Friday, 9 February 2018

இராமேஸ்வரம் - 2

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இராமேஸ்வரம் தலமும் ஒன்று.


இந்தியாவில் உள்ள புனித ஷேத்திரங்க ளுக்குள் நான்கு ஷேத்திரங்களையே வட இந்தியாவில் உள்ளவர்கள் மிகச் சிறப்பா கக் கருதுகின்றனர்.


🌻 1. வடக்கே பத்ரிநாதம்

🌻 2. கிழக்கே ஜகந்நாதம்

🌻 3. மேற்கே துவாரக நாதம்

🌻 4. தெற்கே இராமநாதம்



இவற்றுள் முதல் மூன்று ஷேத்திரங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவதான இராமநாதம் ஒன்றுதான் சிவ ஷேத்திரம்.

Related image
இத்தலத்தில் இராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாகத் திகழ்கிறார்.



இராவணனின் தம்பியாகிய விபீஷணன், இராமருக்கு உதவி செய்ததன் மூலம் இராவணனுடைய அழிவுக்கு அவனும் ஒரு கார ணமாக இருந்தான். தனது அந்தப் பாவம் நீங்க, அவனும் இங்கு லிங்கத்தைப் பிர திஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தைப் போக்கியதோடு, ஜோதிஸ்வரூபமாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, ஜோதிர்லிங்கம் ஆயிற்று. இந்த ஜோதிர்லிங்கம் சுவாமி சன்னிதியின் முதல் கிழக்கு பிராகாரத்தில் உள்ள சிறிய சன்னிதியில் இருக்கிறது.


இராமேஸ்வரம் தீவின் ஒரு பகுதியில் அமைந்துள்ள இராமநாத சுவாமி கோயில் கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்கு முன்புவரை சிறு கோயிலாகத்தான் இருந்திருக்கிறது.


கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இலங்கை மன்னன் பராக்கிரமபாகு இத்திருக் கோயிலின் கருவறையிலும், அம்பிகை கோயிலிலும் சில திருப்பணிகள் செய்து புதுப்பித்திருக் கிறார். பின்னாளில் விஜயநகர இளவரசர் குமார கம்பணர், கி.பி 1371ல் தமது மதுரை வெற்றிக்குப் பிறகு இராமேஸ்வரம் கோயிலுக்கு வருகை தந்து சில திருப் பணிகள் செய்ததாகச் சொல்கிறார்கள்.


மதுரை நாயக்க அரசைத் தோற்றுவித்த விஸ்வநாதரும், அவர் வழிவந்த சிலரும் கூட இக்கோயிலில் சில திருப்பணிகள் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. என்றாலும் பின்னாளில் ஆட்சி செய்த சேதுபதி மன்னர்கள்தான் அவர்களது ஆட்சிப் பகுதியில் இருந்த இத்திருக் கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகள் பெரும் கோயிலாக ஆக்கியிருக்கிறார்கள்.


இராமேஸ்வரம் கோயிலின் சிறப்புகள்:


🌀 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.


🌻 கருவறையில் வீற்றிருக்கும் மூலவர் இராமநாதர் லிங்க வடிவில் காட்சிய ளிக்கிறார். இவர் சீதாப்பிராட்டியாரால் அமைக்கப்பட்டு, இராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டவர் என் பது பெரும் சிறப்பாகும்.


🌀 இராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னிதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாகத் தரப்படுகிறது.


🌻 இந்த இராமேஸ்வர லிங்கம் இந்தியாவிலுள்ள 12 ஜோதி லிங்கங்களுள் ஒன்றாகவும் சிறப்புப் பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர் லிங்கதலம் இது.

🌀 தவிர, கருவறை லிங்கத்துக்கு அருகில் அனுமன் காசி விஸ்வநாதரைக் கேட்டு கொண்டு வந்ததாகக் கூறப்படும் ‘விசு வலிங்கம் உள்ள விசுவநாதர் சந்நிதியும் மிக்க சிறப்புடையதாக வணங்கப்படுகிறது.


🌻 பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம்.


🌀 இக்கோயிலின் இன்னொரு சிறப்பம்சம் இராமேஸ்வரக் கோயிலின் கட்டடக் கலைச் சிறப்பாகும். இத்திருக்கோயி லின் நீண்ட மூன்றாம் பிராகாரம் உலகப் பிரசித்தி பெற்ற சிறப்பான கட்டடக் கலைக்கு சான்றாக போற்றப்படுகிறது. இந்த ‘மூன்றாம் பிராகாரம் உலகிலேயே மிக நீண்டது என்ற பெருமையையும் பெற்றுள்ளது.


🌻 இந்த மூன்றாம் பிராகாரத்தின் நான்கு பக்கங்களின் நீளம் 660 மீட்டர் ஆகும். இதில் நிறுவப்பட்டுள்ள தூண்களின் எண்ணிக்கை 1212. இத்துண்கள் ஒவ்வொன்றும் ஒரே கல்லினால் செதுக்கப்பட்டவை.4 மீட்டர் உயரமுள் ளவை. இவை 2 மீட்டர் உயரமுள்ள அதிட்டான மேடைமீது இடம் விட்டு விட்டு வரிசையாக நிறுவப்பட்டுள்ளன. எந்த வித நவீனப் போக்குவரத்து வசதிகளும் இல்லாத 18ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் இந்தத் தீவுப் பகுதிக்கு இத்தனை கனமான கற்றுாண்களைக் கொண்டுவந்து மிக நீண்ட வெளிப்பிரா காரம் அமைக்கப்பட்டிருப்பது நிச்சய மாக ஒரு கட்டட அதிசயம்தான்.


🌀 உலகப் புகழ்பெற்ற மூன்றாம் பிராகாரத்தைத் தவிர இக்கோயிலின் இதர பிராகாரங்களும்கூட கட்டடக்கலைச் சிறப்புமிக்கவையாகவே திகழ்கின்றன.


🌻 இராமாயண இதிகாசத்துடன் தொடர்புகொண்ட இராமலிங்கத்தை வணங்கி வழிபடுவதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்வேறு மொழிகள் பேசும் மக்களும் இங்கு வருகின்றனர். எனவே, இந்த இராமேஸ்வரக் கோயிலை இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குரிய ஒரு சிறந்த சின் னமாகக் கருதலாம்.


🌀 இந்த இராமேஸ்வர திருத்தலத்தில் சிறப்புடைய தீர்த்தங்கள் பலவும் இங்கு உள்ளன. இதைப் பற்றி இன்னும் விரிவாகப் பின்னர் பார்ப்போம்.


🌻 அம்பாள் பக்தரான ராயர் என்பவர் செய்த உப்புலிங்கத்தை இப்போதும் பிராகாரத்தில், இராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொர சொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த் தாலே உணர முடியும்.


🌀 மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு முதலில் பூஜை செய்து விட்டே இராமநாதருக்கு பூஜை செய்கின்றனர்.


🌻 சிவனின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 198வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சேது சக்தி பீடம் ஆகும்.




