள். இறைவனை முறைப்படிப் பூஜை செய்வாள். எல்லா வகையான உபசாரங்களையும் செய்வாள். இறைவனுக்குச் செய்யும் உபசாரங்களில் மலர்மாலை சாத்துதல் என்பது ஒன்று.

🔥 ஒருநாள்... சுவாமிக்கு மாலை சாத்தப் போகும் நேரம்... அவள் மேலாடை சற்று நழுவியது. உடல் உறுப்புக்கள் தெரியச் சுவாமிக்கு மாலை சாத்துவது அபசாரம். எனவே அவள் நாணமிக்கவளாய் நழுவிய மேலாடையை ஒரு கையால் இறுக்கிப் பிடித்து மாலை சாத்த முயன்றாள். பக்கவாட்டில் ஆடையைப் பிடித்தமையால் கையின் நீளம் குறைந்தது. லிங்கம் கைக்கு எட்டவில்லை. மாலை சாத்த முடியவில்லை. அந்த நிலையில் சிவபெருமான் தாடகையின் பக்திக்கு இரங்கித் தன் பாணப்பகுதியைச் சற்றே முன்னோக்கி குனிந்தார். அதனால் மாலை சாத்த முடிந்தது. தாடகையும் மாலை சாத்தி மகிழ்ந்தாள்.

Related image

🔥 சிவபெருமான் தன் பக்திக்கு இரங்கிச் சற்றுச் சாய்ந்தது அவளுக்கு ஒரு பக்கத்தில் சந்தோஷத்தையும், இன்னொரு பக்கத்தில் வருத்தத்தையும் கொடுத்தது. இனி ஒருமுறை அவர் அப்படிச் சாய வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது என்று நினைத்தாள். சிவபெருமானுக்குத் துன்பம் தரக்கூடாது என்று எண்ணினாள் அவள். எனவே கடும்தவம் இருந்தாள். பூஜாகாலத்தில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கப் பதினாறு கைகளைச் சிவனிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டாள் என்பது திருப்பனந்தாள் தலவரலாறு.

🔥 தாடகைக்காகத் திருப்பனந்தாளில் சிவலிங்கம் வளைந்த வரலாறு சோழ நாட்டில் பரவியது. அப்போது சோழர் அரண்மனை கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பழையாறையில் இருந்தது. நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டான் மன்னன். துடிதுடித்தான்.

🔥 யானை, குதிரை, காலாள் படைகள் புடைசூழத் திருப்பனந்தாளுக்கு வந்தான். லிங்கத்தின் வளைவை நிமிர்த்துவதற்காகப் பாணத்தின் மேல் கயிறு கட்டினான். யானை, குதிரை மற்றும் வீரர்களை வைத்து நிமிர்த்த முயன்றான். சிவபெருமான் சற்றும் வளைந்து கொடுக்கவில்லை. ஆட்சி அதிகாரத்துக்கு அடிபணிந்து விடுவாரா ஆண்டவன் ? மாட்டாரல்லவா. தோல்வியைத் தழுவினான் மன்னன். துவண்டு திரும்பினான்.

🔥 தாடகையின் அன்புக்காக வளைந்தார் அருணஜடேஸ்வரர். ஆனால் அவர் அரசனின் அதிகாரத்துக்கு அடிபணியவில்லை என்ற செய்தி நாடெல்லாம் பரவியது. அந்தச் சமயத்தில்...

🔥 காலசம்ஹார க்ஷேத்திரமான திருக்கடையூரில் சிவத்தொண்டு புரிந்து வந்தார் ஒரு அடியவர். அவருக்குப் பெற்றோர் வைத்த பெயரென்னவோ ? உலகுக்கு அது புலப்படவில்லை. அவர் தினந்தோறும் திருக்கடையூர் சிவாலயத்தில் குங்கிலியப்புகையிடும் சிவத்தொண்டு செய்து வந்தார். இடைவிடாமல் செய்த அத்தொண்டு காரணமாக அவரை எல்லாரும் குங்கிலியக்கலயநாயனார் என்று அழைத்தார்கள். இயற்பெயர் போனது காரணப் பெயரே நிலைத்தது.