கோயில் அமைப்பு:


ராமேஸ்வரம் திருக்கோயில் மிகப் பெரும் அளவில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கோயிலாகும். ராமேஸ்வ ரம் கோயிலின் கிழக்கு கோபுரமே மிகவும் உயரமான கோபுரமாகும். இது 865 அடி நீளமும் 657 அடி அகலமும் உடையது. இதன் உயரம் சுமார் 126 அடி. மேற்கில் உள்ள கோபுரம் சுமார் 78 அடி உயரம் உடையது.


ராமேஸ்வரம் திருக்கோயிலின் நான்கு பக்கமும் வாசல்கள் உண்டு என்றாலும் வடக்கு, தெற்கு வாயில்கள் உபயோகத் தில் இல்லை. ஆலயத்தினுள் ராமலிங்கம், காசி விஸ்வநாதர் பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர் ஆகியோருக்கும் தனித்தனியே விமானங்கள் அமைந் திருக்கின்றன.


சுவாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்தச் சந்நிதியில் சீதாதேவியால் உருவாக்கப் பட்டு ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப் பட்ட ராமலிங்கரே லிங்க திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். இந்த சிவலிங்கத் திருமேனியில் அனுமனின் வால் தழும்பு பதிந்திருப்பதை இன்றும் காணலாம். அதாவது அனுமன் தான் காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்வதற்காக ராமலிங்கத்தை நகர்த்த முனைந்தபோது ஏற்பட்ட வாலின் தழும்புச் சுவடு என்கிறது தலவரலாறு.


ராமலிங்க சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் காசி விஸ்வநாதர் சந்நிதி அமைந்துள்ளது. இதுவே அனுமன் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமாகும்.


மூலவர் கருவறையின் முன்மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரின் திருஉருவங்கள் காணலாம். இவர்களுக்கு எதிரே தெற்கு நோக்கியபடி தனியே ஒரு ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார். ராமநாதரின் வலப்பக்கம் அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி அமைந்திருக்கிறது. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்துக்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. 51 சக்தி பீடங்களில் இது சேதுபீடம் ஆகும்.


அம்பிகையின் சந்நிதியின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள், கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக் கிறார். தென்மேற்கு மூலையில் சந்தாண்க ணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது.


ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. ராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிராகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சந்நிதி அமைந்துள்ளது.


தினமும் காலை 5 மணிக்கு ராமநா தசுவாமி சன்னிதியில், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் நடக்கிறது.


இது கோயில் அமைப்பின் சுருக்கம்தான். முறையாகக் கோயிலுக்குள் நுழையும் போது இன்னும் விரிவாகப் பார்ப்போம்.


காசி-ராமேஸ்வரம் யாத்திரை நியதி:



சபரிமலை போன்ற சிற்சில புண்ணியத் தலங்களைத் தவிர பொதுவாக எல்லா புண்ணிய ஷேத்திரங்களிலும் எந்தவித விதிமுறைகளோ நியதிகளோ இல்லாமல் நேரடியாகச் சென்று ஆண்டவனை தரிசிக்கலாம்.


ஆனால், காசியிலும் ராமேஸ்வரத்திலும் மட்டும் பகவானைத் தரிசித்து, அருளாசி பெற வேண்டும் என்றால் அதற்கெனச் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆமாம்! காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் அப்படியோர் இணைப்புச் சங்கிலி உள்ளது !  

அது என்னவென்று பார்க்கலாமா ? 



முதலில் காசியாத்திரை !


காசியாத்திரை செல்ல விரும்புபவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று அங்குள்ள அக்னி தீர்த்தமாகிய கடலில் நீராடி ஈர உடையுடன் கடலில் மூன்று தடவை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு தடவை மூழ்கி எழும்போதும் ஒவ்வொரு பிடி மணல் எடுக்க வேண்டும்.


முதல் தடவை மூழ்கி எடுக்கும் மணலை ‘சேது மாதவா’ என்று கூறி லிங்கமாக பிடித்தும், இரண்டாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை ‘பிந்து மாதவா’ என்று கூறி லிங்கமாக பிடித்தும், மூன்றாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை ’வேணு மாதவா’ என்று கூறி லிங்கமாக பிடித்தும், கரையில் வைக்க வேண்டும்.


பின்னர் பிடித்து வைத்த மூன்று லிங்கத் துக்கும் விபூதி சந்தனம் குங்குமம் இட்டு, வாழைப்பழம் வெற்றிலை பாக்கு நைவேத் தியம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சித்து “ஓம் நமசிவாய' என்ற பஞ்சாட்சர மந்திரம் கூறி கற்பூரதீபாராதனை காட்டி கும்பிட வேண்டும். பின் சேது மாதவ லிங்கத்தை மட்டும் எடுத்து பத்திரமாக பக்தர் வைத்துக் கொள்ள வேண்டும். மற்ற பிந்து மாதவ,வேணு மாதவ லிங்கம் இரண்டை யும் கடலில் போட்டு விட வேண்டும்.


அதன் பின் ராமநாதர் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி விட்டு கோடி தீர்த்தத்தை மட்டும் ஒரு மூடிய பாத்திரத்தில் வாங்கி பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.


இவையெல்லாம் முடிந்த பிறகு ஈர உடையை மாற்றிக் கொண்டு ராமநாதர் மற்றும் பர்வதவர்த்தினி அம்மனுக்கு மாலை சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பின் இறைவனை வழிபட்டு காசிக்கு கிளம்ப வேண்டியதுதான்.


(உடனே காசிக்கு செல்ல இயலாதவர்கள் தம்முடன் வைத்திருக்கும் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீர்த்தத்தையும் பூஜை அறையில் வைத்து காசி செல்லும் வரை பூஜை செய்ய வேண்டும். காசி செல் லும் போது மறக்காமல் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீர்த்தத்தையும் எடுத்து செல்ல வேண்டும்.)


காசி செல்பவர்கள் முதலில் அலகாபாத் சென்று அங்கு சேது மாதவ லிங்கத்தை திரிவேணி சங்கமத்தில் இடவேண்டும். பின் அங்கிருந்து ஒரு பாத்திரத்தில் தீர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் காசி சென்று அங்குள்ள விஸ்வநாதருக்கு ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்துச் சென்ற கோடி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்க வேண்டும். அங்கே காசியில் தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு உணவுப் பொருளை விட்டு விடுகிறேன் என்று சங்கல்பம் எடுத்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் கயா சென்று அங்கு தத்தமது இறந்த மூதாதையருக்கு பித்ருக் கடன் செய்தும், மோட்சதீபம் ஏற்றியும் வழிபட வேண்டும். இதனால் இறந்த மூதாதையரின் பரிபூரண ஆசி நமக்கும் நமது சந்ததியினருக்கும் கிடைக்கும்.


அதன் பின் காசியிலிருந்து நேராக ராமேஸ்வரம் வர வேண்டும். உடனே ராமேஸ்வரம் வர இயலாதவர்கள் 15 நாட்களுக்குள் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அது வரை அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். ராமேஸ்வரம் செல்லும் போது அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை ராமேஸ்வரம் ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு காசி ராமேஸ்வர யாத்திரையை நிறைவுசெய்ய வேண்டும்.


இப்படி ராமேஸ்வரத்தில் தொடங்கி ராமேஸ்வரத்தில் முடித்தால் தான் காசி ராமேஸ்வர யாத்திரையின் முழுபலனும் கிடைக்கும் என்று முன்னோர்கள் நியதி வகுத்துள்ளார்கள்.


(எல்லோராலும் இது முடிவதில்லை. அப்படி காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக, கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது. மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி, இந்தத் தீர்த்தத்தை ராமநாதருக்கு அபிஷேகம் செய்யக்கொடுக்கலாம்.)


சரி, காசியாத்திரைக்குச் செல்லும்போது மேலே சொன்னபடியாகச் செல்ல வேண் டும். அதுபோல ராமேஸ்வரத்துக்கு யாத்திரை செல்லவும் நியதி இருக்கிறதா ?


ஆம் ! ராமேஸ்வர யாத்திரை செல்பவர்களும் நேரடியாக ராமேஸ்வரம் செல்லக் கூடாது.

Ramanathaswamy Temple 360 view 

http://www.dinamalar.com/360view_detail_eng.asp?id=171&cat=175#top

                                      திருத்தல யாத்திரை ()ரும்..

இராமேஸ்வரம் - 1

தென்னாடுடைய சிவனே போற்றி !

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!


இந்திய தேசத்தின் பெருமை என்பது உலகுக்கே வழிகாட்டும் அதன் ஆன்மிகம்தான். இந்தியா முழுவதிலும் அமைந்துள்ள எண்ணற்ற புனித நதிகளும், பழம் பெரும் ஆலயங்களும் மக்களை நல்வழிப்படுத்தி அவர்களது உடலையும் ஆன்மாவையும் சுத்திகரித்து வழிநடத்தும் மகத்துவம் கொண்டவையாகத் திகழ்கின்றன.

அப்படி மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள எல்லா புண்ணியத் தலங்களும், புனித நதிகளுமே புராதனப் பெருமை பெற்றவைதான் என்றாலும் இவற்றுள் வடக்கையும், தெற்கையும் இணைக்கும் விதமாக ஒட்டுமொத்த இந்துக்களின் இதயத்திலும் எண்ணத்திலும் ஆத்மாவிலும் உறைந்து பதிந்து கிடக்கும் புனிதத்தலங்களுள் முக்கியமான சிறப்புத் தலங்கள் இரண்டு.

ஒன்று வடக்கே காசி ! இரண்டு, தெற்கே இராமேஸ்வரம் !

இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவருடைய ஆசையும் கனவும் ஒன்றே ஒன்று தான் !

வாழ்நாளில் ஒருமுறையாவது காசி, இராமேஸ்வர யாத்திரை மேற்கொள்ளவேண்டும் என்பது தான் அது !

வடக்கே காசிக்கு எத்தனை புகழும் பெருமையும் சிறப்பும் உண்டோ அதற்கு இணையான புகழும் பெருமையும் சிறப்பும் தெற்கே இராமேஸ்வரத்துக்கும் உண்டு !

நமது இந்தியப் பண்பாட்டின் சிறப்பு வாய்ந்த இதிகாசமான ராமாயணத்தில் உன்னதமாக இடம் பெற்ற முக்கியத் திருத்தலம் இராமேஸ்வரம்.

தென்னிந்தியாவில் உள்ள ஒரே ஜோதிர் லிங்க ஸ்தலம்.

மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் ஆகிய முப்பெருமை கொண்ட தலம்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், தாயுமானசுவாமிகள் என்று நான்கு பெரும் ஞானிகளால் பாடப்பெற்ற சிறப்புடைய தலம். அனைத்திலும் மிக முக்கியமாக தேசியப் புண்ணியத் தலமாக உள்ள இராமேஸ்வரம், காசிக்கு நிகராகப் புகழ்பெற்று விளங்குகிறது. இத்தனை பெருமைக்குரியதான இராமேஸ்வரம் திருத்தலம் இந்தியாவில் தென்தமிழ் நாட்டின் கோடியில், ராமநாதபுரத்திலிருந்து கிழக்கே 56 கி.மீ தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது.



இராமேஸ்வரத்தின் புகழுக்குக் காரணம் இங்குள்ள ராமநாத சுவாமி கோயில். சைவ வைணவ ஒற்றுமைக்கு பெரும் எடுத்துக்காட்டாக, ஸ்ரீராம சிவமய க்ஷேத்ரம் என்று பக்தர்களால் போற்றப்படும் புனிதத் தலமான ராமேஸ்வரத்துக்கு அப்பெயர் எப்படி வந்தது தெரியுமா ? அதற்கொரு இதிகாசக் கதை இருக்கிறது !

ராமனைப் பிடித்த பிரம்மஹத்திதோஷம் ! ராம ராவண யுத்தத்தின் இறுதிநாள் போரில் கடைசியாக ராமன் தன் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்து ராவணனுடைய பத்து தலைகளையும் கொய்து அவனுக்கு மோட்சம் அளித்தான். அநீதி அழிந்தது. அரக்கன் வீழ்ந்தான். தர்மம் தழைத்தது எல்லாம் சரிதான்.

ஆனால் என்னதான் கொடியவன் ஆனாலும் விச்ரவஸ் என்ற பிராமண மகரிஷியின் பிள்ளையல்லவா ராவணன். எனவே ஒரு பிராமணனை சம்ஹாரம் செய்ததால், உண்டாகும் பிரம்மஹத்தி தோஷம்’ ராமனை பற்றிக்கொண்டது.

அப்போது அங்கு வந்த அகத்திய முனிவர் இவ்விடத்தில் சிவலிங்கத்தை வைத்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்’ என்று சொல்ல, அதன்படி, தனது பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிக் கொள்வதற்காக சேதுக்கரையிலேயே சிவபூஜை நடத்தத் தீர்மானித்தான் ராமன்.

பூஜைக்கு சிவலிங்கம் ஒன்று தேவையல்லவா ?

ராமன் அனுமனை அழைத்து, அனுமான்! நான் நடத்தப் போகும் பிரமஹத்தி தோஷம் போக்கும் பூஜைக்கு சிவலிங்கம் தேவைப்படுகிறது. ஆகவே நீ உடனே காசிக்குச் சென்று அங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கும் விஸ்வநாதப் பெருமானை வணங்கி அவரிடமிருந்து ஒரு சிவலிங்கத்தைப் பெற்று வாஎன்று கட்டளையிட்டான்.

அண்ணலின் கட்டளைப்படி, ஆகாசமார்க்கமாக உடனே புறப்பட்டுப் போனான் அனுமன். அதேசமயம் அருகே மணலில் விளையாட்டாக சிவ லிங்கம் ஒன்றைச் செய்து கொண்டிருந்தாள் சீதை.

நேரம் போய்க் கொண்டிருந்தது. அங்கதனும், ஜாம்பவானும் மற்றைய வானரங்களும் அங்குமிங்கும் ஓடி பூஜைக்கான மற்றைய அத்தனை பொருள்களையும் கொண்டு வந்து சேர்த்துவிட்டன. எல்லாம் தயார். சிவலிங்கம் மட்டும்தான் வரவேண்டும். எல்லோரும் அனுமன் வரும் திசையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஏனோ அனுமன் வர தாமதமாகிக்கொண்டேயிருந்தது.