🔥 திருப்பனந்தாளில் நடந்த நிகழ்வுகளை அறிந்தார் குங்கிலியக்கலய நாயனார். திருப்பனந்தாளுக்குச் சென்று லிங்கத்தை நிமிர்த்த வேண்டும் என்று முடிவெடுத்தார். நினைத்ததைச் செயல்படுத்தத் திருப்பனந்தாள் நோக்கிப் புறப்பட்டார். கோயிலை அடைந்தார். குங்கிலியத் திருப்பணி செய்தார். அதன்பின் அவர் வளைந்திருந்த லிங்கத்திடம் சென்றார். இறைவனை மனதாரத் தொழுதார். ‘அன்புக்கு வணங்கிய அரனே என் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்’ என்று பிரார்த்தித்தார்.

Related image

🔥 நாரினால் கெட்டியாகக் கட்டப்பட்ட ஒரு மாலையை சிவனுக்கு அணிவித்தார். வளைந்திருந்த பக்கத்திற்கு எதிர்ப்புறத்தில் நின்று கொண்டார். தன் கழுத்தில் சுருக்குப் போட்டுக் கொண்டார். அந்தக் கயிற்றினை லிங்கத்துடன் கட்டினார். லிங்கத்தை நிமிர்த்த முயன்றார்.

🔥 சர்வேஸ்வரனுக்குச் சங்கடத்தைக் கொடுத்து விட்டார் சிவனடியார். அரசனின் அதிகாரத்துக்கு வளையாத சிவனுக்குச் சவாலாக அமைந்தார் அடியவர். நிமிராவிட்டால் குங்கிலியக்கலய நாயனாருக்குச் சாவு நிச்சயம். சுருக்கு இறுகும் அவர் உறுதியாக உயிர் நீப்பார். அவருடைய அன்பு சிவனை அசைபோட வைத்தது. அடியவருக்காக - அவர் அன்புக்காக - அவர் மனஒருமைப்பாட்டுக்காக மகிழ்ச்சியடைந்தார். லேசாக நிமிர்ந்தார். இதைச் சேக்கிழார் மிக அழகாகச் சொல்வார்.

 நண்ணிய ஒருமை அன்பின் நார் உறு  பாசத்தாலே

திண்ணிய தொண்டர் கூடி இளைத்த  பின் திறம்பி நிற்க

ஒண்ணுமோ கலயனார்தம் ஒருப்பாடு  கண்டபோதே

அண்ணலார் நேரே நின்றார் அமரரும்  விசும்பில் ஆர்த்தார்

- என்பது பெரிய புராணம்.

🔥 திருப்பனந்தாள் சிவபெருமான் பக்திக்காக வளைந்து கொடுத்தார் - ஆட்சி அதிகாரத்துக்கு அடிபணிய மறுத்தார் - அடியவர் அன்புக்கு இரங்கினார் நிமிர்ந்து கொடுத்தார் என்பது தல வரலாறு.

🔥 அன்புக்காக எதையும் செய்வார் அருணஜடேஸ்வரர். அடியவர்களுக்கு உதவுவார் என்பதை உணர்த்தும் வரலாறு இது.

🔥 இன்றும் செஞ்சடையப்பர் திருவுருவில் சற்று வளைந்து முன்னோக்கிய நிலையுடைய பாணம் அமைந்திருக்கிறது. உள்ளன்போடு வழிபட்டுக் கேட்டதைப் பெற வேண்டிய தலம் இது.

🅱 மற்றொரு தலவரலாறு :🅱

🔥 முன்காலத்தில் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே தம்மில் யார் பெரியவர் ? என்றப் போட்டி எழுந்தது.  அப்போது சிவபெருமான், ‘எனது அடி முடியை யார் அறிகிறார்களோ, அவர்களே பெரியவர்’ என்று கூறினார்.