பூஜைக்காகக் குறிக்கப்பட்டிருந்த நேரமும் நெருங்கிவிட்டது. இந்த நேரத்தைத் தவறவிட்டால் ராமனது பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிக் கொள்வது இன்னும் சிலகாலம் தள்ளிப் போய்விடும். எல்லோரும் செய்வதறியாது திகைத்தார்கள். ராமன் கவலையுடன் யோசித்த போது அவனது கவனத்தில் சீதை விளையாட்டாக மணலில் செய்திருந்த சிவலிங்கம் கண்ணில்பட்டது.


ராமன் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். சீதை மணலில் உருவாகி வைத்திருந்த லிங்கத்தையே பிரதிஷ்டை செய்து முறைப்படி முழு பூஜையைச் செய்து முடித்தான். அவன் பூஜையை முடிப்பதற்கும் அனுமன் காசி விஸ்வநாதர் அளித்த லிங்கத்தைக் கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது.

பரபரப்புடன் வந்திறங்கிய அனுமான், ராமபிரானிடம், பெருமானே, காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அவருக்கான பூஜாக்கிரமங்கள் முடிய நேரமாகிவிட்டது. அதன் பின்னரே விஸ்வநாதப் பெருமானிடம் கேட்டு இந்த லிங்கத்தைப் பெற்று வந்தேன். எனவேதான் நான் இங்கு வந்து சேருவதற்கு சற்று காலதாமதம் ஆகிவிட்டதுஎன்று விளக்கமளித்தான்.

ஆனால் என்ன விளக்கம் சொல்லித்தான் என்ன ? பூஜையை வேறு லிங்கத்தை வைத்து செய்து முடித்தாகி விட்டது என்பதை அங்கிருந்த அறிகுறிகளிலிருந்து அனுமன் கண்டுகொண்டான்.

முகம் வாட்டமுற்றான். அனுமன் மனம் வாடிப் போனதை அவனது முகக் குறிப்பிலிருந்தே உணர்ந்தான் ராமன். பக்தர்களின் சிறு துன்பத்தையும் பொறுக்காதவன் அல்லவா ? எனவே அனுமனை ஏமாற்றத்தில் ஆழ்த்தாமல் அவன் கொண்டுவந்த லிங்கத்தை, ஏற்கெனவே பூஜை செய்து வழிபட்ட மணல் லிங்கத்துக்கு வடபுறத்தில் பிரதிஷ்டை செய்தான். பின்னர் அதற்கும் உரிய முறைப்படி வழிபாடு நடத்தி பூஜித்தான். அனுமனை சந்தோஷத்தில் ஆழ்த்தினான்.

முதலில் பிரதிஷ்டை செய்த லிங்கம் ராமலிங்கம் எனவும் அனுமன் கொண்டுவந்த லிங்கம் காசி விசுவநாத லிங்கம் என்றும் அழைக்கப்படும் எனக் கூறிய ராமன், இந்திருத்தலத்தில் முதல் பூஜை காசி விசுவநாதருக்குத்தான் செய்யப்படவேண்டும்’ என்றும் ஆணையிட்டான்.

இப்படியாக ராமன் லிங்க வடிவில் ஈஸ்வரனுக்குப் பூஜை செய்த தலம் என்பதால் இந்தப் புனிதத் திருத்தலத் தீவுக்கு, ராமேஸ்வரம் என்று பெயர் வந்தது.


                                           திருத்தல யாத்திரை ()ரும்..

கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்: பகுதி 2

அழகிய சிற்றம்பலமுடையான் படலம்: (திருப்பேரூர், 36 படலங்களுள் ஒன்று) 
சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பேரூரை வணங்கிச் சென்று, தில்லைச் சிற்றம்பலத்திலே திருநடராசரைப் பாடும் திருப்பதிகத்தில் "பேரூர்ப் பெருமானைப் பெற்றோம்" என்று அருளிச் செய்த தேவாரத்தைத் தில்லைவாழந்தணர் கேட்டு நாயனாரை நோக்கி, இத்தில்லைத் தலம்போல் இவ்வுலகத்திலே ஒரு தலம் உண்டோவென வினவியதற்கு....
"இக்கனகசபையிலே, தாண்டவஞ் செய்தது போலத் திருப்பேரூர்
வெள்ளியம்பலத்திலே சிவபிரான் திருநடனஞ் செய்தருளுகின்றார். 
அத்தலத்தில், முத்தி தருவதன்றி, தருமார்த்த காமங்களைத் தருவதில்லை" என்று நாயனார் நவின்றார். 
உடனே தில்லைவாழந்தணர் திருப்பேரூரைச் சேர்ந்து, காஞ்சிமா நதியில் மூழ்கியெழுந்து திருமேனியிலே, சிவசின்னங்களாகிய திருநீறும் கண்டிகையும் பூண்டு, சுவாமியையும் அம்மையையும் தரிசித்து, அரசம்பலவாணரை வணங்கி, மறுநாள், காலவனீச்சரத்திற்கு அக்கினித்திக்கிலே சிவலிங்கந் தாபித்துப் பூசித்து அங்கே வசித்தார்கள். அப்பொழுது வெள்ளியம்பலத்திலே, சிவபிரான் திருநடனஞ் செய்ய அதனை தில்லைவாழந்தணர்கள் தரிசித்து, ஆன்மாவுஞ் சிவமும் அத்துவிதமாய், மனம் அழிந்து அவசமாய் நின்று துதித்து விடைபெற்றுக் கீழைச் சிதம்பரஞ் சேர்ந்து பண்டைக்காலம் போல் வாழ்ந்திருந்தனர். 
அவ்வந்தணர் பூசித்த ஆலயத்திற்கு "அழகிய திருச்சிற்றம்பலமென்றும்," சுவாமிக்கு "அழகிய திருச்சிற்றம்பல முடையாரென்றும்" பெயர். இக்கோயில் காலவேசுவரத்திற்குத் தென் கீழ்த்திசையில் உள்ளன. இக்கோயிலில் எழுந்தருளிய பெருமானுக்கு "இடங்கை நாயகேசுவர முடையார்" என்ற பெயரும் உண்டெங்கின்றது கச்சியப்பர் தலபுராணம். 

IMG-20180122-WA0083


மகாராஷ்டிர தேசத்தில் எச்சதேவன் என்னும் பிராமணன் அரிய தவங்களும் வேள்விகளும் செய்து சிவபெருமான் திருவருளினால் ஒரு மைந்தனைப் பெற்றான். அவனுக்குச் சுமதி என்று பெயர் வைத்தனர். 
அப்புதல்வன் அப்பெயருக்கேற்ப வேதம் முதலிய கலைகளை ஓதியுணர்ந்து, அதன் பயனாகிய ஒழுக்கத்தோடு வளர்ந்து, பதினாறு வயதை அடைந்தான். அவன் சிவதாமா என்னும் மறையவன் மகளை மணந்து வாழுந்து வரும்போது, யாத்திரைச் செய்ய எண்ணம் கொண்டு திருப்பருபதத்தை அடைந்து, அங்கே சிவபெருமான் கொண்டருளும் மகோற்சவத்தைத் தரிசித்து வசிக்கும் நாளொருநாளில்.....
திருவீதியின் வளத்தை நோக்கும்படி புறப்பட்டுச் சென்றான். தீவினைப் பயனால் பொதுமாதர் வீதி வளத்தைக் கண்டு செல்லும்போது, சூரியனது கதிர் வெப்பத்தினால் அயர்வுற்று, ஆகாயத்தை அளாவிய பந்தர் (பந்தல்) பொருந்திய மூன்றிலையுடைய இந்திரலோகம் போன்ற சுந்தரமுள்ள ஒரு மாளிகையைக் காணப்பெற்றான். அப்பந்தரிடையே தங்கிச் செந்தமிழ்ப் பொதியச் சந்தனம் முதலிய நறுமணத்தையும் குளிர்ச்சியையும் கொண்டு, அவ்விடத்தில் அமர்ந்தான். அந்தத் தருனத்தில் சிரம பரிகாரமாகி அம்மாளிகையில் உள் செல்வோரையும் வெளியில் வருவோரையும் கண்டு, அவர்கள் செயல்களை விசாரிக்கத் தொடங்கினான்.
இதற்கு அங்கே அருகே நின்ற ஒருவன் "இத்திருப்பருப்பதத்திலே, வேதியர் வீதியின் மத்தியிலுள்ள ஒரு பிராமணன் பத்தினியாகிய ஏமாங்கி என்பவள் காமத்தினாற் கற்புநிலை குலைந்து, கணவனையும் கொன்று, பெரும் பொருளையும் கைக்கொண்டு, பரத்தையர் வாழும் இவ்வீதியில் வந்து, இவ்வீட்டியினை கட்டுவித்து வசித்து இங்கு தங்கியிருக்கிறாள். 
இளமையானவளாயிருந்து பொதுமகளிர் தொழில் பழகிய அவள், முதுமை பெற்றவளாய், இளையிளமையானவர்கள் தன் வரவை நாடி இங்குற்றிருக்கிறாள் என்றான். உடனே சுமதியானவன், அம்மனையின் அகத்திருந்த ஏமாங்கி புறத்தே போனான். சுமதி நல்வரவை வினவினான். அவளும் கையைப்பற்றித் தழுவி உள்ளே அழைத்துக் கொண்டுபோய் இன்பத்தை நுகர்வித்துக் கொடுத்தாள்.
நுகர்ந்த சுகம் கொண்ட சுமதி, தொடர்ந்து சில தினத்திலே பல பொருள்களையும் அவளிடம் இழந்து, பின்பு ஏமாங்கியினால் இகழப்பட்டும், அதன்பின்பும் அவளின் மீது பெரும் மோகம் கொண்டு பொருள் கொண்டு வர விரைந்தோடினான். சுமதியின் தந்தை புரோகிதமாகவிருந்த காஷ்மீர கண்டத்து அரசனையடுத்து, இரத்தின ஆபரணங்களும், பெரும் பொருளும் பெற்று, மீண்டும் ஏமாங்கியிடம் வந்து இணைந்தான். இன்பச் சுழற்சியில் மூழ்கிச் சில நாளில் மறுபடியும் அனைத்து பொருளையும் இழந்தான்.
மீண்டும், கொடைக்குணமுடையாரை அடைந்து அங்கிருந்து பொருள் பெற்றும், உற்கலதேயத்திற் பர்க்கதேவன் என்னும் பார்ப்பானனைக் கொன்று அவனிடமிருந்த பொருளை கவர்ந்து துராசாரனென்னும் பெயர் பெற்றும் திரும்ப, ஏமாங்கியிடத்தே வந்தான். அவன் பெருங் கொடுஞ் செய்கைகளைக் கேள்வியுற்ற ஏமாங்கி, "வருணமும் ஒழுக்கமும் கற்பும் கழுவிக் கொழுநனையுங் கொன்று பழிபூண்டு அளவில்லாத் தீமைகளைச் செய்திருக்கின்றோம்.
இன்னமும் எம்மிடத்துள்ளாராலும் பழிபாவங்கள் உளவாதல் முறையோ" என்று வருந்தி, அச்சுமதியை விலக்கி வைத்தாள் ஏமாங்கி. அவனோ அவளை விட்டு விலகாது மாளவதேசத்தை எய்தி, அங்கும் ஒரு பிராமணனை வதைத்துப் பொருள் பறித்து திரும்பி வந்து மறுபடியும் ஏமாங்கியை அடைந்தான். 
உடனே ஏமாங்கி, "இப்பாவியைப் பார்ப்பதும் பாவம் பெரும்பாவம்" என்று அவ்விடத்தை விட்டு அகழ்ந்து சென்றாள். சுமதியானவன் அவளைத் தேடி சென்றான். தேடியலைந்தவன் "தென்கைலாயமாகிய கோவை திருப்பேரூர்" எல்லையில் உள்ள காட்டில் வீழ்ந்து மாண்டு போனான். திருப் பருப்பதமாகிய மல்லிகார்சுனத்தை வழிபட்டு திருப்பேரூர் வெள்ளியங்கிரியின் அருகே இறந்த சுமதியின் உடம்பை  நாய் நரிகள் திண்றன. அவனுடலை திண்ணுவதற்கு நாய் நரிகள், அவைகளுள் சண்டையிட்டு உனக்கு எனக்கு என் அவ்வுடலை இழுத்துப் போய் காஞ்சிமா நதியில் இட்டுவிட்டன. ஆதிபுரியிலே உடல் வந்து வீழ்தலினாலும், அவ்வுடலில் காஞ்சி தீர்த்தத்தில் நனைந்ததினாலும் அவ்வுடல் புண்ணியங்கள் பெறப்பட்டு சுமதி சிவலோகத்தை சேர்ந்தான்.
முசுகுந்தன் முகம்பெறு படலம்
கலிங்க தேசத்திலே சிவபூஜை செய்யும் மெய்யன்பினையுடைய ஓர் அந்தணரொருவர் அருந்தவஞ் செய்ய, அவன் மனைவியிடத்தே ஒரு புத்திரி அவதரித்துச் சுகுமாரி என்னும் பெயர் பெற்று விளங்கினாள். அவள் பிதாவை வணங்கிச் சிவார்ச்சனை புரியும் விருப்பம் இருப்பதாக விண்ணப்பம் செய்தாள். அதற்கு பிதா மகிழ்ச்சியுற்று சமயதீக்கை செய்து மந்திராதிகாரம் கொடுத்து, அது மனதிற்கு மகிழ்வாக இருக்க பின் விசேஷ தீக்கையும் செய்து அர்ச்சனாதிகாரம் கொடுத்தனர்.