🔥 ஈசனின் அடிமுடியைத் தேடி பிரம்மாவும், விஷ்ணுவும் புறப்பட்டனர். இருவராலும் சிவபெருமானின் சிரசையோ, பாதத்தையோ காண முடியவில்லை. லிங்கோத்பவராய் திருவண்ணாமலையில் தனது அடி முடி தெரியா வண்ணம் சிவராத்திரிப் பொழுதில் நள்ளிரவு 12.00 மணி அளவில் ஜோதி வடிவில் காட்சியளித்தார் சிவபெருமான்.  அதுவே லிங்கோத்பவ காலம் (இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1.00 மணி வரை) எனப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், இந்த லிங்கோத்பவர் காலத்தில் கண்டிப்பாக சிவாலயங்களில் வழிபாடு செய்ய வேண்டும்.

🔥 மகாவிஷ்ணுவாலும், பிரம்மாவாலும் சிவபெருமானின் அடிமுடியை காண முடியவில்லை. மகாவிஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.  ஆனால் பிரம்மதேவர், தாழம்பூவை பொய் சாட்சி கூறவைத்து பொய்யுரைத்தார்.  இதனால் கோபமுற்ற ஈசன், பொய் சொன்ன பிரம்மதேவனுக்குப் பூலோகத்தில் தனிக் கோவில்கள் இல்லாமல் போகட்டும் என்றும், தாழம்பூ சிவ பூஜைக்கு அருகதை இல்லாமல் போகட்டும் என்றும் சபித்தார்.

🔥 பிரம்மதேவர் தன் தவறை உணர்ந்து ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார்.   ‘பொய் சொன்ன பெரும் சாபம் தொலைய வேண்டும் என்றால் திருப்பனந்தாள் சென்று, அத்தல பொய்கை தீர்த்தத்தில் நீராடி வழிபட வேண்டும்’ என்று வழி கூறினார்.  பிரம்மாவும் அவ்வாறே செய்ய பொய் சொன்னதால் ஏற்பட்ட பாவமும், மற்றக் குற்றங்களும் அவரை விட்டு அகன்றன.

🔥 அகமகிழ்ந்த பிரம்மதேவர், இத்தல அருணஜடேஸ்வரருக்கு, சித்திரை மாதத்தில் பெருவிழா நடத்தி இன்புற்றார்.  இன்னும் ஒவ்வொரு வருடமும் இத்தலத்தில் நடைபெறும் சித்திரைப் பெருவிழாவை பிரம்ம தேவரே முன்னின்று நடத்துவதாக ஐதீகம் கூறப்படுகிறது.

🔥 பிரம்மதேவர் நீராடி சாப விமோசனம் பெற்ற பொய்கை தீர்த்தம், தற்போது பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆவணி மாத அமாவாசையில் ‘பிரம்ம சாப நிவர்த்தி தீர்த்தவாரி’ பொய்கைக் குளத்தில் நடக்கிறது. தாழம்பூ பொய் சாட்சி சொன்னதால் அதற்கும் பாவம் உண்டானது.  திருப்பனந்தாளில் ஈசன் தாழம்பூவுக்கும் சாப விமோசனம் கொடுத்தார்.

🔥 சிவராத்திரியின் மூன்றாம் ஜாம பூஜையில் மட்டும் ஏற்றுக்கொள்வதாக சிவபெருமான், தாழம்பூவுக்கு விமோசனம் அளித்தார்.  இத்தலத்தில் ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு வந்தால் கல்வி, கேள்விகளில் மிகச் சிறந்து விளங்கலாம்.

🅱 சிறப்பம்சம்:🅱
   
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ சித்திரை மாதம் சில நாட்கள்  மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுகின்றன.

♻ இத்தலம் திருஞானசம்பந்தரால் வழிபட்டுப் பாடப் பெற்ற பெருமையினையுடையது. ஞானசம்பந்தர் பாடிய பதிகம் 3-ம் திருமுறையிலுள்ளது.