இவ்விதமாகியிரும் வேளையில் சுகுமாரி அச்சிவபூசையில் நேசமுண்டாகிச் சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன் நித்திரை நீங்கிச் சதா சிவமூர்த்தியைத் தியானித்து "சௌசம்", "தந்தசுத்தி", "நீராடல்", "அநுட்டானங்கள்" முடித்துத் தோழியரோடு திருநந்தவனம் சென்று, திருப்பள்ளித்தாமம் கொய்து, சிவபூஜை செய்து தொடர்ந்தாள். 
ஒரு நாள் மலர் கொய்வதற்கு நந்தவனத்திற்குப் போனாள். அப்போது அவளை விதூமனென்னும் காந்தருவன் கண்டுவிட்டவன், அவள்மேல் மையலுற்றுத் "தையலே," நீ எனக்கு மனைவியாவை எனில், "உனக்கு வேண்டும் பொருள் கொணர்ந்து பணியும் புரிவேன்" என்றான்.
அதற்குச் சுகுமாரியோ "போகத்திற் சிறிதும் கருத்தின்றிச் சிவார்ச்சனையில் பெரிதும் கருத்துடையேன் நான். ஆதலால், நீ உன் எண்ணத்தை மாற்றிக் கொள்வாயாக"  என சொல்லி விட்டாள். அவனோ.... அவ்வென்னத்தை மாற்றிவிட முடியாது வருந்தி மறுபடியும் அவளைத் துரத்த, சுகுமாரி இரவிந்த விதூமனை நோக்கி "நீ முசுவாகக் கடவாய்" என சபித்து விட்டாள்.
உடனே அவன் முசுவாய் மலைகடோறும் உழன்று இமயமலையை எய்தி, வில்வ மரத்திற்கும் வில்வ மரமாகத் தாவினான். வில்வ மரத்திற்கும் வில்வ மரமாகத் தாவும் போது, அவ்வில்வயிலை சருகுகள் அவ்வில்வ மூலத்திலே அமருந்திருந்த சிவலிங்கப் பெருமான் திருமேனியை மூழ்கிச் சொரிந்தன. அப்போது இடபாகத்திலிருந்த உமாதேவியார் முசுவை நோக்கி, "எம்பெருமான் திருவுரு மறையச் வில்வசருகுகளை உதிர்த்தபடி மூழ்கடிக்கப்பட்டுப் போனதலால், சுகுமாரி இட்ட சாபம் தீரும் போதும் உனக்கு முசுமுகம் மறைந்திருக்கும் என சாபம் கிடைத்தது.
இதனைத் திருச்செவி சாத்தியருளிய சிவபிரான் "அளவில்லாத தீங்கையும் நீங்கச் செய்யும் வில்வத்தை நம்மேனியில் மூழ்கித்தியது புண்ணியமே! ஆக இம்முசுவுக்கு உலக முழுவதும் ஆளும் அரசினைக் கொடுப்போம்" என கூறிய ஈசன், உமாவின் பக்கம் திரும்பி.....
"தேவி!, நீ கோபிக்காதே! எனவும் கூறிவிட்டு அம்முசுவுக்கு எதிரில் தோன்றி' பேரரசை ஈந்தும், உமாதேவியாரோடு மறைந்தருளிப் போனார். அவ்வரத்தினால்  அக்காந்தருவன் முசுமுகத்தோடு அரச குலத்திலே பிறப்பரிந்து உதித்து, "முசுகுந்தனென்னும்" பெயர் பெற்று உலகத்தை ஆண்டான். அச்சமயத்தில் அகிதவுட்டிரனென்னும் அவுணன் அமரர்களைக் கலக்கி, இந்திரனை வென்று, விண்ணாட்டைத் தன் நாடாக்கி ஆளமிடத்து, இந்திரன் இமயமலையில் மறைந்திருந்தான்.
அப்படியிருக்கும்போது பிருகு முனிவர் மகளைக் கண்டு மயங்கி, வலிந்து கைப்பற்றிய வழிய, அம்முனிவர் சாபத்தினால் அரக்கனாகி உழன்றான். இவ்வித நிகழும் போது வியாழ பகவானோடு தேவர்கள் பூமிக்கு வந்து முசுகுந்தச் சக்கரவர்த்தியைச் சார்ந்து நிகழ்ந்தவைகளைச் சொல்லித் தேவலோகத்தைக் காத்தருளும்படி வேண்டினர். அதனால் முசுகுந்தன் விண்ணுலகை அடுத்து, அகிதவுரட்டிரனை வென்று அவ்வுலகத்தைக் காத்தவழி அதனை ஆளும்படிக்கும் அமரர்கள் விரும்பினர்.
அவ்வாறு மூவுலகிலும் செங்கோல் செலுத்தி வந்தான். ஒருநாள் சிங்காதனத்தில் வீற்றிருக்கும் போது, நாடகம் செய்த அரம்பை அவன் முசுமுகத்தை நோக்கி நகைத்தனள். அதனால் நாணமுற்று அவ்வரசாட்சியை அகற்றிய முசுகுந்தன் அருந்தவம் செய்து, சூரியன் அனுமதியினால் சிவத்தல யாத்திரை புரிந்து, நாரதமுனிவர் ஏவுதலால் திருப்பேரூரைச் சார்ந்து கலிகன்ம நாசினி யென்னுங் காஞ்சிமா நதியில் மூழ்கிச் சுவாமியை தரிசனம் செய்தான்.
அக்காஞ்சிமா நதிதீரத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை பண்ணி, இரண்டு இரண்டுநாளாய் அந்நதியினில் படிந்து, மூன்றாம் நாள் மூழ்கியெழுந்த போது, முசுமுகம் நீங்கப் பெற்று நன்முகம் கிடைக்கப் பெற்றுத் தானங்கள் செய்து தென் கைலாய, வட கைலாயங்களை அருச்சித்து, மருதவரையில் முருகக் கடவுளைத் தரிசித்துத் தன் பதியை அடைந்து நல் அரசாட்சி செய்து நடத்தி வந்தான்.




IMG-20180122-WA0075


காசிப முனிவர் புத்திரராகிய காலவ முனிவர் சிவ புண்ணிய மேலீட்டினால், இருவினையொப்பும் மலபரிபாகமும், சத்திநிபாதமும் உற்று, பாசத்தையும், பாசத்தையுடைய பசுவையும், பசுவுக்குப் பதியாகிய சிவபிரானையும் தமது மதிநுட்பத்தினாலே ஆராய்ந்து பதிந்து அடைவதற்குரிய நெறி சிவலிங்கோபாசனையே என்றார்.
அந்த உபாசனை எளிதில் கைகூடுதற்குரிய தலம் கோவை திருப்பேரூரே என்றும் உணர்ந்தார். எனவே, அத்திருப்பேரூரை அடைந்து, காஞ்சி நதியில் மூழ்கி சுவாமி தரிசனம் செய்தார். தீர்த்தம் ஒன்றையும் உருவாக்கினார். அத்தீர்த்தத்தைக் கொண்டு அபிஷேகம் செய்து வந்தார். இதுவே காலவ தீர்த்தம். அவ்வாற்றங்கரையில் சிவலிங்கப் பிரதிட்டை செய்து வந்தார். அங்கிருந்த தீர்த்தத்தை அபிஷேகித்து அர்ச்சனை புரிந்து, தினந்தோறும் பஞ்சாக்ஷரத்தைப் பதினைந்தாயிரம் உரு ஜெபித்து வந்தார். இங்ஙனம் பதினாயிர வருஷம் தவம் செய்தார்.
இத்தவத்திற்கு அருட்குறியினின்று சிவபிரான் தோன்ற, அவரைக் காலவ முனிவர் வழிபட்டு வரங்கள் பெற்றுத் தீக்ஷயுற்று, சித்தாந்த மகா வாக்கியோபதேசங் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து, நிட்டைகூடி வெள்ளியம்பலத் திருக்கூத்தையும் தரிசிக்க விரும்பி இருந்தனர். 
காலவ முனிவர் ஆலயத்திற்குக் காலவேச்சுரமென்ற தீர்த்தத்திற்குக் காலவ தீர்த்தத்மென்றும் பெயர். இவ்வாலயம் பட்டீசராலயத்திற்கு ஈசான திக்கில் இருக்கின்றது.
காமதேனு வழிபடு படலம்
சுவாயம்பு மனுப்பட்டத்தில், சகரன் எனும் அரசன் அரசாட்சி புரியுங்கால், பிரம்மதேவர் பிரஜைகளைப் படைக்கும் வண்ணம் எண்ணிச் சிவயோகத்தில் இருந்தபொழுது தீய ஊழினால் நித்திரை செய்தனர். 
அதனை இந்திராதி தேவர்கள் முகமாக உணர்ந்த விஷ்ணு மூர்த்தி காமதேனுவை நோக்கி, "நீ தவம் புரிந்து சிவபிரான் திருவருள் பெற்றுச் சிருட்டித் தொழில் செய்வாயாக" என்ற போது காமதேனு இமயமலையை எய்தி ஆயிரம்தேவ வருடம் அருந்தவம் புரிந்தும் சிவபெருமான் அருளாமேபற்றிக் கவலையுற்றிருக்கும் காலத்து நேர்பட்ட நாரத முனிவர் ஏவுதலால், அதி ரகசியமாக தலமாகிய ஆதிபுரியை அடுத்துக் காஞ்சி நதியில் வாஞ்சையோடு மூழ்கி, அசரீரி வாக்கின்படியே ஆதிலிங்க மூர்த்திமீது தனது பாலைப்
பொழிந்து பூசித்துக் கொண்டிருந்தது.
குழகன்-குழம்புச் சுவடுற்ற படலம்
ஆதிலிங்கத்தினருகே பட்டியிட்டு இருக்குங்கால் ஒரு நாள், காமதேனு முற்பகலிலே சிவபூசை செய்து சிவயோகத்தில் இருந்தது. அப்பொழுது சூரியன் அந்தமனமாகிச் சந்திரன் உதயமான காலத்தில், அக்காமதேனுவின் கன்றானது விளையாட்டினால் அண்டங்கங்கள் குலையும்படி அங்கும் இங்குமாக மேய்ந்து அலைந்து. அப்படி அலைந்து திரிந்த கன்றானது அண்ட நாயகராகிய "ஆதிலிங்க மூர்த்தி" அருமைத் திருமேனியை மறைத்திருந்த மேருமலையாகிய புற்றுக்களால் சூழப்பட்ட இடத்தினை கன்று குளம்புகளால் மிதித்தது.
தன் கால் குழம்பினால் கோதி கிளர்த்தியது. கால் குளம்புகள் தடுத்திடற குனிந்து தன் கொம்புகளால் குத்தி சிதைத்தது. கன்று கிளறி களோபரமாக புற்றைச் சேதப்படுத்த, மேருமலையின் உருக்கமாகியிருந்த புற்றின் மணல் துகள்கள் பிரிந்தன.
கன்றின் காற்குளம்பு புற்றினை கடுமையாக மோதி கிளர்த்தியதில் புற்றினுள் இருந்த ஒருவித ஈரப்பதம் ஆனதால் புற்றுமண் முழுமையும் கரையப்பட்டு, புற்றினைச் சுற்றி குருதி பெருகியோடி வழிந்தது. கன்றின் திருவடி, ஏற்கனவே புற்றினுள் உருவாக்கமாயிருந்த ஈசனின் திருமுடியில் அழுந்திப் பெயர்க்கக் கூடாமை போகவே, பின்பு  தன் கொம்புகளாற் குத்திக்கிளறியதால் ஆதிலிங்கேசர் திருமுடியில் பட்டு உதிரம் பெருக அழுந்தியதின் விளைவு இப்போது புற்றினைச் சுற்றிக் குருதி வெள்ளம். உள்ளேயுள்ள அக்குழகர் அக்குளம்புச் சுவட்டினை உடையவரானார்.
பின்பு காமதேனு சூரியோதய காலத்தில், தன் கன்றினைத் தேடியது. அவ்விடம் வந்த காமதேனு தன் கன்றின் நிலையறிந்து கவலை கொண்டு வருந்தின, காமதேனுவின் வருத்தம் நீடிக்கவிடாத சிவபிரான் உடனடியாக காமதேனுவுக்கு முன் காட்சியானார். சிவபெருமான் இடபாரூடராய் எழுந்தருளி, காமதேனுவை நோக்கி  "உனதிளங்கன்றின் விளையாட்டினால் உற்றதைக் குற்றமாக உள்ளத்திற் சற்றும் பற்றிலோம்" என்றார்.
"உமாதேவி முலைத் தழும்பையும் வளைத்தழும்பையும் மார்பினிற் கொண்டது போல முடியின் கண்ணே, குளப்படிச் சுவடையும் கோட்டின் சுவடையும் குதூகலத்தோடு கொண்டருளினோம்;"
"உனது கருத்துப்படி இப்போது பக்தியும், பின்னொருநாளில் நடன தரிசனமும், கடைசிமுடிவில் முத்தியும் தந்தருளுவோம்;"
"நீ வழிபட்டுத் தங்கியபடியால் இத்திருப்பேரூர் காமதேனுபுரம், பட்டிபுரி என்னும் பெயர்கள் பெற பட்டிநாதர் என்னும் நாமதேயத்தை நாமும் பெற்றோமென்று திருவாய் மலர்ந்து, மேலும்.. இது முத்தித்தலமாதலால், நீ கருதிய சிருட்டித் தொழிலைப் பற்றி வஞ்சி என்கிற "திருக்கருவூரிலே" அநுக்கிரகிப்போமென்றனர். 