♻ இதுவன்றி திருநாவுக்கரசர் பாடிய தலத் தொகுப்புப்பாடல் ஒன்றிலும், பதினோராம் திருமுறையில் ஐயடிகள் காடவர் கோன் நாயனார், நம்பியாண்டார் நம்பி ஆகியோர் பாடிய இரண்டு பாடல்களிலும், குங்குலியக் கலயநாயனார் புராணத்திலும், திருப்புகழிலும், க்ஷேத்திரக் கோவைப் பிள்ளைத் தமிழிலும் இத்தலம் பற்றியும் இறைவனைப் பற்றியும் பல செய்திகள் குறிப்பிடப் பெற்றுள்ளன.

♻ காலமேகப் புலவர் பாடிய பாடல் ஒன்றிலிருந்து அக்காலத்தில் ‘திருப்பனந்தாள் பட்டன்’ என்ற பெயரினையுடைய ஒருவன் தண்ணீரும் சோறும் தடையின்றி வழங்கிய செய்தி தெரிய வருகிறது. செஞ்சடை வேதிய தேசிகர் அவர்களால் தலபுராணமும் பாடப் பெற்றுள்ளது.

♻ திருஞானசம்பந்தர் பதிகம் ‘கண்பொலி நெற்றியினான்’ என்று தொடங்குகிறது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் தாடகையீச்சரத்தின் சிறப்புபேசப்படுகிறது. இரண்டாவது பாடலில் வல்வினையும் பல் பிணியும் பாழ்பட விரும்பினால் இறைவனை ஏத்துமின் என ஞானசம்பந்தர் அருளுகிறார்.

♻ ‘ஞானசம்பந்தன் நல்ல பண்ணியல் பாடல் வல்லார் அவர் தம் வினை பற்றறுமே’ எனப் பாடுவார் பெறும் பயனும் பேசப்படுகிறது. இப்பதிகத்தின் முதல் பாடல் வருமாறு:

       கண்பொலி நெற்றியினால் திகழ் கையிலோர்வெண் மழுவான்
       பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை மால்விடையான்
       விண்பொலி மாமதி சேர் தரு செஞ்சடை வேதியனூர்
       தண்பொழில் சூழ்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.

♻ கல்வெடுக்களில் இறைவன் பெயர், திருத்தாடகையீச்சரத்து மஹாதேவர், திருத்தாடகேச்சரத்துப் பெருமான், திருத்தாடகேச்சுரமுடைய நாயனார் என வழங்கப்படுகிறது. முதற் குலோத்துங்கசோழன் காலத்துக் கல்வெட்டிலிருந்து இறைவியின் பெயர் பெரிய நாச்சியார் என்பது தெரிய வருகிறது.

♻ இறைவியின் கோயிலைக் கட்டியவன் வெண்கூருடையார் அன்பர்க்கரசு மருத மாணிக்கமான வில்லவராசன் என்ற செய்தி, இக்கோயில் மஹா மண்டபத்து வாசலில் தென்பாலுள்ள கல்வெட்டால் புலனாகிறது. இக்கோயிலின் உள்நுழை வாயிலின் இரு புறங்களிலும் உள்ள துவாரபாலகர்கள் சிற்ப வேலைப்பாடுடையன. அவற்றின் பின் பக்கம் சுவரில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு கூறும் சிற்பங்கள் காட்சியளிக்கின்றன.

♻ இக்கோயிலில், குங்குலியக் கலயநாயனாருக்கென தனிக் கோயில் உண்டு. அதனை எடுப்பித்தவர் அவர் பால் ஈடுபாடு கொண்டு விளங்கிய திருப்பனந்தாள் குங்கிலியக் கலயர் என்பவராவர். இக்கோயில் இரண்டாவது கோபுரத்தை அடுத்து உள்புறமு தென்பால் மண்டபத்துடன் அமைந்துள்ளது.

🅱 இருப்பிடம்:🅱

✈ கும்பகோணத்திலிருந்து(15 கி.மீ.)  சென்னை செல்லும் சாலையில் சோழபுரத்துக்கும் அணைக்கரைக்கும் இடையில் உள்ள ஊர்.

✈ கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உண்டு. அணைக்கரை சாலையில் செல்லும் எல்லாப் பேருந்துகளும் நிற்கும்.

🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀

🍄 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🍄