அவ்வாறே காமதேனு வஞ்சித்தலத்திற்கு சென்று வரம் பெற்றுச் சிருட்டித் தொழிலைச் செய்தது. பட்டிப் பெருமானது திருமுடியிலே பசுக்கன்றின் காற்குளம்புகளின் சுவடுகளும் கொம்பு குத்திய சுவடும் இன்றைக்கும் நாம் காணும்படியான அருளோடு உள்ளன.
தென் கைலாயப் படலம்
கீழைச் சிதம்பரம் எனும் ஷேத்திரத்தில், சிவபெருமான் தமது அருட்சத்தியாகிய உமாதேவியார் காண, மேலைச்சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவஞ் செய்தருளுவார். அத்திருநடனத்தைத் தரிசிக்கும்படி சிவபிரானது கட்டளையினால், வியாக்கிரபாத முனிவர் கீழைச்சிதம்பரத்திற்கு சென்று, பத்தியினால் வழிபட்டுப் பல காலம் தவம் பயின்று வதிந்தார். 
அப்பொழுது கர்மமே கர்த்தா என்னும் கொள்கையுடைய தேவதாருவனத்து முனிவர்களைத் தடுத்தாட் கொள்ளும் வண்ணம் சிவபிரான் பிட்சாடன மூர்த்தியாகி அம்முனிவர்களுடைய பத்தினிகளிடத்தே சென்று, கற்பு நிலையைக் கலக்கியும், அவராஞ்ஞைப்படி விட்டுணு மூர்த்தி மோகினியாகி, அம்முனிவர்கள் தவ நிலையை அவநிலையாக்கியும், அவ்விருடிகள் கர்வபங்கமான பின்பு அவ்வனத்தின் கண்ணே சிவபிரான் திருநடஞ் செய்தருளினார். 
அந்நிருத்தத்தைத் தரிசித்த திருமால், ஆதிசேடன் மீது சயனித்து, ஒருதினம் விழிக்கும் காலையில், கண்களினின்றும் ஆனந்த நீர் பொழியவும் உடல் முழுதும் உரோமாஞ்சிதங் கொள்ளவும் பேரன்போடு "சங்கரா சங்கரா" என்று ஆரவாரித்தனர்.
அப்பொழுது ஆதிசேடன் அடுத்து வினவியதற்கு, விட்டுணு தேவதாரு வனத்தில் நிகழ்ந்த நிருத்த தரிசனத்தைக் குறிப்பிட்டளவில், அத்திருக் கூட்டத்தைத் தரிசிக்கும் பொருட்டு ஆதிசேடன் ஆசை மிகுந்து விடை பெற்று மேருமலையைச் சார்ந்து தவம் செய்தார். ஆதிசேடனின் தவத்திற்கு எதிர்வந்த தில்லையம்பலத்தைச் சேரும்வண்ணம் சிவபெருமான் அருள் புரிந்தார்.
அவ்வாறே அத்திரி முனிவர் பத்தினியாகிய அனசூயையிடத்திற் பதஞ்சலி முனிவராக அவதரித்துத் தில்லைப் பகுதியில் வியாக்கிரபாத முனியோடு தாமும் பஞ்சகிருத்தியத் திருக்கூத்தைத் தரிசித்திருந்தனர்.
அச்செய்தியை அறிந்த மால் திருக்கைலாச மலையைச் சேர்ந்து சிவபெருமானைத் திரிகரணங்களாலும் சேவித்து தில்லைச் திருச்சிற்றம்பலத் திருநடன தரிசனத்தின் பேராவாவைப் பெரிதும் விண்ணப்பம் செய்தனர்.
அதற்குத் திருக்கைலாசபதி "விராட் புருடனுக்கு இதயஸ்தானமாகிய கீழைச்சிதம்பர நடனதரிசனத்தைப் பதஞ்சலி வியாக்கிரபாதர் பொருட்டுச் சுதந்தரமாக்கினார். ஆகையால் தக்ஷண கைலாசமாய், விராட்புருடணுக்கு விந்துஸ்தானமாயுள்ள மேலைச் சிதம்பர நடன தரிசனத்தைக் காலமுனியும் காமதேனுவும் கருதியிருத்தலானும், நீயும் கோமுனியாய்த் திருப்பேரூரைச் சார்ந்திருப்பாயாயின் அங்கே வெள்ளியம்பலத்தில் திருநடனம் செய்து காட்டுவோம்" என்று விட்டுணுவுக்கு விடைகொடுத்தருளினார்.
உடனே விட்டுணு, கோமுனியாய் மவுரியுடுத்துச் சடைமுடி தரித்துத் திருநீறுங் கண்டிகையும் அணிந்து திருவைந்தெழுத்தைச் சிந்தித்துக் கொண்டு, ஆதிபுரியை அடுத்துக் காஞ்சி நதியில் விதிப்படி குளித்து, வெள்ளிமலை மீது சென்று சுவாமியையும் அம்மையையும் தரிசித்து, பின்னர் சிவபெருமான் திருக்கோயிலுக்குத் தென் திசையிலே தென் கைலாசமென்று திருநாமமிட்டு ஒராலயம் நியமித்துச் சிவலிங்கப் பிரதிட்டை செய்து, சக்கரதீர்த்தம் என்ற பெயரால் ஒரு தீர்த்தம் அகழ்ந்து, அத்தீர்த்தத்தைச் சிவாகம
விதிப்படி சிவபூசை செய்து காலவ முனிவரோடு சிவயோகத்திலிருந்தனர்.
வட கைலாயப் படலம்
திருமால் தவம் புரியும் போது பிரம்மதேவர் நித்திரை நீங்கி நித்திய கருமங்களை நிறைவேற்றி உலகத்தைப் படைக்கத் தொடங்கிய நேரம். வேதங்களின் முறைமையை மறந்தமையால் அத்தொழில் கைகூடப் பெற்றிலர்.
"ஐயயோ" இதற்காகவோ சிவயோகம் பயிலும்போது துயில் உண்டாகியது.
இதனால் வருந்தி மத்திய கைலாச மலையைச் சார்ந்து தேவதேவரை வணங்கி இந்த சிறியேனின் பிழையைப் பொறுத்தருள வேண்டுமென்று விண்ணப்பம் செய்தார்.
அதற்கு மகாதேவர், "தென் கைலாசமாகிய "திருப்பேரூரிலே" அரசமர மூலத்தின் கண்ணதாகிய வெள்ளியம்பலத்திலே நமது தாண்டவத்தை வேண்டி விட்டுணு கோமுனிவனாகிக் காலவ முனிவனோடு தவம் செய்கின்றான்.
காமதேனு வழிபட்டமையால் நமக்குப் பட்டிநாதரென்னும் நாமதேயமுமுண்டு. ஆகையால் நீ பட்டி முனியாய் அத்தலத்தே சென்று பத்தி செய்வாயாகில் நமது நடனத்தையும் கண்ணுற்று எண்ணற்ற வரம் பெறலாம்" என்று திருவாய் மலர்ந்தருளினார். 
பிரமதேவர் உடனே விடைபெற்றுத் திருவைந்தெழுத்தைச் சிந்தித்துப் பட்டிமுனியாகித் தண்டம் கமண்டலங்களைத் தாங்கி, விபூதி உருத்திராட்சகங்களைத் தரித்துக் குழைந்த உள்ளத்தோடு தவசிபுரத்தைச் சார்ந்தார்.
காஞ்சிமா நதியில் மூழ்கிச் சிவபெருமானை வணங்கிப் பன்னீர் மரத்தடியிலே குடி கொண்டருளும் மூலலிங்க மூர்த்திக்கு உத்தரதிக்கிலே தமது கமண்டலத்தைத் தீர்த்தமாக இருத்திச் சிவலிங்கப் பிரதிட்டை செய்து நீராட்டி, அருச்சித்து வெள்ளியம்பலத்தையும் தரிசித்தார்.
இவ்வாறேயாயினும் செய்து காலவ முனிவர் கோமுனிவர் இருவருடனும் மருவியிருந்தார்கள் அப்போது....
காஞ்சி நதியின் வடதிசையில் முத்தியைத் தரத்தக்க ஒரு யாகம் வளர்த்துச் சிவபெருமான் திருவுளங் களிகூறும்படி முற்றுவித்தார்.
பிரம்மதேவர் செய்த ஆலயத்திற்கு வடகயிலை என்னும் தீர்த்தத்திற்குப் பிரமதீர்த்தம் என்றும், குண்டிகை தீர்த்தம் என்றும், யாக குண்டம் இருக்குமிடம் திருநீற்றுமேடு என்றும் வழங்குவதாகும்.

- கோவை கு. கருப்பசாமி